வகை  |  odb

பிறருக்காக மரித்தல்

எனக்கு பறவைகள் மேல் அதிகப் பிரியம். ஆகவே எனது மகள் ஆலிஸிற்காக கூட்டில் அடைக்கப்பட்ட 6 பறவைகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்றேன். அந்தப் பறவைகளுக்கான தேவைகளை ஆலிஸ் அனுதினமும் கவனித்து வந்தாள். அதில் ஒரு பறவை நோய்வாய்ப்பட்டு மரித்து விட்டது. ஒருவேளை, பறவைகளை கூட்டிற்குள் அடைத்து வைக்காமலிருந்தால், அப்பறவைகள் நன்றாக வளரலாமோ என்று எண்ணினோம். ஆகவே மற்ற 5 பறவைகளையும் கூட்டிலிருந்து திறந்து விட்டோம். அவைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியே பறந்து சென்றன.

“அப்பா, ஒரு பறவையின் மரணம் மற்றப்பறவைகளை விடுதலை செய்ய வைத்தது என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா?” என்று ஆலிஸ் அவளது தகப்பனாரிடம் குறிப்பிட்டுக் கூறினாள்.

நமக்காக இயேசு செய்தது இதுதானே? ஒரு மனிதனின் (ஆதாம்) பாவம் உலகத்திற்கு ஆக்கினையைக் கொண்டுவந்ததுபோல, ஒரு மனிதனின் (இயேசு) நீதியினால் அவரை விசுவாசிப்பவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்கிறது (ரோம. 5:12–19). “நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவா. 10:11) என்று இயேசு கூறினார். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்”
(1 யோவா. 3:16) என்று அதை செயல்படத்தக்க முறையில் யோவான் விளக்குகிறார். இது உண்மையில் சரீரப்பிரகாரமான மரணத்தைக் குறிப்பிடவில்லை. இயேசுவின் தியாகமான அன்பில் நமது வாழ்க்கையை இணைக்கும்பொழுது, “நாம் நமது ஜீவனைக் கொடுக்கிறோம்” என்று அர்த்தமாகும். உதாரணமாக நாம் நமது உலகப்பிரகாரமான பொருட்களை தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக அவற்றை விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் (வச. 17), அல்லது நமது உதவியோ அல்லது ஆறுதலோ தேவையான ஒருவருடன் நமது நேரத்தை செலவழிக்க முன்வர வேண்டும்.

இன்றையதினம் யாருக்காக நீங்கள் தியாகம் பண்ணப்போகிறீர்கள்?

எல்லோருக்கும் நல்வரவு!

திருச்சபையின் வாலிபருக்கான திரைப்படம் காண்பிப்பதற்காக அநேக நாட்களாக ஜெபத்துடன் காத்திருந்தோம். காண்பிப்பதற்கான இரவும் வந்தது. கிராமத்தில் எல்லா பக்கங்களிலும் அந்த நாளுக்கான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. சூட்டடுப்பில் பிஸ்ஸாக்கள் (ரொட்டி போன்ற ஒருவகை உணவு) சூடாகிக் கொண்டிருந்தன. நியூயார்க்கில் பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஓர் இளைஞர் குழுவினர் ஒரு இளம் போதகர் மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்ட விதத்தை விளக்கும் அந்தத் திரைப்படம், மேலும் அநேக வாலிபப்பிள்ளைகள் திருச்சபையின் வாலிபக்குழுவில் சேர்வதற்கு காரணமாக இருக்குமென்று, அந்தத் திருச்சபையின் வாலிபர்களின் போதகர் ஸ்டீவ் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால், அந்த மாலைப்பொழுதில் மிக முக்கியமான கால்பந்தாட்டப் போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படப்போவதை அவர் அறியவில்லை. ஆகவே அவர் எதிர்பார்த்தை விட குறைவாகவே வாலிபர்கள் அன்று வந்தார்கள். மனதிற்குள்ளாக பெருமூச்சுவிட்டு, அறையிலிருந்த விளக்குகளை ஒளி மங்கச்செய்து ஸ்டீவ் திரைப்படத்தைப்போட ஆயத்தமானார். அப்பொழுது திடீரென தோல்உடைகளை அணிந்த மோட்டார் பைக் குழுவைச் சேர்ந்த 5 வாலிபர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள். ஸ்டீவின் முகம் பயத்தினால் வெளிறியது.

