எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மோனிகா லா ரோஸ்கட்டுரைகள்

நான் ஒன்றுமில்லை! நீ யார்?

“நான் ஒன்றுமில்லை! நீ யார்?" என்று தொடங்கும் எமிலி டிக்கின்சனின் ஒரு கவிதையில், அடையாளம் இல்லாமல் இருப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விடுத்து, யாரோ ஒருவராய் தாங்கள் இருக்கவிரும்பும் மக்களின் சிந்தையை அவர் சவால்விடுகிறார். “யாரோ ஒருவராய் இருப்பதற்கு ஏன் மந்தமாக உணரவேண்டும்! – தவளைபோல் யாரோ ஒருவராய் வாழ்வதற்கு ஏன் யோசிக்கிறோம்.”

யாரோ ஒருவராய் வாழ்வதற்கான தேவையை விட்டுவிடுவதில் ஏற்படும் சுதந்திரத்தை அனுபவிப்பது என்பது பவுல் அப்போஸ்தலரின் சாட்சியை நினைவுபடுத்துகிறது. பவுல் இயேசுவை சந்திக்கும் முன்பு, வெளியரங்கமாய் மக்களை ஈர்க்கும் மத அங்கீகாரங்களையும் மாம்சத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்கான நியாயமான காரணங்களையும் பவுல் கொண்டிருந்தார் (பிலிப்பியர் 3:4). 

ஆனால் இயேசுவை சந்தித்த பின்பு அனைத்தும் மாறியது. கிறிஸ்துவின் தியாகமான அன்பின் ஊடாய் தன்னுடைய மார்க்க ரீதியான சாதனைகளை பார்க்க பழகிய பவுல், “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், ... கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்... (வச. 8) என்று அறிக்கையிடுகிறார். “நான் அவரை... அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்” (வச. 10) வாழ்வதே தன்னுடைய வாழ்க்கையின் முதன்மைக் குறிக்கோள் என்று சொல்லுகிறார்.

யாரோ ஒருவராய் நாம் மாற முயற்சிப்பது மந்தமான வாழ்க்கை. ஆனால் கிறிஸ்துவின் தியாகமான அன்பின் நிழலில் நம்முடைய சுயத்தை இழப்பது என்பது, ஜீவியத்தை புதுப்பிக்கும் புதுவாழ்வை நமக்கு அறிமுகப்படுத்துகிறது (வச. 9).

ஒவ்வொரு துக்கமும்

"நான் சந்திக்கும் ஒவ்வொரு துக்கத்தையும் அளவிடுகிறேன்," என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் கவிஞர் எமிலி டிக்கின்சன் எழுதினார்: "குறுகிய ஆய்வு கண்களால் அது கடினமானதாயிருக்கிறதா அல்லது அவை எளிதானதுதானா என நான் ஆச்சரியப்படுகிறேன." மக்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் தாங்கள் காயப்படுத்தப்பட்ட விதவிதமான வழிமுறைகளை இந்த கவிதை எதிரொலிக்கிறது, ஏறக்குறைய தயக்கத்துடன், அவளது ஒரே ஆறுதலாக, கல்வாரியில் அவளது சொந்த காயங்கள்  தனது இரட்சகரின் காயங்களில் "துளைக்கப்பட்ட ஆறுதலாக" பிரதிபலிக்கப்பட்டதை கண்டு ”அக்காயங்களை என் காயங்களைப் போலவே உணருகிறேன்” என்றாள்.

 

வெளிப்படுத்தின விசேஷம் நம் இரட்சகராகிய இயேசுவை,” அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி“ என்று விவரிக்கிறது (5:6; பார்க்க வ. 12) அவருடைய காயங்கள் ஆறவில்லை. அவருடைய மக்களின் பாவம் மற்றும் விரக்தியைத் தம்மீது எடுத்துக்கொள்வதன் மூலம் சம்பாதித்த காயங்களின் (1 பேதுரு 2:24-25) மூலம் புதிய வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பெற முடியும்.

 

மேலும், இரட்சகர் தம் பிள்ளைகள் "யாவரின் கண்ணீரையும் துடைப்பார்" (21:4) என்று வெளிப்படுத்தின விசேஷம் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி விவரிக்கிறது. இயேசு அவர்களின் வலியைக் குறைக்க மாட்டார், ஆனால் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட துக்கத்தையும் உண்மையாகப் பார்த்து கவனித்துக்கொள்கிறார்.அவருடைய ராஜ்யத்தில் புதிய, குணப்படுத்தும் வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு அவர்களை அழைக்கிறார், அங்கு ”இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின”. (வ.4) ஜீவத் தண்ணீரின் ஊற்றிலிருந்து செலவில்லாமல் குணப்படுத்தும் நீர் பாய்கிறது (வ. 6; பார்க்க 22:2).

