எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சிண்டி ஹெஸ் காஸ்பர்கட்டுரைகள்

மனதை தளரவிடாதே

என் அம்மா டோரதி நல்ல ஆரோக்கியத்துடன் எப்போது இருந்திருக்கிறார்கள் என்பதை என்னால் யோசிக்கமுடியவில்லை. பல ஆண்டுகளாக உடையக்கூடிய நீரிழிவு நோயாளியாக, அவரது இரத்த சர்க்கரை பெருமளவில் ஒழுங்கற்றதாக இருந்தது. சிக்கல்கள் உருவாகி, அவரது சேதமடைந்த சிறுநீரகங்களுக்கு நிரந்தர டயாலிசிஸ் தேவைப்பட்டது. நரம்பியல் மற்றும் எலும்பு முறிவு காரணமாக சக்கர நாற்காலி பயன்படுத்தப்பட்டது. அவர் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. 

ஆனால் அவரது சரீரம் சிகிச்சையை அனுமதிக்காததால், அவருடைய ஜெப வாழ்க்கை இன்னும் அதிகரிக்கத்துவங்கியது. தேவனின் அன்பை மற்றவர்கள் அறியவும் அனுபவிக்கவும் மணிக்கணக்காக ஜெபித்தார். வேதத்தின் விலைமதிப்பற்ற வார்த்தைகள் அவருக்கு இனிமையாக தெரிந்தது. அவரின் கண்பார்வை மங்குவதற்கு முன்பு, அவர் தன் சகோதரி மார்ஜோரிக்கு 2 கொரிந்தியர் 4-ல் உள்ள வார்த்தைகளை மேற்கோள்காட்டி ஒரு கடிதம் எழுதினாள்: “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரிந்தியர் 4:16). 

மனம் தளருவது எவ்வளவு இயல்பானது என்பதை பவுல் அறிந்திருந்தார். 2 கொரிந்தியர் 11இல், அவர் தன்னுடைய ஜீவியத்தை அபாயங்கள், வலிகள் மற்றும் பஞ்சம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாகவே வெளிப்படுத்துகிறார் (வச. 23-29). ஆனாலும் அவர் அந்த “தொல்லைகளை” தற்காலிகமானதாகவே கருதினார். நாம் எதைக் காண்கிறோமோ அதைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், நம்மால் பார்க்க முடியாத நித்தியமானவைகளைப் பற்றியும் சிந்திக்கும்படி அவர் நம்மை ஊக்குவித்தார் (4:17-18).

நமக்கு என்ன நடந்தாலும், நம் அன்பான பரமபிதா ஒவ்வொரு நாளும் நம் உள்ளான சுத்திகரிப்பை தொடர்ச்சியாய் செய்கிறார். அவர் நிச்சயமாய் நம்மோடிருக்கிறார். அவர் கொடுத்த ஜெபம் என்னும் வரத்தின் மூலம் அவர் நமக்கு மிக அருகாமையில் வந்திருக்கிறார். மேலும், அவர் நம்மைப் பலப்படுத்தி, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருவதாக அவர் அளித்த வாக்குறுதிகள் மெய்யானவைகள்.

வாக்குறுதி நிறைவேறியது

நான் சிறுபிள்ளையாயிருந்தபோது ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் இருநூறு மைல்கள் தூரம் வரை பயணம் செய்து என்னுடைய தாத்தா பாட்டியிடம் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கம். நான் நேசித்த என்னுடைய தாத்தா பாட்டியிடத்திலிருந்து எவ்வளவு ஞானத்தைக் கற்றுக்கொண்டேன் என்று நான் அப்போது அறியாதிருந்தேன். அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் தேவனோடு நடந்த அனுபவங்களையும் என்னுடைய சிறிய சிந்தையினால் கற்பனை செய்து பார்க்கமுடியாத ஞானத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தது. அவர்களோடு தேவனுடைய உண்மைத்துவத்தை பற்றிப்பேசிக்கொண்டிருக்கும்போது, தேவன் தான் செய்த அனைத்து வாக்குத்தத்தங்களிலும் உண்மையுள்ளவர் என்னும் மனவுறுதி எனக்கு ஏற்பட்டது. 

