வகை  |  odb

வளர்ச்சி அடைவதற்கு கால அவகாசம் தேவை

மழலையர் பள்ளிக்கு சார்லெட் சென்ற முதல் நாளன்று, தன்னை ஒரு படமாக வரையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டாள். அவள் வரைந்த படத்தில் உடலுக்கு ஒரு வட்டம், தலைக்கும் ஒரு நீண்ட வட்டம், கண்களுக்கும் இரு சிறிய வட்டங்கள்தான் காணப்பட்டன. மழலையர் பள்ளி முடிந்த இறுதி நாளன்று மறுபடியும் தன்னை படமாக வரையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டாள். அப்படத்தில் மிக அழகிய உடை அணிந்த சுருள், சுருளான செந்நிற மயிர்க்கற்றைகளுடன் சிரித்த முகத்துடன் கூடிய ஓர் அழகிய சிறுபிள்ளை காணப்பட்டது. குழந்தைகளின் வளர்ச்சியில் காலம் ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தை மிக எளிய ஒரு செயல்பாட்டினால் அந்தப் பள்ளி விளக்கியுள்ளது.

குழந்தைகள் முதிர்ச்சியடைவதற்கு காலதாமதம் ஏற்படும் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம். ஆனால், நம்முடைய வாழ்க்கையிலோ உடன் விசுவாசகளின் வாழ்க்கைகளிலோ மெதுவான ஆவிக்கேற்ற வளர்ச்சி ஏற்படும் பொழுது நாம் பொறுமையை இழந்து விடுகிறோம். கலாத்தியர் 5:22-23ல் கூறப்பட்டுள்ள ஆவியின் கனிகள் காணப்படும் பொழுது மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், பாவ காரியங்களை தேர்ந்தெடுக்கும்பொழுது ஏமாற்றமடைகிறோம். எபிரேய நிருபத்தை ஆக்கியோன், காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களில் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; எபிரெயர் 5:12 என்று சபைக்கு எழுதியிள்ளார்.

இயேசுகிறிஸ்துவோடு நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ள தொடர் முயற்சி எடுக்கும் நாம் ஒருவரையொருவர் ஜெபத்தில் தாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் தேவனை நேசிக்கிறோம் என்று கூறுகிற சிலர் ஆவிக்கேற்ற வளர்ச்சியடைவதற்கு போராடி வரும் பொழுது பொறுமையுடன் அவர்களோடு இணைந்து நாம் செயல்படவேண்டும். அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். எபேசியர் 4:15 என்ற வசனத்தின்படி ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டு ஆவிக்கேற்ற வாழ்க்கையில் இணைந்து வளருவோம்.

உள்ளும் புறமும்

சில  ஆண்டுகளுக்குமுன் ஒரு புத்தக வெளியீட்டாளர் பெருந்தவறொன்றைச் செய்தார். சந்தையில் பல ஆண்டுகளாக விற்பனையாகிவந்த ஒரு புத்தகத்தை அதின் ஆசிரியர் புதுப்பித்து மறுபதிப்பு செய்ய விரும்பினார். அவர் அந்தப்புத்தகத்தை திருத்தியெழுதி வெளியிட்டாரிடம் கொடுத்தார். அவர் அழகான மேலுறையைத் தயரித்தார். மறுபதிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ஒரு பெருந்தவறு நடந்துவிட்டது. புதிய உறைக்குள் பழைய புத்தகத்தையே வைத்துவிட்டார். வந்தது மறுபதிப்பல்ல.

புதிய வெளிப்புறம். ஆனால், பழைய உட்புறம் இந்த மறுபதிப்பு புதியதல்ல!

இதே மாதிரியான காரியம் சில மனிதர்களிடத்திலும் காணப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். சில வெளிப்புற நடவடிக்கைகளில் மாற்றமுண்டு. ஆனால். இருதயத்தில் ஒரு மாற்றமுமில்லை. புதிய வெளிப்புறம், பழைய உட்புறம் தேவன் மட்டுமே உள்ளான மாற்றத்தைத்தர முடியுமென்பதை அவர்கள் அறியவில்லை.

