வகை  |  odb

நம்மைப் போன்ற பாவிகள்

என்னுடைய சிநேகிதியின் பெயர் ஈடித். அவர் தான் இயேசுவைப் பின்பற்ற தீர்மானம் செய்த நாளைக் குறித்து எனக்குச் சொன்னாள்.

ஈடித் தேவனைப் பற்றி எந்த அக்கறையும் கொண்டவளல்ல. ஒரு நாள் தன் ஆன்மாவில் ஏற்பட்ட விரக்தியோடு, அந்த ஞாயிறு காலை, தன் வீட்டின் அருகிலுள்ள ஆலயத்தினுள் சென்றாள். அன்றைய தினம் போதகர் வேதாகமத்திலிருந்து வாசித்த பகுதி லூக்கா 15:1-2 “சகல ஆயக்காரரும் பாவிகளும அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும், வேதபாரகரும் முறுமுறுத்து, அவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்” என்பதாக வாசிக்கப்பட்டது. ஆனால், அது ஈடித்தின் காதில் “இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஈடித்தையும் ஏற்றுக் கொண்டார்” என்பதாக விழுந்தது. உடனே அவள் தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். சற்று நேரத்தில் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டாள். ஆனால். இயேசு பாவிகளை ஏற்றுக் கொண்டார் என்ற எண்ணமும் அதில் ஈடித்தும் அடங்குவாள் என்ற எண்ணமும் அவளில் தங்கி விட்டது. அன்று மாலை அவள் இயேசுவை நெருங்கி வரத் தீர்மானித்தாள். அவரின் வார்த்தைக்குச் செவி கொடுத்தாள். சுவிசேஷங்களை வாசிக்க ஆரம்பித்தாள். தன்னுடைய நம்பிக்கையை இயேசுவின் மீது வைத்து அவரைப் பின் தொடர்ந்தாள்.

இயேசுவின் நாட்களில் இருந்த வேதபாரகர்கள், இயேசு பாவிகளோடு உணவருந்தினார், அநியாயக்காரரோடு சாப்பிட்டார் என்ற உண்மையை அவதூறான செய்தியாகப் பரப்பினர். அவர்களுடைய சட்டம் அவர்களை அத்தகைய ஜனங்களோடு பழகுவதைத் தடுத்தது. ஆனால், இயேசு அவர்கள் உருவாக்கிக் கொண்ட சட்டத்திற்கு எந்த கவனமும் செலுத்தவில்லை அவர் புறக்கணிக்கப்பட்டவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், அவர்கள் எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

இப்பொழுதும் இது உண்மை. இயேசு பாவிகளை ஏற்றுக் கொள்கின்றார்;. உன்னையும் ஏற்றுக் கொள்கின்றார்.

சவால்களை மேற்கொள்ளல்

நாங்கள் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட இலக்கினை அடைந்தனரா என்பதைக் குறித்த கணக்கைக் கொடுக்கும்படி ஒன்று கூடுவதுண்டு. என்னுடைய சிநேகிதி மேரி தன்னுடைய சாப்பாட்டு அறையின் நாற்காலிகளின் இருக்கைகளை அந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்க விரும்பினாள். எங்களுடைய நவம்பர் மாதக் கூடுதையில், அக்டோபர் மாதத்திலிருந்து தன் வேலையின் முன்னேற்றத்தை அவர் வேடிக்கையாகத் தெரிவித்தாள். “என்னுடைய நாற்காலிகளைப் புதிப்பிப்பதற்குப் பத்து மாதங்களும் இரண்டு மணி நேரமும் ஆனது” என்றாள். பல மாதங்களாக அந்த வேலைக்கான பொருட்கள் கிடைக்கவில்லை, சரியான நேரம் அமையவில்லை, தன்னுடைய குழந்தைகளின் தேவைகளைப் பார்க்க வேண்டியிருந்தது எனப் பல காரணங்கள் அவ்வேலையைத் தடுத்தன. ஆனால், அந்த வேலைக்கென இரண்டு மணி நேரம் மட்டுமே செலவழித்து, முடிக்க முடிந்தது, என்றாள்.

தேவன் நெகேமியாவை ஒரு பெரிய வேலைக்கென்று அழைக்கின்றார். எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கின்றது. அதனைக் கட்டி எழுப்ப நெகேமியாவை அழைக்கின்றார் (நெகே. 2:3-5,12).