தேவதூதன் இயேசுவின் தாயாகிய மரியாளை சந்தித்தபோது, அவள் இளம் வயதுடையவளாயிருந்தாள். காபிரியேல் தூதனால் கொண்டுவரப்பட்ட செய்தி நம்பமுடியாத ஆச்சரியமாய் தோன்றினாலும் அதை கிருபையோடு செயல்படுத்த அவள் முற்பட்டாள் (லூக்கா 1:38). ஒருவேளை கர்ப்பமாயிருக்கும் அவளுடைய வயதுசென்ற உறவினரான எலிசபெத்தை (அறுபது வயதிருக்கும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்) பார்க்க சென்றிருந்தபோது, மரியாளுடைய வயிற்றில் கருவுற்றிருப்பது மேசியா என்னும் எலிசபெத்தின் ஆறுதலான வார்த்தைகள் அவளை தேற்றியிருக்கலாம் (வச. 39-45). 

என்னுடைய தாத்தா பாட்டியைப் போன்று நாமும் கிறிஸ்துவில் அதிகதிகமாய் வளர்ச்சியுறும்போது, தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற தேவன் என்பதை விசுவாசிக்க பழகிக்கொள்வோம். எலிசபெத்துக்கும் அவளுடைய கணவனான சகரியாவுக்கும் அவர் செய்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார் (வச. 57-58). அவர்களுக்கு பிறந்த பிள்ளையான யோவான் ஸ்நானகன், மனுஷீகத்தை எதிர்காலத்தை மாற்றக்கூடிய நபராய் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசனமாய் முன்னறிவிக்கப்பட்டவர். வாக்குப்பண்ணப்பட்ட உலக இரட்சராகிய மேசியா வருகிறார் (மத்தேயு 1:21-23).

அமைதிக்கான அறை

நீங்கள் அமெரிக்காவில் அமைதியான இடத்தைத் தேடுகிறவர்களென்றால், மினியாபோலிஸ், மினசோட்டாவில் நீங்கள் விரும்பும் அந்த அறை உள்ளது. இவ்வறையானது அனைத்து ஒலிகளிலும் 99.99 சதவீதத்தை உறிஞ்சிக்கொள்கிறது! ஆர்ஃபீல்ட் ஆய்வகங்களின் உலகப் புகழ்பெற்ற எதிரொலியற்ற அந்த அறை "பூமியின் அமைதியான இடம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த சத்தமில்லாத இடத்தை அனுபவிக்க விரும்புபவர்கள், கவனம் சிதறாத வண்ணம் உட்கார்ந்து கொள்ள வேண்டும். மேலும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் யாரும் அந்த அறையில் இருக்க முடியாது.

 

இத்தகைய மௌனத்தை பெரும்பாலும் நாம் விரும்ப மாட்டோம். ஆயினும்கூட, இரைச்சலும் அவசரமும் நிறைந்த இந்த உலகில் சிறிது அமைதிக்காக நாம் அனைவரும் சில சமயங்களில் ஏங்குகிறோம். நாம் பார்க்கும் செய்திகளும், நாம் உள்வாங்கும் சமூக ஊடகங்களும் கூட, நம் கவனத்தை சிதறடிக்கும் ஒருவித ஆரவாரமான "இரைச்சலை" நமக்குள் கொண்டு வருகின்றன. எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் வார்த்தைகள் மற்றும் படங்கள் நம் மனதில் பதிந்து விடுகின்றன. அவற்றில் நாம் மூழ்கி விட்டால் தேவனின் சத்தத்தைக் கேட்க முடியாமல் போய்விடும்.

 

எலியா தீர்க்கதரிசி ஓரேப் பர்வதத்தில் தேவனைச் சந்திக்கச் சென்றபோது, பலத்த, சடுதியான காற்றிலோ, பூகம்பத்திலோ அல்லது நெருப்பிலோ அவரைக் காணவில்லை (1 இராஜாக்கள் 19:11-12). எலியா ஒரு "மெல்லிய சத்தத்தைக்" கேட்கும் வரை, அவர் முகத்தை மூடிக்கொண்டு, "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை" (வவ. 12-14) சந்திப்பதற்காக குகையை விட்டு வெளியேறினார்.

