1950 ஆம் ஆண்டு முதல் நான் வளர்ந்த பட்டணத்தின் அனுதின வாழ்வில் உட்புகுந்திருந்த இனவெறி, மற்றும் பிரிவினைகளைக் குறித்து நான் கவலைப்பட்டதேயில்லை. பள்ளிகளிலும், உணவகங்களிலும், பொது போக்குவரத்து சாதனங்களிலும், அருகில் வசிப்பவர்களிடையேயும் வெளிப்புறத் தோல் நிறத்தின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டிருந்தனர்.

1968 ஆம் ஆண்டு நான் அமெரிக்க ஐக்கிய இராணுவ அடிப்படை பயிற்சியில் சேர்ந்த போது, என்னுடைய இந்த அணுகுமுறை மாறியது. என்னுடைய படையில், வெவ்வேறு கலாச்சாரத்திலிருந்து வந்த இளைஞர்களைச் சேர்த்திருந்தனர். நாங்கள் எங்களுடைய பணியின் நோக்கத்தை அடைவதற்கு எங்களுக்குள் புரிந்துகொள்ளல், ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளல், இணைந்து பணிபுரிதல் ஆகியவை தேவை என்பதை முதலில் கற்றுக் கொண்டோம்.

முதலாம் நூற்றாண்டில் கொலோசெயிலுள்ள சபைகளுக்கு பவுல் எழுதும் போது சபை அங்கத்தினரிடையேயிருந்த வேறுபாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவர்களுக்கு “அதிலே கிரேக்கனென்றும், யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், இல்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்” (கொலோ. 3:11) என எழுதுகிறார். ஒரு குழுவில் மேலோட்டமான, மற்றும் ஆழ்ந்த வேறுபாடுகள் எளிதாக மக்களை பிரித்துவிடும், எனவே பவுல் அவர்களிடம், “உருக்கமான இரக்கத்தையும் தயவையும், மனத் தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொள்ளுங்கள்” (வச. 12) என்கிறார். இத்தகைய நற்குணங்களோடு அன்பையும் தரித்துக் கொண்டால், அது அனைவரையும் ஒன்றாக இணைக்கும் என்பதை “இவை எல்லாவற்றின் மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்” (வச: 14) என்று கூறுகிறார்.

இந்த கொள்ளைகளை செயல்படுத்தும் போது தேவன் நம்மை அழைத்த நோக்கத்தைச் செயல்படுத்தத்துவக்குகிறோம். விசுவாசிகளாகிய நாம் அனைவருக்கும் பொதுவாயிருப்பது, நாம் அவர் மீது வைத்திருக்கும் அன்பு, அதனடிப்படையில் கிறிஸ்துவில், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கத்தினராகிய நாம் புரிந்துகொள்ளலையும், சமாதானத்தையும், ஓற்றுமையையும் நாடிப் பெற்றுக்கொள்ளுவோம்.

நம்மிடையேயுள்ள அற்பமான வேறுபாடுகளிடையே, கிறிஸ்துவுக்குள் மிகப்பெரிய ஒற்றுமையைத் தேடிப் பெற்றுக்கொள்வோம்.