வகை  |  odb

ஒளியைப் பார்த்தல்

லாஸ் ஏஞ்சல்ஸ் பட்டணத்தின் தெருக்களின் வழியே, ஒரு வீடற்ற மனிதன், போதைக்கு அடிமையாகி போராடிக் கொண்டிருந்தபோது, ஒரு “நள்ளிரவு சேவைமையத்” திற்குச் சென்று உதவி கேட்டான். இவ்வாறு பிரையனின் மீட்புக்கு நேரான நீண்டபயணம் துவங்கியது.

இந்த செயலின் போது, இசைமீது தனக்கிருந்த ஆவலை பிரையன் மீண்டும் கண்டு கொண்டான். தெருக்களில் வாழும் இசை மீட்டும் இசைக் கலைஞர்களின் குழுவில் சேர்ந்தான். அவர்கள் பிரையனிடம் ஹன்டல் என்பவர் எழுதிய ‘மேசியா’ என்ற பாடலைத் தனிப்பாடலாக பாடுமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பாடல் “இருளில் நடக்கிற ஜனங்கள்” என ஆரம்பமாகும். இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரத்தில் அவர்கள் ஓர் இருண்ட காலத்தைச் சந்தித்த போது, ஏசாயா தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளை எழுதினார். அவர், “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா. 9:2) என்ற வார்த்தைகளை பாடினார். நியூயார்க் பட்டணத்திலுள்ள ஒரு பத்திரிக்கையிலே ஓர் இசைக் கலைஞனான பிரையனின் பாடலைக் குறித்து அந்தப் பாடலின் வரிகள் அவனுடைய சொந்த வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்பட்டவை போலிருந்தன” என விமர்சிக்கப்பட்டிருந்தது.

சுவிசேஷத்தை எழுதிய மத்தேயுவும் இதே பகுதியைக் குறிப்பிட்டுள்ளார். ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் வாழ்வின் மத்தியிலிருந்து இயேசுவினால் அழைக்கப்பட்ட மத்தேயு, ஏசாயாவின் இந்த

தீர்க்கதரிசன வார்த்தைகள் இயேசுவின் மூலம் நிறைவேற்றப்பட்டதை விளக்குகின்றார். “யோர்தானின் அக்கரையிலிருந்த” ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளை இயேசு “புறஜாதிகளின் கலிலேயாவுக்கு” இயேசு எப்படிக் கொண்டு வந்தார் என்று மத்தேயு விளக்குகின்றார் (மத். 4:13-15).

ராயனின் வரிவசூல் குண்டர்களில் ஒருவனான மத்தேயு (மத். 9:9), போதைக்கு அடிமையாகி தெருவில் திரிந்த பிரையன் அல்லது நம்மைப் போன்றவர்கள், ஒளிக்கும் இருளுக்குமுள்ள வித்தியாசத்தை நம் வாழ்வில் காட்ட ஒரு தருணம் கிடைக்குமென்று யார் நினைத்திருக்கக்கூடும்.

பெலத்தை இழந்தபின் மறுபடியும் பெலப்படுத்தும் வல்லமை

நான் எனது ஐம்பத்திநான்காம் வயதில் மில்வாக்கீ மாரத்;தான் ஓட்டத்தில் இரண்டு இலக்குகளோடு பங்கெடுத்தேன். ஒன்று அந்த ஓட்டத்தை முடிக்க வேண்டும் இரண்டாவது, அதனை ஐந்து மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும். ஒருவேளை நான் முதல் 13.1 மைல்கள் தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் போலவே இரண்டாம் பகுதியும் அமையுமாயின், நான் எடுத்துக்கொள்ளும் நேரம் மிகவும் வியப்பூட்டுவதாக இருக்கும். ஆனால், இந்த ஓட்டம் மிகவும் சோர்வடையச் செய்யும் ஒன்று இரண்டாம் பகுதியின் போது தேவையான பெலனைப் பெற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் எல்லைக் கோட்டினை எட்டும் போது, என்னுடைய நிலையான ஓட்டம் தளர்ந்து, வேதனை மிகுந்த நடையாக மாறிவிடும்.