 

உங்கள் ஆவியும்கூட அமைதலுக்காக ஏங்கலாம், ஆனால் அதைக்காட்டிலும் தேவனின் சத்தத்தை கேட்கவே அது வாஞ்சிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அமைதிக்கான ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுது தேவனின் 'மெல்லிய சத்தத்தை' உங்களால் கேட்க முடியும் (வச. 12).

செய்ய அல்லது செய்யக்கூடாதவை

நான் சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப் போரில் செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு பீரங்கி என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவ்வாகனத்தின் மீது ஏறுவதிலுள்ள ஆபத்து குறித்துப் பல எச்சரிப்பு குறிகள் இருந்தன. ஆனால் எனது நண்பர்கள் இருவரும் உடனடியாக துடிப்போடு ஏறினர். எங்களில் சிலர் சற்று தயக்கம் காட்டினாலும், இறுதியில் நாங்களும் அவ்வாறே செய்தோம். ஒரு சிறுவன் பதிவிடப்பட்ட எச்சரிப்புகளைக் காட்டி மறுத்துவிட்டான். ஒரு பெரியவர் நெருங்கியதும், இன்னொருவன் வேகமாகக் கீழே குதித்தான். விதிகளைப் பின்பற்றுவதற்கான எங்கள் விருப்பத்தை விட விளையாடும் ஆசை அதிகமாக இருந்தது.

நம் அனைவருக்குள்ளும் குழந்தைத்தனமான முரட்டாட்ட சுபாவம் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று கூறப்பட்டால் நமக்குப் பிடிக்காது. ஆயினும் எது சரியானது என்பதை அறிந்து அதைச் செய்யாவிடில் அது பாவம் (4:17) என்று யாக்கோபில் வாசிக்கிறோம். ரோமரில், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (7:19-20).

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் பாவத்துடன் போராடுவது புதிராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நாம் சரியானதைச் செய்வதற்கு நம் சொந்த பலத்தை மட்டுமே சார்ந்திருக்கிறோம். ஒரு நாள், இந்த வாழ்க்கை முடிவடையும் போது, நாம் உண்மையிலேயே பாவத் தூண்டுதல்களுக்கு மரித்திருப்போம். எவ்வாறாயினும் அதுவரை, தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவத்தின் மீதான வெற்றியை வென்றவரின் வல்லமையை நாம் நம்பலாம்.

தேவையை பார்த்தல்

என் அப்பாவின் கடைசி சில நாட்களில், ஒரு செவிலியர் அவருடைய அறைக்கு வந்து, அவருக்கு முகச்சவரம் செய்ய வேண்டுமா என்று கேட்டார். செவிலியர் மெதுவாக அவர் முகத்தைச் சவரம் செய்கையில், ​​“இவர் தலைமுறையைச் சேர்ந்த வயதானவர்கள் தினமும் சுத்தமாகச் சவரம் செய்ய விரும்புகிறார்கள்” என்று விளக்கினார். ஒருவருக்கு இரக்கம், கண்ணியம் மற்றும் மரியாதையைக் காட்ட வேண்டிய தேவையை உள்ளுணர்ந்து அந்த செவிலியர் செயலாற்றினார். அவர் அளித்த பரிவான கவனிப்பு என் இன்னொரு தோழியை எனக்கு நினைவூட்டியது, அவள் வயதான தாயின் நகங்களுக்கு இன்னும் நகப்பூச்சு பூசுகிறாள், ஏனென்றால் தான் அழகாயிருப்பது அந்த அம்மாவுக்கு முக்கியம்.

அப்போஸ்தலர் 9, தொற்காள் (தபீத்தாள் என்றும் அழைக்கப்படுபவர்) என்ற சீஷியை பற்றி நமக்குக் கூறுகிறது, அவர் ஏழைகளுக்கு கையால் செய்யப்பட்ட ஆடைகளை வழங்குவதன் மூலம் கருணை காட்டினார் (வ. 36,39). அவர் இறந்தபோது, ​​​​அவரது அறை நண்பர்களால் நிரம்பியது, அவர்கள் மற்றவர்களுக்கு உதவ விரும்பும் இந்த அன்பான பெண்ணைக் கண்ணீருடன் துக்கித்தனர்.

