வல்லமை
23 வாரங்களில் குறைமாதத்தில் பிறந்த குழந்தை செய்பி, 245 கிராம் எடை மட்டுமே இருந்தாள். அவள் உயிர் வாழ்வது சந்தேகம் என்று மருத்துவர்கள் அவள் பெற்றோர்களிடம் ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தனர். ஆனால் செய்பி தொடர்ந்து போராடினாள். அவள் அருகே ஒரு இளஞ்சிவப்பு நிற அட்டையில் ”சிறிய ஆனால் வல்லமையான” என்று எழுதி வைக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு பிறகு அற்புதமாக செய்பி 2.26 கிலோ எடை கொண்ட ஆரோக்கியமான குழந்தையாக வீடு திரும்பியது மட்டுமல்லாமல் உலகிலேயே உயிர் பிழைத்த மிக சிறிய குழந்தை என்ற உலக சாதனையையும் எடுத்து சென்றாள்.
முரண்பாடுகளை வென்றவர்களின் கதைகளைக் கேட்பது வல்லமை வாய்ந்தது. வேதாகமமும் அது போன்ற ஒரு கதையை கூறுகிறது. தேவனை தூஷித்து இஸ்ரவேலை மிரட்டிய ஒரு ராட்சத போர்வீரனான கோலியத்தை எதிர்த்து சண்டையிட ஆடு மேய்க்கும் சிறுவன் தாவீது முன் வந்தான். சவுல் இராஜா "நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்” (1 சாமுவேல் 17:33). தாவீது போர்க்களத்தில் இறங்கியபோது, கோலியாத் “சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான்.” (வச 42). ஆனால் தாவீது போர்க்களத்திற்கு தனியாக செல்லவில்லை. “இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” என்றான் (வச 45). அந்த நாள் நிறைவடைந்தபோது செத்துப்போன கோலியாத்தின் மீது வெற்றி பெற்ற தாவீது நின்றான்.
பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தேவன் நம்மோடு இருந்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய பெலத்தினால் நாமும் வல்லமையுள்ளவர்களாக இருக்கிறோம்.
பெட்டி ஆன்டியின் வழி
நான் சிறுவனாயிருக்கும்போது என்னுடைய அத்தை எங்களை பார்க்க வரும்போதெல்லாம் அது கிறிஸ்மஸ் போல இருந்தது. வரும்போது எனக்கு ஸ்டார் வார் (star war) பொம்மைகள் கொண்டு வருவார்கள். போகும்போது பணம் கொடுத்துவிட்டு செல்வார்கள். அவர்களுடன் நான் தங்கும்போதெல்லாம் காய்கறிகள் சமைக்கமாட்டார்கள் பதிலாக குளிர் சாதனப்பெட்டியில் ஐஸ் கிரிம்களை நிரப்பி வைப்பார்கள். அவருக்கு சில விதிகள் இருந்தன. என்னை தாமதமாக படுக்கைக்கு செல்ல அனுமதித்தார்கள். என் அத்தை தேவனின் பெருந்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு அற்புதமானவர். ஆனாலும் நான் ஆரோக்கியமாக வளர்வதற்கு, என் அத்தை என்னை கவனிப்பதைப் பார்க்கிலும் அதிக கவனம் தேவைப்பட்டது. என்னுடைய பெற்றோர்கள் என் மீதும் என் நடத்தை மீதும் எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டுமென்றும் என்னை அவர்களோடு வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாயிருந்தது.
