அன்பினால் ஒரு “ஆம்”
2016ஆம் ஆண்டு, ஆகஸ்டு 21ஆம் நாள் லூசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தைப் பற்றிய படங்களை, கிரிஸா சமூக ஊடகங்களில் பதித்தாள். மறுநாள் காலை, வெள்ளப்பகுயிலிருந்து ஒருவர் உதவிக்காக வேண்டிய குறிப்பையும் அதில் சேர்த்தார். 5 மணி நேரம் கழித்து, அவளும் அவளுடைய கணவன் பர்பியும் உதவி செய்வதற்காக தாங்கள் செய்யவிருக்கும் 1000 மைல் பயணத்தில், தங்களோடு சேரும்படி மற்றவர்களுக்கு ஓர் அழைப்பு விடுத்தனர். 24 மணி நேரத்திற்குள், தங்கள் வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி 13 நபர்கள் அவர்களோடு இணைந்து கொண்டனர்.
தங்களுடைய அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு, 17 மணி நேரம் பிரயாணம் பண்ணி, உபகரணங்களை நகர்த்தி, இடிபாடுகளை அகற்றும் வேலையைச் செய்யும்படி, இதற்கு முன்னர் சென்றிராத ஓர் இடத்திலுள்ளவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்குமாறு செல்லும்படி, எது அம்மக்களைத் தூண்டியது? அதுதான் அன்பு.
அவள் உதவிக்காக அழைப்பு விடுத்தபோது அதனோடு இணைத்திருந்த வசனத்தை நினைத்துப் பார்த்தால், “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங். 37:5). உதவி செய்யும்படி தேவன் விடுத்த அழைப்பை ஏற்போமாகில் இந்த வார்த்தைகள் உண்மையென விளங்கும். அப்போஸ்தலனாகிய யோவான், “ஒருவன்… தன் சகோதரனுக்குத் குறைச்சலுண்டு என்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால் அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்ளுகிறதெப்படி?” (யோவா. 3:17) அது ஒருவேளை கடினமான வேலையாக இருக்கலாம். ஆனால், “தேவனுக்குப் பிரியமானவைகளைச் செய்கிறபடியால்” (வச. 22) தேவன் வாக்களித்த உதவியைச் செய்வார்.
ஒரு தேவை வரும்போது, தேவன் நம்மை பிறருக்கு உதவும்படி அழைக்கிறார் என்று உணர்ந்து, அன்போடும், விருப்பத்தோடும் “ஆம்” என முன்வருவதே தேவனை கனப்படுத்துவதாகும்.
அது அணுகுமுறையில் உள்ளது
ரெஜினா தன் வேலையிலிருந்து வீட்டிற்கு ஊக்கமும், ஆற்றலும் இழந்து சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்த நாள் அவருடைய நண்பரொருவரிடமிருந்து வந்த ஒரு துயரச் செய்தியோடு ஆரம்பமானது. அவள் தன் சக பணியாளர்களோடு பங்கு பெற்ற கூட்டத்திலும் அச்செய்தி அவளை வட்டமிட்டுக் கொண்டேயிருக்க, அவளுடன் பணி புரிபவர்கள் அவளுடைய கருத்துக்களோடு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். ரெஜினா தேவனோடு பேச ஆரம்பித்தபோது, அவள் அந்நாளின் மன அழுத்தத்தையெல்லாம் தள்ளிவிட்டு சில மலர்களோடு, காப்பகத்தில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை எதிர்பாராத விதமாக பார்க்கச் சென்றாள். தேவன் எவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்று மரியா அவளோடு பகிர்ந்து கொண்டபோது ரெஜினாவின் ஆவியும் உற்சாகமடைந்தது மரியா “எனக்கு என்னுடைய சொந்த படுக்கை, நாற்காலி, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, செவிலியரின் உதவி எல்லாம் இருக்கிறது. தேவன் அவ்வப்போது என் அறைக்கு சில முக்கியஸ்தர்களைக் கொண்டு வருகிறார், ஏனெனில் நான் அவர்களை நேசிக்கிறேன், அவர் என்னை நேசிக்கிறார்.” என்று கூறினார்.