ஆனால் தொற்காளின் கதை அங்கு முடிவடையவில்லை. பேதுருவை அவள் உடல் கிடத்தப்பட்ட இடத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, ​​அவன் மண்டியிட்டு ஜெபம் செய்தான். தேவனின் வல்லமையால், "தபீத்தாளே, எழுந்திரு" (வ. 40) என்று கூறி அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். ஆச்சரியமாக, தொற்காள் கண்களைத் திறந்து காலூன்றி நின்றாள். அவள் உயிருடன் இருப்பதை அவளுடைய நண்பர்கள் உணர்ந்தபோது, ​​​​நகரம் முழுவதும் வார்த்தைகள் விரைவாகப் பரவின, மேலும் "அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்" (வ. 42).

தொற்காள் தன் வாழ்க்கையின் அடுத்த நாளை எப்படிக் கழித்தாள்? ஒருவேளை அவள் முன்பு இருந்ததைப் போலவே; மக்களின் தேவைகளைப் பார்த்து அவற்றை பூர்த்திசெய்திருப்பாள்.

மிக அழகான

என்னுடைய சிறுபிராயத்தில், நர்சரி மருத்துவமனை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது,புதிதாகப் பிறந்திருந்த குழந்தையை முதன்முறையாகப் பார்த்தேன். தலையில் முடி இல்லாத, கூம்பு வடிவ தலையுடன் ஒரு சிறிய, சுருக்கமான தோலுடன் இருந்த அந்த பிறந்த குழந்தையைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். என் அருகாமையில் நின்றிருந்த அந்த குழந்தையின் அம்மா, எல்லோரையும் பார்த்து, “குழந்தை அழகா இருக்கா?” என்ற மகிழ்ச்சியுடன் கேட்டார். மேலும் வேறொரு குழந்தையின் அப்பா, அவருடைய மகளைப் பார்த்து, “நீ மிகவும் அழகாயிருக்கிறாய்” என்று பாடல் பாடிய காணொலி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த அப்பாவுக்கு அவருடைய மகள் தான் உலகத்திலேயே அழகான விஷயம். 

தேவன் நம்மை அப்படித்தான் பார்க்கிறாரா? எபேசியர் 2:10, நாம் அவருடைய “செய்கையாயிருக்கிறோம்”- அவருடைய தலைசிறந்த படைப்பு என்று கூறுகிறது. நம்முடைய தோல்விகளை கருத்தில்கொள்ளும்போது, அவர் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதையும், அவருடைய பார்வையில் நாம் எந்த அளவிற்கு மதிப்புள்ளவர்கள் என்பதையும் நம்புவதற்கு கடினமாயிருக்கலாம். ஆனால் நாம் அன்பிற்கு பாத்திரவான்கள் என்பதினால் தேவன் நம்மை நேசிக்கவில்லை (வச. 3-4); மாறாக, அவர் அன்பாகவே இருப்பதினால் (1 யோவான் 4:8) நம்மை நேசிக்கிறார். அவருடைய அன்பானது ஒருவகையான இரக்கம். நாம் நம்முடைய பாவங்களுக்கு மரித்தவர்களாயிருந்தபோது, அவர் இயேசுவின் தியாகத்தின் மூலம் நம்மை அவரோடே இருக்கப்பண்ணி, அந்த அன்பின் ஆழத்தை நமக்கு வெளிப்படுத்தினார் (எபேசியர் 2:5,8). 

தேவனின் அன்பு மாறக்கூடியது அல்ல, அது நிலையானது. அவர் குறைவுள்ளவர்களையும், உடைந்தவர்களையும், பலவீனமானவர்களையும், குழப்பவாதிகளையும் நேசிக்கிறார். நாம் விழும்போது, நம்மை உயர்த்துவதற்கு அவர் நம்மோடு இருக்கிறார். நாம் அவருடைய பொக்கிஷம். அவருடைய பார்வைக்கு நாம் அழகானவர்கள். 

