அக்டோபர், 2017 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: அக்டோபர் 2017

ரூத்தின் கதை

ரூத் அவளது கதையைக் கண்ணீர் வடிக்காமல் கூற இயலாது. 80 வயதிற்கு மேற்பட்ட ரூத், அதிகமாக நடமாட்டம் ஏதும் இல்லாத நிலையில், திருச்சபையில் முக்கியமற்றவளாக இருக்கலாம். அவள் தனிமையாக வாழ்ந்து வந்ததால், அவளுக்கு அநேக மக்களோடு தொடர்பு இல்லாத நிலையில், வெளியே செல்லவோ, ஆலயத்திற்குச் செல்லவோ, அவள் பிறருடைய வாகன உதவியைச் சார்ந்திருந்தாள்.

ஆனால், அவளது இரட்சிக்கப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் பொழுது, தேவனுடைய ஆச்சரியமான கிருபைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறாள். அவள் 30 வயதுகளில் இருந்தபொழுது, அவளது சிநேகிதிகளில் ஒருவர். அவளை ஒரு இரவு கூட்டத்திற்கு வரும்படி அழைத்தாள். அப்பொழுது அவள் ஒரு போதகரின் பேச்சை கேட்கப் போவதாகத் தெரியாது. “அப்படித் தெரிந்திருந்தால், நான் போயிருக்கமாட்டேன்” என்று கூறினாள். அவள் ஏற்கனவே மதத்தைப் பற்றி அறிந்திருந்தாள். அது அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனாலும் அவள் அந்தக் கூட்டத்திற்குச் சென்றாள். அன்று இரவு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டாள்.

இப்பொழுது 50 ஆண்டுகள் கழித்து, இயேசு அவளது வாழ்க்கையை மாற்றி அமைத்ததை ஆனந்தக் கண்ணீருடன் கூறுகிறாள். அன்று மாலை அவள் தேவனுடைய பிள்ளையானாள். இப்பொழுது அவள் வயது சென்றவளானலும், அவளது இரட்சிப்பின் கதை ஒருக்காலும் பழமையாகப் போனதில்லை என்றும் இளமையாகவே உள்ளது.

நமது கதை ரூத்தின் கதையைப் போல இருந்தாலும் சரி, இராவிட்டாலும் சரி அது முக்கியமல்ல ஆனால், இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து அவரது மனம், உயிர்த்தெழுலில் நம்பிக்கை வைக்கும் முதல்படியே மிக முக்கியமானது. “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோம. 10:9) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.

அதைத்தான் ரூத் செய்தாள். நீங்களும் அதைச் செய்யலாம். இயேசு மீட்கிறார். மாற்றுகிறார். நமக்கு புதிய ஜீவனைத் தருகிறார்.

புதிர்களை தெளிவுபடுத்துதல்

பீநட்ஸ் என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கிய சார்லஸ் ஷல்ஸின் நகைச்சுவையையும், அறிவுத் திறனையும் கண்டு நான் அதிகம் மகிழ்ச்சியடைவதுண்டு. எங்களது ஆலயத்திலுள்ள வாலிபப் பிள்ளைகளைச் பற்றிய புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான அவரது கேலிச் சித்திரம் காணப்பட்டது. அந்த படத்தில் ஒரு வாலிபன் அவன் கையில் வேதாகமத்தை வைத்துக் கொண்டு, தொலைபேசியில் அவனது சினேகிதனிடம் “பழைய ஏற்பாட்டிலுள்ள புதிர்களை தெளிவுபடுத்துவதற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளேன்… அதை வாசிக்க ஆரம்பிக்கிறேன்” என்று கூறினான்.

ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையின் வல்லமையை புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் 119ம் சங்கீதத்தை எழுதியவருடைய அளவு கடந்த ஆவல் வெளிப்படுகிறது. “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்; நாள் முழுவதும் அது என் தியானம்” (வச. 97). தேவனுடைய வார்த்தையின் மேலிருந்த அளவு கடந்த ஆவல் அதன் ஆசிரியர் ஞானத்தில், அறிவில் வளர்ச்சியடைந்து தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய அவரை வழிநடத்தினது (வச. 100).