 

நம்முடைய இரட்சகர் நம்முடைய ஒவ்வொரு துக்கத்தையும் சுமந்திருப்பதால், அவருடைய ராஜ்யத்தில் நாம் ஓய்வையும், சுகத்தையும் காணலாம்.

நம் அடைக்கலப் பட்டணம்

ஓய்வு பெற்ற ஆசிரியை டெபி ஸ்டீபன்ஸ் ப்ரோடர், முடிந்தவரை மரங்களை நடுவதற்கு மற்றவர்களை ஊக்கப்படுத்தினார். அதற்கு காரணம்? வெயிலின் உஷ்ணம். தட்பவெப்ப நிலை சார்ந்த காரணங்களை வைத்து பார்க்கும்போது, அமெரிக்காவில் பெரும்பாலானோரின் இறப்புக்கு உஷ்ணமே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. “நான் மரங்களை நடுவதிலிருந்து துவங்குகிறேன்” என்று அந்த பிரச்சனைக்கு அவர் தீர்வளிக்கிறார். சமுதாயத்தை வெயிலின் உஷ்ணத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு பெரிய தீர்வு மரங்களே. “இது சமுதாயத்தை அழகாக்கும் முயற்சியல்ல; மாறாக, வாழ்வா சாவா என்னும் போராட்டம்” என்று அவர் சொல்லுகிறார். 

நிழல் என்பது வெறும் புத்துணர்வூட்டக்கூடிய காரியம் மட்டுமல்ல; அது உயிரைக் காப்பாற்றக்கூடியது என்பதை 121ஆம் சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரன் அறிந்திருந்தான். மத்திய கிழக்கில், சூரிய ஒளியின் ஆபத்து அதிகமாயிருக்கும். “பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை” (வச. 6) என்று தேவனுடைய பாதுகாப்பை விவரிக்கும் சங்கீதக்காரன், தேவனே நம்முடைய ஆபத்துக்காலத்தின் அடைக்கப்பட்டணம் என்பதை இந்த ஒப்புமையின் மூலம் விவரிக்கிறார். 

இந்த வேதவாக்கியம், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு வலியோ வேதனையோ இல்லை என்று சொல்லவில்லை. “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” (யோவான் 16:33) என்றே இயேசு சொல்லுகிறார். ஆனால் நிழல் என்ற இந்த உருவகத்தின் மூலம், நம்முடைய பாதையில் குறுக்கிடுவது எதுவாக இருப்பினும் தேவன் நம்மை அதிலிருந்து பாதுகாக்கிறார் என்பதை உறுதுபடுத்துகிறது (சங்கீதம் 121:7-8). அந்த இடத்தில் அவரை நம்புவதின் மூலமும், அவருடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்கமுடியாது என்று அறிவதின் மூலமும் நாம் இளைப்பாறுதலை அடையமுடியும் (யோவான் 10:28; ரோமர் 8:39).

கனவல்ல

அது நீங்கள் எழுந்திருக்க முடியாத கனவில் வாழ்வது போன்றது. சில சமயங்களில் “உணர்ச்சியற்று தனிமையாயிருத்தல்” அல்லது “தனிமையாக்கப்படுதல்” என்ற சூழ்நிலைக்குள் கடந்துசெல்பவர்கள், தங்களைச் சுற்றியுள்ள எதுவும் உண்மையில்லை என்று நினைக்கிறார்கள். நீண்டகாலமாக இந்த உணர்வைக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கோளாறு இருப்பதைக் கண்டறிய முடியும் என்றாலும், மனஅழுத்தம் நிறைந்த காலங்களில் இது ஒரு பொதுவான மனநலப் போராட்டம் என்று நம்பப்படுகிறது. வாழ்க்கை நன்றாக இருந்தாலும்கூட இதுபோன்ற உணர்வுகள் சிலவேளைகளில் நம்மை அழுத்தும். நமக்கு நல்ல காரியங்கள் நடப்பதே இல்லை என்று நம்முடைய சிந்தை நம்ப ஆரம்பித்துவிடுகிறது. 