ஓடும் ஓட்டத்தில் மட்டும்தான் இரண்டாம் பகுதிக்கு பெலப்படுத்தும் ஆற்றல் தேவையா? இல்லை. அது வாழ்க்கையின் ஓட்டத்திற்கும் தான். சோர்வினால் தளர்ந்த மக்கள் தேவையான சகிப்புத் தன்மையைப் பெற்றுக்கொள்ளவும் பெலனற்று சோர்ந்த மக்களுக்கு ஆறுதலையும், ஊக்கத்தையும் கொடுக்கவும் தேவனுடைய உதவி தேவை. ஏசாயா 40:27-31ல் காணப்படுகின்ற அழகிய தீர்க்கதரிசன வார்த்தைகள் எக்காலத்திற்கும் பொருத்தமான வார்த்தைகள். அது வெறுப்படைந்து, வலுவிழந்த மக்களிடம் தேவன் அவர்களை விட்டு விடவுமில்லை, அவர்கள் மீது கரிசனையோடிருக்கிறாரெனக் கூறுகின்றது (வச. 27) நம்முடைய ஏக்கங்கள் தேவனுடைய பார்வையைவிட்டு தவறிவிடவில்லை. சோர்ந்து போகிறவர்களுக்கு அவர் பெலன் கொடுக்கின்றார், ஆறுதல் அளிக்கின்றார். தேவனுடைய எல்லையில்லாத வல்லமையும், ஆழ்ந்த அறிவும் நம்மைத் தேற்ற உறுதியளிக்கின்றன (வச. 28).

இரண்டாம் நிலைக்குத் தேவையான ஆற்றலைக் குறிக்கும் வசனங்கள் 29-31. இந்த வார்த்தைகள் நமக்குத் தரப்பட்டவை. நாம் நம் குடும்பத்தினரை கவனிக்கும் பொறுப்பிலுள்ளோமா? பொருளாதாரத் தேவையாலும், உடல்ரீதியானத் தேவையாலும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கின்றோமா? உறவினர்களால் ஏற்பட்ட மன அழுத்தமா? ஆவிக்குரிய போராட்டங்களா? வேதவசனங்களை தியானம் செய்து, ஜெபத்தில் அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றவர்களுக்கு அவருடைய பெலன் கொடுக்கப்படும்படி காத்திருக்கின்றது.

சுத்தமாக கழுவப்பட்டது

என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய நீல நிற ஜெல் பேனா என்னுடைய டவலின் மடிப்புகளுக்குள் ஒளிந்து, துவைக்கும் எந்திரத்திற்குள் சென்று, உலர்ப்பானுக்குள் வந்த போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. அவலட்சணமான நீலக்கறைகள் எல்லாத் துணிகளிலும் காணப்பட்டன. என்னுடைய வெண்மையான டவல்கள் பாழாகிவிட்டன. அதிலுள்ள கடினமான கறைகளை நீக்க எந்தவொரு நிறநீக்கியாலும் முடியாது.

நான் வெறுப்படைந்தவனாய் அந்த டவல்களை பழைய துணிகளோடு சேர்த்தபோது, பழைய ஏற்பாட்டில் எரேமியா தீர்க்கதரிசி, பாவத்தின் கொடிய விளைவுகளைப் பற்றி விளக்கியுள்ளது. என் நினைவிற்கு வந்தது. தேவனைத் தள்ளி விட்டு, விக்கிரகங்களிடம் திரும்பிய போது, இஸ்ரவேல் ஜனங்கள், தங்களுக்கும் தேவனுக்குமுள்ள உறவின்மீது நீங்காதகறையை ஏற்படுத்திக் கொண்டனர் (எரே. 2:13). “நீ உன்னை உவர் மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தை உபயோகித்தாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்கும்” என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கின்றார் (வச. 22). தங்கள் பாவங்களால் ஏற்பட்ட கறையை நீக்க அவைகளால் கூடாமற்போயிற்று என்கின்றார்.

நம்முடைய பாவக் கறையை நீக்க நாம் எடுத்துக் கொள்ளும் சுய முயற்சிகள் யாவும் வீணானவை. ஆனால், நம்மால் முடியாததை இயேசு செய்து முடித்தார். அவருடைய சாவு மற்றும் உயித்தெழுதலின் வல்லமையால் அவர் நம்மை சுத்திகரிக்கின்றார். “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவா. 1:7).

இந்த உண்மையை நாம் நம்புவதற்கு கடினமாயிருந்தாலும், உறுதியாகப் பற்றிக்கொள். இயேசுவால் நீக்க முடியாத பாவக்கறை ஒன்றுமேயில்லை. இயேசுவிடம் வரும் எவரிடமுமுள்ள பாவக் கறைகளை கழுவி சுத்திகரிக்க அவர் ஆவலாயிருக்கின்றார் (வச. 9). கிறிஸ்துவின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நாம், ஒவ்வொரு நாளும் விடுதலையோடும், நம்பிக்கையோடும் வாழ முடியும்.

