காணாமல் போனது, கண்டு பிடிக்கப்பட்டது
என்னுடைய மாமியார் எனது உறவினர் ஒருவரோடு கடைக்குச் சென்றபோது, வழி தவறிவிட்டார்கள் என்பதைக் கண்டுபிடித்தோம். நானும் என் மனைவியும் பதறிப்போனோம். அம்மாவிற்கு நியாபக மறதியும் குழப்பமும் காணப்பட்டது. அவர்களால் என்ன செய்கிறார்களென்பதைச் சொல்ல முடியாது. அவர்கள் அந்தப் பகுதியில் அலைந்து கொண்டிருப்பார்களா? அல்லது ஏதாவது ஒரு பஸ்ஸில் அது அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் என்றெண்ணி ஏறியிருப்பார்களா? மிக மோசமான காட்சிகளின் எண்ணங்கள் எங்கள் மனதில் வட்டமிட, நாங்கள் தேவனிடம், தயவுகூர்ந்து அவர்களைக் கண்டுபிடித்துத் தாரும் என்று கதறிக் கொண்டே தேட ஆரம்பித்தோம்.
சில மணிகளுக்குப் பின்னர் பல மைல்களுக்குப்பால் ஒரு சாலையின் வழியே தடைபட்டு என் மாமியார் நின்றதைக் கண்டுபிடித்தோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் படியான ஆசீர்வாதத்தை தேவன் எங்களுக்குத் தந்ததை நினைத்துப் பார்த்தோம். பல மாதங்களுக்குப் பின்னர், அவர்களது எண்பதாவது வயதில், தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும்படி இயேசுவிடம் திரும்பினார்கள்.
இயேசு மனிதர்களைக் காணாமல் போன ஆடுகளுக்கு ஒப்பிட்டு இந்த எடுத்துக்காட்டைக் குறிப்பிடுகிறார். உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து அவைகளில் ஒன்று காணாமல் போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித் திரியானோ? கண்டுபிடித்த பின்பு அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக் கொண்டு... தன் சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன். என்னோடே கூட சந்தோஷப்படுங்கள் என்பான்
(லூக். 15:4-6).
மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை எண்ணி எல்லாம் இருக்கின்றனவா என உறுதிப்பண்ணிக் கொள்வார்கள். அதே போலவே இயேசுவும் தன்னை ஒரு மேய்ப்பனாக பாவித்து ஆடுகளாகிய நாம் ஒவ்வொருவரையும் - இளம் வயதினரோ, முதியவர்களோ எல்லாரையும் அவர் அதிகமாய் மதிக்கிறார். நாம் நம் வாழ்வில் நம் நோக்கத்திற்காக தேடி அலைந்து கொண்டிருந்தாலும் கிறிஸ்துவிடம் திரும்புவதற்கு அது இன்னமும் பிந்தி விடவில்லை. தேவன் நம்மை அவருடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க விரும்புகிறார்.
பயம் நீங்குதல்
நம்முடைய உடல் நம்முடைய உணர்வுகளான அச்சம் பயம் போன்றவற்றிற்கு எதிர் வினையைத் தரும். வயிறு கனத்தலும் இருதய படபடப்பும், மூச்சுத்திணறலும் நம்முடைய பதட்டத்தின் அடையாளங்கள். நம்முடைய உடலமைப்பு மூலம் இத்தகைய அமைதியற்ற உணர்வுகளைப் புறக்கணித்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.
ஒரு நாள் இரவில் இயேசு ஐயாயிரம் பேருக்கும் மேலானோருக்கு உணவளித்த போது நடந்த அற்புதத்தைக் கண்ட சீடர்களை பயத்தின் அலைகள் சூழ்ந்து கொண்டன. தேவன் அவர்களை பெத்சாயிதா பட்டணத்திற்கு அனுப்பி விட்டு தேவனோடு தனித்து ஜெபம் பண்ணினார். அந்த இரவிலே அவர்கள் காற்றை எதிர்த்து தண்டு வலித்து தங்கள் படகை ஓட்டிக் கொண்டிருக்கையில் இயேசு தண்ணீர் மேல் நடந்து வருவதைக் கண்டனர். அவர்கள் இயேசுவை ஓர் ஆவேசம் என எண்ணி பயந்தனர் (மாற். 6:49-50).
