வகை  |  odb

“ஒரு குழந்தை கிடைக்க நம்பிக்கை” என்ற மரம்

எங்களுடைய கிறிஸ்மஸ் மரத்தை மின்னும் விளக்குகளால் சுற்றினேன். நீலம், இளஞ்சிவப்பு நிற (டிழற) ரிபன்களால் அதன் கிளைகளை அலங்கரித்தேன். அந்த மரத்திற்கு “ஒரு குழந்தை கிடைக்க நம்பிக்கை தரும் மரம்” என பெயரிட்டேன். நானும் என்னுடைய கணவனும் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும்படி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கின்றோம். இந்த கிறிஸ்மஸ் பிறப்பதற்கு முன்பு கட்டாயம் கிடைத்துவிடும் என எதிர் பார்த்திருக்கிறோம்.

ஒவ்வொரு நாள் காலையும் நான் அந்த மரத்தினருகில் நின்று ஜெபம் பண்ணுவேன். தேவன் எனக்கு உண்மையுள்ளவராகவேயிருக்கிறார் என நான் நினைவுபடுத்திக் கொள்வேன். இந்தக் கிறிஸ்மஸ_க்கு முன்பு குழந்தை கிடைக்காது என்ற செய்தி டிசம்பர் 21 ஆம் தேதி வந்தது. என்னுடைய மனக்கோட்டை தகர்க்கப்பட்ட நிலையில் தேவனுடைய அருட்கொடைகளுக்கு அடையாளமாக நிறுத்தப்பட்ட அந்த மரத்தினருகில் நின்றேன். தேவன் இன்னமும் உண்மையுள்ளவராயிருக்கின்றாரா? நான் ஏதோ தவறாகச் செய்து கொண்டிருக்கின்றேனா?

சில வேளைகளில் தேவன் சில முடிவுகளை நிறுத்தி வைத்திருப்பது அவருடைய அன்பினால் நம்மை ஒழுங்குபடுத்துவதற்கும். நம்முடைய விசுவாசத்தைப் புதிப்பிப்பதற்கும் நம் தேவையை தாமதிக்கச் செய்கிறார். தேவன் இஸ்ரவேலரைத் திருத்துவதைக் குறித்து எரேமியா தீர்க்கதரிசி புலம்பல் புத்தகத்தில் விளக்குகின்றார் (3:13). “தம்முடைய அம்பராத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்” (3:13) அத்தகைய வேதனையை உணர முடிந்தது. இவையெல்லாவற்றிலும் எரேமியா தேவனுடைய உண்மையின் மிதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது” (வச. 22-23) என்று கூறுகின்றார்.

நான் அந்த மரத்தை கிறிஸ்மஸ_க்குப் பின் அநேக நாட்கள் வைத்திருந்து என்னுடைய காலை ஜெபத்தை தொடர்ந்து செய்த கொண்டேயிருந்தேன். கடைசியாக கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகையின் போது எங்களுக்கு ஒரு பெண் குழந்தை கிடைத்தது. நாம் எதிர்பார்க்கின்ற நேரத்தில் நம்முடைய சொந்த விருப்பங்களின்படி தேவன் தருவார் என எதிர்பார்க்கக் கூடாது.

என்னுடைய பிள்ளைகள் இப்பொழுது முப்பது வயதைத் தாண்டிவிட்டனர். ஆனால், இப்பொழுதும் நான் அந்த மரத்தின் ஒரு சிறிய அமைப்பை வைத்து, தேவனுடைய உண்மையின் மீது எப்பொழுதும் நம்பிக்கையோடிருக்க, என்னையும் மற்றவர்களையும் நினைவுபடுத்திக் கொள்ளும்படிச் செய்வேன்.