அது யார்?

ஒரு மனிதன் தன் வீட்டின் வெளியே ஒர் பாதுகாப்பு கேமராவைப் பொருத்திய பின்னர் அந்த அமைப்பு சரியாக இயங்குகின்றதா என்பதைச் சோதிப்பதற்காக அதன் படங்களைப் பார்வையிட்டார். அதில். ஓர் அகன்ற மார்புடைய கரிய உடையணிந்த ஓர் உருவம் அவருடைய முற்றத்தில் உலா வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் இன்னும் சற்று கூர்ந்து அந்த மனிதன் என்ன செய்கிறாரென கவனித்தார். அப்பொழுது அங்கு நடமாடிய மனிதன் அறிமுகமானவர் போலத் தெரிந்தார். கடைசியாக. அவருடைய விட்டின் பின்புறத்தில் எல்லைக்குள் நடமாடிய அந்த நபர் வேறு யாருமல்ல, தன்னுடைய உருவம் தான் அதில் பதிந்துள்ளது எனக் கண்டுகொண்டார்!

சில சந்தர்ப்பங்களில் நாம் நம்முடைய உடலைவிட்டு வெளியே வந்து நம்மைப் பார்க்கக் கூடுமானால், நம்மை எப்படிப்பட்டவராகப் பார்ப்போம்? தாவீதின் இருதயம் கடினப்பட்டது. வெளியேயிருந்து அவனைக் குறித்து அவனைப்பார்க்கும்படியாக அவனுக்கு ஒரு தேவை ஏற்பட்டது. தேவன் அவனைக் காணும் கண்ணோட்டத்தோடு, பத்சேபாளுடன் அவனுடையப் பங்கினை அவன் பார்த்தபோது, தேவன் அவனை விடுவிக்கும்படி நாத்தானை அனுப்புகின்றார் (2 சாமு. 12).

நாத்தான் தாவீதிடம் ஓர் ஐசுரியவான் தன் விருந்தாளியை உபசரிக்க, ஓர் ஏழை மனிதன் வளர்த்த ஒரேயொரு ஆட்டுக்குட்டியை எடுத்துக் கொண்ட கதையைக் கூறுகின்றான். ஐசுரியவானிடம் மந்தை, மந்தையாக ஆடுகளிருந்த போதிலும் அவன் அந்த ஏழையின் ஒற்றை ஆட்டைப் பிடித்து அடித்து சமைத்து விட்டான். இந்தக் கதையிலுள்ள ஐசுரியவான் தாவீது தான் என நாத்தான் குறிப்பிட்டபோது தான் தாவீது தான் உரியாவிற்கு இழைத்த கொடுமையை உணர்கின்றான். அதன் விளைவுகளை நாத்தான் தெரிவிக்கின்றான். அதில் முக்கியமானதென்னவெனில், அவர் தாவீதிடம், “கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்” (வச. 13) என்பதே.

தேவன் நம் வாழ்விலுள்ள பாவச் செயல்களை வெளிப்படுத்துவதன் நோக்கம், நம்மைத் தண்டிப்பதற்கு அல்ல நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, நாம் காயப்படுத்தினவர்களோடு மனம் பொருந்தவே நமக்குதவுகின்றார். மனந்திரும்புதல் மூலம் தேவனோடுள்ள உறவை நாம் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடிகிறது. தேவனோடு புதுப்பிக்கப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்ள மனந்திரும்புதல் வழிவகுக்கின்றது. தேவன் தரும் மன்னிப்பு, கிருபையின் வழியே அவருடன் நெருங்கிச் சேர முடிகிறது.

கிழிக்கப்பட்ட திரை

எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிமுழுவதும், அது ஓர் இருண்ட மற்றும் துயரம் நிறைந்த நாளாகக் காணப்பட்டது. பட்டணத்தின் மதிற்சுவருக்கு வெளியே ஒரு மலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக திரள் கூட்ட மக்களை தன்னைப் பின்பற்றும்படி கவர்ந்திழுத்த ஒரு மனிதன், ஒரு கோர மரச்சிலுவையில் வேதனையாலும், அவமானத்தாலும் நிறைந்தவராய் தொங்கிக் கொண்டிருக்கின்றார். துக்கிப்பவர்களின் அழுகையும்,துயரம் நிறைந்த ஓலமும் கேட்கின்றது. பகலின் நடுவேளையில் சூரியன் தன் ஒளியினால் வானைப் பிரகாசிக்கச் செய்யாமல் மறைந்தது. சிலுவையில் அந்த மனிதனின் கொடுமையான வேதனைகள் முடிவிற்கு வந்தபோது அவர் உரத்த குரலில், “முடிந்தது” என்றார் (மத். 27:50, யோவா. 19:30).

