வகை  |  odb

பரலோகத்தில் எஜமானன்

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் 2022 இல், புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் அனைவருக்கும் மாதம் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. எவ்வாறாயினும், அந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று முதலாளிகள் கவலைப்பட்டனர். பராமரிப்புக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இதை தீர்க்க கூடும் என்றாலும், ஓய்வின் அவசியத்தை பொருட்படுத்தாத அவர்களின் அணுகுமுறை அவ்வளவு சுலபமாகத் தீர்வு காணவில்லை.

மற்றவர்களை கவனமாக நடத்துவது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அப்போஸ்தலனாகிய பவுல், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களின் சொத்தாகக் கருதப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். ஆயினும்கூட, கிறிஸ்துவின் சாயலுள்ள குடும்பங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சபைக்கான அவரது அறிவுறுத்தல்களின் கடைசி வரியில், எஜமானர்கள் தங்கள் ஊழியர்களை "செவ்வையாய்" நடத்த வேண்டும் என்று கூறுகிறார் (கொலோசெயர் 4:1). மற்றொரு மொழிபெயர்ப்பு, "அவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்" என்கிறது.

"மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே" (3:24) பணியாற்றும்படி வேலைகாரர்களுக்கு பவுல் சொல்வது போல், எஜமானர்களுக்கும் "பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று" (4:1) அவர்கள் மீதான இயேசுவின் அதிகாரத்தை நினைவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் அதிகாரமே இறுதியானது என்று வாழ கொலோசெய விசுவாசிகளை ஊக்குவிப்பதே அவரது நோக்கம். நாம் எஜமானாக அல்லது பணியாளனாக இருந்தாலும், நம் வீடுகள் அல்லது சமூகங்களில் மற்றவர்களுடன் நாம் நடப்பதில், "நீதியும் செவ்வையுமாய்" (வ.1) இருக்க நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்கலாம்.

ஆணி வடு கரங்கள்

என்னைப் போலவே, வடுக்களை உண்டாக்கும் சில காயங்களை நீங்கள் எப்போது பெற்றீர்கள் என்பதை அறிந்திருக்கலாம். என் மணிக்கட்டில் ஒரு சிறிய வடு, நடுநிலைப் பள்ளியில் சக இசைக்குழு…

தேவனால் அறியப்படுதல்

ஜார்ஜியாவில் (அமெரிக்கா) உள்ள ஒரு கல்லூரி மாணவர் ஒரு சக மாணவருக்கு, மரபணு சோதனை அவர்கள் சகோதரர்களாக இருக்கக்கூடும் என்று காட்டுகிறது என்று குறுஞ்செய்தி அனுப்பியபோது இவ்வாறு…

துப்பறியும் வேலை

1986 ஆம் ஆண்டில், துப்பறியும் ஹெர்குல் பாய்ரோட் வேடத்தில் பெயர் பெற்ற ஆங்கில நடிகரான சர் டேவிட் சுசெட், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் புரிந்துகொள்ள ஒரு தேடலைத் தொடங்கினார்.…

வசந்தம் குளிர்காலத்தைப் பின்தொடர்வது போல

தன்னுடைய தேசம் எந்த ஒரு தூண்டுதலுமின்றி மற்றொரு தேசத்தின்மீது படையெடுத்ததை பற்றி எழுதிய "குற்றத்திற்காக" விசாரிக்கப்படுகையில், அந்த பத்திரிகையாளர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டார். எனினும் அவர்…

துப்புரவாளரின் ஜெபம்

தன் தெருவைத் துப்புரவு செய்யும் ஒருவரைக் கண்ட ராசா, அவருக்கு இரங்கி கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். அந்த நபர் அவருக்கு நன்றி சொல்லி, அவருக்காக ஜெபிக்கலாமா என்று…

தேவன் நினைத்தருள்கிறார்

சோக் சிங் கோவிட் -19 இலிருந்து மீண்டு வந்தபோது, ​​அவளது வயதான அம்மா பாதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவளுடைய அம்மா இறந்துவிட்டார். பின்னர் அவளைப் பிரிந்திருந்த…

முடிவுரை: நம்பிக்கை உண்டு

கடின சூழலில் கடக்க
இரண்டு பாதை உண்டு தெரிந்தெடுக்க
ஒரு பாதை விரக்தி, அது வேண்டாம்
நம்பிக்கை உண்டு இங்கே நடக்க.

வாழ்க்கையின் திகிலூட்டும், கசப்பான புயற்காற்றுகளை…