அத்தை பெட்டியைப் பார்க்கிலும் தேவன் என்னிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார். நாம் அவருக்கு எதிர்த்து நின்றாலும் அல்லது அவரை விட்டு ஓடினாலும் - அவர் நம்மேல் அசைக்கமுடியாத அன்பு வைத்திருந்தாலும், அவர் நம்மிடமிருந்து ஏதாவது எதிர்பார்க்கிறார். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு எப்படி வாழவேண்டும் என அறிவுறுத்தும்போது பத்து பரிந்துரைகளை அல்ல பத்து கட்டளைகளை வழங்கினார் (யாத்திராகமம் 20:1-17). நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ளுவோம் என்று அறிந்து நாம் தேவனிடத்தில் அன்பு கூறவும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் (1 யோவான் 5:3). அதிர்ஷ்டவசமாக தேவனின் கற்பனைகள் பாரமானவைகள் அல்ல (வச. 3). பரிசுத்த ஆவியின் வல்லமையால் தேவனுடைய அன்பையும், மகிழ்ச்சியையும் அனுபவிப்பதால், நாம் அவருடைய கற்பனைகளின்படி வாழ முடியும். நம்மேல் அவர் வைத்துள்ள அன்பு இடைவிடாதது. ஆனால் அதற்கு பதிலாக நாம் தேவனை நேசிக்கின்றோமா என்பதை அறிந்துக்கொள்ள வேதாகமம் சில கேள்விகளை வைத்துள்ளது. ஆவியானவர் வழிநடத்தும் விதமாக நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிகிறோமா? நாம் தேவனிடத்தில் அன்பு கூறுகிறோமென்று சொல்லலாம், ஆனால் அவருடைய பலத்தினால் நாம் என்ன செய்கிறோமென்பது தான் உண்மையானதை வெளிப்படுத்துகிறது.
தாராளமாய் கொடுக்கும் இருதயம்
விக்கியூடைய இருசக்கர வாகனம் சரிபார்க்க முடியாத அளவிற்கு பழுதாகிவிட்டது. அவள் தன்னுடைய புது வாகனத்திற்கு சிறுக சிறுக சேமிக்க தொடங்கினாள். விக்கி வேலை பார்க்கும் உணவகத்திற்கு அடிக்கடி கிறிஸ் வருவது உண்டு. ஒரு நாள் அவள் வாகனம் வாங்கும்படி பணம் சேமித்து கொண்டிருந்ததை கேள்வி பட்டார் கிறிஸ். ஏதாவது அவளுக்கு உதவ வேண்டும் என்று அவர் உணர்ந்தார். அதே சமயத்தில் அவருடைய மகன் தனது வாகனத்தை விற்கும்படி முடிவெடுத்தான். உடனே கிறிஸ் அதை விலைக்கு வாங்கி, அதை பழுது பார்த்து, சாவியை விக்கி கையில் கொடுத்தார். அது அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. "யார் இப்படிப்பட்ட காரியங்கள் செய்யக்கூடும் " என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
தேவை உள்ளவர்களுக்கு இலவசமாய் கொடுக்க வேண்டும் என்று வசனம் நம்மை அழைக்கிறது. பவுல் தீமோத்தேயுக்கு சொன்னது போல் "நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்," (I தீமோத்தேயு 6:18). பேச்சுக்காக நன்மை செய்கிறவர்களாய் காணப்படுவதற்கு அல்ல, சந்தோஷத்துடன் கொடுக்கும் ஆவியுள்ளவர்களாய்இருக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். தாராள மனதுள்ளவர்களாய் நம் இருதயம் காணப்பட வேண்டும் - "கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,"
(வசா. 18)
திறந்த இருதயம் கொண்டு, தாராளமாய் கொடுப்பதினால் நமக்கு தேவையானது இல்லாமல் போய்விடுமோ என்கிற கவலை நமக்கு வேண்டாம். நாம் அன்போடு தாராள மனதுள்ளவர்களாய் இருப்பதினால், நித்திய ஜீவனை பற்றிக்கொள்கிறோம் என்று வேதம் கூறுகிறது. தேவனுக்குள் உண்மையாய் வாழ்வதின் அர்த்தம், நமக்கு இருக்கும் காரியத்தை சார்ந்து இருக்காமல் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாய் கொடுப்பதே.
வீட்டிற்கு திரும்புவோம்
ராணுவ வீரரான வால்டர் டிக்சன் தன் திருமணம் முடிந்து ஐந்து நாளில் போருக்கு திரும்ப சென்றுவிட்டார். சில மாதங்களில் தன் மனைவியின் கடிதங்கள் நிறைந்த அவரது மேலுறையை போர்க்களத்தில் கண்டுபிடித்தார்கள். இதனிமித்தமாக ராணுவ அதிகாரிகள் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரின் மனைவியிடம் தகவல் தெரிவித்தார்கள். ஆனால் இரண்டரை வருடங்களாக அவர் போர்கைதியாக சிறைபிடிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நிமிடமும் தப்பிப்பதைகுறித்து சிந்தித்துகொண்டிருப்பார். ஐந்து முறை தப்பிக்க முயற்சி செய்த போதும் மறுபடியும் பிடிக்கப்பட்டார். இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் வீடு திரும்பும்போது அனைவருடைய அதிர்ச்சியை நினைத்து பாருங்கள்.