அணுகுமுறை, கண்ணோட்டம் என்று சொல்லும் போது, வாழ்க்கையில் 10 சதவீதம் தான் நமக்கு நடப்பவை, மீதி 90 சதவீதம் நாம் அதில் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதேயாகும” துன்ப காலங்களில் சிதறடிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுடைய துன்பங்களை அவர்கள் எப்படிப் பார்க்க வேண்டுமென யாக்கோபு எழுதுகிறார்,
“நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது… அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக். 1:2-3).
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில், கடினமான சூழல்களில் தேவனை நம்பும்படி கற்றுக் கொள்கிறோம். நாம் நம்முடைய போராட்டங்களை, தேவன் நாம் விசுவாசத்தில் வளர்வதற்கான சந்தர்ப்பங்களாக்குகின்றார் என பார்க்கக் கற்றுக் கொள்ளும்போது, யாக்கோபு கூறிய மகிழ்ச்சி நிரம்பிய கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.
வாக்களிக்கும் வாக்குத்தத்தங்கள்
என்னுடைய இளைய மகளும் நானும் சேர்ந்து ஆடும் ஒரு விளையாட்டை ‘பின்சர்ஸ்’ என்று அழைப்போம். அவள் மாடிப்படிகளில் மேலே செல்லும்போது, நான் அவளைத் துரத்திப் பிடித்து ஒரு சிறிய ‘கிள்ளு’ கொடுப்பேன். விதி என்னவெனின், நான் அவளை படிக்கட்டிலேறும் போது மட்டும் தான் கிள்ள வேண்டும். (அதுவும் மெதுவாக) அவள் படியேறி மேலே சென்றுவிட்டால் அவள் பாதுகாப்பாகி விடுவாள். சில வேளைகளில் அவளுக்கு விளையாடக் கூடிய எண்ணம் இல்லாதிருக்கும் போது, நான் அவளைத் தொடர்ந்து படியேறிவிட்டால், அவள் உறுதியாகச் சொல்லிவிடுவாள், “கிள்ளு கிடையாது” என்று நானும் சம்மதித்து, “கிள்ளு கிடையாது, நான் வாக்களிக்கிறேன்” என்பேன்.
இன்றைய காலங்களில் இந்த வாக்குகொடுத்தல் ஒரு சிறிய காரியமாகிவிட்டது. நான் என்ன சொல்லுகிறேனோ அதைச் செய்யும் போது, என் மகள் என்னுடைய குணத்தைக் குறித்துச் சற்று புரிந்து கொள்கின்றாள். என்னுடைய நிலையான குணத்தை அறிந்து கொள்கின்றாள். என் வார்த்தைகள் நலமானவை, எனவே என்னை நம்பலாம் என்று அவள் தெரிந்து கொள்கின்றாள். நாம் வாக்களித்ததை செயல்படுத்துவது என்பது ஒரு சிறிய காரியம்தான். ஆனால், வாக்குகளும் அவற்றைச் செயல்படுத்துவதும்தான் உறவுகளை வளர்க்கின்றன என நான் சொல்லுவேன். அவைதான் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் அடித்தளம்.
இப்படியே பேதுருவும் கருதுகின்றார். எனவே தான் அவர், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நம்மை “அவருடைய திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகும்படி (2 பேதுரு 1;4) பெலப்படுத்துகிறது என எழுதுகிறார். தேவனை, அவருடைய வார்த்தையால் ஏற்றுக்கொண்டு, அவரைக் குறித்தும், நம்மைக் குறித்தும் கூறப்பட்டுள்ள அவருடைய வார்த்தைகளை நாம் நம்பும் போது, அவருடைய இருதயம் நமக்கு நேராகத் திருப்பப்படுவதைக் காண்கிறோம். நாம் அவருடைய உண்மையான வார்த்தைகளைச் சார்ந்து இருக்கும்போது அவர் உண்மையுள்ளவர் என்பதை நமக்கு வெளிப்படுத்த அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கிறோம். வேதாகமம் அவருடைய வாக்குத்தத்தங்களால் நிறைந்துள்ளதால் நன்றியோடிருப்போம். நினைப்போம், “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்” (புல. 3:22-23).