வேதாகமத்தில் உள்ள புதிர்களை தெளிவுபடுத்த எந்தவித அதிசயமான செயல் திட்டங்கள் ஏதும் இல்லை. அந்த செயல் திட்டங்கள் மனரீதியானது மட்டுமல்ல, நாம் வாசிக்கும் பகுதிக்கும் ஏற்ப நாம் நடக்கவும் வேண்டும். வேதாகமத்தில் சில பகுதிகள் நம்மால் புரிந்துகொள்ள இயலாதவைகளாக இருக்கலாம். நாம் நன்றாக புரிந்து கொண்ட உண்மைகளை கடைபிடித்து, செயல்படுத்த “உம்முடைய வார்த்தைகள் என் நாவிற்கு எவ்வளவு இனிமையானவைகள் என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாய் இருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன். ஆதலால், எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன்” (வச. 103-104)

ஆச்சரியமான கண்டுபிடிப்புகளுக்கான பயணம் தேவனுடைய வார்த்தையில் உள்ளது.

மொத்தத்திற்கும் நம்புங்கள்

நானும் என் கணவனும், எங்களது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கு முன்பு, விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், தேவனுடைய அன்பிற்கு எங்களை ஒப்புக் கொடுத்து அவருக்கு கீழ்ப்படிந்த பின்பு, நாங்கள் மறுபடியும் ஒருவருக்கொருவர் எங்களை ஒப்புக் கொடுத்தோம். நாங்கள் சிறந்த ஆலோசர்களிடம் ஆலோசனை கேட்டதோடு, பரிசுத்த ஆவியானவர், எங்களைத் தனித்தனியாகவும், கணவன், மனைவியாகவும் சந்தித்து எங்களை மாற்றியமைக்க ஜெபித்தோம். எங்களது பரமபிதா தொடர்ந்து ஒருவரை ஒருவர் சிறந்த முறையில் தொடர்புகொள்ள உதவி செய்கிறார். தேவாதிதேவனை எப்படி நேசிப்பது எப்படி நம்புவது என்று கற்றுத்தருவதோடு என்ன நேரிட்டாலும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் கற்றுத் தருகிறார்.

ஆயினும், நாங்கள் எங்களது 25வது வருட திருமண நாளைக் கொண்டாட இருக்கும் வேளையில், எங்களது சோதனைகளில், தேவன் செய்த அனைத்துக் காரியங்களையும். அவ்வப்பொழுது மறந்து விடுகிறேன். சில சமயங்களில் என் உள்ளத்தில் ஆழத்தில் உள்ள நான் அறியாத ஏதோ ஒரு பயம் என்னை ஆட்கொள்கிறது. அதனால், தேவனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிகளை சார்ந்திருக்காமல், தேவையற்ற கவலைகளை அடைகிறேன்.

உபாகமம் 1ம் அதிகாரத்தில், தேவனை எக்காலத்திலும் உறுதிபட நம்பலாம் என்று மோசே உறுதியாகக் கூறியுள்ளார். இஸ்ரவேல் மக்கள் அவர்களது சுதந்திரமான தேசத்தை பெற்று மகிழ்ச்சியடைய முன்னேறிச் செல்லும்படி மோசே அவர்களை ஊக்கப்படுத்தினான் (வச. 21) ஆனால், தேவனுடைய ஜனங்கள் அவர்களது எதிர்காலத்தை அவரிடம் ஒப்புக் கொடுக்கும் முன்பு, அவர்கள் எதைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள் (வச. 22-33).

கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு பயமும், கவலையும் அடைவதிலிருந்து விதிவிலக்குக் கிடையாது. நாம் சந்திக்க இருக்கும் அல்லது சந்திக்காத கஷ்டங்களைக் குறித்து கவலைப்படுவது, நம்மை விசுவாசத்தை சார்ந்திருப்பதிலிருந்து நம்மை விலக்கி, நமக்கும் தேவனுக்கும், பிறருக்கும் உள்ள உறவை பாதிக்கும். ஆனால், தேவன் கடந்த காலத்தில் நம்முடைய வாழ்க்கையில் உண்மையுள்ளவராக இருந்த உறுதிப்பாட்டை நம்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிசெய்வார். நேற்றும், இன்றும் நாளையும் தேவனுடைய உண்மையான தன்மையின் மேல் நாம் தைரியத்துடனும்  நம்பிக்கையுடனும் சார்ந்திருக்க ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.

தேவனில் வேர் கொள்ளுதல்

எனது சிநேகிதர்கள் ஒரு புதிய வீட்டில் குடியேறினபொழுது, அவர்களது வேலியின் அருகில் விஸ்டிரியா என்ற செடியை நட்டு வைத்தனர். லாவண்டர் செடி ஐந்து அண்டுகளுக்குப் பின்தான் பூக்க ஆரம்பிக்கும். அதற்காக அவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அந்தச் செடியை சுத்தம்பண்ணி, உரம் போட்டு, நீரூற்றி நன்கு கவனித்து வந்ததால், அவர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளாக அந்த செடியின் அழகான பூக்களின் அழகை ரசித்து மகிழ்ந்தார்கள். ஆனால் ஒரு முறை அவர்களது அண்டை வீட்டார் இந்தச் செடி இருந்த லேவிக்கு அருகில், அவர்களது தோட்டத்தில் களைக் கொல்லி மருந்தை பயன படுத்தினதினால், இவர்களது தோட்டத்தில் இருந்த அந்த லாவண்டர் செடி வாடிவிட்டது. அடுத்த வீட்டில் பயன்படுத்தின களைக்கொல்லியில் இருந்த விஷம் விஸ்டியா செடியின் வேர் மூலமாகச் சென்றதால், அந்தச் செடி செத்துவிட்டது என்று எனது சிநேகிதர்கள் எண்ணிவிட்டனர். ஆச்சரியப்படத்தக்கதாக, அடுத்த ஆண்டு அதே இடத்தில் இளம் விஸ்டீரியா செடியின் துளிர்கள் தோன்றின.

இவ்விதமாக தாவரங்கள் செழித்து வளர்வதையும், மடிந்து போவதையும், போல தேவனுடைய ஜனங்கள், தேவனைப் பின் பற்றும்போது செழித்தும், தேவனைபிட்டு விலகும்போது நெருக்கப்படுவதுமான நிலைமைக்கு எரேமியா தீர்க்கன் ஒப்பிடுகிறான். தேவனைப் பின் பற்றுகிறவர்களின் வேர்கள் தண்ணீரண்டைக்குச் செல்வதால் செழித்து வளர்ந்து, அதனதன் காலத்தில் கனி கொடுப்பவர்களாக இருப்பார்கள் (எரே. 17:8). ஆனால், அவர்களது சுய சித்தத்தை நம்பி, அதன் வழியில் நடப்பவர்கள். அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப் போல் இருப்பார்கள் (வச. 5-6). தேவனுடைய ஜனங்கள், ஜீவிக்கிற உண்மையான தேவனைச் சார்ந்து வாழ வேண்டும் என்றும். அவர்கள் கால்வாய் ஓரமாய் நடப்பட்ட மரங்களைப் போல இருக்க வேண்டும் என்றும் தீர்க்கதரிசி வாஞ்சித்தான் (வச. 8).