ஆனால் இயேசு அவர்களிடம் பயப்படாதிருங்கள். திடன் கொள்ளுங்கள் என்று மேலும் உறுதியளிக்கின்றார். இயேசு அவர்களுடைய படகில் ஏறியதும் காற்று அமர்ந்தது. அவர்களும் கரையை அடைந்தனர். அவர் தந்த சமாதானத்தைப்பெற்றபோது, அவர்களுடைய அச்ச உணர்வு அமைதியடைந்தது.
பதட்டத்தினால் நாம் மூச்சற்று உணரும் போது, நாம் இயேசுவின் உறுதியான வல்லமைக்குள் இளைப்பாறுவோம். அவர் நம்மைச் சுற்றியுள்ள அலைகளை அமைதிப்படுத்துவார் அல்லது நம்மை பெலப்படுத்தி அவற்றை எதிர் நோக்கச் செய்வார். அவர் நமக்கு அவருடைய சமாதானத்தை எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை (பிலி. 4:7) கொடுக்கிறார். நம்முடைய பயங்களிலிருந்து நம்மை விடுவித்து நம்முடைய ஆவியையும், உடலையும் அமைதிப்படுத்துகின்றார்.
பயமில்லாமல் கொடுத்தல்
என்னுடைய மகன் சேவியர் ஆறு வயதாயிருக்கையில் என்னுடைய சிநேகிதி தன்னுடைய தத்தித் தத்தி நடக்கும் குழந்தையைக் கூட்டிக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். சேவியர் தன்னுடைய விளையாட்டுப் பொருட்களில் சிலவற்றை அச்சிறுவனுக்குக் கொடுக்க விரும்பினான். சேவியரின் இந்த பெருந்தன்மையை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். அவன் பஞ்சடைக்கப்பட்ட மிருக பொம்மையொன்றைக் கொடுக்க முன் வந்தபோது, அப்பொம்மையை வாங்குவதற்கு என் கணவர் எத்தனை இடங்களுக்குச் சென்று அநேகக் கடைகளைத் தேடி அலைந்து வாங்கி வந்ததை நினைத்தேன். இப்படி கிடைப்பதற்கரிய அந்த பொம்மையை என் சிநேகிதியும் தாழ்மையுடன் நிராகரித்தாள். ஆனால் சேவியர் அந்த பரிசை சிறுவனின் கரங்களில் வைத்து என்னுடைய தந்தை எனக்கு நிறைய பொம்மைகளை பகிர்ந்து கொள்ளும்படி கொடுத்துள்ளார் என்றான்.
சேவியர் தன்னுடைய கொடுப்பதின் உறுதியை என்னிடமிருந்தே கற்றுக் கொண்டாலும் நான் தேவனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பெற்ற வளங்களை இறுகப் பற்றிக் கொள்பவளாக இருக்கின்றேன். ஆனால் என்னுடைய பரலோகத் தந்தை எனக்குத் தேவையான யாவற்றையும் எனக்குத் தருகிறார். எனவே நான் சுலபமாக பகிர்ந்து கொள்ள முடியும்.
பழைய ஏற்பாட்டில் தேவன் தங்களுக்குத் தந்தவற்றில் ஒரு பகுதியை லேவியர்களான ஆசாரியர்களுக்குக் கொடுப்பதன் மூலம் தேவனை நம்பும்படி கட்டளையிட்டார். ஆசாரியர்கள் அவற்றைக் கொண்டு தேவையுள்ளவர்களுக்கு தர வேண்டுமெனவும் கட்டளையிட்டார். ஜனங்கள் கொடுப்பதற்கு மறுத்த போது மல்கியா தீர்க்கதரிசி அவர்கள் தேவனை வஞ்சிக்கிறார்கள் (மல்கி. 3:8-9) எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கள் மனப்பூர்வமாய் கொடுக்கும்போது தேவன் வாக்களித்த ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்வார்கள் என்ற உறுதியில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர் (வச. 10-11) மற்றவர்களும் இவர்கள் பாக்கியவான்களென்பதைத் தெரிந்து கொள்வார்கள் (வச. 12).
நம்முடைய பணம் நம்முடைய திட்டங்கள். தேவன் நமக்களித்த கொடைகள் யாவற்றையும் நாம் கையாண்டாலும் தேவனுக்குக் கொடுத்தல் என்பது ஒரு வகை ஆராதனையாகும். தாராளமாகவும் தைரியமாகவும் கொடுப்பது அன்புள்ள நம் தேவன் பேரிலுள்ள நம்முடைய நம்பிக்கையைக் காட்டுகிறது - அவர் நம்முடைய தாராளமான கொடையாளர்.
