அவளுடைய பெயரும் நீண்டது அவளுடைய வாழ்நாட்களும் நீண்டவை. மேட்லின் ஹரியட் வோர்ஜாக்ஸன் வில்லியம்ஸ் 101 ஆண்டுகள் வரை வாழ்ந்தாள். அவள் இரண்டு கணவன்களோடு வாழ்ந்தாள். இருவருமே போதகர்கள். மேட்லின் என்னுடைய பாட்டி. நாங்கள் அவர்களை மம்மா என்றே அழைப்போம். என் உடன் பிறந்தோரும், நானும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். அவர்களுடைய இரண்டாவது கணவன் அவரை விரட்டிவிடும்வரை நாங்கள் அவர்களுடைய வீட்டில் தான் வளர்ந்தோம். அதற்குப் பின்னரும் எங்கள் அருகில் சுமார் ஐம்பது மைல்களுக்கப்பால்தான் வாழ்ந்து வந்தார்கள். எங்களுடைய பாட்டி பாமாலைகளை நன்கு பாடுபவர், வேத வசனங்களைச் சொல்லுபவர், பியானோ வாசிப்பவர், தேவனுக்கு பயந்து நடக்கும் ஒரு பெண். நானும், என்

உடன்பிறந்தோரும் அவருடைய விசுவாசத்தால் கவரப்பட்டவர்கள்.

2 தீமோத்தேயு 1:3-7ல் காண்கின்ற படி தீமோத்தேயுவின் பாட்டியாகிய லோவிசாளும், அவனுடைய தாயாகிய ஐனிக்கேயாளும் தீமோத்தேயுவின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்களுடைய வாழ்வும் போதனைகளும், வேதாகமத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தன (வச. 5, 2 தீமோ. 3:14-16). அவர்களுடைய விசுவாசம் தீமோத்தேயுவின் இருதயத்திலும் மலர்ந்தது. வேதாகமத்தின் அடிப்படையில் அவர் வளர்க்கப்பட்டார். அதுவே அவன் தேவனோடு உள்ள உறவில் வளர அடித்தளமாக அமைந்தது. அது அவனை தேவனுக்கு ஊழியம் செய்யும்படி உருவாக்கியது (1:6-7).

இன்றைக்கும், தீமோத்தேயுவின் காலத்திலும் தேவன் உண்மையுள்ள ஆண்களையும், பெண்களையும் எதிர்கால சந்ததியினரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த பயன்படுத்துகின்றார். நம்முடைய ஜெபமும், வார்த்தைகளும், செயலும், சேவையும் நாம் வாழும்போதும் அதற்குப் பின்னரும் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்படும். அதனால் தான், நானும் என் உடன்பிறப்புகளும் எங்களுடைய மம்மாவினால் கற்றுக்கொடுக்கப்பட்ட செயல்களை நடப்பித்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய  ஜெபமெல்லாம், என்னுடைய மம்மாவின் பாரம்பரியம் எங்களோடு நின்று விடக்கூடாது என்பதே.