இரகிசயம் அல்லாத

என்னுடன் பணிபுரியும் நபர் ஒருவர் என்னிடம் தான் இயேசுவுக்கு சொந்தமானவனல்ல எனக் கருதுவதாகக் கூறினான். அவன் தன்னுடைய வசதியான, பெருமைப்படக்கூடிய வாழ்வைக் குறித்து விளக்கியதோடு, அது அவனுக்குத் திருப்தியைத் தரவில்லை எனவும் கூறினான். “இங்கு என்னுடைய பிரச்சனை என்னவெனில், நான் நல்லவனாக வாழவிரும்புகிறேன். அதற்காக கவனமுன் செலுத்துகின்றேன். ஆனால், அது வேலை செய்யவில்லை, நான் எவற்றைச் செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேனோ அவற்றைச் செய்ய முடியவில்லை. எவற்றை நிறுத்த வேண்டுமென எண்ணுகிறேனோ, அவற்றையே தொடர்ந்து செய்கிறேன்” என்றான்.

“உங்களுடைய இரகசியம் என்ன என்று உள்ளார்ந்த ஆவலோடு கேட்டான். என்னிடம் இரகசியமேயில்லை. தேவன் என்னிடம் எதிர்பார்க்கும் தரத்தில் வாழும்படி என்னிடம் பெலனுமில்லை. எனவேதான் நமக்கு இயேசுவின் உதவி தேவை” என்றேன்.

நான் வேதாகமத்தை வெளியிலெடுத்து “அவன்” சொல்லிய வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய பவுலும் ரோமர் 7:15ல் கூறியுள்ளதைக் காண்பித்தேன். பவுலின் ஏமாற்றத்தைக் காட்டும் இந்த வார்த்தைகள், தங்களை தேவன் விரும்பும் நல்லவர்களாகக் காட்ட முயற்சித்து தோல்வியுற்ற கிறிஸ்தவர்களுக்கும், பெயர் கிறிஸ்தவர்களுக்கும் பொருத்தமாயுள்ளது. அது உனக்கும் பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன். அப்படியானால் கிறிஸ்துவே நமது இரட்சிப்புக்கும் அதன் மூலம் கிடைக்கும் மாற்றங்களுக்கும் மூலக்காரணர் (ரோம. 7:25-8:2) என்ற பவுலின் வெளிப்பாடு உன்னை மெய்சில்ர்க்கச் செய்யும். நம்மில் முடியாததென்று நாம் மலைத்துப்போய் நிற்கின்ற காரியங்களை இயேசு நமக்காக ஏற்கனவே செய்து முடித்து நம்மை விடுவித்து விட்டார்.

நமக்கும, தேவனுக்குமிடையேயுள்ள தடுப்பு, பாவமாகிய தடுப்பு, தடுப்புசவர், நம்முடைய முயற்சியெதுவுமில்லாமலேயே உடைந்து நீக்கப்பட்டுள்ளது. நம்முடைய இரட்சிப்பையும், அதன் பலமான பரிசத்த ஆவியானவவரால், தரப்படுகின்ற வளர்ச்சிக்கேற்ற மாற்றங்களையும் தேவன் நம் அனைவருக்கும் தருகின்றனார். அவர் நம்முடைய ஆன்மாவின் கதவைத் தட்டுகின்றார். அவருடைய அழைப்புக்கு இன்றே பதில் கொடு. இதில் எந்த இரகசியமும் இல்லை. அவரே நம் பதிலாவார்.

மேசியாவை எதிர்பார்

பழுதாகிவிட்ட எங்களுடைய காரைச் சரிசெய்ய வந்துள்ள மனிதன் பார்ப்பதற்கு இளமையாகவும், எங்கள் பிரச்சனையைச் சரி செய்யத் தகுதியற்றவனுமாக எனக்குத் தோன்றினான். என்னுடைய கணவன் டான். “அவன் ஒரு குழந்தை” என்று என்னுடைய காதில் முணுமுணுத்து, தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தினார். அந்த இளைஞனின் மீதுள்ள நம்பிக்கையின்மை, நாசரேத்தூரிலுள்ள மக்கள் இயேசுவை சந்தேகத்தோடு பார்த்து முணுமுணுத்துக் கொண்டதைப் போலிருந்தது.