அவர் ஜனங்களை இந்த வேலையில் வழிநடத்தும்போது, ஜனங்கள் பிறரின் கேலிப் பேச்சையும், தாக்குதலையும், கவனச் சிதறலையும் பாவச் சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தது (4:3,8; 6:10-12)). ஆனாலும், தேவன் அவர்கள் தங்கள் வேலையில் உறுதியாகவும், தீர்மானத்தோடு முயற்சி செய்யவும், சோர்ந்து போகாமல் தங்கள் வேலையை ஐம்பத்திரண்டு நாட்களில் முடிக்க பெலனளித்தார்.

இத்தகைய சவால்களை மேற்கொள்ள ஒரு தனிப்பட்ட ஆர்வமும் இலக்கையும் விட இன்னும் அதிகமாக ஒன்று தேவை. இந்த வேலை தேவனால் கொடுக்கப்பட்டது என்ற புரிந்து கொள்ளலே நெகேமியாவிற்கு இந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தந்தது. தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு, அவருடைய ஜனங்களுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு அவருடைய தலைமையின் கீழ் வேலை செய்ய பெலனீந்தது. தேவன் நம்முடைய ஒரு செயலைச் செய்து முடிக்கும்படி பணிக்கும்போது, ஓர் உறவைச் சரிசெய்யும்படி அல்லது அவர் செய்த நன்மைகளை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கும் போது, அவர் நமக்குத் தேவையான திறமையையும், பெலத்தையும் கொடுத்து அவர் சொன்னதை நிறைவேற்றி முடிக்கச் செய்கின்றார். நம் பாதையில் நாம் எத்தனை சவால்களைச் சந்திக்க நேரிட்டாலும் அவர் சொன்னதை நிறைவேற்றுவார்.

துக்கத்தில் நம்பிக்கை

நான் பத்தொன்பது வயதாயிருந்த போது என்னுடைய நெருங்கிய சிநேகிதி ஒரு கார் விபத்தில் மரித்துக் போனாள். அதன் பின்னர் வாரங்கள், மாதங்களாக ஒவ்வொரு நாளும் நான் துக்கத்தின் பாதையில் நடந்தேன். ஓர் அற்புதமான சிநேகிதியை இளம் வயதில் இழந்ததினால் ஏற்பட்ட வேதனை என் பார்வையை மறைத்தது. நான் சில வேளைகளில் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே உணராதிருந்தேன். துக்கமும், வேதனையும் என் கண்களைக் குருடாக்கி, தேவனைக் காணக் கூடாதவாறு செய்தன.

லூக்கா 24ல், இயேசுவின் மரணத்திற்கு பின் இரு சீடர்கள் குழப்பமடைந்தவர்களாய், இருதயம் நொறுங்குண்டவர்களாய் நடந்து செல்கையில், தாங்கள் உயிர்த்தெழுந்த இயேசுவோடு நடந்து செல்கின்றோம் என்பதையே உணராதிருந்தனர். இயேசு அவர்களுக்கு வேதாகமத்திலிருந்து அவர்களுடைய இரட்சகர் ஏன் மரிக்க வேண்டும், உயிர்த்தெழ வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார். பின்னர் அவர் அப்பத்தை எடுத்துப் பிட்ட போதுதான் அவர் இயேசு என்று தெரிந்து கொண்டனர் (வச. 30-31). இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நேரடியாகப் பார்த்த இயேசுவின் சீடர்களுக்கு இயேசு தன்னை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவராகக் காண்பித்து அவர்கள் மீண்டும் நம்பிக்கை பெறச் செய்தார்.

அந்த சீடர்களைப் போன்று நாமும் குழப்பத்தாலோ, கவலையினாலோ சோர்ந்து காணப்படலாம். ஆனால். இயேசுகிறிஸ்து உயிரோடிருக்கிறார். இவ்வுலகிலும், நம்மிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. நாம் இன்னமும் இருதய வேதனையையும் வலியையும் சந்தித்துக் கொண்டிருக்கும் போது நாம் இயேசுவை நம்மோடு நம்முடைய வேதனையின் பாதையில் நடந்து வரும்படி அழைப்போம். இயேசு உலகிற்கு ஒளியாயிருக்கிறார் (யோவா. 8:12). அவரே நம் பாதையை மறைக்கும் பனிமூட்டத்தினூடே நம்பிக்கையின் ஒளியைத் தருபவர்.

