ரெஜினா தன் வேலையிலிருந்து வீட்டிற்கு ஊக்கமும், ஆற்றலும் இழந்து சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்த நாள் அவருடைய நண்பரொருவரிடமிருந்து வந்த ஒரு துயரச் செய்தியோடு ஆரம்பமானது. அவள் தன் சக பணியாளர்களோடு பங்கு பெற்ற கூட்டத்திலும் அச்செய்தி அவளை வட்டமிட்டுக் கொண்டேயிருக்க, அவளுடன் பணி புரிபவர்கள் அவளுடைய கருத்துக்களோடு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். ரெஜினா தேவனோடு பேச ஆரம்பித்தபோது, அவள் அந்நாளின் மன அழுத்தத்தையெல்லாம் தள்ளிவிட்டு சில மலர்களோடு, காப்பகத்தில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை எதிர்பாராத விதமாக பார்க்கச் சென்றாள். தேவன் எவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்று மரியா அவளோடு பகிர்ந்து கொண்டபோது ரெஜினாவின் ஆவியும் உற்சாகமடைந்தது மரியா “எனக்கு என்னுடைய சொந்த படுக்கை, நாற்காலி, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, செவிலியரின் உதவி எல்லாம் இருக்கிறது. தேவன் அவ்வப்போது என் அறைக்கு சில முக்கியஸ்தர்களைக் கொண்டு வருகிறார், ஏனெனில் நான் அவர்களை நேசிக்கிறேன், அவர் என்னை நேசிக்கிறார்.” என்று கூறினார்.

அணுகுமுறை, கண்ணோட்டம் என்று சொல்லும் போது, வாழ்க்கையில் 10 சதவீதம் தான் நமக்கு நடப்பவை, மீதி 90 சதவீதம் நாம் அதில் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதேயாகும” துன்ப காலங்களில் சிதறடிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுடைய துன்பங்களை அவர்கள் எப்படிப் பார்க்க வேண்டுமென யாக்கோபு எழுதுகிறார்,

“நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது… அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக். 1:2-3).

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில், கடினமான சூழல்களில் தேவனை நம்பும்படி கற்றுக் கொள்கிறோம். நாம் நம்முடைய போராட்டங்களை, தேவன் நாம் விசுவாசத்தில் வளர்வதற்கான சந்தர்ப்பங்களாக்குகின்றார் என பார்க்கக் கற்றுக் கொள்ளும்போது, யாக்கோபு கூறிய மகிழ்ச்சி நிரம்பிய கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.