டீ டாக் (T Dog) என்று அழைக்கப்பட்ட அந்த குழுவின் தலைவன், ஸ்டீவைப் பார்த்து அவன் தலையை துலுக்கி, “இந்தத் திரைப்படம் அனைவருக்கும் இலவசம்தானே?” என்று கூறினான். “திருச்சபையின் வாலிபர் குழுவிற்கு மட்டும்தான்” என்று ஸ்டீவ் கூறப்போன சமயத்தில் டீ டாக் (T Dog) என்ற அந்தத் தலைவன் கீழே குனிந்து இயேசு என்ன செய்வார்? என்ற எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்த WWJD (What would Jesus Do) ஒரு கைப்பட்டையை எடுத்து, “இது உங்களுடையது தானே நண்பா?” என்று கேட்டான். மிகவும் சங்கடமான உணர்வுடன், ஆமாம் என்று ஸ்டீவ் கூறினார். பின் அங்கு வந்த புதிய விருந்தாளிகள் இருக்கையில் அமரும் வரை காத்திருந்தார்.

ஸ்டீவின் நிலையில் நீங்கள் எப்பொழுதாவது இருந்ததுண்டா? இயேசுவைப்பற்றிய நற்செய்தியை பிறருக்கு அறிவிக்க நீங்கள் ஆவலாக இருக்கலாம். ஆனால் உங்கள் உள்மனதில் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியவர்கள் “இவர்கள்தான்” என்ற பட்டியலை வைத்திருக்கலாம். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபொழுது, அவர் பழகின மக்களைப்பற்றி யூத மதத்தலைவர்கள் அவரைக் குற்றப்படுத்தினார்கள். ஆனால் பிறரால் வேண்டாம் என்று தள்ளப்பட்ட மக்களை இயேசு அன்புடன் ஏற்றுக்கொண்டார். ஏனெனில் அவர்களுக்கு அவர் அதிகமாக தேவைப்படுகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார் (லூக். 5:31–32).

எச்சரிப்பு!

நுகர்வோர் பயன்படுத்தும் உற்பத்திப் பொருட்களில் கீழ்க்கண்ட எச்சரிப்புகள் காணப்படுகின்றன:

“மடக்குமுன் குழந்தையை தூக்கிவிடுங்கள்.” (குழந்தைகளின் தள்ளுவண்டி)

“ஆக்ஸிஜன் கொடுக்காது.” (தூசிக்காக நாசியில் அணியும் முகமூடி)

“வாகனம் ஓட்டும்பொழுது உங்களது கைபேசியை ஒருக்காலும் உபயோகப்படுத்தாதீர்கள்.” (கையினால் பயன்படுத்தத் தேவையற்றதும் வாகனம் ஓட்டிக்கொண்டு பேசக்கூடிய Drive ‘n’ Talk செல்போன்)

“பயன்படுத்தும்பொழுது இப்பொருள் நகரும்.” (ஸ்கூட்டர்)