தேனீக்களும், பாம்புகளும்

சில பிரச்சனைகள் என்றால் தந்தையின் பெயர் அங்கு எழுதப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, சமீபத்தில் என்னுடைய குழந்தைகள் எங்கள் வீட்டின் முன் தாழ்வாரத்தின் பகுதியில், சுவரில் ஏற்பட்ட விரிசலில் தேனீக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே நான் பூச்சி விரட்டும் மருந்தோடு, தேனீக்களோடு போராட சென்றேன். ஐந்து முறை தேனீக்களால் கொட்டப்பட்டேன்.

பூச்சிகளால் கொட்டப்படுதல் எனக்கு விருப்பமில்லாத செயல்தான். ஆனால், என் பிள்ளைகளையோ, மனைவியையோ அவை கடிப்பதைவிட என்னைக் கடிப்பதே மேல். என் குடும்பத்தினரின் நல்வாழ்வுதான் என்னுடைய வேலையின் பிரதான நோக்கமாயிருக்கும். என் குழந்தைகளுக்கு ஒரு தேவையிருந்தால், அவர்கள் என்னைக் கொண்டே செய்யவிரும்புவார்கள். அவர்கள் பயப்படும் காரியங்களில் அவர்களைப் பாதுகாக்க அவர்கள் என்னை நம்பினார்கள்.

மத்தேயு 7ல், இயேசு நமக்குப் போதிப்பது என்னவெனின், நம்முடைய தேவைகளைக் குறித்து தேவனிடம் நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள இயேசு ஒரு விளக்கத்தைத் தருகின்றார். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?” (வச. 9-10) ஓர் அன்பு பெற்றோர் எதைக் கொடுப்பார் என நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால், இயேசு நம் பிதாவின் தயாள குணத்தின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடக் கூடாதென்பதற்காக “ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (வச. 11) என்றார்.

நான் என்னுடைய குழந்தைகளை இதையும் விட அதிகமாக நேசிக்க முடியாதென நினைக்கின்றேன். ஆனால், தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பில் மறைந்து போகும் என இயேசு கூறுகின்றார்.

அளவில்லாத அன்பின் வெளிப்பாடு

எங்களுடைய திருமண நாளில் என்னுடைய கணவன் ஆலன் பெரிய மலர்கொத்து ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். அவர் வேலை செய்த கூட்டுறவின் சீர்திருத்தத்தின் போது தன் வேலையை இழந்ததால், நான் இந்த அவசியமற்ற வீணான அன்பின் வெளிப்பாடு தொடர்வதை விரும்பவில்லை. ஆனால், எங்களது பத்தொன்பதாவது திருமணநாளில் வண்ண மலர்கள் எங்களது சாப்பாட்டு மேசையிலிருந்து ஜொலித்து என்னை வரவேற்றுக் கொண்டிருந்தன. இந்த வருடாந்திர வழக்கத்தைத் தொடர்வதற்கு அவர் விரும்பியதால், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து தன்னுடைய தனிப்பட்ட அன்பை வெளிப்படுத்த போதுமானதாக வைத்திருப்பார்.

என்னுடைய கணவனின் கரிசனையான திட்டமிடல் அவருடைய தாராள குணத்தை வெளிப்படுத்தியது. இது பவுல் கொரிந்து சபையினரை ஊக்கப்படுத்தியதைப் போன்றிருந்தது. இங்கு பவுல் அப்போஸ்தலன் அந்த சபையினரின் உதாரத்துவமான காணிக்கையைக் குறித்துப் புகழ்ந்துள்ளார் (2 கொரி. 9:2,5). உற்சாகமாய் கொடுக்கிறவர்கள் பேரில் தேவன் பிரியமாயிருக்கிறார் என அவர்களுக்குச் சொல்கின்றார் (வச. 6-7). ஆனால், ஒருவரும் நம்முடைய அன்புத் தந்தையைவிட அதிகமாகக் கொடுப்பதில்லை, அவரே நம்முடைய தேவையனைத்திற்கும் தருவதற்கு எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறவர் (வச. 8-10).