தேவ ஜனம், சில சமயங்களில் அவருடைய வல்லமையையும் விடுதலையையும் அனுபவிப்பதற்காக நடத்தும் இதேபோன்ற போராட்டத்தை ஒரு கனவாக அல்ல, உண்மை என்றே வேதம் அறிவிக்கிறது. அப்போஸ்தலர் 12ல், ஒரு தேவதூதன் பேதுருவை சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கும்போது (வச. 2,4), என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்போஸ்தலர் மயக்கத்தில் இருந்ததாக அறிவிக்கப்படுகிறது (வச. 9-10). தேவதூதன் அவரை சிறைக்கு வெளியே விட்டுச் சென்றபோது, பேதுருவுக்கு தெளிவு வந்தது (வச. 11) என்று வேதம் அறிவிக்கிறது. பின், சம்பவித்தவைகள் எல்லாம் உண்மை என்பதை பேதுரு அறிகிறான். 

நல்லதோ கெட்டதோ, நம்முடைய வாழக்;கையில் சம்பவிக்கும் காரியங்களில் தேவன் முற்றிலும் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை நம்புவது சிலவேளைகளில் கடினமாய் தோன்றலாம். ஆகிலும் அவரை விசுவாசிக்கும்போது, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையானது ஆச்சரியமான விதங்களில் கிரியை செய்யும் என்பதை மறுக்கமுடியாது. தேவனுடைய வெளிச்சமானது நம்முடைய நித்திரையிலிருந்து நம்மை விழிக்கச் செய்து அனைத்தையும் நிஜமாய் நம் கண்முன் கொண்டுவருகிறது (எபேசியர் 5:14).

மேலானவைகளுக்காக ஓடுதல்

என் தோழி இரா அலைபேசியில் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து நான் நொறுங்கிப்போனேன். உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட தலைநகரான கீவிலுள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு 2022 இல், ஒரு ஓட்டபந்தயத்தை முடித்த பிறகு தனது நாட்டின் கொடியை உயர்த்தி பிடித்து அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் எழுதினார், " நாம் அனைவரும் வாழ்வென்னும் மாரத்தானில் இயன்றமட்டும் சிறப்பாக ஓடுகிறோம். இந்நாட்களில் இன்னும்கூட சிறப்பாக ஓடுவோம். நமது இதயங்களில் அணையாத ஒன்றைப் பற்றிக்கொள்வோம்”. தொடர்ந்து வந்த நாட்களில், அவள் குறிப்பிட்டுச்சொன்ன ஓட்டத்தை பல வழிமுறைகளில் ஓடுவதைக் கண்டேன்.  அவள் தன் நாட்டில் துன்பப்படுபவர்களுக்காக எப்படி ஜெபிப்பது மற்றும் ஆதரவளிப்பது என்று எங்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இராவின் வார்த்தைகள், எபிரெயர் 12ல் விசுவாசிகள் "பொறுமையோடே ஓடக்கடவோம்" (வ.1)  என்ற அழைப்புக்கு புதிய ஆழத்தைக் கொண்டுவந்தது. அந்த அழைப்பு அதிகாரம் 11 இன் விசுவாச வீரர்களின் பட்டியலைத் தொடர்கிறது. “மேகம் போல இத்தனை திரளான சாட்சிகளான” (12:1) அவர்கள் தைரியமாக எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்ந்தனர். தங்கள் உயிர் போகும் ஆபத்திலும் கூட நீடியபொறுமையான விசுவாசத்தோடு (11:33-38) தங்கள் கண்களுக்குத் தூரமான, என்றும் அழியாத நித்திய காரியங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தனர் (வ.13).

இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் அவ்வாறே வாழ அழைக்கப்பட்டுள்ளனர். விரிவடையும் வளர்ச்சியும், அமைதியுமான ஷாலோமெனும் சமாதானமான தேவனுடைய ராஜ்யத்திற்காக நாம் எதையும் இழக்கலாம். ஏனெனில் கிறிஸ்துவின் முன்மாதிரியும் வல்லமையும் தான் நம்மைத் தாங்குகிறது (12:2-3).

