![Share Tamil ODB 2024-07-27 Share Tamil ODB 2024-07-27](https://d5eh2ln3o7ouk.cloudfront.net/wp-content/uploads/sites/91/2024/06/26101014/SD_2024_07.26-07.31_SOCIAL-POST_2024_07.27-940x940.jpg)
சிறிய வழிகளில்
எல்சி புற்றுநோயால் தாக்கப்பட்டபோது, இயேசுவுடன் பரலோகத்தில் ஜீவிக்க செல்லுவதற்கு தயாராக இருந்தார். ஆனால் அவள் அந்த வியாதியிலிருந்து குணமடைந்தாள். தேவன் ஏன் தன் உயிரைக் காப்பாற்றினார் என்று அவளை யோசிக்க வைத்தது. “நான் என்ன நல்லது செய்ய முடியும்? என்னிடம் அதிக பணமோ திறமையோ இல்லை, என்னால் நடக்க முடியாது. நான் உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்க முடியும்?” என்று அவள் தேவனிடம் கேட்டாள்.
பின்னர் மற்றவர்களுக்கு சேவை செய்ய சிறிய, எளிய வழிகளைக் கண்டறிந்தார். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் அவளுடைய வீட்டை சுத்தம் செய்கிறவர்களின் தேவையை அறிந்தாள். அவள் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள். அவ்வப்போது பணத்தைக் கொடுத்தாள். இந்த ரொக்கப் பரிசுகள் சிறியதாக இருந்தபோதிலும், அவை தொழிலாளர்களுக்கு உதவி செய்ய நீண்ட தூரம் சென்றன. அவள் அவ்வாறு செய்யும்போது, தேவன் அவளுக்கு கொடுப்பதை அவள் கண்டாள்: நண்பர்களும் உறவினர்களும் அவளுக்கு பரிசுகளையும் பணத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய அவளைத் தூண்டினர்.
அவள் தனது கதையைப் பகிர்ந்து கொண்டபோது, 1 யோவான் 4:19இல் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை எல்சி எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை: “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” மேலும் அப்போஸ்தலர் 20:35, “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று நினைப்பூட்டுகிறது.
எல்சி கொடுத்தாள், ஏனென்றால் அவள் தேவனிடத்திலிருந்து பெற்றாள். அவள் கொடுத்ததைப் போலவே ஊக்கமும் பெற்றாள். ஆயினும்கூட, அன்பான, நன்றியுள்ள இதயம் மற்றும் தன்னிடம் இருப்பதைக் கொடுக்கத் தயாராக இருப்பதை விட அவளிடமிருந்து கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது. தேவன் கொடுக்கல்-வாங்கல் என்ற நல்லொழுக்க வட்டத்தில் அதிகமாய் அவளை பெருகச்செய்தார். அவர் நம்மை வழிநடத்தும் போது, கொடுத்து உதவ நன்றியுள்ள மற்றும் தாராள மனதைக் கொடுக்கும்படி அவரிடம் கேட்போம்!
![Share Tamil ODB 2024-07-26 Share Tamil ODB 2024-07-26](https://d5eh2ln3o7ouk.cloudfront.net/wp-content/uploads/sites/91/2024/06/26101004/SD_2024_07.26-07.31_SOCIAL-POST_2024_07.26-940x940.jpg)
இயேசு கறைகளை கழுவுகிறார்
வாஷிங் மெஷினில் என்னுடைய சட்டையை தேடி, “நீ என்ன வேடிக்கை காண்பிக்கிறாயா?” என்று உரக்க கத்தினேன். என் சட்டையை கண்டுபிடித்தேன். எனக்கு அதிர்ச்சியாயிருந்தது.
என் வெள்ளை சட்டையில் மை புள்ளி இருந்தது. மையின் கறைகள் அங்கிருந்த அனைத்து ஆடைகளிலும் பரவியிருந்தது. நான் தெளிவாக என் சட்டை பைகளை சரிபார்க்கவில்லை. அதிலிருந்து கசிந்த ஒரு பேனா மை அனைத்து பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது.
