வகை  |  odb

மீட்கப்பட்டது

2003 ஆம் ஆண்டு வந்த மோர்மார் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பால் 25 மில்லியன் டாலர் பயிரிழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. ஜனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் 25 மில்லியன் டாலர் பயிரிழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. ஜனங்கள் வெட்டுக்கிளிகளின் மேல் கால்வைக்காமல் ஓர் எட்டு கூட நடக்கக் கூடாதபடி அதன் எண்ணிக்கை மிகவும் பெரியதாயிருந்தது. 1848 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த பச்சை வெட்டுக்கிளிகள் பவுஞ்சுகளாக வந்தபோது, ஒவ்வொரு வெட்டுக்கிளியும் தன் வாழ்நாளில் 38 பவுண்டு தாவரங்களை உண்கின்றன என கணக்கிடப்பட்டது. இவற்றின் படையெடுப்பின் விளைவாக ஒரு விவசாயியின் வாழ்விலும், ஒரு மாநிலம் மற்றும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் பேரழிவு ஏற்பட்டது.

யூதா ஜனங்கள் அனைவரும் கீழ்படியாமற் போனபடியால், இத்தகைய ஒரு பெருங்கூட்டமான பூச்சிகள் யூதா தேசம் முழுவதிலும் இதுவரைக் கண்டிராத அளவு பெரிய நாசத்தை ஏற்படுத்தின என பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி யோவேல் விளக்குகின்றார். அவர் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் குறித்து முன்னறிவித்தார் (வேத வல்லுனர்கள் இதனை ஓர் அந்நிய இராணுவப் படையினருக்குச் சமமானதாகக் குறிப்பிடுகின்றனர்) (யோவேல் 1:2). அந்த வெட்டுக்கிளிகள் தாங்கள் காண்கின்ற யாவற்றையும் நாசமாக்கி, ஜனங்களை பஞ்சத்திற்கும் வறுமைக்கும் உள்ளாக்கின. எனினும் ஜனங்கள் தங்களுடைய பாவ வழியை விட்டுத் திரும்பி தேவனிடம் மன்னிப்பு கேட்கும் போது 'வெட்டுக்கிளிகளும்... பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்" என தேவன் கூறுவதாகத் தெரிவிக்கின்றார்.

யூதாவிடமிருந்து நாமும் ஒரு பாடத்தை கற்றுக் கொள்ளலாம். இந்தப் பூச்சிகளைப் போன்று நம்முடைய தவறுகள் தேவன் நமக்கு வைத்திருக்கின்ற நன்மைகளையும் தேவனுடைய வாசனை வீசும் வாழ்வையும் இழக்கச் செய்கின்றன. நம்முடைய பழைய வாழ்வை விட்டுவிட்டு நாம் தேவனிடம் திரும்பும் போது, தேவன் நம்முடைய வெட்கத்தை மாற்றி அவருக்குள் ஒரு நிறைவான வாழ்வை மீண்டும் தருகின்றார்.

ஆழ்ந்த அன்பு

எட்வின் ஸ்டான்டன் முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லின்கனைத் தனிப்பட்ட முறையிலும், தன் பணியினிமித்தமும் சந்தித்த போது அவரிடம் தரக் குறைவாக நடந்து கொண்டார். அவரைக் குறித்து, "நீண்ட பற்கள் கொண்ட உயிரினம்" எனவும் குறிப்பிட்டார். ஆனால், லின்கன் ஸ்டான்டனின் திறமையைப் பாராட்டியதோடு அவரை மன்னிக்கவும் செய்தார். அதோடல்லாமல் ஓர் உள்நாட்டு போரின் போது, ஸ்டான்டனை முக்கிய கேபினெட் உறுப்பினராக பதவியுர்வளித்தார். பிற்பாடு ஸ்டான்டன், லின்கனை ஒரு நண்பனாக ஏற்றுக் கொண்டு அன்பு செய்தார். போர்ட் அரங்கில் ஜனாதிபதி சுடப்பட்டபோது, அன்றிரவு முழுவதும் லின்கனின் படுக்கையருகிலேயே அமர்ந்திருந்த ஸ்டான்டன், அவர் மரித்த போது கண்ணீரோடு, 'இப்பொழுது அவர் தலைமுறைகளுக்குச் சொந்தமாவார்" எனக் கூறினார்.