புதிய ஆரம்பம்

சங்கீதம் 120ஐக் குறித்த தன்னுடைய நேர்த்தியான விளக்கத்தில், யூஜின் பீட்டர்சன், “நாம் சத்தியம் என்று எதை நம்பியிருந்தோமோ அது பொய் என்ற வலிமிகுந்த உணர்வைப் பெறும்போதே கிறிஸ்தவ விழிப்புணர்வு துவங்குகிறது” என்கிறார். சங்கீதம் 120, எருசலேமுக்கு பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களால் பாடப்பட்ட “உன்னதப்பாடல்” வரிசையில் (120-134) முதலாவதாய் இடம்பெற்றுள்ளது. பீட்டர்சன் இந்த கருத்தை “ஒரே திசையில் நிலையான கீழ்ப்படிதல்” என்னும் பதிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த சங்கீதங்கள் அனைத்தும் தேவனிடத்தில் கிட்டிசேரும் ஆவிக்குரிய பயணத்தை முன்வைக்கிறது. 

நம்முடைய புதுமையான ஒன்றின் தேவையைக் குறித்த ஆழமான விழிப்புணர்வுடன் மட்டுமே துவங்கக்கூடியது. பீட்டர்சன் சொல்லுவதுபோல, “கிறிஸ்தவ பாதையில் ஒருவன் ஈர்க்கப்படுவதற்கு அவன் வெறுக்க பழகவேண்டும்…. கிருபையின் பாதையை தெரிந்துகொள்வதற்கு முன்பு உலகத்தின் பாதைகளை வெறுக்க பழகவேண்டும்.” 

நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த உலகத்தைப் பார்த்து நாம் எளிதில் உடைக்கப்பட்டவர்களாயும் சோர்வடைந்தவர்களாயும் கருதக்கூடும். மற்றவர்களுக்கு ஏற்படுகிற தீங்கை இவ்வுலகம் அலட்சியப்படுத்துகிறது. சங்கீதம் 120, இதை தெளிவாய் சொல்லுகிறது: “நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும் போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்” (வச. 7). 

நம்முடைய பொய்களிலிருந்து விலக்கி சமாதானத்திற்குள் நடத்தும் நம்முடைய ஒரே உதவி வரும் கன்மலையாகிய நமது இரட்சகரினால், நம்முடைய காயங்கள் அனைத்தையும் புதிய ஆரம்பமாய் மாற்றமுடியும் என்று நம்புவதில் சுகமும் சுதந்திரமும் இருக்கிறது (121:2). இந்த புதிய ஆண்டிற்குள் நாம் நுழையும்போது, அவரையும் அவருடைய வழிகளையும் நாம் நோக்குவோம்.

முன்னேறு! விலகிச் செல்லாதே!

“ஓய்வு” என்ற கவிதையில், வேலை செய்வதிலிருந்து ஓய்வு நேரத்தை பிரிக்கும் நமது போக்கை கவிஞர் நயமாக சவால் விடுகிறார். உண்மையான உழைப்போடு வருவதுதான் உண்மையான ஓய்வாகுமல்லவா? நீங்கள் உண்மையான ஓய்வு நேரத்தை அனுபவிக்க விரும்பினால், வாழ்க்கையின் கடமைகளைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, “இன்னும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்; - அதைப் பயன்படுத்துங்கள் - வீணாக்காதீர்கள்; இல்லையெனில் அது ஓய்வாய் கருதப்படாது” என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். உனக்கு முன்பாக அழகு நிற்கிறது, அதைக் கண்டு உன் வேலையைச் செய்து, ஓய்வை அனுபவியுங்கள் என்று வரிகள் நீளுகிறது. 

உண்மையான ஓய்வு மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டும், அன்பு மற்றும் சேவையின் மூலமாகவே கிடைக்கிறது என்று கவிஞர் முடிக்கிறார். இது தெசலோனிக்கேயர்களுக்கு பவுலின் ஆலோசனையை நினைவுபடுத்துகிறது. தனது அழைப்பை விவரித்து, விசுவாசிகளை ஊக்குவித்த பிறகு, “தேவனுக்கு  நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று” (வச. 11) விசுவாசிகளுக்கு தொடர்ந்து புத்தி சொல்லுகிறார். 