பாவத்தை விவரிக்க வேதம் பெரும்பாலும் கறை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஒரு கறை துணியில் ஊடுருவி, அவற்றை அழிக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் பாவத்தை விவரித்தார். அதன் கறை அவர்களின் தூய்மைக்கு அப்பாற்பட்டது என்பதை நினைவூட்டுகிறது: “நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரேமியா 2:22).
அதிர்ஷ்டவசமாக, பாவம் நம்மை முழுவதுமாய் ஆளுகை செய்யப் போவதில்லை. ஏசாயா 1:18ல், பாவத்தின் கறையிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க முடியும் என்ற தேவனின் வாக்குறுதியை நாம் கேட்கிறோம்: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”
என் சட்டையில் இருந்து மை கறையை வெளியே எடுக்க முடியவில்லை. என் பாவத்தின் கறையை என்னால் அகற்றவும் முடியாது. அதிர்ஷ்டவசமாக, 1 யோவான் 1:9 வாக்களித்தபடி, தேவன் நம்மை கிறிஸ்துவில் சுத்திகரிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”
![Share Tamil ODB 2024-07-25 Share Tamil ODB 2024-07-25](https://d5eh2ln3o7ouk.cloudfront.net/wp-content/uploads/sites/91/2024/06/26100952/SD_2024_07.21-07.25_SOCIAL-POST_2024_07.25-940x940.jpg)
நிஜமாய் வாழுங்கள்
2000 ஆம் ஆண்டில் போதகர் எட் டாப்சனுக்கு ஏ.எல்.எஸ் இருப்பது கண்டறியப்பட்டபோது,ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்காக ஜெபித்தனர். குணமடைய நம்பிக்கையுடன் ஜெபித்தால் செய்தால், தேவன் உடனடியாக பதிலளிப்பார் என்று பலர் நம்பினர். எட்ஸின் தசைகள் சிறிது சிறிதாக சிதைவதற்கு காரணமான நோயுடன் பன்னிரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு (அவர் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு), தேவன் அவரை இன்னும் ஏன் குணப்படுத்தவில்லை என்று நினைக்கிறீர்கள் என்று ஒருவர் அவரிடம் கேட்டார். “நல்ல பதில் என்று ஒன்று இல்லை. அதினால் நான் கேட்கவில்லை” என்று அவர் பதிலளித்தார். அவரது மனைவி லோர்னா மேலும் கூறுகையில், “நீங்கள் எப்போதும் பதில்களைப் பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருந்தால், நீங்கள் உண்மையில் வாழ முடியாது" என்று சொன்னார்கள்.
எட் மற்றும் லோர்னாவின் வார்த்தைகளில் தேவனுக்கான கனத்தை உங்களால் உணர முடிகிறதா? அவருடைய ஞானம் தங்களுக்கு மேலானது என்பதை அவர்கள் அறிந்தார்கள். இருப்பினும் எட் ஒப்புக்கொண்டார், “நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.” நோய் அதிகரிக்கும் இயலாமையை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அடுத்த நாள் என்ன புதிய பிரச்சனை வரக்கூடும் என்று அவருக்குத் தெரியவில்லை.
நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுவதற்காக, எட் இந்த வசனங்களை தனது காரில், குளியலறை கண்ணாடியில், மற்றும் அவரது படுக்கைக்கு அருகில் வைத்தார்: “நான் (கர்த்தர்) உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5). அவர் கவலைப்படத் தொடங்கும் போதெல்லாம், அவர் தனது எண்ணங்களை சத்தியத்தின் மீது மீண்டும் ஒருமுகப்படுத்த உதவும் வசனங்களை திரும்பத் திரும்பச் சொல்வார்.
அடுத்த நாள் எதைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை எட் பயிற்சி, நம் கவலைகளை நம்பிக்கையின் வாய்ப்புகளாக மாற்ற நமக்கு உதவிசெய்யக் கூடும்.
