செப்டம்பர், 2015 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: செப்டம்பர் 2015

தரிசனப்பள்ளத்தாக்கு

பாவியாகிய மனிதனுக்கும், பரிசுத்தராகிய தேவனுக்கும் இடையே உள்ள தூரத்தை கடும் தூய்மைவாதிக் குழு (puritan) வைச் சார்ந்த மக்களின் “தரிசனப்பள்ளத்தாக்கு” என்ற ஜெபம் விளக்குகிறது. அந்த ஜெபத்தில் “என்னை தரிசனப்பள்ளதாக்கிற்கு கொண்டுவந்தீர்... பாவமாகிய மலைகளால் சூழப்பட்ட நான் உமது மகிமையைக் கண்டேன்” என்று மனிதன் தேவனிடம் கூறுகிறான். அவனது பாவத்தன்மையை அவன் அறிந்திருந்தபொழுதும் இன்னமும் நம்பிக்கையுள்ளது. “மிகவும் ஆழமான கிணறுகளிலிருந்து நட்சத்திரங்களைக் காணலாம். ஆழம் அதிகரிக்க, உமது நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிவிடும்” என்று அந்த மனிதன் தொடர்ந்து கூறுகிறான். “எனது இருள் சூழ்ந்த நிலையில்…

இருளை ஊடுருவி

நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது அந்த நிகழ்ச்சியை முதன்முதலாகக் கண்டேன். பனிபெய்யும் இரவு, நகரத்திலுள்ள விளக்குகளின் ஒளியை விட்டு வெகுதூரத்தில் வைக்கோல் ஏற்றிச் செல்லும் வாகனத்தின் மேல், மகிழ்ச்சியோடு சத்தம் போட்டு உரையாடிக் கொண்டு சென்ற நண்பர்களோடு நான் பயணம் செய்தபொழுது, அடிவானத்தில் பலவண்ண ஒளி பளிச்சிட வானமே ஒளிமயமாக இருந்தது. நான் மெய்மறந்து போனேன், அந்த இரவுமுதல் அரோரா போரியாலிஸ் அல்லது வடதிசை ஒளி என்ற வானில் தோன்றும் அரிதான ஒளி விளைவு நிகழ்ச்சியில் கவரப்பட்டேன். பொதுவாக அப்படிப்பட்ட நிகழ்ச்சி நான் வசிக்கும்…

அதைக் கொடுத்து விடுங்கள்

பலவிதமான தேவையிலுள்ள ஏழைமக்களுக்கு உதவிசெய்யும் அநேக தொண்டு நிறுவனங்கள், தங்களது தேவைக்கும் அதிகமாக வைத்திருப்பவர்களிடமிருந்து அவர்களுக்கு தேவையற்ற துணிமணிகள், வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சாமான்கள் போன்ற நன்கொடைகளையே சார்ந்துள்ளார்கள். நமக்குப் பயன்படாத பொருட்களை பிறருடைய பயன்பாட்டுக்கு கொடுத்துவிடுவது நல்லது. ஆனால் நாம் அனுதினமும் பயன்படுத்தும் விலையுயர்ந்த பயனுள்ள பொருட்களை கொடுக்க பொதுவாக மனதில்லாமல் இருப்போம். பவுல் சிறைச்சாலையிலிருந்த பொழுது நம்பக் கூடிய சிநேகிதர்களின் ஊக்கமும், உறவும் தேவைப்பட்டது. ஆனாலும் அவருக்கு மிக நெருங்கிய இரு சிநேகிதர்களை பிலிப்பு பட்டணத்திலுள்ள விசுவாசிகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்ய…