அதே வேளையில் பட்டணத்திற்குள்ளேயிருந்த பெரிய தேவாலயத்தில் மற்றொரு சத்தம் கேட்கின்றது. அது ஒரு துணி கிழிக்கப்படும் சத்தம். அதிசயமாக எந்தவொரு மனிதனின் உதவியும் இல்லாமல், ஒரு பெரிய தடிமனான திரை, தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலத்தையும் வெளிப்பகுதியையும் பிரித்த அந்தத் திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது (மத். 27:51).

அந்த கிழிக்கப்பட்ட திரை சிலுவையின் உண்மையை வெளிப்படுத்தியது. இப்பொழுது நாம் தேவனிடம் செல்லுவதற்கான ஒரு புதிய வழியைத் திறந்தது. சிலுவையில் தொங்கிய மனிதன் இயேசு தன்னுடைய இரத்தம் முழுவதையும் நமக்காக பலியாகச் சிந்திவிட்டார். இதுவே உண்மையும், போதுமானதுமான கடைசி பலி. இந்த பலியை (எபி. 10:10) விசுவாசிக்கிற யாவரும் பாவ மன்னிப்பை பெற்று தேவனோடுள்ள உறவில் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் (ரோ. 5:6-11).

அந்த முதல் பெரிய வெள்ளிக்கிழமையின் இருளினூடே நாம் மிகச் சிறந்த செய்தியைப் பெற்றுக் கொண்டோம். நம்மை பாவத்திலிருந்து மீட்டு, தேவனோடு நாம் என்றென்றும் உறவை அனுபவிக்கும்படி இயேசு நமக்கு ஒரு புது வழியைத் திறந்துள்ளார் (எபி. 10:19-22). இந்த கிழிக்கப்பட்ட திரையின் செய்தியைக் கொடுத்த தேவனுக்கு நன்றி.

அந்த வேளையில்

நான் அந்த ஆம்புலன்ஸ் வண்டியின் உள்ளேயிருக்க, அதன் கதவை மூடவிருந்தனர். வாகனத்தின் வெளியே என்னுடைய மகன் என் மனைவியிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். என்னுடைய நினைவு தளர்ந்த நிலையில், நான் அவனை பெயர் சொல்லி அழைத்தேன். அவன் அதனைப் புரிந்த கொண்டபோது, நான் மெதுவாக அவனிடம், “நான் அவளை மிகவும் நேசிப்பதாக உன் அம்மாவிடம் சொல்லு” என்றேன்.

நான் அதனை என்னுடைய பிரியாவிடை என்று எண்ணினேன். இந்த வார்த்தைகளை என்னுடைய கடைசி வார்த்தைகளெனவும் நினைத்தேன். அந்த வேளையில் அது ஒன்றே எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது.

இயேசுவும் தனது கடைசி இருண்ட நேரத்தைச் சகித்தபோது அவர் நம்மிடம் வெறுமனே நம்மை நேசிப்பதாக மட்டும் கூறவில்லை. அவர் தம் அன்பினைத் தெளிவாகக் காட்டினார். தன்னை இழிவுபடுத்தி, சிலுவையிலறைந்த சேவகர்களிடம் தமது அன்பைக் காட்டினார். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கின்றார்களே” என்றார் (லூக். 23:34) தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட மற்றொரு கள்ளனுக்கு அவர் “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்” (வச. 43) என்று நம்பிக்கையளித்தார் இறக்கும் தருவாயில் தன்னுடைய தாயைப் பார்த்து, “ஸ்திரீயே. அதோ, உன் மகன்” என்றார். தனக்கன்பான சீஷன் யோவானைப் பார்துது, “அதோ உன் தாய்” என்றார் (யோவா. 19:26-27) கடைசியாக இவ்வுலக வாழ்வை அவர் முடித்துக் கொண்ட போது, தந்தையிடம் தனக்குள்ள நம்பிக்கையை கடைசி அன்பின் செயலாக “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்றார் (லூக். 23:46).