ஒப்புரவாதல் என்பது ஓர் அழகிய காரியம். அப்போஸ்தலனாகிய பேதுரு, இயேசுவைப் பின் பற்றுகின்றவர்களுக்கு எழுதும் போது, ''எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்" (1 பேது. 4:8) என்கின்றார். இந்த வார்த்தைகளின் மூலம், பேதுரு இயேசுகிறிஸ்துவை மறுதலித்ததையும் (லூக். 22:54-62) பின்னர் அவர் (நாமும்) சிலுவையின் வழியே இயேசுவின் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டதையும் நினைத்து அதிசயித்தேன்.

இயேசு தன்னுடைய மரனத்தின் மூலம் வெளிப்படுத்தின ஆழந்த அன்பு நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலையளித்து, தேவனோடு ஒப்புரவாகும்படி வழியைத் திறந்து கொடுத்தது (கொலோ. 1:19-20). அவருடைய மன்னிக்கும் சிந்தை நாமும் பிறரை மன்னிக்கும்படி பெலனளிக்கின்றது. ஏனெனில் பிறரை மன்னிப்பது நம்முடைய சொந்த முயற்சியால் முடியாதகாரியம். அவரே நமக்கு மன்னிக்கும் சிந்தையைத் தரும்படி நாம் அவரிடம் கேட்க வேண்டும். நாம் பிறரை நேசிக்கின்றோம், ஏனெனில் நமது இரட்சகர் அனைவரையும் நேசிக்கின்றார். நாம் பிறரை மன்னிக்க முடிகின்றது, ஏனெனில் அவர் நம்மை மன்னிக்கின்றார். பின்னானவைகளைக் கடந்து, முன்னோக்கி அவரோடு நடந்து புதிய, அழகிய கிருபாசனத்தண்டையில் சேர தேவன் நமக்கு பெலனளிக்கின்றார்.

சுவிகாரப் புத்திரன்

சமுதாயத் தொண்டு செய்யும் ஒருவர் வீடற்ற குழந்தைகளுக்கென ஓர் இல்லம் கட்டியபோது, நான் மிகவும் மகிழ்ந்தேன். அத்தோடு நின்றுவிடாமல், அந்த மனிதன் அதையும் விட மேலாக அப்படிப்பட்ட வீடற்ற குழந்தைகளிலொன்றைத் தனக்குச் சொந்தமாக தத்தெடுத்துக் கொண்டபோது மெய்சிலிர்த்துப் போனோன். அநேக அனாதைக் குழந்தைகள் தங்களை ஆதரிக்க ஒரு வளர்ப்புத் தந்தை கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைவர். ஆனால், அந்த வளர்ப்புத் தந்தை தங்களுக்கு உதவுபவர் மட்டுமல்ல, தங்களைச் சொந்தமாக ஏற்றுக் கொள்கிறாரென கேட்கும்போது, அது அவர்களுக்கு எப்படியிருக்கும்?

நீயும் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், அது உனக்குச் கிடைத்த ஈவு என்பதை
நீ அறிந்திருக்கின்றாய். வெறுமனே, தேவன் நம்மை நேசித்ததினால் தம்முடைய ஒரேபேறான குமாரனை, "நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி" (யோவா. 3:16). அனுப்பியிருந்தால், அது நமக்குப் போதுமானது. நாம் தேவனைக் குறைகூறவும் முடியாது. ஆனால், அது தேவனுக்குப் போதுமானதாகயில்லை. “நம்மை மீட்டுக் கொள்ளத்தக்கதாக" தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார். அத்தோடு அது முடிந்து விடவும் இல்லை. ஆனால், “நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி" (கலா. 4:4-5) தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார்.

அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை “தேவனுடைய புத்திரர்" என்றே குறிப்பிடுகின்றார். ஏனெனில், அவருடைய நாட்களில் மகனுக்குத்தான் தந்தையின் சுதந்திரத்தையடையும் உரிமையிருந்தது. எந்த மனுஷனும், மனுஷியும் இயேசுவின் பேரில் விசுவாசமாயிருந்தால் அவர்களெல்லாரும் தேவனுடைய பிள்ளைகளென்கிற சுதந்தரத்தைப் பெறுகின்றோம் என பவுல் கூறுகின்றார் (வச. 7).

தேவன், வெறுமனே உன்னை மீட்கிறவர் மட்டுமல்ல, அவர் உன்னை நேசிக்கின்றார், உன்னைத் தன்னுடைய சொந்த குடும்பத்தில் சேர்த்துக் கொள்கின்றார். தன்னுடைய நாமத்தை உன்மேல் எழுதுகின்றார் (வெளி. 3:12). உன்னைத் தன்னுடைய பிள்ளையெனப் பெருமையாகக் கூறுகின்றார். இதைவிட மேலாக அன்புகூர நமக்கு யாரிருக்கின்றார்கள்? தேவனை விட முக்கியமானவராக நமக்கு யாரிருக்கக் கூடும்? நீ தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதோடு, அவருடைய பிள்ளையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டாய உன் தந்தை உன்னை நேசிக்கின்றார்.

பாசிகளும், நுண்பாசிகளும்

“நுண்பாசி என்பது என்ன?" என நான் என் சிநேகிதியைக் கேட்டேன். நான் அவளுடைய தோள்மீது சாய்ந்து, அவள் நுண்ணோக்கி மூலம் எடுத்துக் கொண்ட படங்களை, அவளுடைய அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தேன். “ஓ, இது பாசியைப் போன்றது. இதனைப் பார்ப்பது சற்றுக் கடினமானது. சிலவேளைகளில் லென்சுகளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டுக் கொண்டு தான் பார்க்க முடியும் அல்லது அவை இறந்த பின் தான் பார்கக் முடியும்" என விளக்கினாள். அவள், ஒன்றன் பின் ஒன்றாக படங்களைக் காட்டி விளக்கிய போது, நான் வியந்துபோனேன். நுண்ணோக்கிகளின் மூலம் பார்க்கக் கூடிய அத்தனை சிறிய உயிரினங்களில் தேவன் வைத்துள்ள நுணுக்கமான அமைப்புகளைக் குறித்து நினைத்துக் கொண்டேயிருந்தேன்.

தேவனுடைய படைப்புகளுக்கும் அவருடைய செயல்களுக்கும் முடிவேயில்லை. இதனைக் குறித்து யோபுவின் நண்பனான எலிகூகூட, யோபு தன் இழப்புகளின் மத்தியில் போராடிக் கொண்டிருந்தபோது அவனுக்கு சுட்டிக் காட்டுகின்றான். எலிகூ தன் நண்பனிடம்," யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்து நின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும். தேவன் அவைகளைத் திட்டம் பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ? மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைளையும்... அறிவீரோ?" (யோபு 37:14-16). தேவனுடைய படைப்புகளையும், அவற்றின் சிக்கலான நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள மனித அறிவு போதாது.

நாம் கண்களால் காணமுடியாத அவருடைய படைப்புகளும், தேவனுடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய மகிமை நம்மைச் சூழ்ந்துள்ளது. நாம் எவற்றின் வழியே கடந்து சென்றாலும், அவைகளைக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியாவிட்டாலும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவரை நாம் இன்று போற்றுவோம், ஏனெனில், “அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறார்" (யோபு. 5:9).

