எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Markகட்டுரைகள்

lk rumours of a pandemic

டிசம்பர் 30, 2019 அன்று, மருத்துவரான லீ வென்லியாங் அவர்கள், கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் சமூக வலைத் தள குழுவில் ஒரு செய்தியை வெளியிட்டார். சீனாவின், வுஹான் பகுதியிலுள்ள கடலுணவுச் சந்தையிலிருந்து தனிமைப்படுத்தலுக்குள்ளான ஏழு நபர்களும், “எந்த வகையைச் சார்ந்தது என்று இதுவரையிலும் குறிப்பிட்டு வகைப்படுத்தப்படமுடியாத” நூதனமானதொரு கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எச்சரித்திருந்தார். ஒவ்வொருவரும் கவனமாக இருக்கவும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் மாத்திரம் அவர் கேட்டிருந்தார். அதிகாரிகள் அதிருப்தியடைந்தவர்களாய், “வதந்தி பரப்புதல்", மற்றும் அனாவசியமான பயத்தை மக்கள் மத்தியில் பரப்பினார்…

தெரிவுகள் நிறைந்த ஒரு உலகில் தேவனை ஆராதிப்பதற்கு 3 சவால்கள்.

எழுதியவர் மெடலின் டுவ10னிää ஜெர்மனி

 

தேவனைத் தொழுதுகொள்வதையும்ää அவரோடு நேரம் செலவிடுவதையும் நான் மிகவும் விரும்புகிறேன்.
தினமும் காலையில்ää ஜெபம்ää இசைää வேதப்படிப்புää மற்றும் குறிப்பு எடுத்தல் என்வவற்றினூடாகத் தேவனை ஆராதிக்க நேரத்தை ஒதுக்குவதற்கு நான் இயன்றளவு முயற்சிசெய்வேன். அர்ப்பணிக்கப்பட்ட இந்த நேரத்தில்ää நான் தேவனுக்கு நன்றி செலுத்திää அவருடைய வார்த்தையைத் தியானிப்பேன். இதற்குப் பதிலாகää தேவனுடைய பிரசன்னம் - ஜெபங்களுக்கு அவருடைய பதில்ää அவர் என்னில் காட்டுகின்ற இரக்கம்ää ஆறுதல் - அவருடைய பெலத்தோடு என்னை நிரப்பும்@ எனக்குச் சமாதானத்தைத் தரும்ää தேவன்…

நேரமுகாமைத்துவத்தின் இரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன்

அது மாலைமங்கும் நேரம், நான் இன்னும் எனது கணணியில் எமது இணையத்தளத்திற்கு உடனடியாக தேவைப்படுகின்ற ஒரு கட்டுரையைத் தொகுத்துக்கொண்டிருந்தேன். எனது மகன் தனது விளையாட்டுகாரை மிகசத்தமாக தரையில் உருட்டிக்கொண்டிருந்தான், அது எனக்கு அவனுடன் சேர்ந்து இன்று மாலை விளையாட எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதனை நினைவூ ட்டியது. அதுமட்டுமல்ல, எனது கணவரும் தங்கையும் வீடுதிரும்பும் முன்னர் இரவு உணவை திட்டமிட்டுத்தயார் செய்யவும்வேண்டும்.

செய்யவேண்டியதைக் குறித்த எனது நீண்டுக்கொண்டே செல்கின்ற பட்டியலின் அடுத்த காரியத்தைப் பார்ப்பதற்குப்பதிலாக எனது நண்பர்கள் அண்மையில் வாசித்த புத்தகத்தை குறித்தான அறிவிப்பை…

நான் மன்னிக்கப்படுவேனா?

பெரிய காரியங்களிலோ, சிறிய காரியங்களிலோ, நாம் உண்மையைச் சொன்னால், நாம் எல்லாவற்றிலும் குழம்பிப்போய் நிற்கிறோம். ஆயினும் உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு, கடவுளிடம் மன்னிப்புக்கேட்டு, கீழ்ப்படிந்து அவரிடம் திரும்பி வருகின்ற ஒவ்வொருவரும் உண்மையான மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. கடவுளால் மன்னிக்கப்படுதல் என்றால் என்ன, மன்னிக்கப்பட்ட வாழ்வு எப்படிப்பட்டது என்பவற்றைக் குறித்துக் கண்டுகொள்ளுங்கள்.

எனது ஆழ்ந்த துயரத்தினூடாக நான் எப்படிச் செல்வேன்?

