2016ஆம் ஆண்டு, ஆகஸ்டு 21ஆம் நாள் லூசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தைப் பற்றிய படங்களை, கிரிஸா சமூக ஊடகங்களில் பதித்தாள். மறுநாள் காலை, வெள்ளப்பகுயிலிருந்து ஒருவர் உதவிக்காக வேண்டிய குறிப்பையும் அதில் சேர்த்தார். 5 மணி நேரம் கழித்து, அவளும் அவளுடைய கணவன் பர்பியும் உதவி செய்வதற்காக தாங்கள் செய்யவிருக்கும் 1000 மைல் பயணத்தில், தங்களோடு சேரும்படி மற்றவர்களுக்கு ஓர் அழைப்பு விடுத்தனர். 24 மணி நேரத்திற்குள், தங்கள் வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி 13 நபர்கள் அவர்களோடு இணைந்து கொண்டனர்.

தங்களுடைய அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு, 17 மணி நேரம் பிரயாணம் பண்ணி, உபகரணங்களை நகர்த்தி, இடிபாடுகளை அகற்றும் வேலையைச் செய்யும்படி, இதற்கு முன்னர் சென்றிராத ஓர் இடத்திலுள்ளவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்குமாறு செல்லும்படி, எது அம்மக்களைத் தூண்டியது? அதுதான் அன்பு.

அவள் உதவிக்காக அழைப்பு விடுத்தபோது அதனோடு இணைத்திருந்த வசனத்தை நினைத்துப் பார்த்தால், “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங். 37:5). உதவி செய்யும்படி தேவன் விடுத்த அழைப்பை ஏற்போமாகில் இந்த வார்த்தைகள் உண்மையென விளங்கும். அப்போஸ்தலனாகிய யோவான், “ஒருவன்… தன் சகோதரனுக்குத் குறைச்சலுண்டு என்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால் அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்ளுகிறதெப்படி?” (யோவா. 3:17) அது ஒருவேளை கடினமான வேலையாக இருக்கலாம். ஆனால், “தேவனுக்குப் பிரியமானவைகளைச் செய்கிறபடியால்” (வச. 22) தேவன் வாக்களித்த உதவியைச் செய்வார்.

ஒரு தேவை வரும்போது, தேவன் நம்மை பிறருக்கு உதவும்படி அழைக்கிறார் என்று உணர்ந்து, அன்போடும், விருப்பத்தோடும் “ஆம்” என முன்வருவதே தேவனை கனப்படுத்துவதாகும்.