இயேசு தேவனிடத்திலிருந்து வந்ததால்தான் (வச. 2) வித்தியாசமான போதனைகளைத் தருகிறார் என்பதை நிக்கொதேமு அறிந்துகொண்டதை, யோவான் 3ல் காண்கிறோம். இயேசு நிக்கொதேமுவிடம் சொன்னதிலிருந்து மறுபிறப்பையே கேட்கிறார் என்று அறிந்து கொண்டான் (வச. 4). புதிதாக வேண்டுமென்றால் அவன் (வச. 7) மறுபடியும் பிறந்தேயாக வேண்டும் என்றுணர்ந்தான்.

இந்த மாற்றம் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமெ ஏற்படுகிறது. அப்பொழுதுதான் “ பழையவைகள் எல்லாம் ஒழிந்தன எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்பது நடக்கும். உங்களுக்கு ஒரு மாற்றம் தேவையா? உங்கள் விசுவாசத்தை இயேசுவின்மேல் வையுங்கள். அவர்தான் உங்கள் இருதயத்தை மாற்றி எல்லாவற்றையும் புதிதாக்குகிறவர்.

புதிய விசுவாசம்

என் மகன் ஹெராயினுக்கு அடிமையாகி போராடிக்கொண்டிருந்தான். அந்த நேரம் எங்கள் அனுபவம், இதே பிரச்சனையிலுள்ள குடும்பங்களை உற்சாகப்படுத்தக்கூடும் என்று சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். கடினமான பிரச்சனைகளில் சிக்கியிருக்கும்போது, இந்த சூழலில் தேவன் நன்மை தருவார் என்று காண்பது எளிதல்ல.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், அப்போஸ்தலனாகிய தோமாவின் விசுவாசத்திற்குப் பெரிய சவாலாயிருந்தது. இந்த மரணத்தின் மூலம் தேவன் நன்மை செய்யக்கூடுமென்று தோமா நம்பவில்லை. இயேசு சீஷர்களுக்கு தம்மை வெளிப்படுத்தியபோது, தோமா அங்கே இல்லை. அவருடைய கைகளில் ஆணிகளாலுண்டான காயத்தை நான் கண்டு அந்தக்காயத்திலே என் விரலையிட்ட என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன் என்றான் (வச. 25). எட்டு நாளைக்குப் பின்பு இயேசு தோமாவுக்குத் தன்னைக் காண்பித்தபோது அவனது அவிசுவாசம் மறைந்து “என் ஆண்டவரே! என் தேவனே என்றான் (வச. 28). அது ஒரு அற்புதமான விசுவாச அறிக்கை தன் முன் நிற்பவர் மாம்சத்தில் வந்த தேவன் என்ற சத்தியத்தை அறிந்து சொன்ன அறிக்கை. இது பின்வரும் அநேகரை இயேசுவை தேவன் என்று விசுவாசிக்க உற்சாகப்படுத்தும்.

நாம் கொஞ்சமும் எதிர்பாராத நேரங்களில் தேவன் புது விசுவாசத்தை நமது இருதயங்களில் உருவாக்குகிறார். அவருடைய உண்மையை எப்பொழுதும் நம்பலாம். எதுவும் அவருக்கு கூடாததுல்ல!

நான் ஜெபிக்க முடியாத நாள்

நவம்பர் 2015ல் எனக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை தேவையென அறிந்தேன். நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன், அசைக்கப்பட்டேன். நான் மரணத்தைக்குறித்து சிந்திக்கலானேன். நான் சரிசெய்யவேண்டிய உறவுகளுண்டா? என் குடும்பத்திற்காக நான் ஏற்பாடு பண்ண வேண்டிய பணவிஷயங்கள் உண்டா? அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், நான் வேவை செய்வதற்கு பலமாதங்களாகலாம். சிகிச்சைக்கு முன்னரே முடிக்கக்கூடிய வேலைகளுண்டா? காத்திருக்க முடியாத சில வேலைகளுண்டு. அவற்றை தான் யாரிடம் ஒப்படைப்பது? அது ஜெபிக்கவும் செயல்படவும் வேண்டிய தருணம்.