நாம் எல்லாவித கொடையிலும், ஒருவரையொருவர் தாங்குவதிலும் உதாரத்துவமாய் இருக்க வேண்டும், ஏனெனில், தேவன் நம்முடைய உலகத் தேவைகள், உணர்வு சார்ந்தவை மற்றும் ஆவிக்குரிய தேவைகள் யாவையும் சந்திக்கின்றார் (வச. 11). நாம் கொடுப்பதன் மூலம் நம்முடைய தேவன் நமக்குத் தந்துள்ளவற்றிற்கு நன்றியை வெளிப்படுத்துகின்றோம். நாம் பிறரையும் கொடுக்கும்படி ஊக்கப்படுத்தி, தேவன் தந்துள்ளவற்றிலிருந்து அவருக்கு கொடுத்து அவரைத் துதிக்கலாம் (வச. 12-13). அன்பையும் நன்றியையும் அதிகமாக வெளிப்படுத்துவதே நம்முடைய உதாரத்துவமான கொடை. அது தேவன் அவருடைய பிள்ளைகளின் தேவைகளையெல்லாம் சந்திக்கின்றார் என்ற நம்பிக்கையின் வெளிப்படுதலேயாகும்.

தன்னலமற்ற சேவை

ஒரு சிறிய கூட்ட மக்கள் திரண்டு நின்று அங்கு புல்தரையில் சரிந்துகிடந்த ஒரு பெரிய மரத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு முதிய பெண்மணி தன் ஊன்றுகோலில் சாய்ந்து நின்றபடி, முந்திய இரவில் வீசிய புயல் காற்று, நெடுநாட்களாக வளர்ந்திருந்த எங்களுடைய எல்ம் மரத்தைச் சாய்த்து விட்டதை விளக்கினார். மேலும் அவள் நடுங்கிய குரலோடும், உணர்ச்சி வசத்தோடும் “அது எங்களுடைய அழகிய கல்சுவரை உடைத்து விட்டது. நாங்கள் திருமணமாகி வந்தபோது என் கணவர் இந்த சுவரைக் கட்டுவித்தார். இந்தக் சுவரை அவர் மிகவும் நேசித்தார். நானும் அதனை நேசித்தேன். இப்பொழுது அவரைப் போன்று இதுவும் போய்விட்டது” என்றாள்.

அடுத்த நாள் காலை மரம் வெட்டும் குழுவினர் அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியைச் செய்வதை அவள்பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவளுடைய முகத்தில் ஒரு சிரிப்பு மலர்ந்தது. அந்த மரக்கிளைகளினூடே ஒரு பையன் அவளுடைய புல்தரையை சரி செய்து கொண்டிருந்தான். மேலும் இரு நபர்கள் அவள் நேசித்த அந்த கல் சுவரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர்.

நம்மைச் சுற்றியிருப்போரின் சோர்ந்த இருதயத்தைத் தூக்கி விடுதல் போன்றச் செயலை தேவன் அங்கீகரிக்கும் செயலாகத் தீர்க்கன் ஏசாயா விளக்குகின்றார். அந்த முதிய பெண்மணிக்கு அவள் விரும்பிய கல்சுவரை சரிசெய்து கொடுத்ததைப் போன்று, வெறுமனே ஆவிக்குரிய ஆராதனைசெய்வதைக் காட்டிலும் தன்னலமற்ற சேவைகளைப் பிறருக்குச் செய்வதை தேவன் அதிகம் விரும்புகின்றார் என இப்பகுதி நமக்குப் போதிக்கின்றது. தன்னலமற்ற சேவை செய்யும் அவருடைய பிள்ளைகள் மீது தேவன் இருவகையான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். முதலாவது நம்முடைய மனப்பூர்வமான சேவையை நலிந்தோரும், தேவையுள்ளோரும் பெறுமாறு பயன்படுத்துகின்றார் (ஏசா. 58:7-10). இரண்டாவது தேவன் இத்தகைய சேவையில் முனைந்திருப்போரை கனப்படுத்துகின்றார். நம்முடைய சேவை மனப்பான்மையை மேலும் உருவாக்கி, அவருடைய .ராஜ்ஜியத்தில் வல்லமையான கருவியாக பயன்படுத்துவார் (வச. 11-12). இன்றைய நாளில் என்ன செயலைச் செய்யப்போகின்றாய்?