நம்முடைய உறுதியான அஸ்திபாரம்
அநேக ஆண்டுகளாக எங்கள் பட்டணத்தின் மக்கள் நிலச்சரிவுக்குள்ளாகக் கூடிய பகுதியில் வீடுகள் கட்டவும் வீடுகள் வாங்கவும் செய்தனர். சிலருக்கு அந்த நிலப்பகுதியின் நிலையற்றத் தன்மை தெரியும். வேறு சிலருக்கு அதைப் பற்றியே தெரியாது. புவியியலாளர்களும் பட்டணத்தின் ஒருங்கமைப்பாளர்களும் பாதுகாப்பான எச்சரிப்பு விளக்கப்படவில்லை அல்லது அலட்சியப்படுத்தப்பட்டது (த கெசட் கொலோரடோ ஸ்பிரிங்ஸ், ஏப்ரல் 27, 2016) அங்குள்ள வீடுகளிலிருந்து காணக்கூடிய காட்சி பிரமிக்கச் செய்யும். ஆனால் வீட்டின் கீழேயுள்ள நிலமோ அதன் அமைப்பின்படி அழிவுக்குள்ளாகக் கூடியது, ஆபத்தானது.
முந்தைய இஸ்ரவேலரில் அநேகர் விக்கிரக வணக்கத்தை விட்டு விடும்படி ஜீவனுள்ள தேவன் கொடுத்த எச்சரிப்பை அலட்சியப்படுத்தினர். அவர்களின் கீழ்படியாமையால் கிடைத்த சோக முடிவை பழைய ஏற்பாடு தெரிவிக்கின்றது. நம்மைச் சுற்றியுள்ள உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற போதிலும், தேவன் தம்மிடம் திரும்பி, தம்முடைய வழிகளைப் பின்பற்றும் தன்னுடைய ஜனங்களுக்கு மன்னிப்பு நம்பிக்கை என்ற செய்தியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.
ஏசாயா தீர்க்கதரிசி பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும். கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம் (ஏசா. 33:6) எனக் கூறுகிறார்.
இன்றைக்கும் பழைய ஏற்பாட்டுக் காலங்களிலிருந்தது போல, தேவன் நாம் தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார். நம் வாழ்வை எதின் மீது கட்டப் போகிறோம்? நம்முடைய சொந்த வழிகளில் நடக்கப் போகிறோமா? அல்லது வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள என்றும் நிலைத்திருக்கும் அவருடைய கொள்கைகளைத் தழுவிக் கொள்ளப் போகிறோமா?
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான் வேறஸ்திபாரம் மணல் தான் (எட்வர்ட் மோட்)
சரியான இடத்தில் மலர்தல்
களை என்பது நீ விரும்பாத இடத்தில் வளரும் ஒரு செடி என்று சொல்லி களையெடுக்கும் கருவியை என் கையில் கொடுத்தார் என் தந்தை. நான் பட்டாணி செடிகளுக்கூடே தானாக வளர்ந்திருக்கும் சோளச் செடியை விட்டு விட விரும்பினேன். ஆனால் பண்ணை அனுபவமிக்க என் தந்தை அதனைப் பிடுங்கிவிடச் சொன்னார். அந்த தனிமையான சோளக்கதிர் பயன் தருவதற்குப் பதிலாக பட்டாணிகளை அமிழ்த்தி அவற்றின் சத்துக்களை எடுத்துக் கொள்ளும் என்றார்.
மனிதர்கள் செடிகளல்ல. நமக்கு தானாகச் சிந்திக்கும் திறனுண்டு. அது தேவன் தந்த சுதந்திரம். ஆனால் நாம் தேவன் நமக்கென்று நியமிக்காத இடங்களில் மலர முயற்சிக்கின்றோம்.
சவுல் ராஜாவின் மகன் யுத்த வீரன். இளவரசன் யோனத்தான் தான் விரும்பியபடி செய்திருக்கலாம். அவன் தான் ஓர் அரசனாகுவதை எதிர்பார்ப்பதற்கு சரியான காரணங்களிருந்தன. ஆனால் அவன் தேவனுடைய ஆசீர்வாதம் தாவீதின் மீதிருந்ததைக் கண்டான். அவன் தன் தந்தையின் பொறாமை பெருமை ஆகியவற்றைக் கண்டு கொண்டான். (1 சாமு. 18:12-15). எனவே தனக்கு மறுக்கப்பட்ட அரியணையை பற்றிக் கொள்ள எண்ணுவதை விட்டு, தன் உயிரையும் பணயம் வைத்து யோனத்தான் தாவீதின் நெருங்கிய நண்பனானான் (19:1-6 ; 20:1-4). அவனுடைய உயிரையும் காத்தான்.