சிறைபிடிக்கப்பட்டு, வீட்டிலிருந்து தூரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதின் கஷ்டம் தேவ பிள்ளைகளுக்கு தெரியும். அவர்கள் தேவனுக்கு எதிர்த்து நின்றது நிமித்தம் நாடுகடத்தப்பட்டார்கள். அனுதினமும் காலையில் எழுந்து வீடுதிரும்ப வேண்டும் என்று ஏங்கினார்கள், ஆனால் அவர்கள் தப்பிப்போகும்படி அவர்களுக்கு ஒரு வழியும் கிடைக்கவில்லை. ஆனால் தேவனோ அவர்களை மறக்கவில்லை என்று அவர்களுக்கு வாக்குத்தத்தம் கூறினார் "அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்"(சகரியா 10: 6). அவர்களின் வீடாமுயற்சியினால் அல்ல, கர்த்தரே அவருடைய இரகத்தினால் அவர்களுடைய தேவையை சந்தித்தார் "நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்.....தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள்" (வச. 8,9).
சில சமயங்களில் நம் பாவத்தினாலேயோ அல்லது கடினமான சூழ்நிலைகளில் நாம் தேவனிடமிருந்து மிகவும் தூரம் சென்றது போல் தோன்றினாலும் அவர் நம்மை மறப்பதில்லை என்பது நிச்சயம். நம் வாஞ்சைகளை அவர் அறிவார், அதை அறிந்து நம்மை அழைப்பார். அதற்கு நாம் செவிகொடுப்போமானால் அவர் இருக்கும் இடமாகிய நம் வீட்டிற்க்கு திரும்புவோம்.
தேவன் நம்மை தாங்குகிறார்
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஃப்ரெடி ப்ளோம் என்பவர் 2018-ல் 114 வயதை எட்டி உலகத்திலேயே நீண்ட ஆயுள் பெற்றவர் என்று கருதப்பட்டார். ரைட் சகோதரர்கள் ஃபிளயர் II உருவாக்கிய வருடம் 1904-ல் பிறந்து அவர் இரண்டு உலக மகா யுத்தங்கள், நிறவெறி கலகம், பொருளாதார மந்த நிலை இவை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். அவருடைய நீண்ட வாழ் நாளுக்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டபோது அந்த கேள்வியை அவர் தட்டி கழிக்கிறார். நம்மில் அநேகர் போல அவரும் ஆரோக்கியமான உணவுகளையோ பழக்கங்களையோ கையாண்டவர் அல்ல. ஆனால் தன்னுடைய நீண்ட வாழ்விற்கு ஒரு காரணம் மட்டும் சொல்லுகிறார். அது “ஒன்றே ஒன்று தான், அது தேவன். தேவனுக்கு எல்லா வல்லமையும் உண்டு… அவர் என்னை தாங்குகிறார்” என்றார்.
எதிரிகளின் அடக்குமுறையில் தவித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலருக்கு தேவன் கூறியவாக்குகளை போலவே ப்ளோம்-ம் எதிரொலிக்கிறார். “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10) என்று தேவன்வாக்களிக்கிறார். நிலைமை எவ்வளவு மோசமாக மாறினாலும், மீட்பிற்கு வழியே தெரியவில்லை என்றாலும் அவர்கள் தம்முடைய மெண்மையான பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்று தேவன் உறுதியளிக்கிறார். ” நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்” (ஏசா. 41:10) என்று வலியுறுத்துகிறார்
எவ்வளவு வருடங்கள்நாம் வாழ்ந்தாலும் கடினங்கள் நம் கதவைத் தட்டதான் செய்யும்: திருமணவாழ்வில் சிக்கல். பிள்ளைகள் நம்மை கவனிக்காதது. மருத்துவரிடமிருந்து திகிலூட்டும் செய்தி. நம் விசுவாசத்தின் நிம்மித்தம் துன்பப்படுவதாக கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் நம்முடைய தேவன் அவர் கரத்தை நீட்டி நம்மை இறுக்கமாகபற்றிக்கொள்ளுகிறார். அவருடைய பலத்த, மென்மையான கரங்களுக்குள் சேர்த்து அணைக்கிறார்.