“ஒரு முட்டாளிடமிருந்து முட்டாள்தனத்தை எதிர்பாருங்கள்” என்ற முதுமொழி நாபால் அணிந்திருந்தால், அது அவனைக்குறித்த சரியான எச்சரிப்பைக் கொடுக்கும் குறிப்புச் சீட்டாக இருந்திருக்கும் (1 சாமுவேல் 25ஐப் பார்க்க). அவன் தாவீதிடம் பேசினபொழுது காரணமற்ற கோபத்துடன் பேசினான். சவுலிடமிருந்து தாவீது தப்பி ஓடினபொழுது, நாபால் என்ற ஐசுவரியவானின் ஆட்டு மந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தான். நாபால் அவனது ஆடுகளுக்கு மயிர் கத்தரித்து விருந்து வைக்கிறான், என்று தாவீது கேள்விப்பட்ட பொழுது, அவனது ஆட்களில் 10 பேரை நாபாலிடம் அனுப்பி அவனும் அவனுடைய ஆட்களும், நாபாலினுடைய ஆட்டுமந்தைகளை வனாந்திரத்தில் பாதுகாத்து கொண்டதிற்குப் பதிலாக, அவனுக்கும் அவனது ஆட்களுக்கும் உணவு தந்து உதவுமாறு மரியாதையுடன் கேட்டு அனுப்பினான் (வச. 4-8).

தாவீதின் விண்ணப்பத்திற்கு, நாபால் மிகவும் கோபத்துடன் மறுமொழி கொடுத்தான். “தாவீது என்பவன் யார்?... நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்கு கொடுப்பேனோ?” (வச. 10, 11) என்றான். அன்றைய நாட்களில் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும்பொழுது, மற்றவர்களை விருந்திற்கு அழைக்க வேண்டும் என்ற பழக்கத்தின்படி அவன் தாவீதை அழைத்து உபசரிக்கவில்லை. மேலும் தாவீதை மரியாதை இல்லாமல் பேசி, இழிவு படுத்தினான். முக்கியமாக தாவீது அவனது ஆட்டு மந்தைகளைக் காத்துக்கொண்ட பணிக்கான கூலியைக் கூட நாபால் அவனுக்குத் தரவில்லை.

உண்மையாகக் கூறப்போனால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் சிறிய அளவில் நாபாலின் குணம் இருக்கிறது. சில நேரங்களில் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறோம். இதற்கான ஒரே மருந்து, நாம் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிடுவதே ஆகும். அவர் நம்மை மன்னிக்க முன்வந்து, நமக்கு ஞானம் தந்து போதித்து வழிநடத்துவார்.

மாறுபடும் இருதயங்கள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்த இறுதி நாட்களில் ஐக்கிய படைக்கு ஜாஸ்வா சேம்பர்லின் தலைவனாக இருந்து படையை வழிநடத்தினார். அவரது படை வீரர்கள் சாலையின் இருபக்கமும் நின்றார்கள், ஆகவே கூட்டமைப்புப் படை சரணடைந்தபொழுது, சாலையின் இருபக்கமும் நின்ற அவனது படைவீரர்களுக்கு நடுவாக எதிராளியின் படையினர் நடந்து செல்ல வேண்டியதிருந்தது. ஒரு தவறான வார்த்தையோ, பகைமை உணர்ச்சியைத் தூண்டும் ஒரு செயலோ, அதிக ஆவலுடன் காத்திருந்த சமாதானத்தை படுகொலை சம்பவமாக மாற்றிவிடலாம். உணர்வுகள் தொடப்படக்கூடிய வண்ணம் சேம்பர்லின் ஒரு புத்திசாலித்தனமான கட்டளையைக் கொடுத்தார். அவர்களது எதிராளிகளுக்கு மரியாதை செலுத்தும் வண்ணமாக, அவனது படை வீரர்களை அவர்களுக்கு சல்யூட் பண்ணும்படி கூறினான். பழிவாங்குதலுக்கோ, தீமை விளைவிக்கக்கூடிய பேச்சுக்கோ அங்கு இடமில்லை. அவனுடைய வீரர்களை சல்யூட் பண்ணும் வண்ணமாக துப்பாக்கிகளை உயர்த்தி, குண்டுகளை முழக்கி, வாள்களை உயர்த்தி எதிராளிகளுக்கு மரியாதை செலுத்தி நின்றார்கள்.