தரித்திரரை நினைத்துக் கொள்ளுங்கள்

1780ஆம் வருடத்தில் இராபர்ட் ரேய்கஸ் லண்டன் மாநகரைச் சுற்றியிருந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த படிப்பறிவற்ற ஏழை பிள்ளைகளைக் குறித்து மனபாரமடைந்தார். அந்தப் பிள்ளைகளுக்கு எந்த விதத்திலும் யாரும் உதவி செய்யவில்லை என்பதைக் கவனித்து அவர்களது வாழ்க்கையை மாற்றி அமைக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று முயற்சி செய்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பிள்ளைகளுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்தும்படி சில பெண்களை ஏற்படுத்தினார். வேதாகமத்தைப் பாடப்புத்தகமாக பயன்படுத்தி அந்த ஆசிரியர்கள் அந்த ஏழைக்குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுக் கொடுத்து வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஞானத்தை அவர்களுக்குப் போதித்தார்கள். விரைவில் 100 குழந்தைகள்…

“புது சிருஷ்டி”

எனது பணியின் ஆரம்ப நாட்களில் என்னுடன் பணிசெய்த நபர் ஒருவர் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவதில் மகிழ்ச்சி அடைபவனாக இருந்தான். புதிதாக கிறிஸ்தவ விசுவாசத்தில் வந்தவர்கள் அல்லது அவனுடைய இயேசுவைப் பற்றி பேச முயற்சி செய்த அனைவரையும் சிறிது கூட இரக்கமின்றி வெறுப்பூட்டுகிற வார்த்தைகளினால் பழித்துக் கூறுவான். ஒருநாள் நான் அந்த வேலையை விட்டுவிட்டு வேறொரு இடத்தில் புதிய வேலையில் சேர்ந்து விட்டேன். அன்று அந்த மனிதன் ஒருக்காலும் இயேசுவைப் பின்பற்றுகிறவராக மாற இயலாது என்று எண்ணினதை நினைவு கூருகிறேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து…

முதல் அடி

ஒரு நாள் எனது சிநேகிதி என்னை வழியில் நிறுத்தி அவளது அண்ணனுடைய ஒரு வயது குழந்தை நடப்பதற்காக எடுத்து வைத்த முதல் அடியைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டாள். அவனால் நடக்க முடிகிறதென்று ஆச்சரியத்துடன் கூறினாள். அதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு எங்களுடைய வார்த்தைகள் எவ்வளவு வினோதமாக இருந்திருக்குமென்று பின் நாட்களில் எண்ணிப் பார்த்தேன் உலகிலுள்ள அநேக மக்களுக்கு நடக்க இயலும் அது என்ன பெரிய காரியம்?.

குழந்தைப் பருவம் சிறப்புத் தன்மைகளை உடையதாகவுள்ளது. ஆனால் அத்தன்மைகள் வாழ்க்கையின் பின் பகுதியில்…

பின்னடைவிலும் நன்மைகள்

1984 – 2008 வரை நடந்த ஐந்து வேறு, வேறு ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த டாரா டோரஸ் தனிச்சிறப்பு வாய்ந்தவராக இருந்தார். பின் நாட்களில் 50 மீட்டர் ப்ரிஸ்டைல் நீச்சல் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன் அவள் ஏற்படுத்திய சாதனையை அவளே உடைத்தெறிந்தாள். ஆனால் எப்பொழுதுமே பதக்கங்களும் சாதனைகளுமல்ல அவள் ஒரு விளையாட்டு வீரராக காயமடைதல், அறுவை சிகிச்சைக்கு உட்படுதல், போட்டிபோடும் மற்றவர்களைவிட இரண்டு மடங்கு வயதுடைய நிலைமை ஆகிய அநேக தடைகளை அவள் சந்தித்தாள். “நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்தே ஒவ்வொரு…

ஆச்சரியம் ஏதுமில்லை

“அவன் உனக்கு பொருத்தமானவன்” என்று என் சிநேகிதி என்னிடம் கூறினாள். அவள் அப்பொழுதுதான் சந்தித்த ஒரு மனிதனைப் பற்றி அப்படிக் கூறினாள். அந்த மனிதனது அன்பான கண்கள், அன்பான சிரிப்பு, அன்பான உள்ளம் ஆகியவற்றை அவள் விவரித்தாள். அவனை நான் சந்தித்தபொழுது, அவனது விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது. இன்று அவன் எனது கணவர். அவரை நேசிப்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