ஆனால், இரண்டையும் என்னால் செய்ய முடியவில்லை!

என் சரீரம் பலவீனமாயிற்று; என் மனது சோர்ந்து போனது. மிகவும் எளிய வேலைகள் கூட என் பலத்திற்கு மிஞ்சினவைகளாய்த் தோன்றியது. மிகவும் ஆச்சரியமானதென்னவென்றால், நான் ஜெபிக்க முயன்றவுடனே என் எண்ணங்கள் என் நோய்க்கு நேராகவும், அதனால் ஏற்பட்ட இன்னல்களுக்கு நேராகவும் திரும்பும். ஏன் இருதயம் என்னைத் துங்கச் செய்துவிடும். அது அதிக மனமடிவை ஏற்படுத்தியது. என்னால் வேலையும் செய்ய முடியவில்லை, மனைவி பிள்ளைகளோடு கூடக் கொஞ்ச நாட்கள் இருக்க தேவனிடம் கேட்கவும் முடியவில்லை!

ஜெபிக்க முடியாமலிருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. மனிதர்களுடைய எல்லா தேவைகளையும் அறிந்த தேவன் நான் ஜெபிக்க முடியாமலிருந்ததையும் அறிந்து அதை மேற்கொள்ள இரண்டு ஆயத்தங்களைச் செய்தார். நாம் ஜெபிக்க முடியாதபோது பரிசுத்த ஆவியானவர் நமக்காக ஜெபிப்பது (ரோ. 8:26) நமக்காக மற்றவர்கள் ஜெபிப்பது (யாக். 5:16, கலா. 6:2).

பரிசுத்த ஆவியானவர் பிதாவிடம் என் பெலவீனத்தைக்குறித்து சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பது பெரிய ஆறுதல். என் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்காக ஜெபிக்கிறார்கள் என்பதைக் கேட்பது எத்தனை பெரிய ஈவு! அவர்கள் என்னிடம் என்னத்திற்காக ஜெபிக்க வேண்டுமென்று கேட்டதற்கு நான் கொடுத்த பதிலையும் தேவன் கேட்டார் என்பது எத்தனை ஆச்சரியம்.

நமக்கொரு நிச்சயமில்லாத நேரத்தில் நான் ஜெபம் பண்ணமுடியாவிட்டாலும் என் இருதயத்தின் ஏக்கங்களைத் தேவன் கேட்கிறார் என்பது எத்தகைய பரிசு!

காலங்களுக்கேற்ற ஆடைகள்

நான் வாங்கிய குளிர்கால ஆடையின் விலைச்சீட்டை அகற்றிய போது அதன் பின் பக்கத்தில் “எச்சரிக்கை! இந்த ஆடை உங்களை வெளியேபோய் அங்கேயே இருக்க விரும்பச் செய்யும்.” சரியான ஆடை அணிந்திருந்தால், மாறுகிற எந்தக் கடினமான கால நிலையையும் தாங்கவும் அதில் சுகமாயிருக்கவும் முடியும்.

இதே வழி முறை நமது ஆவிக்குறிய வாழ்க்கைக்கும் பொருந்தும். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நமக்கு, எந்த கால நிலைக்கும் ஏற்ற ஆடைகளை தேவன் வேதாகமத்தில் குறிப்பிட்டிருக்கிறார். “ஆகையால் நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும் மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடியபொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி. ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (3:12-13).

தேவன் தரும் இரக்கம், தாழ்மை, சாந்தம் ஆகிய ஆடைகள் நம்மைப் பகை, குற்றம்சாட்டப்படல் ஆகியவற்றை, பொறுமை, மன்னிப்பு, அன்புடன் எதிர்கொள்ளச் செய்கின்றன. அவைகள் நமது வாழ்க்கைப்புயல்களில் நிலைத்து நிற்க பெலன்தருகின்றன.