போதிய நேரம்

எனது நண்பரின் புத்தக அலமாரியில், லியோ டால்ஸ்டாயின் “வார் அண்ட் பீஸ்” (War and Peace) புத்தகத்தின் பெரிய தொகுப்பை நான் பார்த்தபோது, “நான் அதை இன்னும் முழுவதுமாய் படித்து முடிக்கவில்லை” என்று ஒப்புக்கொண்டேன். “நான் என் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது, “இப்போது நீங்கள் இறுதியாக அதைப் படிக்க நேரம் கிடைக்கும்” என்று சொல்லி என் நண்பர் ஒருவர் அப்புத்தகங்களை எனக்கு பரிசாகக் கொடுத்தார்” என்று மார்டி கூறினார்.

பிரசங்கி 3ஆம் அதிகாரத்தின் முதல் எட்டு வசனங்கள், வாழ்க்கையின் முக்கியமான சில உணர்வுகளின் செயல்பாடுகளை தாளத்தோடு எடுத்துரைக்கிறது. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் நாம் இருந்தாலும், நாம் செய்ய விரும்பும் அனைத்தையும் செய்ய நேரத்தைக் கண்டுபிடிப்பது பெரும்பாலும் கடினம். நமது நேரத்தை நிர்வகிப்பதைப் பற்றிய ஞானமான முடிவுகளை எடுக்க, ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்வது உதவியாக இருக்கும் (சங்கீதம் 90:12).

ஒவ்வொரு நாளும் தேவனுடன் நாம் நேரம் செலவிடுவது நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆரோக்கியமானது. ஆக்கப்பூர்வமான வேலையைச் செய்வது நமது ஆவிக்கு நல்லது (பிரசங்கி 3:13). நமக்கான தேவனின் நோக்கத்தை நிறைவேற்ற தேவனைச் சேவிப்பதும் மற்றவர்களுக்கு உதவுவதும் அவசியம் (எபேசியர் 2:10). ஓய்வெடுப்பது என்பது வீண் அல்ல; அது நமது உடலுக்கும் ஆவிக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.
நிச்சயமாக, நம்மில் அநேகருக்கு முக்கியமாக தோன்றும் காரியங்களில் நேரத்தை செலவிடுவது எளிதாக இருக்கும். ஆனால் பிரசங்கி 3:11, தேவன் நம் இருதயங்களில் “நித்தியத்தை” வைத்திருக்கிறார் என்று கூறுகிறது. நித்தியமான காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்க நினைவூட்டுகிறது. அது தேவனுடைய நித்தியத்தின் பார்வையை துவக்கமுதல் இறுதிவரை நம் கண்களுக்கு முன்பாக கொண்டு நிறுத்துகிறது.

மருக்கள் மற்றும் அனைத்தும்

“இங்கிலாந்தின் பாதுகாவலர்” என்றழைக்கப்பட்ட ஆலிவர் க்ரோம்வெல், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு படைத்தளபதி. அந்நாட்களில், இதுபோன்ற முக்கிய நபர்கள் தங்கள் உருவப்படங்களை வரைந்துக்கொள்வது வழக்கம். அதுபோல க்ரோம்வெல்லின் உருவப்படத்தை வரைந்த ஓவியர், அவரின் முகப்பொலிவை குறைக்கும் குறைகளை தவிர்த்துவிட்டு, அவரை அழகாய் வரைந்தார். அவரைப் பிரியப்படுத்தும் ஓவியரின் அச்செயலை அவர் விரும்பவில்லை.  அவர் அந்த ஓவியரைப் பார்த்து, “என் முகத்தில் இருக்கும் மருக்கள் மற்றும் அனைத்தோடும் என் முகத்தை வரையுங்கள், இல்லையேல் உங்களுக்கு நான் கூலி தரமாட்டேன்” என்று எச்சரித்தாராம். 

அந்த ஓவியரும் அதின்படியே வரைந்தாராம். எனவே வரைந்து முடிக்கப்பட்ட கிராம்வெல்லின் உருவப்படத்தில் சில முகப்பருக்கள் அப்பட்டமாக இருக்கும். ஆனால் இன்று சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களில், முகப்பருக்கள் நீக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் பின்னரே பிரசுரிக்கப்படுகிறது.

