நீ நன்றியுள்ள ஓர் உணர்வை வளர்த்துக் கொள்ள விரும்புகிறாயோ? பதினேழாம் நூற்றாணடில் வாழ்ந்த பிரிட்டனைக் சேர்ந்த கவிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட், தன்னுடைய நன்றியுணர்வு என்ற பாடலின் இலக்கை அடைய உற்சாகப்படுத்துகிறார். “நீர் எனக்கு மிக அதிகமானவைகளைக் கொடுத்திருக்கிறீர் இன்னுமொன்றை, நன்றியுணர்வுள்ள இருதயத்தைத் தாரும்.” என்ற பாடல்கள் மூலம் தன் வாசகர்களிடம் ஊக்குவிக்க விரும்பினார்.

ஹெர்பர்ட், நன்றியோடிருக்க அவருக்குத் தேவையான ஒன்றைக் கண்டு கொண்டார். அது தேவன் அவருக்குத் தந்திருக்கின்ற ஆசிர்வாதங்களைக் குறித்த ஒரு விழிப்புணர்வு.

இயேசு கிறிஸ்துவே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்று என்று வேதாகமம் நமக்குத் தெரிவிக்கின்றது. ரோமர் 11:36ல் “சகலமும்; அவராலும் அவர் மூலமாயும அவருக்காகவும் இருக்கிறது” எனச் சொல்லப்பட்டுள்ளது. “சகலமும்” என்பது ஆடம்பர மற்றும் இவ்வுலகில் ஒவ்வொரு நாள் வாழ்விற்கும் தேவையான அனைத்து நன்கொடைகளையும் குறிக்கும். நம் வாழ்வில் நாம் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு நன்மையும் நம் பரலோகத் தந்தையிடமிருந்து வருகிறது (யாக். 1:17). அவர் நம்மீது வைத்துள்ள அன்பினால், விருப்பத்தோடு இந்த நன்கொடைகளைத் தருகிறார்.

என்னுடைய வாழ்வில் தேவனுடைய ஆசீர்வாதங்களைக் குறித்த விழிப்புணர்வை நான் விரிவாக்கிக்கொள்ளுவதற்கு, நான் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கின்ற மகிழ்ச்சிக்கு காரணர் என் தேவனே என்பதை ஒப்புக் கொள்ளக் கூடிய இருதயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கற்றுக் கொண்டேன். நான் பெற்றுக் கொண்ட நன்மைகள் என்னுடைய முயற்சியால் பெற்றுக் கொண்டவையல்ல. இன்றைக்கு நான் அனுபவிக்கும் நன்மைகள்: ஒரு மென்மையான காலையில் நான் ஓடுவதும், மாலைப் பொழுதில் என் நண்பர்களோடு செலவிடுவதும், என் சமையல் பொருட்கள் அறையில் நிரப்பப்பட்டுள்ள பொருட்களால், நான் என் மகள்களோடு செய்துகொள்ளும், பிரெஞ்ச் டோஸ்ட், நான் என் ஜன்னல் வழியே வெளியுலகைப் பார்க்கும் போது கிடைக்கின்ற அழகும், புதிதாக தயாரிக்கப்பட்ட சூடான காப்பியின் நறுமணமும், இவையெல்லாம் தேவன் தரும் ஆசீர்வாதங்களே.

இதுவரை தேவன் எனக்குத் தந்துள்ள மிக அதிகமான நன்மைகள் எவை? அவைகளைக் காணும்படி நம் கண்களைத் திறப்போமாகில் ஒரு நன்றியுணர்வுள்ள இருதயத்தை உருவாக்கிக்கொள்வோம்.