என்னுடைய உதவி
பல வருடங்களாக புகழ்பெற்று நிற்கும் “புரூக்ளின் டேபர்னக்கிள்” பாடகர் குழுவின், ஆன்மாவைப் புதுப்பிக்கும் சுவிசேஷப்பாடல்கள் மூலம் ஏராளமானோர் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர். அவைகளில் ஒன்று சங்கீதம் 121லிருந்து உருவாக்கிய ‘என்னுடைய உதவி’ என்று தலைப்பிடப்பட்டு பாடப்பட்ட பாடல்.
சங்கீதம் 121ன் துவக்கம், சகலத்தையும் படைத்த தேவனாகிய கர்த்தர் மீது வைத்துள்ள தனிப்பட்ட நம்பிக்கையை அறிக்கை செய்தலில் ஆரம்பிக்கிறது, அவரே சங்கீதக்காரனின் உதவியின் ஆதாரமாக இருக்கின்றார் (வச. 1-2). அது எதனைக் காட்டுகிறது? ஸ்திரத்தன்மை (வச. 3), 24 மணி நேர பாதுகாப்பு (வச. 3-4), தொடர்ந்து வரும் அவருடைய பிரசன்னமும், பாதுகாப்பும் (வச. 5-6) எல்லாவிதமான தீமையிலிருந்தும் விலக்கி எப்பொழுதும் முடிவுவரை அதாவது நித்தியம் வரை (வச. 7-8) காப்பதையும் காட்டுகிறது.
தேவனுடைய ஜனங்கள் தேவனே தங்கள் உதவிக்கான ஆதாரம் என்பதை ஆண்டாண்டுகளாகக் கண்டுகொண்டனர் என்பதை வேதாகமத்திலுள்ள பாடல்கள் மூலம் தெரிந்துகொள்கிறோம். என்னுடைய ஆராதனை அனுபவத்தில் நான் என்னுடைய குரலை உயர்த்தி, சார்ல்ஸ் வெஸ்லியின் பாடல்களை, உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாடும் குழுவினரோடு இணைந்து பாடுவதாகும். அப்பாடல், “அப்பா நான் என் கரங்களை உம்மிடம் உயர்த்துகிறேன், வேறு உதவியை நான் அறியேன்; நீர் என்னைக் கைவிடுவீராயின் நான் எங்கே போவேன்?” மிகப் பெரிய சீர்த்திருத்தவாதி மார்டின் லுத்தர் இதனையே இவ்வாறு எழுதுகின்றார், “என் தேவன் என் உறுதியான கோட்டை, ஒருக்காலும் விலகாத அரண் வெள்ளம் பொன்ற துன்பம் வரும் போது அவரே என் உதவி.”
நீ ஒருவேளை தனிமையில் கைவிடப்பட்டவனாக, குழம்பிய சூழலில் இருக்கின்றாயா? சங்கீதம் 121ன் வார்த்தைகளை நினைத்துப்பார். இந்த வார்த்தைகள் உன் ஆத்துமாவை நம்பிக்கையாலும் தைரியத்தாலும் நிரம்பும்படி செய். நீ தனிமையாக இல்லை. எனவே உன் வாழ்வை உன் சொந்த வழியில் நடத்த முயற்சிக்காதே. மாறாக பூமியில் உனக்குள்ள முடிவில்லாத பாதுகாப்பை இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதல் விண்ணேற்பு மூலம் வெளிப்படுத்திய தேவனில் களிகூரு. எடுக்க வேண்டிய அடுத்த அடியை அவருடைய உதவியால் எடுத்துவை.