உன்னதப்பாட்டில் மணவாட்டி அவளது நேசரை விவரிக்கிறாள். அவனுடைய நேரம் திராட்சரசத்தைவிட இன்பமானது. பரிமளதைலங்களைவிட வாசனை நிறைந்தது. அவனுடைய நாமம் உலகிலுள்ள அனைத்து நாமங்களிலும் இன்பமானது.…

மீன் பிடிப்பதில் ஒரு பாடம்

பியட் ஏரியில் பசுமையாக இருந்த நீர்ச்செடிகள் நிறைந்த பகுதிக்கு அருகில் தெளிவான அமைதியான நீரில் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். அடர்த்தியான செடிகளுக்குள்ளிருந்து ஒரு சிறிய வாயுடைய பெரிய பாஸ் வகை மீன் சுற்றுப்புறத்தை ஆராய மெதுவாக எட்டிப் பார்த்ததை கவனித்தேன். எனது தூண்டிலில் மாட்டப்பட்டிருந்த உணவு அதற்கு ஆசையை உண்டாக்கினதினால் அதன் அருகில் வந்து உற்று நோக்கியபின் அது மறுபடியும் செடிகளுக்குள்ளே சென்று விட்டது. தூண்டியில் மாட்டியிருந்த தூண்டில் முள்ளைப் பார்க்கும் வரைக்கும் இந்நிகழ்ச்சி பலமுறை நடந்தது. தூண்டில் முள்ளைக் கண்டவுடன் தனது வாலை…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

படைப்பைக் கண்டறிதல்

யூரேசிய நாடான ஜார்ஜியாவில் உள்ள க்ருபேரா-வோரோன்ஜா என்ற குகையானது பூமியில் இதுவரை ஆராயப்பட்ட ஆழமான குகைகளில் ஒன்றாகும். ஆய்வாளர்கள் குழுவானது அதின் செங்குத்து குகைகளின் பயமுறுத்தும் ஆழத்தை 2,197 மீட்டர் வரை ஆய்வு செய்துள்ளது. அதாவது, பூமிக்குள் 7,208 அடி வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே போன்று நானூறு குகைகள் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுமையிலும் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, புதிய கண்டெடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  
படைப்பின் ஆச்சரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கண்டெடுக்கப்பட, நாம் வாழும் பூமியைக் குறித்த நம்முடைய புரிதலை வலுவாக்குவதோடு, தேவனுடைய கரத்தின் அற்புதமான கிரியைகளைக் கண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது (ஆதியாகமம் 1:26-28). சங்கீதக்காரன் நம் அனைவரையும் தேவனின் மகத்துவத்தை “கெம்பீரமாய்ப் பாடி” சங்கீர்த்தனம் பண்ணுவதற்கு அழைப்பு விடுக்கிறார் (வச. 1). நாளை புவி தினத்தை கொண்டாடும் வேளையில், தேவனின் ஆச்சரியமான படைப்பைக் குறித்து தியானிப்போம். படைப்பின் ஆச்சரியங்கள் அனைத்தையும் நாம் கண்டுபிடித்துவிட்டோமோ இல்லையோ, அவைகள் அனைத்தையும் ஆதாரமாய் வைத்து அவருக்கு முன்பாக தலைவணங்கி ஆராதிப்போம் (வச. 6).  
அவர் தனது படைப்பின் பரந்த, பூகோள இடங்களை மட்டும் அறியவில்லை. நம் இருதயத்தின் ஆழத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஜார்ஜியாவின் குகைகளைப் போலல்லாமல், வாழ்க்கையின் இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்குகளை கடந்து செல்வோம். அதுபோன்ற தருணங்களில் தேவன் நம்முடைய பயணத்தை மென்மையாகவும் உறுதியாகவும் பராமரிக்கிறார் என்பதை அறிவோம். சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின் படி, “நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (வச. 7) என்பதை மறந்துவிடவேண்டாம்.  