நம்மை எதிர்க்கும் சூழ்நிலைகள் வீட்டிலோ, பள்ளியிலோ, வேலை ஸ்தலத்திலோ வரும்பொழுத, தேவனுடைய ஆடைகளை அணிந்துகொண்டால், அவை நம்மைப் பாதுகாத்து ஒரு நம்பிக்கையுள்ள மனப்பான்மையைத் தருகின்றன. “இவை எல்லாவற்றின்மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்” (வச. 14).

தேவனுடைய ஆடைகளைத்தரிப்பது, காலநிலையை மாற்றாது. ஆனால், தரித்திருப்பவனை பெலப்படுத்துகிறது.

வெறுமையினின்று நிறைவிற்கு

பிரபலமான ஒரு குழந்தைகளின் கதைப் புத்தகம், ராஜாவைக் கனம்பண்ணி தன் தொப்பியைக் கழற்றின ஒரு ஏழை கிராமத்துப் பையன் பர்த்தொலொமேயுவின் கதையைக் கூறுகிறது. அவன் தொப்பியைக் கழற்றியவுடன் அவன் தலையில் இன்னொரு தொப்பி வந்தது, ராஜா தன்னை இந்தப்பையன் அவமதித்தாக நினைத்துக் கோபப்பட்டான். அவனை அரமனைக்குக் கொண்டுசெல்லும்பொழுது அவன் தலையிலிருந்து எடுக்க எடுக்க இன்னொரு தொப்பி வந்துகொண்டேயிருந்தது. ஒவ்வொரு தொப்பியும் விலையேறப்பெற்ற கற்கள் பதிந்து இன்னும் அழகாக இருந்தது. 500வது தொப்பி ராஜா டெர்வினுக்கே பொறாமையூட்டுவதாய், வைரங்களாலும் அழகிய இறகுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராஜா பர்த்தலோமேயுவை மன்னித்து அந்த தொப்பியை 500 பொற்காசுகளுக்கு வாங்கினான். பர்த்தலோமேயுக்கு இப்பொழுது தொப்பியில்லை. ஆனால், 500 பொற்காசுகளுடன் சுதந்திரமாக வீட்டிற்குச் சென்றான்.

கடன்கொடுத்தவன் தன் பிள்ளைகளைப் பிடித்துக்கொள்ளப் போகிறானென்று, ஒரு விதவை எலிசாவிடம் ஓடி வந்தாள். அவளிடம் ஒரு குடம் என்ணெய் மாத்திரமே இருந்தது. ஆனால், அண்டை வீட்டுக்காரரிடத்தில் இரவல் வாங்கின பாத்;திரங்களையெல்லாம் தேவன் எண்ணெய்யால் நிரப்பினார். அவள் அதை விற்று, கடனை அடைத்து மீந்ததை வீட்டுச்செலவிற்கும் வைத்துக்கொண்டாள் (4:7).

தேவன் எப்படி எனக்கு இரட்சிப்பை இலவசமாய்க் கொடுத்தாரோ அப்படியே அந்த விதவைக்கும் பொருளாதார விடுதலை கொடுத்தார். நான் பாவத்தினின்று விடுபடுவதற்கான கிரயம் செலுத்தமுடியாமல் இருந்தேன். இயேசு அந்தக் கிரயத்தைச் செலுத்தி என்னை விடுவித்ததுமல்லாமல், நித்திய ஜீவனையும் எனக்களித்தார். எப்படி பர்த்தலோமேயு ராஜாவை அவமதித்ததற்கான கிரயத்தை செலுத்த முடியாதிருந்தாதானோ, அப்படியே நாமும் இருந்தோம். தேவனோ அற்புதமாய் கிரயம் செலுத்தி நம்மை மீட்டார். அவரை நம்புகிற ஒவ்வொருவருக்கும் தேவன் பரிபூரண ஜீவனைத்தருகிறார்.