லூக்கா 6ம் அதிகாரத்தில் இயேசு மன்னிப்பைப் பற்றி பேசினபொழுது, கிருபையைப் பெற்ற மக்களுக்கும், கிருபை இல்லாத மக்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்தார். அவரது மன்னிப்பை அறிந்தவர்கள் மற்றவர்களைப்போல அல்லாமல் முற்றிலும் மாறுபட்டு இருப்பார்கள். பிறரால் செய்ய இயலாது என்று எண்ணும் காரியங்களை நாம் செய்ய வேண்டும். நமது சத்துருக்களை மன்னித்து அவர்களை சிநேகிக்க வேண்டும். “உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் (லூக். 6:36).

இந்தக்கோட்பாடை நாம் பின்பற்றினால் நாம் பணி செய்யும் இடங்களில், நமது குடும்பங்களில் ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள். பகைவர்களுக்கு மரியாதையுடன் சல்யூட் செய்த நிகழ்ச்சி, படைகளை ஒற்றுமையாக்க முடிந்தால், நம்மூலமாக கிறிஸ்துவின் கிருபை பிரதிபலிக்கப்பட்டால், வல்லமையான பெரிய மாற்றங்களை உண்டுபண்ணும். வேதாகமத்தில் இதற்கான சான்றுகளைப் பார்க்கிறோம். உதாரணமாக ஏமாற்றின சகோதரனான யாக்கோபை கட்டித்தழுவிய ஏசாவின் செயல் (ஆதி. 33:4), மிகவும் சந்தோஷத்துடன் சகேயு செய்த பாவ அறிக்கை (லூக். 19:1–10), கெட்ட குமாரனை ஓடிப்போய் கட்டி முத்தமிட்ட தகப்பனாரின் செயல் (லூக். 15) ஆகும்.

கிறிஸ்துவினுடைய கிருபையினால் நமக்கும், நமது எதிராளிகளுக்கும் இடையே உள்ள கசப்புணர்ச்சி, கருத்து வேறுபாடு இவைகளுக்கு இன்றே இறுதிநாளாக இருக்கட்டும்.

எதிர்மறையான காரியத்தைச் செய்தல்

வனாந்திரமான இடத்தில் நடைபயணமாக சுற்றுலா செல்வது, அச்சத்தை தரக்கூடியதாகக் காணப்படலாம். ஆனால், வெளி ஊர்களை சுற்றிப் பார்க்கும் ஆவலர்களுக்கு, இது மேலும் ஆவலைத் தூண்டுவதாகவே உள்ளது. வனாந்தரமான இடத்தில் நடந்து செல்லும் பயணிகளுக்கு அவர்கள் உடன் எடுத்துச் செல்லும் தண்ணீரை விட அதிக தண்ணீர் தேவைப்படும். ஆகவே வடிகட்டிகள் இணைக்கப்பட்டுள்ள தண்ணீர் புட்டிகளை அவர்கள் வாங்குகிறார்கள். புட்டிகளில் வடிகட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் போகும் வழியிலுள்ள நீர் நிலைகளில் புட்டிகளை நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், அப்புட்டிகளிலுருந்து நீரை அருந்தும் முறை நாம் நினைப்பதற்கு எதிர்மறையானது. புட்டிகளை சாய்ப்பதால் தண்ணீர் வெளியே வராது. தாகத்துடன் இருக்கும் நடை பயணி, வடிகட்டி வழியாக நீர் வெளியே வருவதற்கு புட்டிக்குள் மிகவேகமாக ஊத வேண்டும். இயற்கையாக நடைபெறும் காரியத்திற்கு பதிலாக உண்மையில் நடக்கும் செயல் எதிர்மறையாக உள்ளது.