இயேசு ஒரு நோக்கத்தோடு பிதாவுக்குச் கீழ்ப்படிந்து பிதாவினிடம் தான் வைத்துள்ள அன்பின் ஆழத்தைக் காட்டும்படியாகவும், நம்மீது அவர் வைத்துள்ள ஆழமான அன்பைக் காட்டவும் சிலுவையைச் சகித்தார். முடிவுவரை நம்மீது வைத்துள்ள உண்மையான அன்பினைக் காட்டினார்.

மலரைப் போன்ற மலர்ச்சி

என்னுடைய கடைசி பேரன் பிறந்து இரண்டு மாதமேயாகிறது. ஓவ்வொருமுறை நான் அவனைப் பார்க்கும் போதும் சிற்சில மாற்றங்களைக் காண்கின்றேன். சமீபத்தில் நான் அவனிடம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்த போது, அவன் என்னைப் பார்த்து சிரித்தான். உடனே எனக்கு அழுகை வந்து விட்டது. அது ஆனந்தம் கலந்த கண்ணீர். ஏனெனில் நான் என்னுடைய குழந்தைகளின் முதல் சிரிப்பை நினைத்துப் பார்த்தேன். அவை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தவை! ஆனாலும் அவற்றை நேற்று நடந்தது போல உணர முடிகிறது. இது போன்ற தருணங்கள் நம்மால் விவரிக்க முடியாத நினைவுகளைத் தருகின்றன.

சங்கீதம் 103ல் தாவீது எழுதிய தேவனைப் போற்றும் ஒரு சங்கீதம் போற்றியும் நம்முடைய வாழ்வின் சந்தோஷமான கணங்கள் எத்தனை சீக்கிரமாய் நம்மைவிட்டு கடந்து சென்று விடுகின்றன உணர்த்துகிறது. “மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப் போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது” (வச. 15-16).

நம்முடைய வாழ்நாள் குறுகியதாய், இருப்பினும் அது ஒரு மலரைப் போன்று மலர்கின்றது, செழிக்கின்றது என தாவீது விளக்குகின்றார். ஒவ்வொரு தனிமலரும் மொட்டிலிருந்து மலராக விரிந்து, மணத்தையும், அழகிய வண்ணங்களையும் கொடுத்து அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனாலும் ஒவ்வொரு தனிமலரையும் நாம் நினைவில் வைப்பதில்லை. “அது இருந்த இடமும் இனி அதை அறியாது” (வச. 16) ஆனால், இதற்கு மாறாக, “கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேல், அநாதியாய் என்றென்றைக்குமுள்ளது (வச. 17) என்ற உறுதியைத் தருகின்றார்.

மலர்களைப் போன்றுள்ள நாம் இக்கணத்தில் மகிழ்ந்து களிகூறுவோம். நம்முடைய வாழ்வின் இத்தகைய தருணங்கள் உண்மையில் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை. இந்த உண்மையை நாம் கொண்டாடுவோம். நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தேவனுடைய கரத்திலுள்ளது. அவருடைய மாறாத அன்பு அவருடைய பிள்ளைகளோடு என்றென்றைக்கும் உள்ளது.

படைப்பாற்றலைப் போற்றுவோம்

கலிபோர்னியாவில், பாஜா என்ற இடத்தில் கடலுக்கடியில் ஏறத்தாள நாலாயிரம் அடிகளுக்கு கீழே மிகவும் அரிதான ஜெல்லி மீன்கள் நீரோட்டத்தோடு சேர்ந்து ஆடிக்களிக்கும். கரிய கடல்நீரின் பின்னணியில் அவற்றின் உடல் நீலம், ஊதா, இளஞ்சிவப்பு என பல வண்ணங்களில் பிரகாசமாக மின்னும், அவற்றின் மணிக்கூண்டு போன்ற பை அமைப்பு விரியும் போது விழுதுகளும் தனிமையாக அசைந்தாடும். நான் இந்த ஹெலிட்ரேபிஸ் மாசி வகை ஜெல்லி மீன்களைப் பற்றிய காட்சிகளை நேஷனல் ஜியோக்ரபிக் படத்தொகுப்பில் பார்த்து வியப்படைந்தேன். இந்த வழுவழுப்பான மீன் இனத்திற்கு தேவன் குறிப்பிட்ட வகை அழகினைத் தந்துள்ளதை நினைத்துப் பார்த்தேன். அக்டோபர் 2017 கணக்கெடுப்பின் படி தேவன் இன்னும் 2000க்கும் மேலான ஜெல்லி மீன் வகைகளைப் படைத்துள்ளார் என அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தேவனே நம்முடைய படைப்பாளர் என நாமறிந்தும். வேதாகமத்தின் முதல் அதிகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஆழ்ந்த உண்மைகளை நாம் அதிக நேரமெடுத்து ஆராய்ந்து உணருகிறோமா. ஆராய்ந்து உணர நமது வேகம் மிகவும் குறைந்து காணப்படுகின்றது. நம்முடைய அற்புதமான தேவன் ஒளியையும், வெவ்வேறு வகையான ஜீவ ஜந்துக்களையும் இந்த உலகில் தன்னுடைய வார்த்தையின் வல்ல படைப்பாற்றலால் உருவாக்கினார். “தேவன் மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும்… சிருஷ்டித்தார்” (ஆதி. 1:21). ஆதியில் தேவன் படைத்த படைப்புகளின் ஒரு சிறிய பகுதியைத்தான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