ஆவியானவரின் வல்லமையினால்
உன் வழியில் ஒரு மலை குறுக்கிட்டால் நீ என்ன செய்வாய்? தஷ்ரத் மான்ஜியின் கதை அனைவருக்கும் உற்சாகத்தைத் தருவதாய் இருக்கிறது. அவனுடைய மனைவியை அவசர மருத்துவ சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு அவனால் கொண்டு செல்ல முடியாததால், அவள் மரித்தாள். ஆனால், மான்ஜி முடியாது என்று கருதிய ஒன்றைச் செய்து முடித்தான். அந்த கிராமத்திலுள்ளவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு, மருத்துவ சிகிச்சை பெற செல்ல வசதியாக, 22 ஆண்டுகளாக மலையின் ஊடே ஒரு பாதையைச் செதுக்கினான். அவன் மரிப்பதற்கு முன்னர், இந்திய அரசாங்கம் அவனுடைய சாதனையைப் பாராட்டியது.
எருசலேம் தேவாலயத்தை மீண்டும் கட்டுவது என்பது, சிறையிருப்பிலிருந்து திரும்பிய இஸ்ரவேலரின் தலைவர்களில் ஒருவனாகிய செருபாபேலின் பார்வையில் முடியாததாகத் தோன்றியது. ஜனங்கள் ஊக்கமிழந்திருந்தனர், அவர்கள் எதிரிகளிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தனர், அவர்களுக்கு போதிய வளங்கள் இல்லை, ஒரு பெரிய இராணுவப் படை பலமுமில்லை. ஆனால், தேவன் சகரியாவை செருபாபேலிடம் அனுப்பி, அவனுடைய பணியில் ஆவியானவர் செயல்பட்டு. ஒரு சேனையின் பெலத்தையும்விட, தனி மனிதர்களின் பெலத்தையும்விட அல்லது மனித வளங்களையும் விட மேலான வல்லமையையும் விளங்கச் செய்வார் (சகரி. 4:6) என நினைப்பூட்டுகின்றார். இந்த தெய்வீக உதவியின் உத்தரவாதத்தின் மேல் நம்பிக்கையுள்ளவனாய் செருபாபேல் தேவாலயத்தை கட்டும் பணியிலும் அவனுடைய ஜனத்தை மீட்பதிலும், எத்தனை மலைபோன்ற துன்பம் வந்தாலும் தேவன் அவற்றை சமபூமியாக்குவார் என்று தேவன் பேரில் நம்பிக்கை வைத்தான் (வச. 7).
நமக்கு முன்பாக மலைபோன்ற தடைகள் வந்தால் என்ன செய்வோம்? நமக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு, ஒன்று நம்முடைய சொந்த பெலத்தைக் சார்ந்திருப்பது மற்றொன்று தேவ ஆவியானவரை நம்புதல். நாம் தேவ ஆவியானவரின் வல்லமையின் மீது நம்பிக்கை வைப்போமாகில் அவர் ஒருவேளை மலைகளை நொறுக்கி சம பூமியாக்குவார், அல்லது நமக்கு பெலனையும் சகிப்புத் தன்மையையும் கொடுத்து மலைமீது ஏறி கடக்கச் செய்வார்.
தாமதத்தைக் கையாளுதல்
ஓர் உலகளவிலான கணினி அமைப்பின் செயலிழப்பினால், பரவலாக விமான சேவைகள் ரத்தாகி, ஆயிரக்கணக்கான பிரயாணிகள் விமானநிலையத்தில் தவித்தனர். ஒரு பனிபுயலின்போது ஏற்பட்ட வாகன விபத்துக்களால் பல பிரபல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. ஒரு நபர் தான் “இப்பொழுதே செய்கிறேன்” என்று வாக்களித்ததைச் செய்யத் தவறினார். இப்படிப்பட்ட விளைவுகளால் ஏற்படும் தாமதம் பெரும்பாலும் கோபத்தையும் வெறுப்பையும் உருவாக்கும். ஆனால், இயேசுவை பின்பற்றுபவர்கள், உதவிக்கு அவரை நோக்கிப்பார்க்கக் கூடிய சலுகையைப் பெற்றுள்ளோம்.