 “மருக்கள் மற்றும் எல்லாம்” என்ற பதம், இன்று மக்கள் தங்களை, தங்கள் தப்பிதங்கள், குறைகள், சிந்தனை என்று அனைத்தையும் உள்ளது-உள்ளது போலவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த பரவலாய் பயன்படுத்தப்படுகிறது. அது சிலவேளைகளில் மிகவும் கடினம். ஆனால் நாம் நம் உள்ளான மனிதனை கூர்ந்து கவனிக்கும்போது நம் குணாதிசயங்களில் இருக்கும் சில தவறான காரியங்களைக் கண்டுபிடிக்கக்கூடும். 

தேவன் நம்முடைய ‘மருக்களை’ மன்னிக்கிறவராயிருக்கிறார். கொலோசெயர் 3ஆம் அதிகாரத்தில் மற்றவர்களை மன்னிப்பதற்கு நாம் போதிக்கப்படுகிறோம். நேசிக்கமுடியாத, கடினமான மக்களிடத்தில் கூட பொறுமையாகவும், தயவாகவும், இரக்கத்துடனும் செயல்படும்படிக்கு அப்போஸ்தலன் பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார். தேவன் நம்மை மன்னிப்பது போல நாமும் மற்றவர்களை மன்னிக்கும்படியான இருதயம் உடையவரகளாய் இருக்க நம்மை உற்சாகப்படுத்துகிறார் (வச.12-13). கிறிஸ்துவின் உதாரணத்தை முன்வைத்து, தேவன் நம்மை நேசித்தது போல மற்றவர்களை அவர்களின் ‘மருக்கள் மற்றும் எல்லாவற்றோடும்’ நேசிக்க நாம் போதிக்கப்படுகிறோம்.   

இனிமையான நித்திரை

என் தோழி இரவில் விழித்துக்கொள்ளும் போது, அவள் "என் இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்" என்ற பாடலின் வரிகளை நினைத்துக்கொள்வாள். அதை அவள் "நடு இரவின் பாடல்" என்றழைப்பாள் ஏனெனில் அவள் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், அவரை நேசிக்க அவள் கொண்டிருந்த அநேக காரணங்களையும் அவளுக்கு அந்த பாடல் நினைவூட்டியது.

வாழ்க்கையில் தூக்கம் என்பது ஒரு அவசியமான, ஆனால் சிலசமயங்களில் மழுப்பலான பகுதியாகவும் உள்ளது. சிலநேரம் நம் வாழ்வில் அறிக்கையிடாத பாவங்களை நம் சிந்தைக்கு கொண்டுவரும் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தை உணர்வோம், அல்லது நம் வேலை, நம் உறவுகள், நம் பொருளாதாரம், நம் ஆரோக்கியம், அல்லது நம் பிள்ளைகள் போன்றவற்றை நினைத்து கவலைப்பட ஆரம்பிப்போம். உடனே நிச்சயமற்ற, கவலை நிறைந்த ஒரு எதிர்காலம் நம் எண்ணங்களில் வட்டமிட துவங்கும். நாம் சுதாகரித்து நேரம் கடந்திருக்கும் என்றெண்ணி கடிகாரத்தை பார்ப்போம் ஆனால் படுத்து சில நிமிடங்களே ஆகியிருக்கும்.

நீதிமொழிகள் 3:19-24 ல், நாம் தேவனுடைய ஞானம், புத்தி மற்றும் நல் ஆலோசனை ஆகியவற்றை காத்துக்கொள்ளும்போது நித்திரையின் நற்பலன்களையும் நாம் பெறுவோமென்று சாலொமோன் ராஜா நம்மை அறிவுறுத்துகிறார். உண்மையில் அவர், "அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும்...நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்."(வ) என்பதில் உரிமை பாராட்டினார்.

