நான் வாங்கிய குளிர்கால ஆடையின் விலைச்சீட்டை அகற்றிய போது அதன் பின் பக்கத்தில் “எச்சரிக்கை! இந்த ஆடை உங்களை வெளியேபோய் அங்கேயே இருக்க விரும்பச் செய்யும்.” சரியான ஆடை அணிந்திருந்தால், மாறுகிற எந்தக் கடினமான கால நிலையையும் தாங்கவும் அதில் சுகமாயிருக்கவும் முடியும்.

இதே வழி முறை நமது ஆவிக்குறிய வாழ்க்கைக்கும் பொருந்தும். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நமக்கு, எந்த கால நிலைக்கும் ஏற்ற ஆடைகளை தேவன் வேதாகமத்தில் குறிப்பிட்டிருக்கிறார். “ஆகையால் நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும் மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடியபொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி. ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (3:12-13).

தேவன் தரும் இரக்கம், தாழ்மை, சாந்தம் ஆகிய ஆடைகள் நம்மைப் பகை, குற்றம்சாட்டப்படல் ஆகியவற்றை, பொறுமை, மன்னிப்பு, அன்புடன் எதிர்கொள்ளச் செய்கின்றன. அவைகள் நமது வாழ்க்கைப்புயல்களில் நிலைத்து நிற்க பெலன்தருகின்றன.

நம்மை எதிர்க்கும் சூழ்நிலைகள் வீட்டிலோ, பள்ளியிலோ, வேலை ஸ்தலத்திலோ வரும்பொழுத, தேவனுடைய ஆடைகளை அணிந்துகொண்டால், அவை நம்மைப் பாதுகாத்து ஒரு நம்பிக்கையுள்ள மனப்பான்மையைத் தருகின்றன. “இவை எல்லாவற்றின்மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்” (வச. 14).

தேவனுடைய ஆடைகளைத்தரிப்பது, காலநிலையை மாற்றாது. ஆனால், தரித்திருப்பவனை பெலப்படுத்துகிறது.