தேவன் ஒவ்வொரு மனிதனையும் ஒரு நோக்கத்தோடு படைத்தார். நாம் இவ்வுலகில் முதல் மூச்சினை எடுக்கும் முன்பே நம் வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நோக்கத்தை வைத்தார் (சங். 139:13-16). நாம் தேவனின் படைப்பாற்றலை போற்றும் போது, அவர் நமக்கு புதியவற்றைச் சிந்திக்கவும், உருவாக்கவும் வெவ்வேறு வகைககளில் உதவுகின்றதையும் எண்ணி மகிழ்வோம்.

நட்பின் அடையாளம்

கானாவில் நான் சிறுவனாக வளர்ந்த போது, என்னுடைய தந்தையின் கரத்தைப் பற்றிக் கொண்டு மக்கள் கூட்டம் நிரம்பிய இடங்களில் நடந்து செல்வதில் மகிழ்ச்சியடைந்துள்ளேன் அவர் என் தந்தையும், நண்பனுமாயிருந்தார். எங்களுடைய கலாச்சாரத்தில் கரம் கோர்த்து நடப்பதென்பது நட்பின் அடையாளம். அவ்வாறு நடக்கும் போது வெவ்வேறு வகையான காரியங்களைக் குறித்து நாங்கள் பேசிக் கொள்வோம். நான் தனிமையை உணரும் போதெல்லாம் என் தந்தையோடு பேசுவது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும். நாங்கள் ஒருவரோடொருவர் நட்பாயிருப்பதை மிகவும் உயர்ந்ததாகக் கருதினேன்.

இயேசுவும் தன்னைப் பின்பற்றியவர்களை நண்பர்களென அழைத்தார். அவர்களுக்கு தன் நட்பின் அடையாளத்தைக் காட்டினார். “பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்” (யோவா. 10:9) என்றார். தன் சிநேகிதனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கின்ற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (வச. 13) என்றார். அவருடைய ராஜ்ஜியத்தின் காரியங்களை அவர்களுக்குத் தெரிவிக்கின்றார் (வச. 15). பிதாவினிடத்தில் கேள்விப்பட்ட யாவற்றையும் உங்களுக்குத் தெரிவித்தேன் என்றார் (வச. 15). அவருடைய ஊழியத்திலும் பங்கு கொள்ளும்படி அவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றார் (வச. 16).

நம்முடைய வாழ்க்கையில் துணையாக இயேசு நம்மோடு நடந்து வருகின்றார். நம்முடைய மனவேதனைகளையும் விருப்பங்களையும் அவர் கவனித்துக் கேட்கின்றார். நம்முடைய தனிமையான வேளையிலும் உள்ளம் சோர்ந்த நிலையிலும் ஒரு நண்பனாக இயேசு நமக்குத் துணை நிற்கின்றார்.

நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருந்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோமாயின், இயேசுவோடுள்ள நம்முடைய உறவு நிலைத்திற்கும் (வச. 10,17). நாம் அவருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிவோமாயின் மிகுந்த, நிலையான கனிகளைக் கொடுப்போம் (வச. 16).

மிகுந்த ஜனக்கூட்டம் நிறைந்த தெருக்களின் வழியேயும், ஆபத்து நிறைந்த சாலைகளின் வழியேயும் இந்த குழப்பம் நிறைந்த உலகில் செல்லும் போதும் தேவன் நம்மோடு கூட நடந்து வருவதை உணரலாம். அதுவே அவர் நம்முடைய நண்பன் என்பதற்கு அடையாளம்.