டிஸ்கவரி தொடர்

நான் மன்னிக்கப்படுவேனா?

பெரிய காரியங்களிலோ, சிறிய காரியங்களிலோ, நாம் உண்மையைச் சொன்னால், நாம் எல்லாவற்றிலும் குழம்பிப்போய் நிற்கிறோம். ஆயினும் உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு, கடவுளிடம் மன்னிப்புக்கேட்டு, கீழ்ப்படிந்து அவரிடம் திரும்பி வருகின்ற ஒவ்வொருவரும் உண்மையான மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. கடவுளால் மன்னிக்கப்படுதல் என்றால் என்ன, மன்னிக்கப்பட்ட வாழ்வு எப்படிப்பட்டது என்பவற்றைக் குறித்துக் கண்டுகொள்ளுங்கள்.

எனது ஆழ்ந்த துயரத்தினூடாக நான் எப்படிச் செல்வேன்?

இழப்பின் பின்னர் ஒருவர் துக்கப்படுவது அவருடைய தனிப்பட்ட விடயம். துக்கப்படுவது இப்படித்தான் என்று சொல்ல சரியான ஒரு வழி இல்லை. கடவுளுடைய அன்பிலும் கவனிப்பிலும் நாம் தங்கியிருக்கும்போது, துக்கம் எப்படிக் கிரியை செய்கிறது என்பதை இன்னும் சற்றுக் கூடுதலாக விளங்கிக்கொள்ளவும், இழப்பை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், இந்த விடயத்திற்கான இச்சிறிய அறிமுகம் உங்களுக்கு உதவிசெய்யும்.

கடவுள் ஏன் எனக்குப் பதிலளிப்பதில்லை?

நீங்கள் எதையாவது கடவுளிடம் கேட்டு, அவர் பதிலளிக்காமலிருந்தால், அவர் உங்களைக் குறித்து அவ்வளவு கரிசனைகொண்டிராதவர்; என்று நீங்கள் நினைக்கலாம். வேதாகமத்தில், ஆசாப் என்ற மனிதனைப்போல, இதே விடயமாகப் போராடிய வேறும் பலர் இருக்கிறார்கள் என்ற விடயம் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். ஆசாப்பின் மனப்பூர்வமான ஜெபங்களுள் ஒன்றான 77ம் சங்கீதத்தைப் படிப்பதனால், ஜெபத்தின் உண்மையான நோக்கம், சிறப்புரிமை, வல்லமை ஆகியவற்றை நீங்களே கண்டுகொள்வீர்கள்.

இன்னும் ஒருதடவை ….அதன்பின்னர் விட்டுவிடுவேன் ….

பழக்கத்திற்கு அடிமையாவதற்கான காரணங்கள் எவை, அதிலிருந்து விடுபட்டு வெளியேறுவதற்கு என்ன தேவை, அகப்பட்டுவிட்டோமே என்று உணருகிறவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது என்பவற்றை, கடவுளுடைய வார்த்தைகளிலிருந்து இச் சிறு படிப்பு ஆராய்கிறது.

இயேசு என்பவர் யார்?

இயேசு கிறிஸ்து கடவுள் என்ற நம்பிக்கை கிறிஸ்தவத்தின் மையத்தில் இருக்கிறது. ஆனால் இந்த உரிமைகோரல் அநேகருக்குச் சிரிப்புக்கிடமானதாகவே இருக்கிறது. ஆகவே, நமக்குத் தெரியும் என்று நாம் நினைப்பவற்றையும், நமது நண்பர்களால் அல்லது பெற்றோரால் நமக்குக் கூறப்பட்டவற்றையும் தவிர, உண்மையான இயேசு யார்?

உண்மையிலேயே வேதாகமத்தை நாங்கள் நம்பலாமா?

இன்றைய நவீன உலகிலே, வேதாகமம் ஒரு அறிவற்ற பழைய புத்தகமே தவிர வேறொன்றுமில்லை என்றும், அது காலத்துக்குக் காலம் திரும்பத் திரும்ப எழுதப்பட்ட, தேவதைகள் பற்றிய கதைகள், சிறுவர் கதைகள் ஆகியவை சேர்ந்த ஒரு கட்டுக் கதையின் கலவை என்றும் பலர் நம்புகிறார்கள். வேதாகமம் மிகச் சரியானதும், நம்பக்கூடியதுமான புத்தகம் என்பதை நிரூபிப்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?