ஒருவேளை நம் அனைவருக்குமே ஒரு "நடு இரவின் பாடலோ", ஜெபமோ, அல்லது வேத வசனமோ மெல்லிய குரலில் ஒலித்து நம்மை நம்முடைய குழப்பமான சிந்தனைகளிலிருந்து மீட்டு தேவனையும், அவரது குணாதிசயத்தையும் உற்றுக்கவனிக்கும் சிந்தனைக்கு கொண்டுசெல்ல தேவைப்படுகிறது. சுத்தமான மனசாட்சியும், தேவனின் உண்மைத்தன்மைக்கு நன்றி நிறைந்த இதயமும், அன்புமே நமக்கு இனிமையான நித்திரையை கொண்டுவரும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இயேசுவுக்கு ஒப்புவித்தல்

1951 ஆம் ஆண்டில், ஜோசப் ஸ்டாலினின் மருத்துவர், அவரது உடல்நிலையைப் பாதுகாப்பதற்காக அவரது பணிச்சுமையைக் குறைக்குமாறு அறிவுறுத்தினார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியாளர், அந்த மருத்துவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி அவரை கைது செய்தார். பொய்களால் பலரை ஒடுக்கிய கொடுங்கோலன் உண்மையைக் கடைப்பிடிக்க முடியவில்லை. மேலும் அவர் வழக்கம்போல, உண்மையைச் சொல்கிறவர்களை பணியை விட்டு அகற்றினார். ஆனால் உண்மை கடைசியில் வென்றது. ஸ்டாலின் 1953இல் இறந்தார்.

எரேமியா தீர்க்கதரிசி, தனது துணிகரமான தீர்க்கதரிசனங்களுக்காக கைது செய்யப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார் (எரேமியா 38:1-6; 40:1). அவர் எருசலேமுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை யூதாவின் ராஜாவிடம் கூறினார். “நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும். அப்பொழுது... உம்முடைய ஆத்துமா பிழைக்கும்” (எரேமியா 38:20) என்று அவர் சிதேக்கியா ராஜாவிடம் கூறினார் (38:20). நகரைச் சூழ்ந்திருக்கும் இராணுவத்திடம் சரணடையத் தவறினால், அது நிலைமையை மோசமாக்கும். “உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள். நீரும் அவர்கள் கைக்கு தப்பிப்போகாமல்...” (வச. 23) என்று எரேமியா எச்சரிக்கிறார்.

அந்த உண்மையைச் செயல்படுத்த சிதேக்கியா தவறிவிட்டார். இறுதியில் பாபிலோனியர்கள் யூதேயாவின் ராஜாவைப் பிடித்து, அவனது குமாரர்கள் அனைவரையும் கொன்று, நகரத்தை தீக்கிரையாக்கினர் (அதி. 39).

ஒரு வகையில், ஒவ்வொரு மனிதனும் சிதேக்கியாவின் இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறான். பாவம் மற்றும் தவறான தீர்மானங்கள் என்ற நமது சொந்த வாழ்வின் சுவர்களுக்குள் நாம் சிக்கிக் கொள்கிறோம். பெரும்பாலும், நம்மைப் பற்றிய உண்மையைச் சொல்பவர்களைத் தவிர்ப்பதன் மூலம் விஷயங்களை மோசமாக்குகிறோம். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொன்னவரின் சித்தத்திற்கு நாம் சரணடைவது மட்டுமே நம்முடைய அடிப்படை தேவை.

நல்லெண்ணத்தை உருவாக்குதல்

சிறந்த வணிக நடைமுறைகளைப் பற்றி நாம் சிந்திக்கும் போது, முதலில் நினைவுக்கு வருவது கருணை மற்றும் பெருந்தன்மை போன்ற குணங்கள் அல்ல. ஆனால் தொழில்முனைவோர் ஜேம்ஸ் ரீயின் கூற்றுப்படி, அவைகள் தான் முதலில் நினைவுக்கு வரவேண்டும் என்கிறார். நிதி அழிவின் விளிம்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரீயின் அனுபவத்தில், அவர் “நல்லெண்ணம்” – “இரக்கம் காண்பிக்கும் குணம்” மற்றும் கொடுக்கும் மனப்பான்மை போன்றவைகளே அந்த நிறுவனத்தை விளிம்பு நிலையிலிருந்து மாற்றி வளர்ச்சியின் பாதையில் கொண்டுவந்தது என்கிறார். இந்த குணங்களை மையப்படுத்துவது மக்களுக்கு ஒருங்கிணைக்கவும், புதுமைப்படுத்தவும், சிக்கலைத் தீர்க்கவும் தேவையான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது. ரீ சொல்லும்போது, “நல்லெண்ணம் என்பது ஒரு உண்மையான சொத்து. அது திரளாய் பெருகக்கூடிய சுபாவம் கொண்டது” என்கிறார்.