இயேசு ஜெப ஆலயங்களில் போதனை செய்த போது “இவன் தச்சனுடைய மகன் அல்லவா?” எனக் கேட்டனர் (மத். 13:55). அவர்கள் ஏளனமாய் பேசிய போதும், அவர்களறிந்த ஒரு நபரால் எப்படி சுகமளிக்கவும், போதகம் செய்யவும் முடிகிறது என ஆச்சரியப்பட்டனர். “இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?” (வச. 54) எனக் கேட்டனர். அவர் செயல்படுத்திய அதிகாரத்தைக் கண்டு, இயேசுவை விசுவாசிப்பதற்குப்பதிலாக இடறலடைந்தனர் (வச. 15,58).

இதேப்போல் நாமும் நம்முடைய ரட்சகரின் ஞானத்தையும், வல்லமையையும் நம்புவதற்கு கஷ்டப்படுகின்றோம். சிறப்பாக, நம்முடைய அநுதின வாழ்வில் நன்கு பழகிய சாதாரண காரியங்களில் கூட நம்பிக்கையையிழந்து விடுகிறோம். அவருடைய உதவியை நாடாமல், நம் வாழ்வு மாற்றத்தைத் தரும் அற்புதத்தை நாம் இழந்துவிடுகிறோம் (வச. 58).

டான், தான் எதிர்பார்த்த உதவி சரியாகத் தன்னை அடைந்ததைக் கண்டான் இறுதியாக, என்னுடைய கணவன் அந்த இளைஞனின் உதவியை ஏற்றுக்கொள்ள சம்மதித்து, தன்னடைய பழைய காரின் பாட்டரியையும் பார்க்கும்படி அவனை அனுமதித்தார். ஒரேயொரு இணைப்பை இறுக்கிய அந்த மெக்கானிக், நொடியில் அந்தக் காரை ஒடவிட்டார். அதன் இயந்திரம் உறும, எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பித்தன. “இது கிறிஸ்மஸ் போல ஜொலிக்கிறது” என்றார் என் கணவன்.

இதேப் போன்று மேசியா நம் வாழ்விலும் புதிய ஒளியையும், ஜீவனையும் தந்து நாம் அவரோடு நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர உதவுவார் என எதிர்பார்ப்போம்.

கர்த்தருடையவன்

தங்கள் உடல்மீது எழுதிக் கொள்ளல் அல்லது வரைந்து கொள்ளல் என்பது தற்காலத்தில் மிகவும் பிரபலமாகி வருகின்றது. இந்தப் பச்சைக் குத்திக் கொள்ளலில் சில சிறியதாகவும் யார் கவனத்தையும் ஈர்ப்பதாகவும் இருப்பதில்லை. ஆனால், தற்பொழுது விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் முதல் சாதாரண மக்கள் வரை தங்கள் உடலின் பெரும்பகுதியை வண்ணங்களாலான படங்கள், எழுத்துக்கள், கோலங்களால் மூடிவிடுகின்றனர். 2014 ஆம் ஆண்டு பச்சைக் குத்தல் மூலம் மூன்று பில்லியன் டாலர் வருவாய் கிடைத்ததெனவும், பச்சைக் குத்தியதை அழிப்பதன் மூலம் அறுபத்தாறு மில்லியன் டாலர் வருவாய் கிடைத்தாகவும் வலைதளங்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் இவ்வாறு பச்சைக் குத்திக் கொள்வதைக் குறித்து என்ன எண்ணினாலும் சரி, ஏசாயா 44, ஜனங்கள் தங்கள் கரங்களில் எதையாகிலும் எழுதிக் கொள்வதைப் பற்றி குறிப்பிடுகின்றது. “நான் கர்த்தருடையவன்” (வச. 5) என்று தனக்கு ஒரு நாமத்தைத் தரித்துக்கொள்வது, தேவன் தாம் தெரிந்துகொண்ட ஜனத்தின் மீது கொண்டுள்ள கரிசனையை விளக்கும் அந்தப் பகுதியின் உச்சக்கட்டத்தைக் காட்டுகின்றது (வச. 1). கர்த்தர் அவர்களுக்குத் துணை செய்கிறவர் (வச. 2) அவர்களுடைய நிலமும் அவர்களுடைய சந்ததியும் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறும்படி முன் குறிக்கப்பட்டது (வச. 3). இரண்டு வல்லமையான வார்த்தைகள் “நான் கர்த்தருடையவன்” என்பன அவர்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதையும், தேவன் அவர்களைப் பாதுகாக்கின்றார் என்பதையும் உறுதியாக வெளிப்படுத்துகின்றன.