நாம் இயேசுவைப் பின்பற்றும் பொழுது உண்மைக்கு எதிர்மறையான காரியத்தையே பார்க்கிறோம். உதாரணமாக உலகக் கட்டளைகளை கைக்கொள்வதின் மூலம் நாம் தேவனை நெருங்கிச் செல்ல இயலாது என்று பவுல் தெளிவுபடுத்துகிறார். “இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள் போல, மனுஷருடைய கற்பனைகளின்படியும், போதனைகளின்படியும் நடந்து, தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?” (கொலோ. 2:20-21) என்று பவுல் கேட்கிறார்.

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? “நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால் மேலானவைகளைத் தேடுங்கள்” (கொலோ. 3:1). மேலும் உயிரோடிருக்கும் மக்களிடம் “நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது” (கொலோ. 3:3) என்று பவுல் மேற்சொன்ன கேள்விக்கு பதில் அளித்தார்.

இந்த உலகக்காரியங்களுக்கு நாம் “மரித்தவர்களாகவும்,” கிறிஸ்துவுக்கென ஜீவிக்கிறவர்களாகவும் நம்மை கருதவேண்டும். “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக் கடவன்” (மத். 20:26) என்று கூறினதை வாழ்ந்து காண்பித்த இயேசுவின் வழியில் நடக்க நாம் இப்பொழுது விரும்புகிறோம்.

கிறிஸ்துவுக்குள் இணைக்கப்பட்டிருத்தல்

வேதாகமத்தில் பெயர்களின் பட்டியல் வரும்பொழுது, அவற்றை வாசிக்காமல் விட்டுவிட நமக்கு ஓர் எண்ணம் தோன்றும். ஆனால் இயேசு, அவரோடு இணைந்து ஊழியம் செய்ய அழைக்கப் பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் பொக்கிஷங்களைக் கண்டுகொள்ளலாம். அவர்களில் அநேகர் நம்மால் நன்கு அறியப்பட்டவர்கள் - கல் என்று அர்த்தம்கொள்ளும் பேதுரு என்று இயேசுவால் பெயரிடப்பட்ட சீமோன், மீன் பிடிக்கும் சகோதரர்களான யாக்கோபு, யோவான், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரை நன்கு அறிவோம். ஆனால், இயேசுவின் சீஷர்கள் ஆகும் முன்பு ஒருவருக்கொருவர் எதிராளிகளாக இருந்திருக்கக்கூடிய ஆயக்காரனாகிய மத்தேயு, செலோத்தியனாகிய சீமோன் ஆகியோரை எளிதாக கவனிக்காமல் விட்டுவிடுவோம்.

மத்தேயு ரோமர்களுக்காக வரி வசூலித்தவன். ஆகவே, யூதர்கள் அவனை எதிராளியாக பார்த்தனர். ஆயக்காரர்கள் அவர்களது நேர்மையற்ற நடக்கைகளாலும், தேவனுக்கு மட்டுமே அல்லாது அவர்களை ஆண்டுவந்த ரோமர்களுக்கு வரிப்பணம் வசூலித்ததாலும் யூதர்களால் வெறுக்கப்பட்டார்கள். மறுபுரத்தில் இயேசுவின் அழைப்புக்கு முன்பாக செலோத்தியனாகிய சீமோன் யூதர்களின் தீவிரவாத குழுவில் சேர்ந்தவனாகவும், ரோமர்களை வெறுப்பவனாகவும், வன்முறையினால் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு அவர்களது ஆட்சியை கவிழ்த்துப் போடவும் தீவிரமாக இருந்தவன்.

மத்தேயுவும், சீமோனும் எதிர் எதிரான அரசியல் நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் மனப்பூசல்கள் உடையவர்களாகவோ அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதாகவோ நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் இயேசுவை பின்பற்றின பொழுது அவர்களுக்கு இடையே முன்பிருந்த கருத்து வேற்றுமைகளை களைந்து எறிவதில் வெற்றி கண்டிருப்பார்கள்.

மனிதனாக அவதரித்த தேவகுமாரனாகிய இயேசுவின் மீது நாமும் கூட நமது கண்களைப் பதித்தால், பரிசுத்தாவியின் உதவியினால், உடன் விசுவாசிகளோடு உள்ள ஐக்கியத்தில் மேலும், மேலும் அதிகமாய் ஊன்றக் கட்டப்படுவோம்.