வானங்களைக் கிழித்துக் கொண்டு

சமீபத்தில் நான் என்னுடைய சிநேதிதியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவள் தன்னுடைய விசுவாசத்தை விட்டு விட்டதாகவும், நாம் அடிக்கடி சொல்லக் கேட்டுள்ள ஒரு குற்றச் சாட்டைக் காரணமாகக் கூறினாள். ஒன்றுமே செய்யாமலிருக்கும் ஒரு தேவனை நான் எப்படி நம்புவது? எனக் கேட்டாள். இந்த துணிச்சலான கேள்வி நம்மில் அநேகருக்கு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தோன்றலாம். நாம் தீவிரவாத செயல்களைக் குறித்துச் செய்தித்தாளில் வாசிக்கும் போதும், நம்முடைய உள்ளத்தை உடைக்கக் கூடிய காரியங்களின் வழியே கடந்து செல்லும் போதும் இத்தகைய கேள்வி நமக்கும் தோன்றலாம். என்னுடைய சிநேகிதியின் சார்பில் தேவன் செயல்பட வேண்டிய தேவையுள்ளது என்பதை அவளுடைய வேதனை வெளிப்படுத்தியது. நாம் அனைவருமே உணர்ந்திருக்கும் ஓர் ஏக்கம் அவளிடம் இருந்தது.

இஸ்ரவேலர் தங்களுடைய நிலப்பரப்பை நன்கு அறிவர். பாபிலோனிய பேரரசு இஸ்ரவேலரின் தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இஸ்ரவேலரை இரும்புக் கரம் கொண்டு நசுக்கி எருசலேமை தீக்கிரையாக்கி புகைந்து கொண்டிருக்கும் குப்பை மேடாக்கினர். நம்மை விடுவிக்கிறவராக இருந்த தேவன் எங்கே? (ஏசா. 63:11-15) என்ற கேள்வியோடிருந்த ஜனங்களின் இருண்ட உள்ளத்தில் ஏசாயா தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தைகளைப் போடுகின்றார். அதே இடத்திலிருந்தே ஏசாயா தைரியமாக ஒரு ஜெபத்தை ஏறெடுக்கின்றார். “தேவரீர் வானங்களைச் கிழித்திறங்கி... வாரும்" (64:1) என்கின்றார். ஏசாயாவின் வேதனையும், கவலையும் அவரை தேவனைவிட்டு விலகிப் போகச் செய்யவில்லை. ஆனால், அவர் இன்னும் அதிகமாக தேவனைத் தேடவும் அவரைக் கிட்டிச் சேரவும் செய்தது.

நம்முடைய சந்தேகங்களும் துன்பங்களும் நமக்கு ஒரு வித்தியாசமான ஈவைத் தருகின்றன. நாம் தேவனை விட்டு எவ்வளவு தூரமாய் காணாமல் போய் விட்டோமென்பதையும், தேவன் நம்மிடம் வரும்படியான தேவையில் இருக்கிறோமென்பதையும் அவை நமக்குக் காட்டுகின்றன. இப்பொழுது நாம் நடக்கக் கூடாததும், மறக்க முடியாததுமான கதைகளைக் காண்கின்றோம். இயேசுவின் மூலம் தேவன் வானங்களைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தார். கிறிஸ்து தன்னுடைய சொந்த சரீரத்தைக் கிழிக்கப்பட ஒப்புக் கொடுத்தார். எனவே அவருடைய அன்பினாலே அவர் நம்மை மேற்கொள்ள முடிந்தது. இயேசுவின் மூலம் தேவன் நம்மருகில் இருக்கின்றார்.