பிரிந்தோம் ஆனால் கைவிடப்படவில்லை

மாசாசூசெட்டிலுள்ள பாஸ்டன் பல்கலை கழகத்தில் முதுகலைப்பட்டப்படிப்பிற்காக என் சகோதரியின் மகள் புறப்பட்டாள். அவளுக்கு பிரியாவிடை கொடுக்கும்பொழுது என் தொண்டை அடைத்துக்கொண்டது. இரண்டரை மணி நேரப் பிரயாண தூரத்திலுள்ள ஒரு கல்லூரியில் தனது நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருந்தாள். எங்கள் மாநிலத்திற்கு வெளியே செல்லாததினாலும், அடிக்கடி சந்திக்க வாய்ப்பிருந்ததினாலும் பிரிவு அவ்வளவு துக்கமாயில்லை. ஆனால் இப்பொழுதோ 1280 கிமீ அப்பால் செல்வதால் அடிக்கடி சந்திக்க வாய்ப்பில்லை. தேவன் அவளைப் பாதுகாத்துக்கொள்வார். என்றுதான் நம்ப வேண்டும்.

எபேசு சபை மூப்பர்களிடமிருந்து விடைபெறும்போது, பகுலுக்கும் இதே துக்க உணர்வுதான் இருந்திருக்கும். மூன்று வருடமாய் இந்த சபையினருக்குப்போதித்து சபையைக் கட்டியதால், எபேசு சபையினரும் மூப்பர்களும் பவுலின் குடும்பத்தினராகிவிட்டனர். பவுல் எருசசேமுக்குப் போவதால் இனி அவர்களைக் காணமாட்டான்.

பவுல் இனி அவர்களுக்குப் போதகராயிருக்கப்போவதில்லை என்றாலும் எபேசியர் கைவிடப்பட்டதாக நினைக்க வேண்டாமென்றும், தேவன் தமது கிருபையுள்ள வசனத்தால் (அப். 20:32) அவர்களைப் போதித்து சபையை நடத்தப் பயிற்றுவிப்பார் என்று பவுல் அவர்களுக்கு ஆலோசனை கூறினான். பவுல் கடந்து போய்விட்டான். ஆனால், தேவனோ என்றென்றும் அவர்களோடிருப்பார்.

பறவைகளைப்போல பிள்ளைகள் வீட்டைவிட்டு சென்றாலும், பழகின குடும்பங்களோ நண்பர்களோ பிரிந்து செல்லும் பொழுது வருத்தமாகத்தானிருக்கும். அவர்கள் நம்மைவிட்டு புது வாழ்வமைக்க சென்றுவிட்டனர். நாம் அவர்கள் கையைக் குலுக்கி விடும்பொழுது, தேவன் அவர்களைத் தமது கைகளில் பிடித்துக் கொண்டார் என்று நம்புவோம். அவர் அவர்கள் தேவைகளைச் சந்தித்து அவர்களது வாழ்வை வடிவமைப்பார். இதை நாம் ஒருபோதும் செய்ய முடியாது.

கூடாரங்களில் வசிப்பது

மின்னிசோட்டா மிக அழகான அநேகம் ஏரிகள் நிறைந்த ஒரு இடம். அங்கு திறந்த வெளியில் முகாமிடுவது எனக்கு அதிகப் பிரியம். அங்கிருந்து தேவனுடைய ஆச்சரியமான படைப்புகளைக் கண்டு வியப்பேன். ஆனால், முகாமில் கூடாரங்களில் தங்குவது பிடிக்காது. ஏனென்றால் மழைபெய்யும்பொழுது கூடாரம் ஒழுகி படுக்கை நனைந்துவிடும்.