ஒன்றாக துன்பம் அனுபவித்தல்
2013ம் ஆண்டு, எழுபது வயது நிரம்பிய ஜேம்ஸ் மெக்கொன்னெல், ஒரு பிரிட்டிஷ் அரச கடல் வீரர், மரித்தார். மெக்கொன்னெலுக்கு குடும்பம் இல்லை என்பதால் அவர் தங்கி இருந்த முதியோர் இல்லத்தின் ஊழியர்கள், அவருடைய இருதிச் சடங்கில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்று பயந்தனர். மெக்கொன்னெல்லின் நினைவு ஆராதனையை நடத்த அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரு மனிதர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வாறு எழுதினார் : “இந்த நாளிலும், காலத்திலும். துக்கப்பட ஒருவரும் இல்லாமல் இறப்பது சோகமான சம்பவம், ஆனால் இந்த மனிதர் ஒரு குடும்பம்… இந்த முன்னாள் சகோதரருக்கு இறுதி மரியாதை செலுத்த கல்லரைக்கு வரமுடியுமானால் தயவுசெய்து அங்கு வர முயற்ச்சிக்கவும்.” இருநூறு அரச கடற்படையினர் கல்லரைக்கு வந்திருந்தனர்.
இந்த பிரிட்டிஷ் தோழர்கள் வேதாகமத்தின் ஒரு உண்மையை வெளிப்படுத்தினர் : நாங்கள் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டிருக்கிறோம். “சரீரம் ஒரே ஒரு அவயவத்தினால் ஆனதல்ல. அதில் அநேக அவயவங்கள் உண்டு” என்று பவுல் 1 கொரிந்தியர் 12:14ல் கூருகிறார். நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்ல மாறாக இயேசுவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் சரீரத்தில் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கிறோம். “ ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூட சேர்ந்து பாடுப்படும்.” (வச. 26).
இயேசுவில் விசுவாசிகளாய், தேவனின் புது குடும்பத்தில் உறுப்பினர்களாய், நாம் ஒருவருக்கொருவர் வலியை நோக்கி, துன்பத்தை நோக்கி, நாம் தனியாக போக பயப்படும் இருண்ட இடங்களுக்கும் செல்ல நகர்கிறோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக நாம் தனியாக செல்வதில்லை.
நாம் தனியாக இருளில் ழூழ்கிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே நம் துன்பத்தின் மிக மோசமான பகுதி. ஆனால் நம்மோடு பாடுபட ஒரு புதிய சமூகத்தை தேவன் உருவாக்குகிறார். யாரும் இருளிலே விடப்பட்டு விடக்கூடாத ஒரு புதிய சமூகம்.
உண்மையாகவே போர் முடிந்து விட்டது
இரண்டாம் உலகப் போர் முடிந்து, இருபத்தொன்பது ஆண்டுகள் கடந்த பின்னரும், ஒரு ஜப்பானிய போர் வீரர் ஹீரூ ஒனோடா காடுகளுக்குள் தன்னை ஒளித்துக் கொண்டிருந்தார், தன்னுடைய நாடு சரணடைந்து விட்டது என்பதை நம்ப மறுத்தார். ஜப்பானிய இராணுவ தலைவர்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகளை இரகசியமாக வேவு பார்க்க, அவனை ஒரு தனிமையான தீவுக்கு அனுப்பியிருந்தனர். சமாதான பேச்சு வார்த்தை கையெழுத்தான பின்பும், பகைமை ஓய்ந்த பின்பும் அவன் அந்த காடுகளிலேயே இருந்தான். 1974 ஆம் ஆண்டு, அவனுடைய இராணுவ அதிகாரி அந்த தீவுக்குச் சென்று, அவனைக் கண்டு பிடித்து, யுத்தம் முடிந்து விட்டது என்பதை நம்பும்படிச் செய்தார்.