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையினால் தேவனிடத்தில் வருகின்றவர்கள் தங்களைக் குறித்து உறுதியான நம்பிக்கையோடு தங்களைக் குறித்து, “நான் கர்த்தருடையவர்” என்று சொல்லலாம். நாம் அவருடைய ஜனங்கள், அவருடைய ஆடுகள், அவருடைய பிள்ளைகள், அவருடைய பின் சந்ததியினர் அவரோடு குடியிருப்பவர்கள். இவை நம் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் நாம் பற்றிக்கொள்ள வேண்டியவை. நமக்கு வெளிப்பிரகாரமான எந்த அடையாளமோ, பச்சைக் குத்தலோ தேவையில்லை. நம் இருதயங்களில் இருக்கிறார் என்பதை நம் சிந்தனையில் பதித்துக் கொள்வோம். நாம் கர்த்தருடையவர்கள் (ரோம. 8:16-17).

நிலையான

நான் காரின் கதவை மூடிவிட்டு, என்னுடைய பள்ளியினுள் நுழைந்த போது, “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று என் தந்தை என்னிடம் கூறினார். அப்பொழுது நான் 6ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பல மாதங்களாக இதே காட்சியைத் தான் ஒவ்வொரு காலையும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருந்தோம். நாங்கள் பள்ளியை அடைந்தோம். என் தந்தை, “இன்று நல்ல நாளாயிருக்கட்டும், நான் உன்னை நேசிக்கிறேன்” என்றார். நான் “பை” என பதில் கூறிவிட்டுச் சென்றேன். என் தந்தையின் மேல் நானொன்றும் கோபத்திலில்லை, அவரைப் புறக்கணிக்கவுமில்லை. நான் என்னுடைய சிந்தனையில் மூழ்கியிருந்தேன், எனவே அவருடைய அன்பு வார்த்தைகளைக் கவனிக்கவில்லை. எப்படியிருந்தாலும் என்னுடைய தந்தையின் அன்பு விடாப்பிடியாக இருந்தது.

தேவனுடைய அன்பும் இதே போன்றுதான். உண்மையில் இதையும் விட மேலான அன்பு அது. அது என்றென்றும் நிலைத்திருக்கும் அன்பு. இத்தகைய அன்பினைப் பற்றி பழைய ஏற்பாட்டில், சங்கீதம் 136ல் இருபத்தாறு முறை கூறப்பட்டுள்ளது. எந்த வார்த்தையாலும் அந்த அன்பின் ஆழத்தை முழுமையாக விளக்க முடியாது. நாம் இதனை இரக்கம், அன்பு கனிந்த கருணை, கிருபை, உண்மையான அன்பு என பல வகைகளில் விளக்கலாம். இந்த அன்பு, உடன்படிக்கையோடு இணைந்த அன்பு, உண்மையும் நம்பிக்கையும் கலந்த அன்பு. தேவ ஜனங்கள் பாவம் செய்யம் போதும் தேவன் அவர்கள் மீதுள்ள அன்பில் உண்மையுள்ளவராயிருந்தார். விடாப்பிடியான அன்பு என்பது தேவனுடைய குணாதிசயத்தோடு ஒன்றியது (யாத். 34:6).

நான் குழந்தையாயிருந்த போது என்னுடைய தந்தையின் அன்பு எனக்குக் கட்டாயமாகத் தரப்படும் எனக் கருதிக் கொண்டேன். இதே போன்று இப்பொழுதும் அத்தகைய அன்பு என் பரலோகத் தந்தையிடம் உண்டு. நான் என்னுடைய தந்தையின் வார்த்தையைக் கவனிக்கத் தவறி, அவருடைய வார்த்தைக்கு பதில் கூற மறந்துவிடுகின்றேன், நன்றியோடிருக்கத் மறந்துவிடுகிறேன். ஆனாலும் என் தேவனுடைய அன்பு விடாப்பிடியாகவுள்ளது என்ற உண்மை என் வாழ்விற்கு உறுதியான அஸ்திபாரமாகவுள்ளது.