சிலர் யோனத்தான் மிக அதிகமாக விட்டுக் கொடுத்தான் என்கின்றனர். ஆனால் நாம் நினைக்கப்படும்படி என்ன செய்வோம்? பேராசை கொண்ட சவுலைப் போலவா? அவன் தன் அரசாட்சியைப் நிலைப்படுத்த நினைத்தான். ஆனால் அதை இழந்து போனான். அல்லது கனம் பெற்ற இயேசுவின் முன்னோர் பட்டியலில் இடம் பெற்ற ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றிய யோனத்தானைப் போலவா?
தேவனுடைய திட்டங்கள் நம்முடைய திட்டங்களை விட மேலானவை. நாம் அவருடைய திட்டங்களுக்கு எதிர்த்து நிற்போமாயின் தவறான இடத்தில் வளர்ந்த களையைப் போலாவோம். அல்லது அவருடைய வழி நடத்துதலை ஏற்றுக் கொள்வோமாகில் அவருடைய தோட்டத்தில் நாட்டப்பட்டு செழித்து வளர்ந்து கனிதரும் செடியைப் போலிருப்போம். இந்த தேர்ந்தெடுத்தலை அவர் நம்மிடம் விட்டு விட்டார்.
நியாயத்தீர்ப்பிற்கு மேம்பட்ட இரக்கம்
என்னுடைய குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டு என்னிடம் வந்து ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினர். நான் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியே பிரித்து, அவரவர் பிரச்சனையைச் சொல்லும்படி கேட்டேன். இருவரிடமுமே தவறு இருந்தமையால் எங்களின் உரையாடலின் முடிவில் ஒவ்வொருவரிடமும் தன்னுடைய உடன்பிறப்பின் இச்செயலுக்குத் தகுந்த நியாயமான நடவடிக்கை என்ன எடுக்கலாம் என்று கேட்ட போது இருவருமே உடனடியாக ஒரு தண்டனையைக் கொடுக்க வேண்டுமென்று கூறினர். அவர்கள் ஆச்சரியப்படும்படியாக நான் அவரவர் தன் உடன் பிறப்புக்கு எந்த தண்டனையைக் கொடுக்கும்படி விரும்பினார்களோ அதை அவர்களுக்கே கொடுத்தேன். உடனே ஒவ்வொரு குழந்தையும் இது நியாயமற்றது. நாங்கள் மற்றவருக்கு கொடுக்க நினைத்த தண்டனை எங்களுக்கே வந்தது. இது அடுத்தவருக்குத்தான் கொடுக்கப்பட வேண்டிய தண்டனை எனப் புலம்பினர்.
என்னுடைய குழந்தைகள் இரக்கமில்லாத நியாயத் தீர்ப்பைக் காண்பிக்கின்றனர். அதை தேவன் எதிர்க்கின்றார் (யாக். 2:13). பணம் படைத்தவர்களுக்கு அல்லது யாரேனும் ஒருவருக்குப் பாரபட்சமாக நிற்பதைக் காட்டிலும் நாம் பிறரை நம்மைப் போல நேசிக்க வேண்டும் என தேவன் நம்மிடம் விரும்புகிறார் (வச. 8) என்பதை யாக்கோபு நினைப்பூட்டுகின்றார். நாம் பிறரை நம்முடைய சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதும் அல்லது நமக்கு லாபமில்லாத ஒருவரை உதாசீனப்படுத்துவதற்குப் பதிலாக, நாம் எத்தனை அதிகமாக தேவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைத்து செயல்படுபவராக, நம்முடைய இரக்கத்தை அவர்களுக்குக் காண்பிப்போம் என யாக்கோபு அறிவுரைக் கூறுகிறார்.
தேவன் அவரது இரக்கத்தை நமக்குத் தாராளமாகக் கொடுத்துள்ளார். நாம் மற்றவர்களோடு கொண்டுள்ள தொடர்புகளில் நம் தேவன் நம்மீது காட்டியுள்ள இரக்கத்தை நினைத்து அதனைப் பிறருக்குக் கொடுப்போம்.
