கடவுள் ஏன் எனக்குப் பதிலளிப்பதில்லை?

நீங்கள் எதையாவது கடவுளிடம் கேட்டு, அவர் பதிலளிக்காமலிருந்தால், அவர் உங்களைக் குறித்து அவ்வளவு கரிசனைகொண்டிராதவர்; என்று நீங்கள் நினைக்கலாம். வேதாகமத்தில், ஆசாப் என்ற மனிதனைப்போல, இதே விடயமாகப் போராடிய வேறும் பலர் இருக்கிறார்கள் என்ற விடயம் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். ஆசாப்பின் மனப்பூர்வமான ஜெபங்களுள் ஒன்றான 77ம் சங்கீதத்தைப் படிப்பதனால், ஜெபத்தின் உண்மையான நோக்கம், சிறப்புரிமை, வல்லமை ஆகியவற்றை நீங்களே கண்டுகொள்வீர்கள்.