நிறைவற்ற முழுமை

நான் எதையும் ஒரு குறைவுமின்றி முடிக்க முயற்சித்து அதனால் எல்லாவற்றையும் தள்ளிப்போடும் குணத்தை, என்னுடைய கல்லூரி பேராசிரியர் கண்டறிந்து, எனக்கு ஞானமுள்ள சில ஆலோசனைகளைக் கூறினார். “குறைவற்ற செயல் நன்மைக்கு எதிரியாக அமையும்படி விட்டுவிடாதே” என்றார். ஒரு குறைவில்லாத நிகழ்ச்சியை அமைக்க கடினமாக உழைக்கும்போது, அது நம் வளர்ச்சியைத் தடை செய்கின்றது என்றார். என்னுடைய வேலையிலுள்ள சில குறைபாடுகளை நான் ஏற்றுக் கொள்ளும்போது, அது நான் சுதந்திரமாக வளர்வதற்கு ஒரு வாய்ப்பாகிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் இன்னும் ஆழமான காரணங்களை விளக்குகின்றார். நாம் குறையில்லாதவர்களாக இருக்க சொந்த முயற்சியை எடுக்கும்போது, அந்த இடத்தில் கிறிஸ்துவின் செயல் தேவை என்பதை உணர முடியாதவர்களாகிவிடுகிறோம்.

இதனை பவுலும் கடினமானப் பாதையில் தான் கற்றுக் கொண்டார். பல ஆண்டுகளாக கடினப்பட்டு தேவனுடைய சட்டங்களுக்கு முழுமையாக கீழ்ப்படிய போராடிக் கொண்டிருந்த போது, இயேசுவின் சந்திப்பு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது (கலா. 1:11-16). தேவனுடைய பார்வையில் நம்மைக் குற்றமற்றவர்களாகக் காண்பிக்க நம்முடைய சொந்த முயற்சி போதுமானதாக இருப்பின்
“கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே” (கலா. 2:21) எனப் பவுல் உணர்ந்தார். நம்முடைய சுயத்தை சிலுவையில் அறைந்து மரிக்க ஒப்புக்கொடுக்கும் போது இயேசு அவனுக்குள் வாழ்வதை உணர முடியும் (வச. 20). நம்முடைய குறைவுகளில்தான் தேவனுடைய பூரணப்படுத்துதலை உணரமுடியும்.

ஆதலால் நாம் பாவத்திற்கு எதிர்த்து நிற்க முடியாது என்று அர்த்தமில்லை (வச.7). நாம் ஆவியில் வளர்ச்சியடைவதற்கு நம் சுய பெலத்தைச் சார்ந்திருத்தலை விட்டு விடவேண்டும் என்பதே அதன் பொருள் (வச. 20).

நம் வாழ்நாள் முழுவதும் நாம் வேலை செய்து கொண்டேயிருக்கிறோம். ஆனால், நம்முடைய இருதயம் குறைகளற்ற இயேசுவின் உதவி நமக்கு எப்பொழுதும் தேவை என்பதைத் தாழ்மையோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் இயேசு நம் இருதயத்தில் வாசம் பண்ணுவார் (எபே. 3:17). நீங்கள் அவருடைய அன்பில் வேரூன்றி நிலை பெற்றவர்களாகி சகல பரிசுத்தவான்களோடும் கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து “அறிவுக் கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக” வேண்டுமென்று வேண்டிக்கொள்கின்றேன் (வச. 17-19).

ஏனென்பது இயேசுவுக்குத் தெரியும்

என்னுடைய நண்பர்களில் சிலர் சிறிதளவு சுகம் பெற்றிருக்கின்றனர். ஆனால், இன்னமும் அந்த வியாதியின் வேதனையோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். வேறு சில நண்பர்கள் தங்களுடைய குடிபழக்கத்திலிருந்து விடுவிக்கப்படடிருந்தும், அந்த தூண்டுதலிலிருந்தும், உள் உணர்விலிருந்தும் முற்றிலும் விடுபடமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவன் ஏன் இவர்களை முற்றிலுமாக சுகப்படுத்தாமல் இருக்கின்றார்? என நினைத்து ஆச்சிரியப்பட்டதுண்டு.

மாற்கு 8:2-26ல் வாசிக்கும்போது இயேசு ஒரு பிறவிக் குருடனை சுகப்படுத்தின நிகழ்ச்சியை வாசிக்கின்றோம். முதலாவது இயேசு அவனை அந்த கிராமத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்கின்றார். பின்னர் அவனுடைய கண்களில் உமிழ்ந்து, அவன் மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா? எனக் கேட்டார். அவன், “நடக்கிற மனுஷரை மரங்களைப் போலக் காண்கின்றேன்” என்றான். இயேசு மறுபடியும் அவன் கண்களின் மேல் கைகளை வைத்தார். இப்பொழுது அவன் யாவரையும் தெளிவாகக் கண்டான்.