 

அன்றாட வாழ்க்கையிலும், மற்ற காரியங்களோடு ஒப்பிடும்போது, இரக்கம் போன்ற குணங்களை தெளிவற்ற மற்றும் அற்பமானதாக நினைப்பது இயல்பு. ஆனால் இத்தகைய குணங்கள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானவை என்று அப்போஸ்தலர் பவுல் நமக்கு கற்பிக்கிறார்.

புதிய விசுவாசிகளுக்கு பவுல் எழுதும்போது, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் முதிர்ச்சி பெற்ற அங்கத்தினர்களாய் அவர்களை மறுரூபமடையச்செய்வதே ஆவியின் செயல்பாடு என்று குறிப்பிடுகிறார் (எபேசியர் 4:15). அதற்காக ஒவ்வொரு வார்த்தையும், கிரியையும் மற்றவர்களை எடுப்பித்து கட்டுகிற வகையில் இருந்தால் அது மதிப்பு மிக்கதாய் இருக்கும் (வச. 29). இரக்கம், தயவு, மற்றும் மன்னிப்பு ஆகியவைகளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவப்படுத்துவதின் மூலமே கிறிஸ்துவில் மறுரூபமாக்கும் அனுபவத்திற்குள் நாம் வரமுடியும் (வச. 32).

பரிசுத்த ஆவியானவர் நம்மை மற்ற கிறிஸ்தவர்களிடத்திற்கு வழிநடத்தும்போது, நாம் ஒருவரையொருவர் பார்த்து கற்றுக்கொள்ளும்போது நாம் வளர்ந்து முதிர்ச்சியடைகிறோம்.

அனைவருக்கான தேவனின் இருதயம்

ஒன்பது வயது நிரம்பிய மகேஷ் தனது நெருங்கிய நண்பன் நிலேஷ_டன் அவர்களது வகுப்பு தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு வந்தான். பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தாயார், மகேஷைப் பார்த்தபோது, “போதுமான நாற்காலிகள் இல்லை," என்று சொல்லி அவனை உள்ளே வருவதற்கு அனுமதிக்கவில்லை. ஏழையாகத் தோற்றமளித்த தனது நண்பருக்கு இடம் கொடுக்க தரையில் உட்கார நிலேஷ் முன்வந்தான். ஆனால் அந்த பெண்மணி அதையும் அனுமதிக்கவில்லை. மனச்சோர்வடைந்த நிலேஷ், கொண்டுவந்த பரிசுப்பொருட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு, மகேஷ_டன் வீடு திரும்பினான். இந்த நிராகரிப்பை அவனுடைய இதயம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்த சம்பவம் நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு, நிலேஷ் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அவர் தனது வகுப்பறையில் ஒரு காலி நாற்காலியை வைத்திருக்கிறார். ஏன் என்று மாணவர்கள் கேட்டால், “யாருக்கும் வகுப்பறையில் எப்பொழுதும் இடமளிக்க வேண்டும்” என்பது தனது நினைவூட்டல் என்று அவர் விளக்குகிறார்.

எல்லா மக்களையும் நேசிக்கும் இயேசுவின் இருதயத்தை அவருடைய வாழ்க்கையில் நாம் காணக்கூடும்: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் (மத்தேயு 11:28). இந்த அழைப்பு “முதலாவது யூதருக்கு” (ரோமர் 1:16) என்னும் இயேசுவின் ஊழியத்தின் நோக்கத்திற்கு முரணாகத் தெரியலாம். ஆனால் இயேசுவை விசுவாசிக்கும் அனைவருக்கும் இரட்சிப்பு என்னும் பரிசு கொடுக்கப்படுகிறது. “விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை” (3:22) என்று பவுல் சொல்லுகிறார்.

அனைவருக்குமான கிறிஸ்துவின் அழைப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29). அவரது இளைப்பாறுதலை நாடும் அனைவருக்காகவும் அவர் திறந்த மனதுடன் காத்திருக்கிறார்.