மனநிலையை சரிசெய்பவர்

நான் வாரந்தோறும் செல்கின்றபடி, இரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, வாடிக்கையாளர்கள் இரயிலில் ஏறுவதற்கு வரிசையில் நின்றது போல, எதிர்மறையான எண்ணங்கள் என்னுடைய மனதில் நிரம்பி நின்றன. கடன் மீதான கவலை, என்னிடம் பிறர் கூறிய அன்பற்ற வார்த்தைகள், எங்கள் குடும்ப நபர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதத்தில் உதவ முடியாத நிலை என பல எண்ணங்கள் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது, இரயிலும் வந்தது. நான் பயங்கரமான மனநிலையில் இருந்தேன்.

இரயிலில் ஏறி உட்கார்ந்ததும் மற்றொரு சிந்தனை என் உள்ளத்தில் வந்தது. என்னுடைய புலம்பலையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி தேவனிடம் கொடுக்கும்படி தோன்றியது. என்னுடைய குற்றச்சாட்டுகளையெல்லாம் என்னுடைய குறிப்பேட்டில் கொட்டியபின்னர், நான் என்னுடைய தொலைபேசியை எடுத்து நான் சேமித்து வைத்துள்ள துதிபாடல்களைக் கவனித்தேன். அவற்றை நான் முடிக்கும்முன்பே என்னுடைய மனநிலை முற்றிலும் மாறியது.

சங்கீதம் 94 ஐ எழுதியவர் நியமித்துள்ள வகையின்படியே நானும் ஏறக்குறைய பின்பற்றி வருகின்றேன். சங்கீதக்காரனும் முதலில் தன்னுடைய குறைகளைக் கொட்டித் தீர்க்கின்றார். “பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்... துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்? (சங். 94:2,16). அவன் தேவனிடம், விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் இழைக்கப்படும் அநீதத்தைப் பற்றி பேசும்போது எதையும் மறைவாக வைக்கவில்லை. தன்னுடைய புலம்பலையெல்லாம் தேவனிடம் கொடுத்துவிட்ட பின்பு, அந்த சங்கீதம் தேவனைப் போற்றும்படி மாறுகிறது. “கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்" (வச. 22) என தேவனைப் போற்றுகின்றார்.

நாமும் நம்முடைய புலம்பலையெல்லாம் தன்னிடம் கொண்டுவரும்படி தேவன் அழைக்கின்றார். அவரே நம்முடைய பயம், கவலை, உதவியற்ற நிலை யாவையும் துதியாக மாற்றுபவர்.

தேசங்களின் மத்தியில் நீதிமான்கள்

இஸ்ரவேல் தேசத்தில் யாட் வாஷேம் என்ற இடத்திலுள்ள, ஓர் இனப்படுகொலை அழிவைக் குறித்த பழங்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட ஓர் அரங்கிற்குச் சென்றிருந்தோம். என்னுடைய கணவனும் நானும் தேசங்களின் மத்தியில் நீதிமான்களாகத் திகழ்ந்த மக்களை கவுரவிக்கும் அந்த இடத்தைச் சுற்றி வந்தோம். யூத மக்களின் பேரழிவின் போது, தங்கள் உயிரையும் பணயம் வைத்துச் சில யூதர்களைக் காப்பாற்றியவர்களின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டபோது, நெதர்லாந்திலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரைச் சந்தித்தோம். அங்கு வந்திருந்த ஒரு பெண்மணி தன்னுயை முன்னோர்களின் பெயர்களை அங்கிருந்த ஒரு பெயர் பட்டியலில் தேடிக் கொண்டிருந்தாள். அவர்களுடைய குடும்பத்தைப் பற்றிய கதையை ஆர்வமிகுதியால் கேட்டோம்.

தடையை மீறி செயல்பட்ட மக்களின் வரிசையிலிருந்த அந்தப் பெண்ணின் தாத்தாவும், பாட்டியும் போதகர் பயட்டரும், ஏட்ரியானா மியூல்லரும் 1943-1945 ஆம் ஆண்டுகளில் இரண்டு வயது நிரம்பிய ஒரு யூத பையனை, எட்டு குழந்தைகளடங்கிய தங்கள் குடும்பமெனக் கூறித் கடத்தினர்.