இயேசுவின் ஊழியகாலத்தில் இயேசுவின் வார்த்தைகளும், செயல்களும் மக்களையும், அவருடைய சீடர்களையும் அதிசயிக்கவும் குழப்பமடையவும் செய்தது (மத். 7:28, லூக். 8:10; 11:14) சிலரை அவரைவிட்டு ஓடும்படியும் செய்தது (யோவா. 6:66-66). இந்த இரு கட்ட அற்புதமும் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏன் அவனை உடனடியாக சுகப்படுத்தவில்லை?

ஏனென்பது நமக்குத் தெரியாது. ஆனால், அந்த மனிதனுக்கும் அவனுடைய சுகத்தைக் கண்ட அவருடைய சீடர்களுக்கும் அந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அவர் அறிவார். நாம் தேவனோடு கொண்டுள்ள உறவில், இன்னும் நெருங்கி வர நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார். அனைத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாதாயினும், நம் வாழ்விலும், நாம் நேசிக்கின்றவர்களின் வாழ்விலும் தேவன் செயல்படுகின்றார் என்பதை நம்புவோம். நாம் அவரைத் தொடர்ந்து பின்பற்ற நமக்குத் தேவையான பெலனையும், தைரியத்தையும், தெளிவையும் அவர் தருவார்.

விழிப்புடன் கவனித்தல்

என்னுடைய மகன் பள்ளிக்குச் செல்வதற்கு கதவைத் தாண்டி ஓடும்போது, நான் அவனை பற்களைத் துலக்கினாயா எனக் கேட்டேன். மீண்டும் இக்கேள்வியைக் கேட்டதோடு உண்மை பேசுவதின் முக்கியத்துவத்தையும் அவனுக்கு நினைப்பூட்டினேன். என்னுடைய அறிவுரையைக் குறித்துச் சற்றும் பாதிப்படையாமல், கிண்டலாக குளியல் அறையில் ஒரு பாதுகாப்பு கேமரா பொருத்துவதே உங்களுக்குத் தேவை என்றான். அப்படியென்றால் நானே நேரடியாக அவன் பல்துலக்கியதை உறுதிப்பண்ணிக் கொள்ள முடியும், அவனும் பொய் சொல்ல தூண்டப்படமாட்டான்.

ஒரு பாதுகாப்பு கேமரா, நாம் சட்டங்ககளைக் கைக்கொள்ள நம்மை நினைவுபடுத்தலாம், ஆனால், நம்மை யாரும் கவனிக்கமுடியாத இடங்களும், நம்மையாரும் பார்க்கக்கூடாத வழிகளும் உள்ளன. ஒருவேளை நம்முடைய புத்திசாலித்தனத்தால் இந்த பாதுகாப்பு கேமராவை தவிர்த்துவிடலாம். ஆனால், நாம் தேவனுடைய பார்வையைவிட்டு விலகிவிட்டோமென்று நினைத்தால், நாம் நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம்.

“எவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ?” என்று கர்த்தர் கேட்கின்றார் (எரே. 23:24). அவருடைய இந்தக் கேள்வியில் ஓர் ஊக்கப்படுத்துதலும், ஓர் எச்சரிப்பும் இருக்கின்றது.

எச்சரிப்பு என்னவெனில், நாம் ஓடி ஒளிந்து கொள்ளவோ, அவரை ஏமாற்றவோ முடியாது. நாம் செய்யும் எல்லா காரியங்களும் அவர் பார்வையில் தெளிவாக இருக்கின்றது.

அவர் தரும் ஊக்கம் என்னவெனில், இப்புவியிலோ அல்லது வானத்திலோ எங்கிருந்தாலும் நம்முடைய பரலோகத் தந்தையின் விழிப்போடுள்ள பாதுகாப்பிற்குள் இருக்கின்றோம் என்பதே. நாம் தனிமையில் இருப்பதாக எண்ணினாலும் தேவன் நம்மோடிருக்கின்றார். இன்று நாம் எங்கு சென்று கொண்டிருந்தாலும் இந்த உண்மை நம்மை அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து அவர் தரும் ஆறுதலைப்பெற்றுக்கொள்ள அழைக்கின்றது. அவர் நம்மை விழிப்புடன் கவனிக்கின்றார்.