30 ஆண்டுகளாக இந்த மனிதன், ஒரு தனிமையான தீவில் வாழ்ந்தான், ஏனெனில், அவன் சரணடைய மறுத்தான், போர் முடிந்து விட்டது என்பதை நம்ப மறுத்தான். நாமும் இத்தகைய தவறுகளைச் செய்ய நேரலாம். “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ் நானம் பெற்றோம்” (ரோம.6:3) என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு அதிர்ச்சியைத்தரும் உண்மையை தெரியப்படுத்துகின்றார். ஒரு வல்லமையான, வினோதமான வழியில், சாத்தானின் பொய்யையும், சாவின் பயங்கரத்தையும், பாவத்தின் வல்ல பிடியையும், இயேசு சிலுவையில் கொன்று விட்டார். எனவே நாம் “பாவத்திற்கு மரித்தவர்களாயும்”, “தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும்” (வ.11) இருக்கின்றோம். நாம் இன்னமும் அடிக்கடி, பிசாசு நம்மேல் ஆதிக்கத்தை வைத்திருப்பதாக எண்ணுகின்றோம். நாம் சோதனைகளுக்கு இடம் கொடுக்கின்றோம், பாவத்தின் மாயைக்கு அடிமையாகின்றோம், பொய்க்குச் செவி சாய்க்கின்றோம், இயேசுவை விசுவாசிக்க தவறுகின்றோம். ஆனால், நாம் இவற்றிற்கெல்லாம் செவிசாய்க்கத் தேவையில்லை. தவறாக கூறப்படும் கரியங்களின் படி நாம் நடக்கத் தேவையில்லை. தேவனுடைய கிருபையால், கிறிஸ்து வெற்றிச் சிறந்த உண்மை கதையை நாம் பற்றிக் கொள்வோம்.
நாம் இன்னும் பாவத்தோடு போராடிக் கொண்டிருந்தால், இயேசு யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டார் என்ற செய்தியைப் பற்றிக் கொள்வோம், நாம் விடுதலை பெறுவோம். தேவனுடைய வல்லமையால், அவருடைய உண்மையை வாழ்ந்து காட்டுவோம்.
முற்றிலும் நம்மைத் துடைக்கும் கிருபை
ஒலி வாயிலாக கட்டுப்படுத்தப்படும் அமெசான் சாதனமான அலெக்சா, ஆர்வமளிக்கக் கூடிய ஓர் அம்சத்தைக் கொண்டுள்ளது. அதாவது, அதில் கூறியுள்ள அனைத்து செய்திகளையும் அழித்துவிடலாம். அலெக்சாவைச் செய்யும்படி கூறியுள்ள அனைத்தையும், அதனிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொண்ட அனைத்துச் செய்திகளையும் அழித்து விடலாம். ஓர் எளிய வாக்கியத்தால் (“நான் இன்று கூறிய அனைத்தையும் அழித்துவிடு”) அனைத்தையும் சுத்தமாக அழித்துவிடலாம், அது அங்கு இருந்தது என்பதற்கான அடையாளமேயில்லாமல் அழிக்கமுடியும். ஆனால் நாம் தவறாகப் பேசிய வார்த்தைகளும், நம்முடைய ஒவ்வொரு கருணையற்ற செயலும், நாம் மறந்து விட நினைக்கும் நிகழ்வுகள் அனைத்தும், நாம் கூறும் ஒரே கட்டளையின் மூலம் அழித்து விட முடியும் என்ற வசதி நம்முடைய வாழ்க்கையில் இல்லை என்பது எத்தனை மோசமானது!
ஆனால் நமக்கு ஒரு நற்செய்தி உள்ளது. நாம் அனைவரும் ஒரு புதிய, தூய்மையான துவக்கத்தை ஆரம்பிக்க தேவன் நம்மை அழைக்கின்றார். அவர் நம்முடைய தவறுகளையும், கெட்ட பழக்கங்களையும் வெறுமனே நீக்குகிறவர் மட்டுமல்ல, அவர் இன்னும் ஆழமாகச் செல்கின்றார். அவர் நம்மை மீட்டு, முழுவதும் மாற்றும்படி ஆழமாக கழுவுகின்றார், நம்மை முற்றிலும் மாற்றி புதியதாக்குகின்றார். “என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்” (ஏசா.44:22) என்கின்றார். இஸ்ரவேலர் கலகம் பண்ணி, கீழ்படியாமல் போனபோதும், தேவன் மிகுந்த இரக்கத்துடன் அவர்களுக்கு இரங்கினார். அவர்களின் “மீறுதல்களை மேகத்தைப் போலவும், (அவர்களின்) பாவங்களை கார்மேகத்தைப் போலவும்” (வ.22) அகற்றிவிட்டார். அவர்களுடைய அவமானங்களையும், தோல்விகளையும் சேர்த்து, அவற்றை அவருடைய ஆழ்ந்த கிருபையினால் துடைத்து விட்டார்.