நமது பிதா திராட்சைத் தோட்டக்காரர் (யோவா. 15:1) என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மேலும் நாம் அவரை நம்பி அவர் மேல் நம்பிக்கையாக இருக்கலாம் (ஏரே. 17:8) என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். நமது முழு இருதயத்தோடு அவரைப் பின்பற்றி என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய கனிகளைச் கொடுப்பவர்களாக இருப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நண்பர்களைப் பிடித்தல்

ரியா, அந்த மதியத்தை ஒரு உள்ளூர் ஆற்றின் கரையில் கழித்தாள். தனது மீன்பிடிக் கம்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரில் தூண்டில் போட்டார். சமீபத்தில்தான் அந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்திருந்தாள். அவள் மீன் பிடிக்கும் நோக்கில் வரவில்லை; அவள் சில புதிய நண்பர்களைத் தேடிக்கொண்டிருந்தாள். அவளது தூண்டில் கயிறு புழுக்களாலோ அல்லது வேறு எந்த வழக்கமான இரையாலோ இரை வைக்கப்படவில்லை. மாறாக, அந்த கோடை நாளில் படகுகளில் ஆற்றில் பயணிக்கும் மக்களுக்கு பிஸ்கட் பொட்டலங்களை நீட்டிக்கத் தனது கனரக மீன்பிடி கம்பியைப் பயன்படுத்தினாள். அவள் தனது புதிய அயலாரைச் சந்திக்க இந்த ஆக்கப்பூர்வமான வழியைப் பயன்படுத்தினாள், அவர்கள் அனைவரும் இனிமையான உபசரிப்பை விரும்பியதாகவே தோன்றியது!

தம்மோடு வாழ்க்கையில் நடக்க இயேசுவானவர் பேதுருவையும், அந்திரேயாவையும் அழைத்த விதத்தை மிகவும் அப்பட்டமாக ரியா செய்து, "நண்பர்களைப் பிடிக்க" சென்றாள். அந்த இரண்டு சகோதரர்களும் கடின உழைப்பாளிகள், கலிலேயா கடலில் வலைகளை வீசிக்கொண்டிருந்தனர். இயேசு தம்மைப் பின்தொடரும்படி அழைத்து, அவர்களின் கடின உழைப்பில் குறுக்கிட்டு, மீன்களுக்குப் பதிலாக "மனுஷரை" பிடிக்க அவர்களை அனுப்புவதாகக் கூறினார் (மத்தேயு 4:19). அதன்பின் சிறிது நேரத்தில், யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய இரு மீனவர்களுக்கும் அவர் அதே அழைப்பை விடுத்தார். அவர்கள் அனைவரும் தங்கள் வலைகளையும் படகுகளையும் உடனே விட்டு, இயேசுவோடு பயணித்தனர்.

தம்முடைய முதல் சீடர்களான மீனவர்களைப் போலவே, கிறிஸ்து தம்மைப் பின்பற்றி, நாம் உறவாடுபவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை எனும் நித்திய காரியங்களில் கவனம் செலுத்த நம்மை அழைக்கிறார். இயேசுவோடு வாழ்வதற்கான நிலையான நம்பிக்கை (யோவான் 4:13-14) எனும் உண்மையிலேயே திருப்தியளிக்கக் கூடிய காரியத்தை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நாம் வழங்க முடியும்.

இயேசு நம் சமாதானம்

கவிதாவின் சமூக ஊடகப் பதிவைக் கண்டு ஆனந்தி குமுறினாள். அந்த புகைப்படத்தில் அவர்களுடைய பத்து சபை நண்பர்கள் ஒரு உணவக மேசையைச் சுற்றிலும் சிரித்துக்கொண்டிருந்தனர். இந்த மாதம் இரண்டாவது முறையாக, அவள் இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியான பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனந்தி கண்ணீர் விட்டாள். அவள் எப்போதும் பிறருடன் சகஜமாகப் பழகியதில்லை, இருந்தபோதும் அவளை ஒதுக்குபவர்களுடன் சபைக்குச் செல்வது எவ்வளவு வினோதமானது!

முதல் நூற்றாண்டு எவ்வளவு விசித்திரமாய் இருந்திருக்க வேண்டும்! ஆனால், இயேசுவானவர் ஐக்கியத்தை நேசித்து நம் பிரிவினையை அகற்றிட வந்தார். ஆதி சபை தொட்டே, சகஜமாகப் பழக இயலாதவர்கள், அவரில் பொதுவான ஐக்கியம் பெறுவார்கள். நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காததற்காக யூதர்கள் புறஜாதிகளை இழிவாகப் பார்த்தனர், மேலும் தாங்களே சிறந்தவர்கள் என்று நினைத்த யூதர்களை புறஜாதியினர் வெறுத்தனர். பின்னர் இயேசு "சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்(தார்)து" (எபேசியர் 2:14-15). நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள இனி வேண்டியதில்லை. வேண்டியதெல்லாம் இயேசு மட்டுமே. யூதரும் புறஜாதியாரும் அவரில் ஐக்கியப்படுவார்களா?