அத்தகைய வாழ்க்கையை, நேர்மை, அன்பு மற்றும் சேவை ஆகியவற்றைக் கொண்டு விளக்குகிறார். “ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து” (3:12) உங்களை ஆசீர்வதிப்பார் என்று பவுல் வேண்டிக்கொள்ளுகிறார். மேலும், “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று” சபையை ஊக்குவிக்கிறார் (4:11). தேவனை நேசித்து, அவர் நமக்கு எந்தெந்த விதங்களில் உதவியிருக்கிறாரோ, அதேபோன்று மற்றவர்களுக்கு உதவிசெய்து விசுவாச வாழ்க்கையின் அழகை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் வாழ்க்கை முறையே மெய்யான ஓய்வாகும் (வச. 12).

அல்லது கவிஞர் சொல்வது போல், உண்மையான மகிழ்ச்சி, “அன்பு மற்றும் சேவையில் நிலைத்திருக்கிறது.” அதுதான் உண்மையான ஓய்வு.

தேவனின் மிருதுவான கிருபை

எமிலி டிக்கின்சன் என்னும் கவிஞர் தன்னுடைய பாடல் வரியொன்றில், “அனைத்து சத்தியத்தையும் சொல்லுங்கள்; ஆனால், கனிவாய் சொல்லுங்கள்” என்று பாடுகிறார். ஏனெனில், தேவனுடைய சத்தியங்களையும்; மகிமையையும் பலவீனமான நாம் முழுமையாய் விளங்கிக்கொள்ள இயலாது. ஆகையால் தேவனுடைய கிருபையையும் சத்தியத்தையும் கனிவாகவும், தெளிவாகவும், இலைமறைகாயாகவும் அறிவிப்பது நல்லது. சத்தியம் படிப்படியாய் ஒளிரவேண்டும்; இல்லையெனில், ஒவ்வொருவரும் குருடனாய் இருக்க நேரிடும்.
எபேசியர் 4ஆம் அதிகாரத்தில் விசுவாசிகளை, “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (வச.2) செயல்படும்படி வலியுறுத்தும் பவுல், இதே போன்ற ஒரு விவாதத்தை மேற்கொள்கிறார். கிறிஸ்து நமக்குக் காண்பிக்கும் கிருபையான வழிமுறைகளே விசுவாசிகளின் சாந்தகுணத்திற்கும், பிறரைத் தாங்கும் சுபாவத்திற்கும் அஸ்திபாரமென்று விளக்குகிறார். இயேசுவும் மனிதனாக அவதரித்து (வச.9-10), மக்கள் எளிதில் அவரை நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவர் தன்னை எளிமையாய் வெளிப்படுத்தினார்.

“நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்;” (வச.11), தேவன் மென்மையான மற்றும் அன்பின் வழிகளில் மக்கள் வளரவேண்டிய விதத்தில் அவர்களுக்குத் தன்னை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார். நாம் முதிர்ச்சியடையும்போது, பலவீனமான வழிகளில் நம்பிக்கையைத் தேடாமல் (வச.10), கிறிஸ்துவின் அன்பின் மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்போம் (வச.15-16).

நமது எதிர்காலத்திற்கான தேவ உதவி

உளவியலாளர் மெக் ஜேவை பொறுத்தமட்டில், நமக்கு முற்றிலும் அந்நியர்களைப் பற்றி நாம் எப்படிச் சிந்திக்கிறோமோ, அப்படியே நம் மனதும் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்குமாம். ஏன்? இதற்குக் காரணம் "அனுதாப இடைவெளி" எனும் உணர்வுதான். அதாவது நமக்குத் தனிப்பட்ட விதத்தில் பரிச்சயமில்லாதவர்களைக் குறித்த அக்கறையோ, கரிசனையோ நமக்கு இல்லாமல் போகும் போது, எதிர்காலத்தில் அவ்வுணர்வே நம்மை நமக்கு அந்நியர்களாக்கிவிடுமாம். இதனைச் சமாளிக்க, ஜே இளைஞர்களுக்குத் தங்கள் வருங்காலத்தில் எப்படியாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களோ, அதை நிகழ்காலத்தில் கற்பனை செய்து, தங்கள் நடக்கைகளைத் திட்டமிட்டு, அதற்கேற்றாற்போல மாற்றிக்கொள்ளும்படி பயிற்றுவிக்கிறார்.