அணிந்து கொள்ளல்
நாம் அதிக கொந்தளிப்பு பகுதிக்குள் செல்கிறோம் என்பதைத் தெரிவிக்க, விமானி இருக்கை பெல்ட்டை அணிந்து கொள்ளும்படி அறிவிக்கும் அடையாள விளக்கை எரிய விட்டார். தயவு கூர்ந்து உங்கள் இருக்கைகளுக்கு உடனடியாகத் திரும்பிச் சென்று பாதுகாப்பாக உங்கள் இருக்கை பட்டைகளை அணிந்து கொள்ளுங்கள், இந்த எச்சரிப்பை விமானப் பணியாளர்கள் தேவையான போது கொடுக்கின்றனர். கொந்தளிக்கும் காற்றுப் பகுதியில் விமானம் செல்லும்போது இருக்கைப் பட்டை அணியாத பிரயாணிகள் காயப்பட வாய்ப்புள்ளதால், பாதுகாப்போடு தங்கள் இருக்கையில் இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக கொந்தளிப்புப் பகுதியைக் கடந்து விடலாம்.
அநேகமான நேரங்களில் நாம் கலக்கத்தைத் தரும் அனுபவங்களை நாம் சந்திக்க இருக்கின்றோம் என நம் வாழ்வில் எச்சரிப்பு தரப்படுவதில்லை. ஆனால் நம் அன்புத் தந்தை நம்முடைய போராட்டங்களைத் தெரிந்து, கவனித்து நம்முடைய கவலைகள், காயங்கள், பயங்களை அவரிடம் கொண்டு வரும்படி அழைக்கின்றார். நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல் எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யும் கிருபையை அடையவும் தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் (எபி. 4:15-16) என வேதாகமம் சொல்லுகிறது.
கொந்தளிக்கும் காலங்களில் ஜெபத்தின் மூலம் நம் தந்தையிடம் செல்வதே நாம் செய்யக் கூடிய சிறந்த செயல். நமக்குத் தேவையான போது கிருபை உதவி செய்யும் என்ற சொற்றொடர் சொல்வது அவருடைய பிரசன்னத்தில் நாம் இணைக்கப்பட்டிருந்தால் நம்மை பயமுறுத்தும் வேளைகளில் சமாதானத்துடன் இருக்க முடியும். ஏனெனில் நாம் நம் தேவைகள் எல்லாவற்றையும் பெரியவரிடம் கொண்டு வந்து விட்டோம். வாழ்வின் பிரச்சனைகள் நம்மை மேற்கொள்ளும் போது நாம் ஜெபிக்கலாம். அவரால் மட்டுமே நம் வாழ்வின் கொந்தளிப்பினூடாய் உதவ முடியும்.
எட்டுக்கால் பூச்சியும், தேவனுடைய பிரசன்னம்
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும் ... தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும்... வேண்டிக்கொள்கிறேன். எபேசியர் 3:16-19. எட்டுக்கால் பூச்சிகள் - எந்தவொரு குழந்தையும் இவற்றை விரும்புவதில்லை. அதுவும் அவர்கள் தூங்கப் போகும் நேரத்தில் அவர்கள் அறையில் இருப்பதை விரும்புவதில்லை. என்னுடைய மகள் தூங்குவதற்கு தயாராகும் போது அவளுடைய படுக்கைக்கு மிக அருகில் ஒன்றைக் கண்டுவிட்டாள். அப்பா... எட்டுக்கால் பூச்சி... எனக் கத்தினாள். எத்தனைத் தேடியும் அந்த எட்டுக்கால் பூச்சியைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அது உன்னைக் கடிக்காது என்று அவளுக்கு உறுதியளித்தேன். ஆனால் அவள் நம்பவில்லை. நான் அவளின் படுக்கைக்கு அருகிலேயே காவல் இருக்கிறேன் என்று சொன்ன பின்பு தான், ஏற்றுக் கொண்டாள். நான் அவள் படுக்கையினருகில் நின்று கொண்டிருக்க, அவள் தன் படுக்கைக்குச் சென்றாள்.
என்னுடைய மகள் படுத்தப்பின்பு நான் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு, நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். நான் உன்னருகிலேயே இருக்கின்றேன். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள். தேவன் உன்னை அம்மாவையும் அப்பாவையும் விட அதிகமாக நேசிக்கின்றார். அவர் உனக்கு மிக அருகில் இருக்கின்றார். நீ பயப்படும் போதெல்லாம் அவரிடம் ஜெபி என்றேன். அது அவளைத் தேற்றுவதாக இருந்தது. அவளும் சமாதானத்துடன் சீக்கிரத்தில் தூங்கி விட்டாள்.
