கிம், 2013ல் மார்பகப் புற்றுநோயோடு போராடத் தொடங்கினாள். அவளுடைய சிகிச்சை முடிந்து நான்கு நாட்கள் கழித்து மருத்துவர்கள், நுரையீரலிலும் வியாதியிருப்பதைக் கண்டறிந்தனர். இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளே அவளால் வாழமுடியும் எனவும் தெரிவித்தனர். முதல் ஆண்டு முழுவதும் அவள் வேதனைப்பட்டாள். தன்னுடைய உணர்வுகளை தேவனுக்குத் தெரியப்படுத்தி, ஜெபத்தில் அழுதாள். 2015ல் நான் கிம்மைச் சந்தித்தபோது அவள் தன் வாழ்வை தேவனுடைய கரத்தில் விட்டிருந்தாள். அவளிடமிருந்து மகிழ்ச்சியும், சமாதானமும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. கடினமான நாட்களை அவள் கடந்தபோதிலும், தேவன் அவளுடைய இருதயத்தை உடையச் செய்யும் வேதனைகளை அழகிய, நம்பிக்கையோடு கூடிய துதிகளைக் கொண்ட சாட்சியாக மாற்றியிருந்தார். அவள் மற்றவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுப்பவளாக மாறியிருந்தாள்.

நாம் பயங்கரமான சூழலிலிருந்தாலும் தேவன் நம்முடைய புலம்பலை ஆனந்த நடனமாக மாற்றக் கூடியவர். அவருடைய குணமாக்கல், நாம் எதிர்பார்க்கின்ற அல்லது நாம் நம்புகின்றபடி இல்லையெனினும் தேவனுடைய வழிகளின் மீது நாம் உறுதியாயிருக்கலாம் (சங். 30:1-3). நம்முடைய பாதையில் எவ்வளவு கண்ணீர் சிந்தப்பட்டிருந்தாலும் நாம் அவரைப் போற்றுவதற்கு எண்ணிலடங்காத நன்மைகளைப் பெற்றுள்ளோம் (வச. 4). அவர் நம்முடைய உறுதியான நம்பிக்கையைக் காத்துக் கொண்டபடியால் அவரில் மகிழ்ந்திருப்போம் (வச. 5-7). அவருடைய இரக்கத்திற்காக கதறுவோம் (வச. 8-10). என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக எங்களுடைய அழுகையை நீக்கி மகிழ்ச்சியினால் நிறையப் பண்ணினீர். நான் எத்தகைய சூழலிலிருந்தாலும் தேவனாகிய கர்த்தரே என் அழுகையை களிப்பாக மாற்ற வல்லவர் (வச. 11-12).

நம்முடைய இரக்கத்தின் தேவன் நம்முடைய துயரத்தில் ஆறுதல் தந்து, நம்மைச் சமாதானத்தால் மூடி, நம்மை இரக்கத்தால் நிறைத்து மற்றவர்களுக்கு இரக்கத்தைக் கொடுக்கும்படி நம்மை மாற்றுவார். நம்மீது அன்புள்ள நம்முடைய உண்மை தேவன் நம்முடைய புலம்பலை ஆனந்த களிப்பாகவும், உள்ளம் நிறைந்த நம்பிக்கையையும், துதியையும் கொண்ட மகிழ்ச்சியோடு கூடிய நடனமாகவும் மாற்றுகின்றவர்.