சங்கீதம் 90 ல் நமது வாழ்வை வெறும் நிகழ்காலமாக மட்டுமில்லாமல் அதை முழுமையாகப் பார்க்க, "நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்." (வ.12) என்று தேவனிடம் உதவி கேட்க அழைக்கப்படுகிறோம். இந்த உலகில் நமது நாட்கள் மிகக்குறுகியது என்பதை நினைவில்கொண்டால் நாம் தேவனைச் சார்ந்துகொள்ளவேண்டிய அவசியத்தை நன்கு உணருவோம். இன்று மட்டுமின்றி, "வாழ்நாளெல்லாம்" (வ.14) நமக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகத் தேவனின் உதவி நமக்கு வேண்டும். நம்மைக் குறித்து மட்டுமின்றி வருங்கால சந்ததிகளைக் குறித்தும் நாம் சிந்திக்க (வ.16) தேவனின் உதவி நமக்கு அவசியம். மேலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய காலத்தில் அவருக்கு ஊழியம் செய்ய, நமது கைகளின் கிரியை உறுதிப்பட (வ.17) தேவனின் உதவி நமக்கு வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

என்னால் உன்னை பார்க்கமுடிகிறது

கண்கண்ணாடி நிபுணர், மூன்று வயது ஆண்ட்ரியாஸ_க்கு முதல் கண்கண்ணாடியை போடுவதற்கு உதவினார். அதை அணிவித்த பின்பு, “கண்ணாடியில் பார்” என்றாள். ஆண்ட்ரியாஸ் அவளுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்தாள். பின்பு அவள் மகிழ்ச்சியான முகத்துடன், தன் தந்தையிருந்த திசை நோக்கித் திரும்பினாள். பின்னர் ஆண்ட்ரியாஸின் தந்தை தனது மகனின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை மெதுவாக துடைத்து, “என்ன ஆச்சு?” என்று கேட்டார். ஆண்ட்ரியாஸ் தன் தந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டாள். “என்னால் உங்களை பார்க்கமுடிகிறது.” அவள் சற்று பின்வாங்கி, தலையை சாய்த்து, தந்தையின் கண்களைப் பார்த்து, “என்னால் உங்களை பார்க்கமுடிகிறது” என்று சொன்னாள்.

நான் ஜெபத்தோடு வேதத்தை வாசிக்கும்போது, “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமான” (கொலோசெயர் 1:15) ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்குவதற்கு பரிசுத்த ஆவியானவர் நம் கண்களை திறந்தருளுவாராக. இருப்பினும், வேதத்தின் மூலம் நாம் அறிவில் வளரும்போது, ஆவியானவரால் நம் பார்வை தெளிவடைந்தாலும், நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் தேவனின் எல்லையற்ற அபரிமிதத்தின் ஒரு காட்சியை மட்டுமே நாம் இன்னும் காண முடியும். பூமியில் நம் காலம் முடிந்ததும் அல்லது இயேசுவின் வருகை வரும்போது, நாம் அவரைத் தெளிவாகக் காண்போம் (1 கொரிந்தியர் 13:12). 

கிறிஸ்துவை முகமுகமாய் நாம் சந்தித்து அவர் நம்மை அறிந்திருக்கிறதுபோல நாமும் அவரை அறியும் அந்த மகிழ்ச்சி நிறைந்த தருணத்தில் நமக்கு சிறப்பு கண்ணாடிகள் தேவையில்லை. நம்முடைய அன்பான மற்றும் உயிருள்ள இரட்சகரை நாம் உற்று நோக்கி, “இயேசுவே, என்னால் உம்மை பார்;க்க முடிகிறது” என்று சொல்லும் வரை, நாம் உறுதியாக நிற்க வேண்டிய விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவற்றால் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்வார். “இயேசுவே, என்னால் உம்மை பார்;க்க முடிகிறது!”

ஒளிந்திருக்கும் பிரம்மாண்டம்

“தி அட்லாண்டிக்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆர்தர் ப்ரூக்ஸ் அப்புத்தகத்தை எழுதும்போது தைவானில் அமைந்துள்ள தேசிய அரண்மனை அருங்காட்சியகத்திற்குச் சென்றதைக் குறித்துக் கூறுகிறார். இது உலகின் மிகப்பெரிய சீனக் கலைகளின் தொகுப்புகளில் ஒன்றாகும். அருங்காட்சியக வழிகாட்டி கேட்டார், “இன்னும் வரையப்படாத ஒரு ஓவியத்தை கற்பனை செய்யும்படிக்கு உங்களிடத்தில் கேட்டால், நீங்கள் என்ன கற்பனை செய்வீர்கள்?” அதற்கு நான், “ஒரு வெற்று கேன்வாஸ்,” என்று பதிலளித்தேன். ஆனால் அந்த வழிகாட்டி, “ அதை நாம் வேறுவிதத்திலும் பார்க்கக்கூடும். அதில் ஓவியம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது, கலைஞர்களின் வேலை வெறுமனே அதை வெளிக்கொண்டுவருவதே” என்று சொன்னார். 

