Archives: அக்டோபர் 2017

ரூத்தின் கதை

ரூத் அவளது கதையைக் கண்ணீர் வடிக்காமல் கூற இயலாது. 80 வயதிற்கு மேற்பட்ட ரூத், அதிகமாக நடமாட்டம் ஏதும் இல்லாத நிலையில், திருச்சபையில் முக்கியமற்றவளாக இருக்கலாம். அவள் தனிமையாக வாழ்ந்து வந்ததால், அவளுக்கு அநேக மக்களோடு தொடர்பு இல்லாத நிலையில், வெளியே செல்லவோ, ஆலயத்திற்குச் செல்லவோ, அவள் பிறருடைய வாகன உதவியைச் சார்ந்திருந்தாள்.

ஆனால், அவளது இரட்சிக்கப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் பொழுது, தேவனுடைய ஆச்சரியமான கிருபைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறாள். அவள் 30 வயதுகளில் இருந்தபொழுது, அவளது சிநேகிதிகளில் ஒருவர். அவளை ஒரு இரவு கூட்டத்திற்கு வரும்படி அழைத்தாள். அப்பொழுது அவள் ஒரு போதகரின் பேச்சை கேட்கப் போவதாகத் தெரியாது. “அப்படித் தெரிந்திருந்தால், நான் போயிருக்கமாட்டேன்” என்று கூறினாள். அவள் ஏற்கனவே மதத்தைப் பற்றி அறிந்திருந்தாள். அது அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனாலும் அவள் அந்தக் கூட்டத்திற்குச் சென்றாள். அன்று இரவு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டாள்.

இப்பொழுது 50 ஆண்டுகள் கழித்து, இயேசு அவளது வாழ்க்கையை மாற்றி அமைத்ததை ஆனந்தக் கண்ணீருடன் கூறுகிறாள். அன்று மாலை அவள் தேவனுடைய பிள்ளையானாள். இப்பொழுது அவள் வயது சென்றவளானலும், அவளது இரட்சிப்பின் கதை ஒருக்காலும் பழமையாகப் போனதில்லை என்றும் இளமையாகவே உள்ளது.

நமது கதை ரூத்தின் கதையைப் போல இருந்தாலும் சரி, இராவிட்டாலும் சரி அது முக்கியமல்ல ஆனால், இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து அவரது மனம், உயிர்த்தெழுலில் நம்பிக்கை வைக்கும் முதல்படியே மிக முக்கியமானது. “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோம. 10:9) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.

அதைத்தான் ரூத் செய்தாள். நீங்களும் அதைச் செய்யலாம். இயேசு மீட்கிறார். மாற்றுகிறார். நமக்கு புதிய ஜீவனைத் தருகிறார்.

புதிர்களை தெளிவுபடுத்துதல்

பீநட்ஸ் என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கிய சார்லஸ் ஷல்ஸின் நகைச்சுவையையும், அறிவுத் திறனையும் கண்டு நான் அதிகம் மகிழ்ச்சியடைவதுண்டு. எங்களது ஆலயத்திலுள்ள வாலிபப் பிள்ளைகளைச் பற்றிய புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான அவரது கேலிச் சித்திரம் காணப்பட்டது. அந்த படத்தில் ஒரு வாலிபன் அவன் கையில் வேதாகமத்தை வைத்துக் கொண்டு, தொலைபேசியில் அவனது சினேகிதனிடம் “பழைய ஏற்பாட்டிலுள்ள புதிர்களை தெளிவுபடுத்துவதற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளேன்… அதை வாசிக்க ஆரம்பிக்கிறேன்” என்று கூறினான்.

ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையின் வல்லமையை புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் 119ம் சங்கீதத்தை எழுதியவருடைய அளவு கடந்த ஆவல் வெளிப்படுகிறது. “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்; நாள் முழுவதும் அது என் தியானம்” (வச. 97). தேவனுடைய வார்த்தையின் மேலிருந்த அளவு கடந்த ஆவல் அதன் ஆசிரியர் ஞானத்தில், அறிவில் வளர்ச்சியடைந்து தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய அவரை வழிநடத்தினது (வச. 100).