அது அவர்களின் பதிலைப் பொறுத்தேயிருந்தது. இயேசு "தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்" (வ.17). ஒரே செய்தி, வெவ்வேறு பயன்பாடு. சுயநீதியுள்ள யூதர்கள் தாங்கள் சிறந்தவர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும், அதே சமயம் புறக்கணிக்கப்பட்ட புறஜாதியினர் தாங்கள் மோசமானவர்கள் அல்ல என்று நம்ப வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் பற்றி எரிச்சலாவதை விட்டு, கிறிஸ்துவின் மீதே கவனம் செலுத்த வேண்டும், அவர் "இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி(னார்)" (வ.15).

ஒதுக்கப்பட்டவராக உணர்கிறீர்களா? அது காயப்படுத்தும். அது சரியன்று. ஆனால், நீங்கள் இயேசுவில் இளைப்பாறும்போது நீங்களே சமாதானம் செய்பவராக இருக்க முடியும். அவரே இன்றும் நமது சமாதானம்.

 

கிறிஸ்துவில் பராமரித்தல்

என் நண்பனின் தாயார் திருமதி சார்லின், தொண்ணூற்றுநான்கு வயது, ஐந்தடிக்கு கீழ் உயரம், ஐம்பது கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவர். ஆயினும்கூட, இவையெல்லாம் தனது மகனைப் பராமரிக்க தன்னால் முடிந்ததைச் செய்வதிலிருந்து அவளைத் தடுக்கவில்லை, அவனது உடல்நல குறைபாட்டால் தன்னை தானே அவன் பராமரித்துக்கொள்ள முடியாது. அவர்களது இரண்டு மாடி வீட்டிற்குச் சென்றால், அவள் வசிக்கும் இரண்டாவது மாடியில் அடிக்கடி அவளைக் காணலாம். மெதுவாக, பதினாறு படிக்கட்டுகளிலிருந்து முதல் மாடிக்கு இறங்கி, தான் நேசிக்கும் மகனைப் பராமரிப்பதில் உதவுவதுபோலவே தன் விருந்தாளிகளையும் உபசரிக்கிறாள்.

தனது நலனை விட தன் மகனின் நலனையே முதன்மைப்படுத்துவதால், திருமதி. சார்லினின் தன்னலமற்ற உறுதியானது, என்னைக் குற்ற உணர்வுள்ளவனாக்கியும், அறைகூவல் விடுத்தும் மற்றும் ஊக்கப்படுத்துகிறது. பிலிப்பியர் 2-ல் பவுல் ஊக்குவிப்பதை, அவள் முன்மாதிரியாகக் காட்டுகிறாள்: "மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக" (வ.3-4).

உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பிற தேவைகள் உள்ளவர்களைக் கவனிப்பதற்கு அதிக கிரயம் செலுத்தவேண்டியிருக்கலாம். அவர்கள் வாழ்க்கையின் தேவைகளுக்காக அனைத்தையும் செலுத்தவேண்டி இருக்கலாம். மேலும் நம்மையே மையப்படுத்தியிருக்கும் நோக்கத்தை நாமே வலிய அகற்றாவிடில், நமக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட பற்றாக்குறை உண்டாகலாம். ஆனால் இயேசுவின் விசுவாசிகள், தாழ்மையுடன் பராமரிக்கவே அழைக்கப்படுகிறார்கள் (பார்க்க. வ. 1-4). நம்மையே நாம் அர்ப்பணிக்கும்போது , ​​இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (வ.5) என்று அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகிறார்.