![Share Tamil ODB 2024-07-24 Share Tamil ODB 2024-07-24](https://d5eh2ln3o7ouk.cloudfront.net/wp-content/uploads/sites/91/2024/06/26100943/SD_2024_07.21-07.25_SOCIAL-POST_2024_07.24-940x940.jpg)
தேவனே மெய்யான அடைக்கலம்
அவரது மனைவி இறந்த பிறகு, ஃபிரெட் தனது நண்பர்களுடன் திங்கள்கிழமை காலை உணவை சாப்பிடும் வரை தன்னுடைய வலியைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று உணர்ந்தார். அவரோடு ஓய்வுபெற்ற சக ஊழியர்கள், அவரை அதிகமாய் உற்சாகப்படுத்தினர். சோகம் வரும்போதெல்லாம், அவர்கள் தன்னோடிருந்தால் நலமாயிருக்கும் என்று அவர் எதிர்பார்ப்பார். அவர் துக்கப்படும்போதெல்லாம் அவருடைய வீட்டின் மூலையிலிருக்கும் மேசையில் சாய்ந்துகொள்வார்.
இருப்பினும், காலப்போக்கில் அவர்களுடைய சந்திப்புகள் நின்றுவிட்டன. சில நண்பர்கள் நோய்வாய்ப்பட்டனர்; மற்றவர்கள் காலமானார்கள். அவருடைய வெறுமை, ஃபிரெட் தனது இளமை பருவத்தில் சந்தித்த தேவனிடம் ஆறுதல் தேட வழிவகுத்தது. அவர் சொல்லும்போது, “இப்போது நானே காலை உணவு சாப்பிட்டுக்கொள்கிறேன். ஆனால் இயேசு என்னுடன் இருக்கிறார் என்ற உண்மையை நான் அறிந்திருக்கிறேன். நான் உணவகத்தை விட்டு வெளியேறும்போது, எனது மீதமுள்ள நாட்களை தனியாக எதிர்கொள்ளப்போகிறேன் என்ற எண்ணம் எனக்கு இல்லை” என்கிறார்.
சங்கீதக்காரனைப் போலவே, தேவனுடைய பிரசன்னத்தின் பாதுகாப்பையும் ஆறுதலையும் ஃப்ரெட் கண்டுபிடித்தார்: “நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்” (சங்கீதம் 91:2). ஃப்ரெட் பாதுகாப்பை மறைப்பதற்கான ஒரு மாம்சீக இடமாக அல்லாமல், நம்பி ஓய்வெடுக்கக்கூடிய தேவனுடைய உறுதியான பிரசன்னமாகத் தெரிந்து கொண்டார் (வச. 1). ஃப்ரெட் மற்றும் சங்கீதக்காரன் இருவரும் கடினமான நாட்களை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று கண்டறிந்தனர். நாமும் தேவனுடைய பாதுகாப்பையும் உதவியையும் உறுதிசெய்யலாம். நாம் நம்பிக்கையுடன் அவரிடம் திரும்பும்போது, அவர் பதில்கொடுப்பதாகவும், நம்முடன் இருப்பதாகவும் உறுதியளிக்கிறார் (வச. 14-16).
வாழ்க்கை கடினமாக இருக்கும்போது நாம் செல்லும் பாதுகாப்பான இடம், வீட்டின் மூலையில் இருக்கும் மேசையா? அது நிலையானது அல்ல. ஆனால் தேவன் இருப்பார். நம்முடைய உண்மையான அடைக்கலமான அவரிடம் நாம் செல்வதற்காக அவர் காத்திருக்கிறார்.
![Share Tamil ODB 2024-07-23 Share Tamil ODB 2024-07-23](https://d5eh2ln3o7ouk.cloudfront.net/wp-content/uploads/sites/91/2024/06/26100932/SD_2024_07.21-07.25_SOCIAL-POST_2024_07.23-940x940.jpg)