தேவன் நம் அருகிலேயே இருக்கிறாரென வேதாகமம் திரும்பத் திரும்ப நமக்கு உறுதியளிக்கின்றது (சங். 145:18, ரோ. 8:38-39. யாக். 4:7-8). சில வேளைகளில் நாம் இதை நம்புவதற்குத் தடுமாறுகிறோம். எனவே தான் பவுல் எபேசு சபை விசுவாசிகள் உள்ளான மனுஷனில் வல்லமையாய் பெலப்பட்டு உண்மையை புரிந்து கொள்ளும்படி ஜெபம் செய்கிறார். நாம் பயந்தோமாகில் தேவனுடைய பாதையை விட்டு விலகி விடுவோம். நான் என் மகளின் கரத்தை அன்போடு பற்றியபோது அவள் அமைதியாக அன்றிரவு தூங்கிவிட்டதைப் போன்று ஜெபத்தின் மூலம் நம்முடைய பரலோகத் தந்தையும் நம் அருகில் வந்திருக்கின்றார்.
பெரிய மருத்துவர்
மருத்துவர் ரிஷி மான்சன்டா தன்னிடம் வரும் நோயாளிகளிடம் நீ எங்கே வசிக்கிறாய்? என்று கேட்கும் போது அவர் அவர்களுடைய விலாசத்தையும் விட அதிகமான ஒன்றை எதிர்பார்க்கின்றார். ஒரு திட்டத்தை அவர் காண்கின்றார். அவரிடம் உதவிக்காக வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் சுற்றுப்புற அழுத்தத்தில் வாழ்வதாகக் கண்டுபிடிக்கின்றார். இளக்கமான மணல் வகை, பூச்சிகள், மற்றும் பாக்டீரியாக்களால் உருவாகும் நச்சு ஆகியவை அவர்களை நோயாளிகளாக்குகிறது. எனவே இந்த மருத்துவர் ஒரு வழக்கறிஞராகவும் செயல்படுகின்றார். அவர் தன்னை எதிர் நீச்சல் போடும் மருத்துவர் என அழைக்கின்றார். இவ்வகை மருத்துவர்கள் சுகாதாரத்தைப் பேணும் பணியாளர்களாகவும் தேவைப்படும்போது மருத்துவ உதவியும் செய்பவர்களாகவும், செய்பவராகவும், நோயாளிகளோடும் அவர்கள் வாழும் சமுதாயத்தோடும் இணைந்து வேலை செய்து அதனை நல்ல சுகாதாரமான இடமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
இயேசுவும் தன்னிடம் வந்தவர்களைச் சுகமாக்கினார் (மத். 4:23-24). இயேசு அவர்களின் சரீர சுகத்தையும் உலகத் தேவையையும் தாண்டி அவர்கள் கண்கள் மேலான ஒன்றை நோக்கச் செய்தார். அவருடைய மலைப் பிரசங்கத்தில் ஒரு மருத்துவ அற்புதத்தையும் விட மேலானவற்றைக் கொடுத்தார் (5:1-12). இயேசு ஏழு முறை, மனதும் இருதயமும் எப்படியிருந்தால் ஒரு புதிய கண்ணோட்டத்தோடும் ஆன்ம நலத்துடனும் கூடிய ஒரு நல்வாழ்வு அமையும் எனவும் (வச. 3-9) இரண்டு முறை கொடூரமான துன்பங்களை அனுபவிப்பவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இயேசுவின் மேல் நம்பிக்கையையும் அவருடைய வீட்டையும் அடைவர் எனவும் கூறுகின்றார் (வச. 10-12).
இயேசுவின் வார்த்தைகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. நான் எங்கே வாழ்கின்றேன்? என்னுடைய சுகவாழ்வு, உலகத் தேவைகளையும் விட மேலானது ஒன்றுள்ளது என்பதை எவ்வளவு தெரிந்து வைத்துள்ளேன்? நான் ஓர் அற்புதத்தைப் பெற ஏங்கிக் கொண்டிருக்கையில், ஓர் எளிமையான, உடைக்கப்பட்ட, பசியுள்ள, இரக்கமுள்ள, சமாதானம் பண்ணுகின்ற, இயேசு பாக்கியவான் என அழைக்கும் ஓர் இருதயத்தைத் தழுவிக் கொள்கிறேனா?