வீடு

வீடுகளை விற்பனை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்த சிநேகிதி ஒருவர் சமீபத்தில் புற்று நோய் தாக்கப்பட்டு மரித்துவிட்டார். நானும் என் மனைவியும் பாற்ஸியைப் பற்றிய கடந்த கால அநுபவங்களை நினைவுபடுத்திக் கொண்டிருந்த போது, பாற்ஸி ஒரு மனிதனை இயேசுவின் மீதுள்ள விசுவாசத்திற்குள் வழிநடத்தியதைக் குறித்து என் மனைவி சூ நினைவுபடுத்தினாள். இப்பொழுது அவர் எங்களுக்கு ஒரு நல்ல நண்பராக இருக்கின்றார்.

எங்களுடைய சமுதாயத்தில் பல குடும்பங்கள் வசிப்பதற்கு ஏற்ற இடங்களை பாற்ஸி கண்டுபிடித்துக் கொடுத்ததோடல்லாமல், அவர்களுக்கு ஒரு நிலையான வாசஸ்தலம் உண்டு என்பதையும் உறுதியாக்கிக்கொள்ள உதவினாள்.

இயேசு கிறிஸ்து நமக்காகச் சிலுவைக்குச் செல்ல ஆயத்தமானபோது, அவர் நமக்குத் தரப்போகிற நித்திய வீட்டைப்பற்றி அதிக ஆர்வம் காட்டினார். அவர் தம் சீஷரிடம், “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்” என்றும் அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களுக்கு கொடுக்கும்படி “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு (யோவா. 14:2). எனவும் கூறினார்.

நாம் அனைவரும் நம்முடைய வாழ்வில் நல்ல வீடொன்றில் இருக்க விரும்புகின்றோம். நம் குடும்பத்தினரோடு உணவருந்தவும், தூங்கவும் ஒருவரோடொருவர் மகிழ்ந்திருக்கவும் அது ஒரு சிறப்பான இடம். நாம் நம்முடைய மறுவாழ்வில் காலெடுத்து வைக்கும் போது, அங்கு தேவன் நமக்குத் தரப்போகிற நிரந்தர குடியிருப்பைக் குறித்து கரிசனை கொள்கின்றார் என்பதை நினைக்கும் போது எத்தனை ஆச்சரியமாயிருக்கிறது. நமக்கு ஜீவனைக் கொடுத்து, அது பரிபூரணப்படச் செய்கின்ற தேவனை ஸ்தோத்திரிப்போம் (யோவா. 10:10).  இப்பொழுது அவருடைய பிரசன்னம் நம்மோடிருக்னிற்து. பின்பு நாம் அவரோடு என்றென்றைக்கும் இருக்குபடி அவர் நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுகின்றார் (14:3).

தேவன் தம்பேரில் நம்பிக்கையாயிருப்பவர்களுக்கு எதை ஆயத்தமாக வைத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்து, பாற்ஸியைப் போன்று பிறரையும் இயேசுவண்டை வழி நடத்தும் பணியை ஒரு சவாலாக எடுத்துக்கொள்வோம்.