நம்முடைய விசுவாச வீரர்களில் ஒருவரான ஆபிரகாம் நூறாண்டுகள் கூடாரங்களில் வாழ்ந்தார் என்பதை நினைத்து ஆச்சரியப்படுவேன். அவன் எழுபத்தைந்து வயதாயிருக்கையில் தேவன் அவனைப் பெரிய ஜாதியாக்குவதற்காக (ஆதி. 12:1-2) அழைத்த அழைப்பைக் கேட்டு தன் ஊரை விட்டுப்புறப்பட்டான். ஆபிரகாம் தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று நம்பி கீழ்ப்படிந்தான். அவன் 175 வயதில் மரிக்கும் வரை வாழ்நாள் முழுவதும் தன் வீட்டை விட்டு கூடாரங்களிலேயே வசித்தான் (25:7).

வீட்டைவிட்டு நாடோடியாய் வாழும்படி ஆபிரகாமுக்கு வந்த அழைப்பைப் போன்றதொரு அழைப்பு நமக்கில்லாமலிருக்கலாம். நாமும் இந்த பூமியில் வசிப்பதற்கு ஏற்ற ஒரு நல்ல வீட்டை வாஞ்சிக்கலாம். பலமான காற்றடித்துக் கூடாரத்தின் திரைகள் தூக்கப்பட்டு மழை கூடாரத்தினுள் அடிக்கும்பொழுது ஆபிரகாம் தேவன்தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு காத்திருந்திருப்பான் (எபி. 11:10). நாமும் ஆபிரகாமைப்போல தேவன் உருவாக்கிக்கொண்டிருக்கும் பரம தேசம் போன்ற நல்ல தேசத்தைத் தருவார் (வச. 16) என்ற நம்பிகையோடு இருக்கலாம்.

சீமோன் சொன்னது

ரெஃப்யூஜ் ரபீந்தரநாத் இலங்கையிலுள்ள வாலிபர் ஊழியத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிசெய்பவர். இரவு வெகு நேரம் வரை அவர்களோடு உரையாடுவார், விளையாடுவார், அவர்கள் சொல்வதைக் கேட்பார், ஆலோசனைகள் சொல்லி போதிப்பார். வாலிபர் மத்தியில் ஊழியம் செய்வதை அவர் அதிகம் விரும்பினார். ஆனாலும் கிறிஸ்துவுக்குள் வளர்ந்த வாலிபர்கள் விசுவாசத்தை விட்டு விலகும்போது சோர்ந்து போவார். சிலவேளைகளில் லூக்கா 5ல் உள்ள சீமோனைப்போல உணருவார்.

சீமோன் இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் பிடிக்கவில்லை (வச. 5) அவன் சோர்ந்து, களைத்துப்போயிருந்தான். இயேசு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வளைகளைப் போடுங்கள் என்றார். அதற்கு சீமோன் ஐயரே உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான் (வச. 5).

சீமோனின் கீழ்ப்படிதல் ஆச்சரியமானது அனுபவமிக்க மீனவனாகிய சீமோனுக்கு, வெயில் ஏறினவுடன் மீன்கள் கடலின் ஆழத்திற்குப்போய் விடுமென்றும், தங்கள் வலைகள் அவ்வளவு ஆழத்திற்கு எட்டாதென்றும் நன்கு தெரியும்.

அவன் இயேசுவனை நம்பினதற்கு நல்ல பலனைப் பெற்றுக்கொண்டான். அவன் திரளான மீன்களைப் பிடித்தது மட்டுமல்ல, இயேசு யாரென்றும் அழமாக அறிந்து கொண்டான். ஐயரே (வச. 5) என்று கூப்பிடுவதற்குப் பதிலாக ஆண்டவர் (வச.8) என்று அழைத்தான். மெய்யாகவே “கீழ்ப்படிதல்” நாம் தேவனுடைய செயல்களை நேரடியாகப் பார்த்து அவரை கிட்டிசேர வழி நடத்தும்.

ஒருவேளை தேவன் இன்று உங்கள் வலைகளை மறுபடியம் ஆழத்தில் போட அழைத்துக்கொண்டிருக்கலாம். நாமும் ஆண்டவர் சீமோன் சொனன்னதபோலவே, “உம்முடைய வார்த்தையின்படியே போடுகிறேன்” என்போமாக…