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் பொறுமைக்கு பெரிய எடுத்துக்காட்டு யோசேப்பு. அவன் தன் பொறாமை கொண்ட சகோதரர்களால் அடிமை வியாபாரிகளிடம் விற்றுப் போடப்பட்டான். தன் எஜமானனின் மனைவியால் பொய் குற்றம் சாட்டப்பட்டு, எகிப்தில் சிறையில் அடைபட்டான். “யோசேப்பு சிறைச் சாலையில் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்தார்” (ஆதி. 39:20-21). சில வருடங்களுக்குப் பின், யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களின் அர்த்தத்தைக் கூறியபோது, அவனை எகிப்து தேசம் முழுமைக்கும், பார்வோனுக்கு அடுத்தப்படியான அதிகாரியாக்கினான் (அதிகாரம் 41).
ஒரு பஞ்சத்தின் போது யோசேப்பின் சகோதரர் அவனிடம் தானியம்கொள்ள வந்தபோது, அவனுடைய பொறுமைக்கு மிகவும் குறிப்பிடத்தக்க பலன் கிடைத்தது. “நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப் போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம். அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினர்… ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பினார்” (45:4-5,8).
நமக்கு ஏற்படும் தாமதம் குறுகியதோ, அல்லது நீண்டதோ, யோசேப்பைப் போன்று தேவன் மீது விசுவாசத்தோடு காத்திருக்கும் போது, நாம் பொறுமையையும் முன்னோக்குப் பார்வையையும், சமாதானத்தையும் பெற்றுக் கொள்வோம்.
நன்றியறிதலை வளர்த்துக் கொள்ளல்
நீ நன்றியுள்ள ஓர் உணர்வை வளர்த்துக் கொள்ள விரும்புகிறாயோ? பதினேழாம் நூற்றாணடில் வாழ்ந்த பிரிட்டனைக் சேர்ந்த கவிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட், தன்னுடைய நன்றியுணர்வு என்ற பாடலின் இலக்கை அடைய உற்சாகப்படுத்துகிறார். “நீர் எனக்கு மிக அதிகமானவைகளைக் கொடுத்திருக்கிறீர் இன்னுமொன்றை, நன்றியுணர்வுள்ள இருதயத்தைத் தாரும்.” என்ற பாடல்கள் மூலம் தன் வாசகர்களிடம் ஊக்குவிக்க விரும்பினார்.
ஹெர்பர்ட், நன்றியோடிருக்க அவருக்குத் தேவையான ஒன்றைக் கண்டு கொண்டார். அது தேவன் அவருக்குத் தந்திருக்கின்ற ஆசிர்வாதங்களைக் குறித்த ஒரு விழிப்புணர்வு.
இயேசு கிறிஸ்துவே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்று என்று வேதாகமம் நமக்குத் தெரிவிக்கின்றது. ரோமர் 11:36ல் “சகலமும்; அவராலும் அவர் மூலமாயும அவருக்காகவும் இருக்கிறது” எனச் சொல்லப்பட்டுள்ளது. “சகலமும்” என்பது ஆடம்பர மற்றும் இவ்வுலகில் ஒவ்வொரு நாள் வாழ்விற்கும் தேவையான அனைத்து நன்கொடைகளையும் குறிக்கும். நம் வாழ்வில் நாம் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு நன்மையும் நம் பரலோகத் தந்தையிடமிருந்து வருகிறது (யாக். 1:17). அவர் நம்மீது வைத்துள்ள அன்பினால், விருப்பத்தோடு இந்த நன்கொடைகளைத் தருகிறார்.
