என் மகன் ஹெராயினுக்கு அடிமையாகி போராடிக்கொண்டிருந்தான். அந்த நேரம் எங்கள் அனுபவம், இதே பிரச்சனையிலுள்ள குடும்பங்களை உற்சாகப்படுத்தக்கூடும் என்று சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். கடினமான பிரச்சனைகளில் சிக்கியிருக்கும்போது, இந்த சூழலில் தேவன் நன்மை தருவார் என்று காண்பது எளிதல்ல.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், அப்போஸ்தலனாகிய தோமாவின் விசுவாசத்திற்குப் பெரிய சவாலாயிருந்தது. இந்த மரணத்தின் மூலம் தேவன் நன்மை செய்யக்கூடுமென்று தோமா நம்பவில்லை. இயேசு சீஷர்களுக்கு தம்மை வெளிப்படுத்தியபோது, தோமா அங்கே இல்லை. அவருடைய கைகளில் ஆணிகளாலுண்டான காயத்தை நான் கண்டு அந்தக்காயத்திலே என் விரலையிட்ட என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன் என்றான் (வச. 25). எட்டு நாளைக்குப் பின்பு இயேசு தோமாவுக்குத் தன்னைக் காண்பித்தபோது அவனது அவிசுவாசம் மறைந்து “என் ஆண்டவரே! என் தேவனே என்றான் (வச. 28). அது ஒரு அற்புதமான விசுவாச அறிக்கை தன் முன் நிற்பவர் மாம்சத்தில் வந்த தேவன் என்ற சத்தியத்தை அறிந்து சொன்ன அறிக்கை. இது பின்வரும் அநேகரை இயேசுவை தேவன் என்று விசுவாசிக்க உற்சாகப்படுத்தும்.

நாம் கொஞ்சமும் எதிர்பாராத நேரங்களில் தேவன் புது விசுவாசத்தை நமது இருதயங்களில் உருவாக்குகிறார். அவருடைய உண்மையை எப்பொழுதும் நம்பலாம். எதுவும் அவருக்கு கூடாததுல்ல!