மறைந்திருக்கும் தேவனுடைய கரம்

என்னுடைய நண்பன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மிஷனரி குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு, கானாவில் வளர்க்கப்பட்டான். அவனுடைய குடும்பம் மீண்டும் அமெரிக்கா சென்ற போது அங்கு அவன் தன்னுடைய கல்லூரி படிப்பை ஆரம்பித்தான். ஆனால், அதனை அவனால் தொடரமுடியவில்லை. பின்னர் அவன் இராணவத்தில் சேருவதற்கு ஒப்புதல் கொடுத்தான், அது அவனுடைய கல்லூரி படிப்பைத் தொடர பண உதவி செய்ததோடு உலகம் முழுவதும் செல்லும் வாய்ப்பையும் கொடுத்தது. அவன் ஒரு சிறப்பான செயலைச் செய்வதற்கு அவனைப் பயிற்றுவிக்கும்படி இவையெல்லாவற்றின் மூலமாகவும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவன் உலக முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு கிறிஸ்தவ நூலின் எழுத்தாளராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவனுடைய மனைவியின் கதையும் சற்று ஆர்வமானது. அவள் தன்னுடைய கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தன் வலிப்பு வியாதிக்காக வீரியம் மிகுந்த மருந்துகளை சாப்பிட்டதின் விளைவாக வேதியியல் தேர்வில் தோல்வியுற்றாள். பின்னர் தன்னுடைய உடல்நிலைக்கேற்றவாறு அறிவியல் துறையை விட்டு, காது கேளாதவர்களுக்கான அமெரிக்க சைகை மொழியைக் கற்றுக் கொள்ளும்படி சேர்ந்தாள். இந்துறையின் சுமை சற்று குறைவாகயிருக்கும் என கருதினாள். அந்த அநுபவங்களைப் பற்றி சிந்தித்த அவள், “ஒரு பெரிய நோக்கத்திற்காக தேவன் என் வாழ்வை திசை திருப்பினார் என்றாள். இப்பொழுது, அவள் வாழ்வு மாற்றம் தரும் வார்த்தைகளைக் காது கேளாதோருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கி;றாள்.

நீயும் சில வேளைகளில் தேவன் ஏன் என்னை இத்தகைய பாதை வழியே நடத்திக் செல்கின்றார் என யோசித்ததுண்டா? தேவனுடைய வல்லமையுள்ள கரம் நம் வாழ்வில் இருக்கிறது என சங்கீதம் 139:16 சொல்கின்றது. “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது” என காண்கின்றோம். நம் வாழ்வின் சூழ்நிலைகளை தேவன் எவ்வாறு பயன்படுத்துவார் என்பதை நாம் அறியோம். ஆனால், தேவன் நம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிவார். அவர் நம் நடையைத் திருப்புகின்றார், என்பதை அறிந்து அமர்ந்திருப்போம். அவருடைய வல்லமையுள்ள கரங்கள், நாம் காணக் கூடாதபடி மறைவாயிருப்பதால், அவர் செயல்படவில்லையோ என சந்தேகிக்காதே.

தனிமையான கிறிஸ்மஸ்

கானாவின் வட பகுதியிலுள்ள சகோகு என்ற இடத்திலிருக்கும் என்னுடைய தாத்தாவின் வீட்டில் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடியபோது நான் தனிமையையுணர்ந்தேன். அப்போது எனக்கு பதினைந்து வயது. என்னுடைய பெற்றோரும், உடன் பிறந்தோரும் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தனர். முந்திய வருடங்களில் நான் அவர்களோடும், என்னுடைய கிராமத்தின் நண்பர்களோடும் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடிய போது, அது மிக அதிகமாகவும் நினைவு கூறத்தக்கதாகவுமிருக்கும். ஆனால், இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை அமைதியாகவும், தனிமையிலும் இருந்தது. கிறிஸ்மஸ் அன்று காலை நான் எனது தரைப் படுக்கையில் படுத்திருந்தபோது ஒரு பாடல் என் நினைவுக்கு வந்தது. வருடம் முடிந்து விட்டது, கிறிஸ்து பிறப்பு வந்து விட்டது. தேவக் குமாரன் பிறந்து விட்டார், அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும்… என்பதான அப்பாடலை நான் முணுமுணுத்து எனக்குள்ளாகவே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய பாட்டியம்மா என்னிடம், “அது என்ன பாடல்?” எனக் கேட்டார். என்னுடைய பாட்டி, தாத்தாவிற்கு கிறிஸ்து பிறப்பு பற்றியும், கிறிஸ்துவைப் பற்றியும் தெரியவில்லை. எனவே நான் கிறிஸ்துவைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை அவர்களோடு பகிர்ந்து கொண்டேன். அந்தக் கணமே என்னுடைய தனிமை மறைந்து ஒரு பிரகாசத்தை உணர்ந்தேன்.