இழப்பின் பின்னர் ஒருவர் துக்கப்படுவது அவருடைய தனிப்பட்ட விடயம். துக்கப்படுவது இப்படித்தான் என்று சொல்ல சரியான ஒரு வழி இல்லை. கடவுளுடைய அன்பிலும் கவனிப்பிலும் நாம் தங்கியிருக்கும்போது, துக்கம் எப்படிக் கிரியை செய்கிறது என்பதை இன்னும் சற்றுக் கூடுதலாக விளங்கிக்கொள்ளவும், இழப்பை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், இந்த விடயத்திற்கான இச்சிறிய அறிமுகம் உங்களுக்கு உதவிசெய்யும்.

கடவுள் ஏன் எனக்குப் பதிலளிப்பதில்லை?

நீங்கள் எதையாவது கடவுளிடம் கேட்டு, அவர் பதிலளிக்காமலிருந்தால், அவர் உங்களைக் குறித்து அவ்வளவு கரிசனைகொண்டிராதவர்; என்று நீங்கள் நினைக்கலாம். வேதாகமத்தில், ஆசாப் என்ற மனிதனைப்போல, இதே விடயமாகப் போராடிய வேறும் பலர் இருக்கிறார்கள் என்ற விடயம் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். ஆசாப்பின் மனப்பூர்வமான ஜெபங்களுள் ஒன்றான 77ம் சங்கீதத்தைப் படிப்பதனால், ஜெபத்தின் உண்மையான நோக்கம், சிறப்புரிமை, வல்லமை ஆகியவற்றை நீங்களே கண்டுகொள்வீர்கள்.

இன்னும் ஒருதடவை ….அதன்பின்னர் விட்டுவிடுவேன் ….

பழக்கத்திற்கு அடிமையாவதற்கான காரணங்கள் எவை, அதிலிருந்து விடுபட்டு வெளியேறுவதற்கு என்ன தேவை, அகப்பட்டுவிட்டோமே என்று உணருகிறவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது என்பவற்றை, கடவுளுடைய வார்த்தைகளிலிருந்து இச் சிறு படிப்பு ஆராய்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.

அடிப்படையை தவறவிடுதல்

பல தசாப்தங்களாக, துரித உணவு வகையில் மெக்டொனால்ட் நிறுவனம் தனது குவார்ட்டர் பவுண்டர் பர்கர் கொண்டு ஆண்டது. 1980 களில் அதின் போட்டி நிறுவனம் தனது அற்புதமான திட்டத்தால் அதனை வீழ்த்த நினைத்தது. ஏ அண்ட் டபுள்யு நிறுவனம் மெக்டொனால்டை விட பெரிதான தர்ட் பவுண்ட் பர்கரை அதே விலைக்கு விற்றது. மேலும் அதின் ருசிக்காக பல விருதுகளையும் வென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. அதை வாங்க ஆளில்லை. இறுதியில், அவர்கள் அதை மெனுவிலிருந்து எடுத்துவிட்டனர். தர்ட் பவுண்ட் பர்கர் குவார்ட்டர் பவுண்டர் பர்கரை விட சிரியதென்று நுகர்வோர் தவறாய் புரிந்துகொண்டதே அதின் தோல்விக்கு காரணமென்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையிட்டது.

அடிப்படைகளை தவறவிடுவது எவ்வளவு எளிது என்று இயேசு எச்சரித்தார். மதத் தலைவர்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் அவரை இழிவுபடுத்த திட்டமிட்டனர், ஏழு முறை விதவையான ஒரு பெண்ணைப் பற்றி ஒரு விசித்திரமான, கற்பனையான காட்சியை முன்வைத்தனர் (மத்தேயு 22:23-28).  இந்த சிக்கலான தடுமாற்றம் ஒரு பிரச்சனையே இல்லை என்று இயேசு பதிலளித்தார். மாறாக, அவர்கள்  "வேதத்தையும் தேவனின் வல்லமையையும்" அறியவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்சனை (வச. 29). வேதவசனங்களின் நோக்கம் தர்க்கரீதியாகவும் தத்துவப் புதிர்களுக்கும் பதிலளிப்பதில்லை என்று இயேசு வலியுறுத்தினார். மாறாக, இயேசுவை அறியவும் நேசிக்கவும், அவரில் "நித்திய ஜீவனை" பெறவும் நம்மை வழிநடத்துவதே அவைகளின் முதன்மையான நோக்கம் (யோவான் 5:39). தலைவர்கள் தவறவிட்ட அடிப்படைகள் இவையே.

நாம் அடிக்கடி அடிப்படைகளையும் தவறவிடுகிறோம். உயிரோடிருக்கும் இயேசுவை கண்டுகொள்வதே வேதத்தின் முக்கிய நோக்கம். அதைத் தவறவிட்டால் மனவேதனையே மிஞ்சும்