அந்தக் கதையைக் கேட்டு அசைக்கப்பட்டவர்களாக நாங்கள், “அந்த சிறுபையன் பிழைத்தானா?" என வினவினோம். அந்தக் குழுவிலிருந்து ஒரு முதியவர் முன்னால் வந்து, “நான் தான் அந்தப் பையன்!" என அறிவித்தார்.

யூத ஜனங்களுக்குச் சாதகமாக அநேகர் தைரியமாகச் செயல்பட்டது எனக்கு எஸ்தர் ராஜாத்தியை நினைவுபடுத்தியது. ஏறத்தாழ கி.மு. 475 ஆம் அண்டில், சகல யூதரையும் கொன்று அழித்துப் போடும்படி அகாஸ்வேரு ராஜாவால் எழுதப்பட்ட கட்டளையை எஸ்தர் ராஜாத்தி அறிந்திருந்தும், தான் தன்னுடைய பூர்வீகத்தை வெளிப்படுத்தாமையால் தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணியிருக்கலாம். ஆனாலும் அவள் தன் உயிரையும் பணயம் வைத்து செயல்படும்படி தூண்டப்பட்டாள். அவளுடைய உறவினன் அவளிடம், “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்" என்று சொல்லச் சொன்னான் (எஸ். 4:14). நாமும் ஒருவேளை இத்தகைய முடிவுகளை எடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்படாவிடினும், ஓர் அநீத செயலுக்கு எதிராகப் பேசும்படி சந்தர்ப்பம் நமக்களிக்கப்படலாம், அல்லது அதைக் கண்டும் அமைதியாகப் போய்விடலாம். ஆனால், பிரச்சனையிலிருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாயா? அல்லது திரும்பிப் போய் விடுகின்றாயா? செயல்படும்படி தேவன் நமக்கு தைரியத்தைத் தருவாராக.

பனி வெடிப்பிலிருந்து விடுதலை

ஒரு பனிப்பொழிவு நாளில் என்னுடைய குழந்தைகள் பனிச்சறுக்கி விளையாட அனுமதிக்கும்படி என்னை வற்புறுத்தினர். அந்நாளின் வெப்பநிலை பாரன்ஹீட் வெப்பநிலை மானியின் பூஜியத்தினருகிலேயே அசைந்து கொண்டிருந்தது. பனித்துகள்கள் எங்கள் ஜன்னல்களை மோதிக் கொண்டிருந்தன. நான் மீண்டும் சிந்தனை செய்து பார்த்து சரியெனக் கூறி, அவர்களை நன்கு கம்பளி உடைகளால் பொதிந்து கொண்டு, சேர்ந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டேன்.

அன்பின் மிகுதியால் நான் அந்த கட்டளையைக் கொடுத்தேன். எனவே என்னுடைய குழந்தைகள் பனிஉறைதலில் விறைத்துப்போகாமல் விளையாட முடியும். சங்கீதம் 119ஐ எழுதியவரும், தேவன் கொண்டுள்ள அத்தகைய நல்லெண்ணத்தை உணர்ந்தவராக இரு அடுத்தடுத்த வசனங்களை எதிரெதிர் அர்த்தமுடையவைகளாக எழுதியுள்ளார். “நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக் கொள்ளுவேன். நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால் விசாலத்திலே நடப்பேன்" (வச. 44-45). இதில் எப்படி சங்கீதக்காரன், சுதந்தரமான வாழ்வையும் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கின்ற ஆவிக்குரிய வாழ்வையும் இணைத்துக் குறிப்பிடுகின்றார்?