என்னுடைய வாழ்வில் தேவனுடைய ஆசீர்வாதங்களைக் குறித்த விழிப்புணர்வை நான் விரிவாக்கிக்கொள்ளுவதற்கு, நான் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கின்ற மகிழ்ச்சிக்கு காரணர் என் தேவனே என்பதை ஒப்புக் கொள்ளக் கூடிய இருதயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கற்றுக் கொண்டேன். நான் பெற்றுக் கொண்ட நன்மைகள் என்னுடைய முயற்சியால் பெற்றுக் கொண்டவையல்ல. இன்றைக்கு நான் அனுபவிக்கும் நன்மைகள்: ஒரு மென்மையான காலையில் நான் ஓடுவதும், மாலைப் பொழுதில் என் நண்பர்களோடு செலவிடுவதும், என் சமையல் பொருட்கள் அறையில் நிரப்பப்பட்டுள்ள பொருட்களால், நான் என் மகள்களோடு செய்துகொள்ளும், பிரெஞ்ச் டோஸ்ட், நான் என் ஜன்னல் வழியே வெளியுலகைப் பார்க்கும் போது கிடைக்கின்ற அழகும், புதிதாக தயாரிக்கப்பட்ட சூடான காப்பியின் நறுமணமும், இவையெல்லாம் தேவன் தரும் ஆசீர்வாதங்களே.
இதுவரை தேவன் எனக்குத் தந்துள்ள மிக அதிகமான நன்மைகள் எவை? அவைகளைக் காணும்படி நம் கண்களைத் திறப்போமாகில் ஒரு நன்றியுணர்வுள்ள இருதயத்தை உருவாக்கிக்கொள்வோம்.
ஜெபத்தின் வல்லமை
ஒரு நாள், எனக்கு நெருங்கிய நபர் ஒருவரின் நலனைக்குறித்து ஆழ்ந்த கரிசனையோடிருந்த போது, பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, இஸ்ரவேலரின் ஞானமுள்ள தலைவன் சாமுவேலின் சரித்திரம் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது. தேவனுடைய ஜனங்கள் துன்பங்களைச் சந்தித்தபோது, சாமுவேல் அவர்களுக்காக எவ்விதம் தேவனிடம் பரிந்து பேசுகிறார் என்பதை வாசிக்கும் போது நானும், நான் நேசிக்கின்ற ஒருவருக்காக ஜெபிக்க வேண்டும் என்ற மனநிலையை இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
இஸ்ரவேலர் பெலிஸ்தரின் அச்சுறுத்தலை எதிர் நோக்கினர். இதற்கு முன்னர் பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தோற்கடித்தனர், ஏனெனில் இஸ்ரவேலர் தேவனை நம்பவில்லை (1 சாமு. 4). அவர்கள் தங்கள் பாவத்திற்காக மனம்வருந்திய போது, பெலிஸ்தியர் தங்களைத் தாக்க வருகிறார்கள் என கேள்விப்படுகின்றனர். இம்முறை அவர்கள் சாமுவேலிடம் அவர்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கும்படி கேட்கின்றனர் (7:8) தேவன் தெளிவாக பதிலளித்து, எதிரிகளிடையே குழப்பத்தை உருவாக்கினார் (வச. 10). பெலிஸ்தியர் இஸ்ரவேலரைக் காட்டிலும் வல்லவர்களாயிருந்தும், தேவன் அவர்களெல்லாரையும் விட பெலனுள்ளவராக இருந்தார்.