பருகக்கூடிய புத்தகம்

உலகின் சில பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைப்பது மிக அரிதாக இருப்பதால், தண்ணீரே ஜீவன் என்ற நிறுவனம் “பருகக்கூடிய புத்தகம்” என்ற மிகச்சிறந்த மூல ஆதாரத்தை உருவாக்கியது. அந்தப் புத்தகத்திலுள்ள காகிதங்களில் பூசப்பட்டிருந்த மிக நுன்னிய வெள்ளித் துகள்கள் 99.9 சதவீத நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை வடிகட்டி விடும் தன்மை உடையது. அப்புத்தகத்திலிருந்து கிழித்து பயன்படுத்தப்பட்ட காகிதத்தை மறுபடி மறுபடியும் பயன்படுத்தி 100 லிட்டர் சுத்தமான தண்ணீரை மிகக்குறைந்த விலையில் பெற இயலும்.

வேதாகமமும் வழக்கத்திற்கு மாறான “பருகக்கூடிய” புத்தகமாகும். யோவான் 4ம் அதிகாரத்தில் சிறப்பான தண்ணீரைப் பற்றியும் வாசிக்கிறோம். கிணற்றண்டை இருந்த அந்த பெண்ணிற்கு சரீர தாகத்தை தீர்ப்பதற்கு தேவையான, சுத்தமான தண்ணீருக்கும் மேலாக, தெளிவான ஜீவத்தண்ணீர் தேவையாக இருந்தது. அந்த ஜீவத்தண்ணீரை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிய மிக ஆவலாக இருந்தாள். தேவனிடமிருந்து மட்டும் கிடைக்கக்கூடிய கிருபையும், மன்னிப்பும் அவளுக்குத் தேவையாக இருந்தது.

தேவகுமாரனாகிய இயேசு மட்டுமே “ஜீவதண்ணீரைக்” கொடுக்கக்கூடியவர், என்று கூறும் தேவனுடைய வார்த்தையே (வேதாகமம்) தலைசிறந்த “பருகக்கூடிய” புத்தகமாக உள்ளது. இயேசு அருளும் அந்தத் தண்ணீரைக் குடிக்கிறவன் “நித்திய ஜீவகாலமாக ஊறுகிற நிரூற்றை” அவன் உள்ளத்திற்குள்ளாக அனுபவிப்பான்.

சிலுவையைப் பற்றிக்கொள்ளுதல்

லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற போதகரான சார்லஸ் ஸ்பர்ஜன், போதகர்களை ஊழியத்திற்கு பயிற்றுவிப்பதற்காக போதகர்களுக்கான கல்லூரி ஒன்றை 1856ல் ஸ்தாபித்தார். 1923ம் ஆண்டு அது ஸ்பர்ஜன் கல்லூரி என்று மறுபெயர் சூட்டப்பட்டது. இன்று அந்தக் கல்லூரியின் அடையாள சின்னத்தில் சிலுவையைப் பற்றிப்பிடித்துள்ள ஒரு கரமும், “நான் பிடித்துள்ளேன், நான் பிடிக்கப்பட்டுள்ளேன்” என்ற அர்த்தம் கொள்ளும் லத்தீன் மொழி வார்த்தைகளும் உள்ளன. ஸ்பர்ஜன் அவரது சுய சரிதையில், “உறுதியான கரத்துடன் நாங்கள் சிலுவையைப் பற்றியுள்ளோம். ஏனென்றால் சிலுவை அதனுடைய ஈர்க்கும் சக்தியினால் எங்களை இறுகப்பற்றியுள்ளது. ஒவ்வொரு மனிதனும் சத்தியத்தைப் பற்றிக்கொள்ளவும், சத்தியத்தால் பற்றிக்கொள்ளப்படவும், விசேஷமாக சிலுவையில் மரித்த கிறிஸ்துவின் சத்தியத்தைப் பற்றிக்கொள்ள ஆவலாக இருக்கிறோம். இதுவே எங்களது கல்லூரியின் குறிக்கோள் வாசகம்” என்று எழுதியுள்ளார்.

பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் பவுல் இந்த சத்தியம் தான் அவரது விசுவாசத்திற்கு உறுதியான அடித்தளம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். “நான் அடைந்தாயிற்று… கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்” (பிலி. 3:12). இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நம்மை, அவர் அவருடைய கிருபையினாலும், வல்லமையினாலும் தாங்குவதினால் சிலுவையின் செய்தியை நாம் பிறரோடு பகிர்ந்து கொள்ளுகிறோம். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா. 2:20).

நம்முடைய கர்த்தர் ஒவ்வொரு நாளும் நம்மை அவரது அன்பின் பிடிப்பில் வைத்திருக்கிறார். அவருடைய இந்த அன்பின் செய்தியை நாம் பிறரோடு தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்.

துதித்தலும், விண்ணப்பித்தலும்

தவறான வழிகளில் எளிதாக செல்லக்கூடிய வாலிபப் பருவத்தினர் மத்தியில் ஊழியம் செய்வதற்காக, நியூயார்க் நகரத்தில், பதின்ம வயதினரின் சவால் என்ற ஊழியம் வழக்கத்திற்கு மாறான அர்ப்பணிப்பான ஜெபத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஸ்தாபகரான டேவிட் வில்கர்சன், அவரது தொலைக்காட்சி பெட்டியை விற்றுவிட்டு, அனுதினமும் இரவில் தொலைக்காட்சி பார்க்கும் இரண்டு மணிநேரத்தை ஜெபத்தில் செலவிட்டார். தொடர்ந்து வந்த மாதங்களில் அவரது புதிய முயற்சியைப் பற்றிய தெளிவு உண்டானதோடு, தேவனைத் துதிப்பதும், அவரிடம் உதவிக்கான விண்ணப்பங்களை ஏறெடுப்பதும் சமமாக இணைந்து செயல்படுவதிலுள்ள வெற்றியையும் பற்றி அறிந்து கொண்டார்.

இந்த சமநிலைப் பிரமாணத்தைப் பற்றி, தேவாலயத்தை பிரதிஷ்டை செய்த சாலொமோன் ராஜாவின் ஜெபம் தெளிவாக விளக்குகிறது. தேவனுடைய பரிசுத்தத்தையும், அவருடைய உண்மைத் தன்மையையும் விவரித்து சாலமோன் அவரது ஜெபத்தை ஆரம்பித்தார். பின்பு அந்த தேவாலயம் சிறப்பாகக் கட்டிமுடிக்கப்பட தேவன்தாம் முழுமையான காரணம் என்று கூறி தேவனுடைய வல்லமையைப் புகழ்ந்து “இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?” (2 நாளா. 6:18) என்று அறிவித்தார்.

தேவனை மகிமைப்படுத்தி உயர்த்தின பின், ஆலயத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு காரியத்திலும், விசேஷமான கவனத்தைச் செலுத்தும்படி தேவனிடம் வேண்டிக் கொண்டார். மேலும் இஸ்ரவேல் மக்களுக்கு இரக்கம் காண்பிக்கவும், அவர்களது பாவங்களை அவர்கள் அறிக்கையிடும் பொழுது, மன்னித்து அவர்களது தேவைகளைச் சந்திக்கும்படியும் தேவனிடம் மன்றாடினார்.

“சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று” (2 நாளா. 7:1). நம்மால் இயலாத இந்த செயலின் மூலம் நாம் நமது ஜெபத்தில் துதித்து உரையாடும் தேவனே நம்முடைய தேவைகளைக் குறித்து கரிசனையுடன் கண்காணிக்கிறவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.