எபேசியர் 2:10 இல், கைவேலை என்ற வார்த்தை, சில சமயங்களில் “வேலைப்பாடு" அல்லது “தலைசிறந்த படைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது கிரேக்க வார்த்தையான “பொய்மா” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதிலிருந்து நாம் கவிதை என்று அர்த்தங்கொடுக்கும் “பொயட்ரி” என்ற ஆங்கில வார்த்தையை பெறுகிறோம். தேவன் நம்மை கலைப் படைப்புகளாகவும் வாழும் கவிதைகளாகவும் படைத்துள்ளார். நம்முடைய ஓவியங்கள் தெளிவில்லாமல் இருந்தது. “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (வச. 1). அந்த அருங்காட்சியக வழிகாட்டியின் வார்த்தைகளை சுருக்கமாகச் சொல்வதானால், “ஓவியம் ஏற்கனவே ஒளிந்திருக்கிறது, ஒரு தெய்வீகமான ஓவியனின் வேலை அதை உயிர்பெறச்செய்வதே” என்பதாகும். அவருடைய கலைப்படைப்புகளாகிய நம்மை “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்… நம்மை உயிர்ப்பித்தார்” (வச. 4-5).

நாம் பாடுகள் மற்றும் உபத்திரவங்களின் மத்தியில் கடந்துசெல்லும்போது, நம்முடைய தெய்வீக ஓவியர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதில் திருப்திகொள்ளலாம்: “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). உங்களில் இருக்கும் ஓவியத்தை வெளிக்கொண்டுவர தேவன் கிரியை நடப்பித்துக்கொண்டிருக்கிறார்.

அழகான வடிவமைப்பு

ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு, உழவாரன் என்னும் ஒரு குறிப்பிட்ட பறவையின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் ஃபிளாப்பிங்-விங் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த உழவாரன் குருவிகள் மணிக்கு தொண்ணூறு மைல்கள் வரை பறக்கவும், வட்டமடிக்கவும், மூழ்கவும், விரைவாக திரும்பவும், திடீரென்று நிறுத்தவும் முடியும். இருப்பினும், ஆர்னிதோப்டர் ட்ரோன் என்னும் பறக்கும் எந்திரம் இன்னும் பறவையை விட தாழ்வானது. பறவைகளுக்கு “பல தசைகள் உள்ளன, அவை நம்பமுடியாத வேகத்தில் பறக்கவும், இறக்கைகளை மடக்கவும், திருப்பவும், இறகு துளைகளைத் திறக்கவும் மற்றும் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகின்றன” என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அவரது ஆய்வின் முடிவில், “பறக்கும் உயிரின விமானத்தின் 10 சதவிகிதத்தை” மட்டுமே எங்களால் கண்டறிய முடிந்தது என்று அவர் ஒப்புக்கொள்கிறார். 

இந்த உலகத்தில் வாழும் உயிரினங்களுக்கு தேவன் அனைத்து சிறப்பியல்புகளையும் அருளியிருக்கிறார். அவற்றை தன்மைகளை ஆய்வுசெய்து அறிந்துகொள்வது நம்முடைய ஞானத்திற்கு பலம் சேர்க்கும். வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரங்களை சேகரிக்கும் எறும்பு, தங்கள் வீட்டை கன்மலையில் தோண்டிவைக்கும் குழிமுசல்கள், கூட்டமாய் அணிவகுத்து வரும் வெட்டுக்கிளிகள் (நீதிமொழிகள் 30:25-27) ஆகியவைகள் நமக்கு விலைமதிப்பற்ற பாடங்களை கற்பிக்கிறது. 

தேவன் தன்னுடைய ஞானத்தினாலே பூமியை சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்லுகிறது (எரேமியா 10:12), அவருடைய அன்றாட சிருஷ்டிப்பின் இறுதியில் அவர் தன்னுடைய படைப்பை நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,31). “வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும்” (வச. 20) சிருஷ்டித்த அதே தேவன், அவற்றை புரிந்துகொள்வதற்கான ஞானத்தையும் நமக்கு அருளியிருக்கிறார். இன்று, அவருடைய இந்த அழகான இயற்கை படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.