நாம் நேசிக்கின்றவர்கள் நிமித்தம் சவால்களைச் சந்தித்து வேதனையில் இருக்கும் போது, அந்த சூழ்நிலை மாறப்போவதில்லை என்ற பயம் நம்மை ஆட்கொண்டு தேவன் செயல்படமாட்டார் என்று அவநம்பிக்கைக் கொள்ள நாம் தள்ளப்படலாம். ஆனால், ஜெபத்தின் வல்லமையை ஒருபோதும் குறைவாக மதிப்பிட வேண்டாம். நம்மீது அன்புள்ள தேவன் நம்முடைய வேண்டுதல்களைக் கேட்கிறார். நம்முடைய மன்றாட்டுகளைக் கேட்கிற அவர் எவ்விதம் செயல்படுவார் என்பதை நாம் அறிவோம். ஆனால், நமக்குத் தெரியும், நம்முடைய பரமதந்தை, நாம் அவருடைய அன்பை ஏற்றுத் தழுவி, அவர் உண்மையுள்ளவர் என்பதில் நாம் நம்பிக்கையாயிருக்கும்படி அவர் ஏங்குகின்றார்.
இன்றைக்கு நீ ஜெபிக்க வேண்டியவர்கள் யாராவது உண்டா?
ஓற்றுமையை நாடுதல்
1950 ஆம் ஆண்டு முதல் நான் வளர்ந்த பட்டணத்தின் அனுதின வாழ்வில் உட்புகுந்திருந்த இனவெறி, மற்றும் பிரிவினைகளைக் குறித்து நான் கவலைப்பட்டதேயில்லை. பள்ளிகளிலும், உணவகங்களிலும், பொது போக்குவரத்து சாதனங்களிலும், அருகில் வசிப்பவர்களிடையேயும் வெளிப்புறத் தோல் நிறத்தின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டிருந்தனர்.
1968 ஆம் ஆண்டு நான் அமெரிக்க ஐக்கிய இராணுவ அடிப்படை பயிற்சியில் சேர்ந்த போது, என்னுடைய இந்த அணுகுமுறை மாறியது. என்னுடைய படையில், வெவ்வேறு கலாச்சாரத்திலிருந்து வந்த இளைஞர்களைச் சேர்த்திருந்தனர். நாங்கள் எங்களுடைய பணியின் நோக்கத்தை அடைவதற்கு எங்களுக்குள் புரிந்துகொள்ளல், ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளல், இணைந்து பணிபுரிதல் ஆகியவை தேவை என்பதை முதலில் கற்றுக் கொண்டோம்.
முதலாம் நூற்றாண்டில் கொலோசெயிலுள்ள சபைகளுக்கு பவுல் எழுதும் போது சபை அங்கத்தினரிடையேயிருந்த வேறுபாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவர்களுக்கு “அதிலே கிரேக்கனென்றும், யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், இல்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்” (கொலோ. 3:11) என எழுதுகிறார். ஒரு குழுவில் மேலோட்டமான, மற்றும் ஆழ்ந்த வேறுபாடுகள் எளிதாக மக்களை பிரித்துவிடும், எனவே பவுல் அவர்களிடம், “உருக்கமான இரக்கத்தையும் தயவையும், மனத் தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொள்ளுங்கள்” (வச. 12) என்கிறார். இத்தகைய நற்குணங்களோடு அன்பையும் தரித்துக் கொண்டால், அது அனைவரையும் ஒன்றாக இணைக்கும் என்பதை “இவை எல்லாவற்றின் மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்” (வச: 14) என்று கூறுகிறார்.
இந்த கொள்ளைகளை செயல்படுத்தும் போது தேவன் நம்மை அழைத்த நோக்கத்தைச் செயல்படுத்தத்துவக்குகிறோம். விசுவாசிகளாகிய நாம் அனைவருக்கும் பொதுவாயிருப்பது, நாம் அவர் மீது வைத்திருக்கும் அன்பு, அதனடிப்படையில் கிறிஸ்துவில், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கத்தினராகிய நாம் புரிந்துகொள்ளலையும், சமாதானத்தையும், ஓற்றுமையையும் நாடிப் பெற்றுக்கொள்ளுவோம்.
நம்மிடையேயுள்ள அற்பமான வேறுபாடுகளிடையே, கிறிஸ்துவுக்குள் மிகப்பெரிய ஒற்றுமையைத் தேடிப் பெற்றுக்கொள்வோம்.