வயல் வெளிகளில் தனிமையில் தன் ஆடுகளுடன் அவ்வவ்போது சில கொடிய விலங்கினங்களை மட்டும் சந்தித்துக் கொண்டிருந்த மேய்ப்பனான தாவீதும் தனிமையை உணர்ந்தான். அந்த ஒரு நேர மட்டுமல்ல, பிற்கால வாழ்விலும் அவன், “நான் தனித்தவனும், சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்” (சங். 25:16) என்கின்றான். ஆனால், தாவீது தனிமையை உணர்ந்த போதிலும், கைவிடப்பட்டவனாக தன்னைக் கருதவில்லை. அதனால் அவன், “நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன். நான் உமக்குக் காத்திருக்கின்றேன்” (வச. 20-21) எனப் பாடுகின்றான்.

அவ்வப்போது நாமும் தனிமையை எதிர் கொள்கிறோம். இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பை நீ எங்கிருந்து கொண்டாடினாலும், தனிமையிலோ அல்லது கூட்டத்தோடோ, நீ கிறிஸ்து தரும் சந்தோஷத்தோடு கொண்டாடு.

உதவும் கரம்

இடாகோ என்ற இடத்தில் குளிர்காலத்தில், எங்கள் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள பனிசறுக்கு தளத்தில் விளையாடுவதை என்னுடைய குழந்தைகள் அநுபவித்து மகிழ்வர். அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது பனிச்சறுக்கலைக் கற்றுக் கொள்வது அவர்களுக்குச் சவாலாக இருந்தது. அவர்களை மனமிணங்கச் செய்து, அவர்களுடைய கால்களை அந்த கடினமான குளிர் தளத்தில் பதியவைப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், கீழே விழுந்தால் அது எத்தனை வலியைத் தருமென அவர்கள் அறிந்திருந்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் கால் வழுக்கி கீழே விழ ஏதுவாகும் போது நான் அல்லது என்னுடைய கணவர் அவர்களைத் தாங்கி பிடித்து மீண்டும் அவர்கள் தங்கள் கால்களில் உறுதியாக நிற்கும்படியும் அவர்கள் தங்களின் சட்டத்தை நிலையாக பிடித்துக் கொள்ளும்படியும் உதவுவோம்.

நாம் கீழே விழும்போது யாரோ ஒருவரின் உதவும் கரங்கள் அங்குவந்து தாங்கிக் கொள்ளுவதை குறித்து பிரசங்கி புத்தகம் வெளிப்படுத்துகின்றது. பிறரோடு இணைந்து வேலை செய்வது நமக்கு இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் (4:9). ஒருவர் வாழ்வில், உற்சாகத்தைக் கொண்டு வருபவன் அவருடைய நண்பன். நாம் சவால்களைக் சந்திக்கும் போது யாரேனும் நம்மருகிலிருந்து, நம்முடைய செயலுக்கும் மனதிற்கும் உறுதுணையாக இருந்தால் அது நன்மைபயக்கும். இத்தகைய உறவுகள் நமக்கு பெலனையும், ஒரு நோக்கத்தையும் ஆறுதலையும் தரும்.

நம் வாழ்வின் கடினமான பனிபோன்ற சோதனைகளில் நாம் விழுந்து கிடக்கும்போது, அருகில் உதவும்படி யாரேனும் இருப்பார்களா? அப்படியிருந்தால் அது தேவனி;டமிருந்து வரும் உதவி, அல்லது யாருக்காயினும் நண்பனின் உதவி தேவையாயிருந்தால், தேவன் அனுப்பும் நண்பனாக நாம் அவர்களைத் தூக்கி விடுவோமா? நம்முடைய துணையாளராக எப்போதும் நம்மோடிருப்பவர் தேவன் ஒருவரே. ஒருவேளை நம்மைத் தூக்கி நிறுத்த நம்மருகில் யாருமேயில்லையென உணரும்போது, தேவன் நமக்கு உதவும்படி எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் என்பது எத்தனை ஆறுதலைத் தருவதாகவுள்ளது (சங். 46:1). நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நம்மைத் தூக்கி நிலை நிறுத்த, அவருடைய கரம் நம்மை உறுதியாகப் பற்றுகிறது.