வேதாகமத்தில் உள்ள புதிர்களை தெளிவுபடுத்த எந்தவித அதிசயமான செயல் திட்டங்கள் ஏதும் இல்லை. அந்த செயல் திட்டங்கள் மனரீதியானது மட்டுமல்ல, நாம் வாசிக்கும் பகுதிக்கும் ஏற்ப நாம் நடக்கவும் வேண்டும். வேதாகமத்தில் சில பகுதிகள் நம்மால் புரிந்துகொள்ள இயலாதவைகளாக இருக்கலாம். நாம் நன்றாக புரிந்து கொண்ட உண்மைகளை கடைபிடித்து, செயல்படுத்த “உம்முடைய வார்த்தைகள் என் நாவிற்கு எவ்வளவு இனிமையானவைகள் என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாய் இருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன். ஆதலால், எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன்” (வச. 103-104)

ஆச்சரியமான கண்டுபிடிப்புகளுக்கான பயணம் தேவனுடைய வார்த்தையில் உள்ளது.

மொத்தத்திற்கும் நம்புங்கள்

நானும் என் கணவனும், எங்களது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கு முன்பு, விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், தேவனுடைய அன்பிற்கு எங்களை ஒப்புக் கொடுத்து அவருக்கு கீழ்ப்படிந்த பின்பு, நாங்கள் மறுபடியும் ஒருவருக்கொருவர் எங்களை ஒப்புக் கொடுத்தோம். நாங்கள் சிறந்த ஆலோசர்களிடம் ஆலோசனை கேட்டதோடு, பரிசுத்த ஆவியானவர், எங்களைத் தனித்தனியாகவும், கணவன், மனைவியாகவும் சந்தித்து எங்களை மாற்றியமைக்க ஜெபித்தோம். எங்களது பரமபிதா தொடர்ந்து ஒருவரை ஒருவர் சிறந்த முறையில் தொடர்புகொள்ள உதவி செய்கிறார். தேவாதிதேவனை எப்படி நேசிப்பது எப்படி நம்புவது என்று கற்றுத்தருவதோடு என்ன நேரிட்டாலும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் கற்றுத் தருகிறார்.

ஆயினும், நாங்கள் எங்களது 25வது வருட திருமண நாளைக் கொண்டாட இருக்கும் வேளையில், எங்களது சோதனைகளில், தேவன் செய்த அனைத்துக் காரியங்களையும். அவ்வப்பொழுது மறந்து விடுகிறேன். சில சமயங்களில் என் உள்ளத்தில் ஆழத்தில் உள்ள நான் அறியாத ஏதோ ஒரு பயம் என்னை ஆட்கொள்கிறது. அதனால், தேவனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிகளை சார்ந்திருக்காமல், தேவையற்ற கவலைகளை அடைகிறேன்.

உபாகமம் 1ம் அதிகாரத்தில், தேவனை எக்காலத்திலும் உறுதிபட நம்பலாம் என்று மோசே உறுதியாகக் கூறியுள்ளார். இஸ்ரவேல் மக்கள் அவர்களது சுதந்திரமான தேசத்தை பெற்று மகிழ்ச்சியடைய முன்னேறிச் செல்லும்படி மோசே அவர்களை ஊக்கப்படுத்தினான் (வச. 21) ஆனால், தேவனுடைய ஜனங்கள் அவர்களது எதிர்காலத்தை அவரிடம் ஒப்புக் கொடுக்கும் முன்பு, அவர்கள் எதைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள் (வச. 22-33).

கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு பயமும், கவலையும் அடைவதிலிருந்து விதிவிலக்குக் கிடையாது. நாம் சந்திக்க இருக்கும் அல்லது சந்திக்காத கஷ்டங்களைக் குறித்து கவலைப்படுவது, நம்மை விசுவாசத்தை சார்ந்திருப்பதிலிருந்து நம்மை விலக்கி, நமக்கும் தேவனுக்கும், பிறருக்கும் உள்ள உறவை பாதிக்கும். ஆனால், தேவன் கடந்த காலத்தில் நம்முடைய வாழ்க்கையில் உண்மையுள்ளவராக இருந்த உறுதிப்பாட்டை நம்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிசெய்வார். நேற்றும், இன்றும் நாளையும் தேவனுடைய உண்மையான தன்மையின் மேல் நாம் தைரியத்துடனும்  நம்பிக்கையுடனும் சார்ந்திருக்க ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.

தேவனில் வேர் கொள்ளுதல்

எனது சிநேகிதர்கள் ஒரு புதிய வீட்டில் குடியேறினபொழுது, அவர்களது வேலியின் அருகில் விஸ்டிரியா என்ற செடியை நட்டு வைத்தனர். லாவண்டர் செடி ஐந்து அண்டுகளுக்குப் பின்தான் பூக்க ஆரம்பிக்கும். அதற்காக அவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அந்தச் செடியை சுத்தம்பண்ணி, உரம் போட்டு, நீரூற்றி நன்கு கவனித்து வந்ததால், அவர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளாக அந்த செடியின் அழகான பூக்களின் அழகை ரசித்து மகிழ்ந்தார்கள். ஆனால் ஒரு முறை அவர்களது அண்டை வீட்டார் இந்தச் செடி இருந்த லேவிக்கு அருகில், அவர்களது தோட்டத்தில் களைக் கொல்லி மருந்தை பயன படுத்தினதினால், இவர்களது தோட்டத்தில் இருந்த அந்த லாவண்டர் செடி வாடிவிட்டது. அடுத்த வீட்டில் பயன்படுத்தின களைக்கொல்லியில் இருந்த விஷம் விஸ்டியா செடியின் வேர் மூலமாகச் சென்றதால், அந்தச் செடி செத்துவிட்டது என்று எனது சிநேகிதர்கள் எண்ணிவிட்டனர். ஆச்சரியப்படத்தக்கதாக, அடுத்த ஆண்டு அதே இடத்தில் இளம் விஸ்டீரியா செடியின் துளிர்கள் தோன்றின.

இவ்விதமாக தாவரங்கள் செழித்து வளர்வதையும், மடிந்து போவதையும், போல தேவனுடைய ஜனங்கள், தேவனைப் பின் பற்றும்போது செழித்தும், தேவனைபிட்டு விலகும்போது நெருக்கப்படுவதுமான நிலைமைக்கு எரேமியா தீர்க்கன் ஒப்பிடுகிறான். தேவனைப் பின் பற்றுகிறவர்களின் வேர்கள் தண்ணீரண்டைக்குச் செல்வதால் செழித்து வளர்ந்து, அதனதன் காலத்தில் கனி கொடுப்பவர்களாக இருப்பார்கள் (எரே. 17:8). ஆனால், அவர்களது சுய சித்தத்தை நம்பி, அதன் வழியில் நடப்பவர்கள். அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப் போல் இருப்பார்கள் (வச. 5-6). தேவனுடைய ஜனங்கள், ஜீவிக்கிற உண்மையான தேவனைச் சார்ந்து வாழ வேண்டும் என்றும். அவர்கள் கால்வாய் ஓரமாய் நடப்பட்ட மரங்களைப் போல இருக்க வேண்டும் என்றும் தீர்க்கதரிசி வாஞ்சித்தான் (வச. 8).

நமது பிதா திராட்சைத் தோட்டக்காரர் (யோவா. 15:1) என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மேலும் நாம் அவரை நம்பி அவர் மேல் நம்பிக்கையாக இருக்கலாம் (ஏரே. 17:8) என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். நமது முழு இருதயத்தோடு அவரைப் பின்பற்றி என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய கனிகளைச் கொடுப்பவர்களாக இருப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை. 

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.