தேவன் நம்முடைய பாவங்களையும், தவறுகளையும் அவ்வாறே செய்கின்றார். அவரால் சரி செய்யக்கூடாத தவறு ஒன்றுமேயில்லை, அவரால் குணமாக்க முடியாத காயமுமில்லை. நம்முடைய ஆத்துமாவின் வேதனை நிறைந்த பகுதிகளை தேவனுடைய இரக்கம் சுகப்படுத்துகின்றது, நாம் இதுவரை மறைத்து வைத்திருந்த காரியங்களையும், நம்முடைய குற்ற உணர்வுகளையும், நாம் மனம் வருந்தும் அனைத்து காரியங்களையும் அவருடைய இரக்கம் முற்றிலும் கழுவி சுத்தப் படுத்துகின்றது.
உண்மையான தாழ்மை, உண்மையில் பெரியது
எதிர்பாராத வகையில், அமெரிக்கப் படைகள் சரண் அடைந்த போது, அமெரிக்க புரட்சி முடிவுக்கு வந்தது. அநேக அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் ஜெனரல் ஜியாஜ் வாஷிங்டனை புதிய தலைவராக்க திறமையான முயற்சிகள் எடுத்தனர். முழு அதிகாரமும் அவருடைய கரத்தில் இருக்கும் போது, அவர் தன்னுடைய குறிக்கோளான சுதந்திரத்தையும் விடுதலையும் பற்றி உறுதியாக நிற்பாரா என்ற எதிர்பார்ப்போடு, உலகமே அவரை கவனித்துக் கொண்டிருந்தது. இங்கிலாந்தின் அரசர் ஜியார்ஜ் 111, ஓர் உண்மையைக் கண்டார், தன்னை இழுக்கின்ற விசையை எதிர்த்து, வெர்ஜீனியாவிலுள்ள தன்னுடைய பண்ணைக்குச் சென்று விட்டார் என்பதைக் கண்ட உலகு அவரை “ உலகிலேயே மிகப் பெரிய மனிதன்” என்று அழைத்தது. வலிமையான பதவி ஆசையை எதிர்த்து தள்ளியது, அவருடைய பெருந்தன்மையையும் முக்கியத்துவத்தையும் கட்டுகிறது என்பதை ஜியார்ஜ் அரசர் புரிந்துகொண்டார்.
இந்த உண்மையை அறிந்த பவுல், நம்மையும் கிறிஸ்துவின் தாழ்மையைப் பின்பற்றுமாறு ஊக்கப் படுத்துகின்றார். “இயேசு கிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும்” அவர் “தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்” (பிலி.2:6), தன்னுடைய அதிகாரத்தையெல்லாம் கொடுத்து விட்டு, “அடிமையின் ரூபமெடுத்து” “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார் (வ.7-8). சகல அதிகாரத்தையும் உடையவர், சகலத்தையும் நம் மீதுள்ள அன்பின் நிமித்தம் விட்டுக் கொடுத்தார்.
ஆனால், நேர்மாறாக, தேவன் கிறிஸ்துவை ஒரு குற்றவாளியின் சிலுவையிலிருந்து, “எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” (வ.9). நாம் இயேசுவைப் போற்றுபடியும், நாம் அவருக்கு கீழ்ப்படியும், அவர் நம்மைக் கட்டாயப் படுத்தாமல் தன்னுடைய அதிகாரம் அனைத்தையும் விட்டு, நம்மை பிரம்மிக்கச் செய்யும் ஒரு செயலின் மூலம் நம்முடைய ஆராதனையும் அற்பணிப்பையும் ஜெயித்துவிட்டார். தம்மை முழுமையாக தாழ்த்தினதின் மூலம், இயேசு தன்னுடைய உண்மையான மேன்மையை நமக்குக் காட்டி, இவ்வுலகையே தலை கீழாக மாற்றினார்.