தேவனுடைய ஞானமுள்ள கட்டளைகளை நாம் கடைபிடித்து நடக்கும்போது, நாம் இவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கலாமே என்ற குற்றஉணர்வோடு வாழ்கின்ற பின்விளைவைத் தவிர்க்க முடிகிறது. நாமும் தவறிழைத்த கனத்தோடும் வேதனையோடுமல்ல, நாம் சுதந்திரமாக நம்முடைய வாழ்வை அனுபவிக்க முடிகிறது. தேவன் நம்மை, இதைச் செய், செய்யாதேயெனக் கட்டுப்படுத்துபவரல்ல. ஆனால், அவருடைய வழிகாட்டல் அவர் நம்மை நேசிக்கிறாரெனக் காட்டுகின்றது.

என்னுடைய குழந்தைகள் பனியில் சறுக்கிக் கொண்டு வேகமாக ஒரு குன்றின் உச்சியிலிருந்து வருவதைக் கண்டேன். நான் அவர்களின் சிரிப்பொலியைக் கேட்டு மகிழ்ந்தேன். அவர்களின் மலர்ந்த சிவந்த முகங்களைக் கண்டேன். நான் அவர்களுக்குக் கொடுத்த எல்லைக்குள் சுதந்திரமாக விளையாடினர். இந்த நிகழ்வு, நாம் தேவனோடு கொண்டுள்ள உறவிற்கும் பொருத்தமானது. அது நம்மையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும். நான் அதில் பிரியமாயிருக்கிறேன்" (வச. 35) எனச் சொல்லும்படி செய்கின்றது.

விரிந்த படப்பிடிப்பு

அமெரிக்கா தேசத்தில், முதல் ஆப்பிரிக்கா அமெரிக்கா ஜனாதிபதியின் துவக்க விழாவின் போது, டெலிவிஷன் படப்பிடிப்பு கேமராக்கள், அந்த சரித்திர நிகழ்வினைக் காண குழுமியிருந்த இரண்டு மில்லியன் மக்களின் அழகிய காட்சியைக் காட்டியது. சி.பி.எஸ் செய்தி தொடர்பாளர் பாப் ஷீப்பர் இதனைக் குறித்து, “இந்த நிகழ்சியின் உச்சக்கட்டம் அந்த பரந்த படப்பிடிப்பிலுள்ளது? என்றார். வேறெதுவும், லிங்கன் நினைவிடத்திலிருந்து கேப்பிடல் வரை பரம்பியிருந்த இத்தனை பெரிய கூட்டத்தை இவ்வளவு துல்லியமாக எடுத்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் இணைக்கப்பட்ட, இதனையும் விட பெரிதான ஒரு கூட்டத்தினைக் குறித்த ஒரு காட்சியை வேதாகமம் தருகின்றது. “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும் பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1 பேது. 2:9).

இது பாக்கியம் பெற்ற ஒரு சிலரின் காட்சி மட்டுமல்ல. சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களிலும், ஜாதிகளிலுமிருந்து கிரயம் செலுத்தப்பட்டு, மீட்டுக்கொள்ளப்பட்ட அநேகரின் காட்சி (வெளி. 5:9). இன்று நாம் இவ்வுலகம் முழுவதிலும் பரந்து காணப்படுகின்றோம். இங்கு நாம் தனித்தவரும், இயேசுவோடுள்ள தொடர்புக்காய் பாடநுபவிப்பவர்களுமாயிருக்கிறோம். தேவனுடைய வார்த்தையாகிய லென்ஸ் வழியே பார்க்கும் போது, விசுவாசத்தில் நம்முடைய சகோதர, சகோதரிகளும் இணைந்த ஒரு பெரிய கூட்டமாகப் பரந்து நின்று, நம்மை மீட்டுக் கொண்டு தம்முடைய சொந்த ஜனமாக்கிக் கொண்டவரை மகிமைப்படுத்தும்படியாகக் காணப்படுகின்றோம்.

நம்மை இருளிலிருந்து மீட்டு வெளியே ஒளியினண்டை கொண்டு வந்தவரை நாம் அனைவரும் இணைந்து போற்றுவோமாக.