ஆழமான சுகம்

2020ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, பிரேசிலின் புகழ்பெற்ற “மீட்பராகிய கிறிஸ்து” என்னும் கிறிஸ்துவின் சிலையில் கிறிஸ்துவுக்கு மருத்துவர் ஆடை உடுத்தப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பல முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த சித்தரிப்பானது, இயேசுவே நம்முடைய பரம வைத்தியர் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது (மாற்கு 2:17).  
இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் பல பிணியாளிகளுக்கு சுகம் கொடுத்திருக்கிறார். பர்திமேயு குருடன் (10:46-52); குஷ்டரோகி (லூக்கா 5:12-16); திமிர்வாதக்காரன் (மத்தேயு 9:1-8) என்று சில உதாரணங்களைக் கூறமுடியும். அவரைப் பின்பற்றி வருகிற மக்கள் மீதான அவருடைய கரிசனையை, அவர் அப்பங்களை பெருகச் செய்து அனைவரையும் போஷித்த சம்பவத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் (யோவான் 6:1-13). அந்த அற்புதங்கள் அனைத்தும் இயேசுவின் பராக்கிரமத்தையும் ஜனங்கள் மீதான அவருடைய தெய்வீக அன்பையும் வெளிப்படுத்துகிறது.  
அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாய் அவருக்கு கிடைத்த சுகமாக்குகிற வல்லமையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார். அது, நாம் பாவத்தினால் தேவனிடத்திலிருந்து முற்றிலுமாய் பிரிக்கப்பட்ட சூழ்நிலையின் மத்தியிலும் “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்பதே (ஏசாயா 53:5). இயேசு நம்முடைய அனைத்து சரீர சுகவீனங்களையும் சுகமாக்கவில்லையெனினும், தேவனோடு உறவுகொள்ளும் நம்முடைய தேவையை அவர் பூர்த்திசெய்கிறவராயிருக்கிறார்.  

இயேசுவிடம் ஓடுதல்

 பாரீஸ_க்கு ஒரு பயணத்தில், பென்னும் அவனது நண்பர்களும் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம் ஒன்றிற்கு சென்றிருந்தனர். அவன் ஓவியக்கலை மாணவனாய் இல்லாதபோதிலும், யூஜின் பர்னாண்ட் வரைந்த “உயிர்த்தெழுந்த நாளின் அதிகாலையில் கல்லறைக்கு ஓடிய பேதுருவும் யோவானும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியத்தைக் கண்டு ஆச்சரியத்தில் வியந்தான். வார்த்தைகளை பகிராத அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்த பேதுரு மற்றும் யோவானின் முகங்கள் எண்ணற்ற உணர்வுகளை பகிருகின்றது. பார்வையாளர்களை அவர்களின் உணர்வுக்குள் நிறுத்தி, அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.  
யோவான் 20:1-10இன் பிரகாரம், அந்த ஓவியமானது இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு நேராய் ஓடிய இரண்டுபேரை காண்பிக்கிறது (வச. 4). அந்த பிரம்மாண்ட ஓவியம் உணர்ச்சிபொங்கிய இரண்டு சீஷர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறது. அந்த கட்டத்தில் அவர்களுடைய விசுவாசம் இன்னும் முழுமைபெறவில்லையெனினும், அவர்கள் சரியான திசையை நோக்கி ஓடினார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவும் அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் காண்பித்தார் (வச. 19-29). அவர்களுடைய இந்த தேடுதல், நூற்றாண்டுகளாய் இயேசுவைத் தேடுவோரின் தேடலுக்கு ஒத்தது. இயேசுவின் கல்லறை அருகே அக்காலகட்டத்தில் நாம் இல்லாதிருந்தாலும், அந்த அழகான ஓவியத்தை நாம் பார்த்திராவிடினும், நற்செய்தியை நம்மால் தெளிவாய் பார்க்கமுடியும். நமக்கு சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் குழப்பங்கள் இருந்தாலும், இயேசுவும் அவருடைய அன்பும் இருக்கும் திசை நோக்கி ஓடுவதற்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாளைக்கு உயிர்தெழுதலின் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும்போது, “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13) என்னும் வார்த்தையை நினைவுகூருங்கள்.