எதை நோக்கிச் செல்கின்றாய்?
நம்முடைய வாழ்வின் திசையை எது தீர்மானிக்கின்றது? இந்தக் கேள்விக்கான விடையை நான் ஒரு எதிர்பாராத இடத்தில் பெற்றேன். அது ஒரு மோட்டார் வாகன பயிற்சிமையத்தில். நானும் என்னுடைய சில நண்பர்களும் மோட்டார் வாகனத்தை ஓட்ட விரும்பினோம். எனவே நாங்கள் அதனைக் கற்றுக்கொள்ள ஒரு வகுப்பில் சேர்ந்தோம். எங்களுடைய பயிற்சியின் ஒருபகுதி, இலக்கினை நிர்ணயித்தலைப் பற்றியிருந்தது.
எங்களுடைய பயிற்சியாளர், “கடைசியாக, நீங்கள் எதிர்பாராத ஒரு தடையை சந்திக்கப் போகின்றீர்கள்.” நீங்கள் தடையையே நினைத்து கவனித்தால், உங்களுடைய இலக்கு அதுவாகிவிட்டால், நீங்கள் அதற்கு நேராக ஓட்டிச் செல்வீர்கள், ஆனால், நீங்கள் முன்னோக்கிப் பார்த்துக் கொண்டு, அதனை வேகமாகக் கடந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கிப்பார்த்தால் தடையில் மோதுவதை தவிர்த்து விடலாம். அத்தோடு, “நீங்கள் எங்கு பார்க்கின்றீர்களோ, அங்குதான் நீங்கள் போய் சேர்வீர்கள்" என்று கூறினார்.
இந்த எளிமையான, ஆனால், ஆழமான தத்துவம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பொருத்தமானது. நாம் நம்முடைய கவனத்தை ஒரு காரியத்தில் நிலைப்படுத்தும்போது - நம்முடைய பிரச்சனைகளிலோ, போராட்டங்களிலோ முழு கவனத்தையும் செலுத்தும் போது நம்முடைய வாழ்வும் தானாகவே அதனைச் சுற்றியேயிருக்கும்.
ஆனால், நம்முடைய பிரச்சனைகளையும் தாண்டி, நம்முடைய பிரச்சனைகளில் உதவக் கூடிய ஒருவரையே நாம் நோக்கிப் பார்க்கும் படி வேதாகமம் நம்மை ஊக்கப்படுத்துகின்றது. சங்கீதம் 121ல், “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" எனக்குப் பதில் எங்கிருந்து வரும் என்பதையும் அதே சங்கீதத்தில் காண்கின்றோம். “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்... கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இது முதற்கொண்டு என்றைக்குங் காப்பார்" (வச. 1-2,8).
சில வேளைகளில் நமக்கு ஏற்படுகின்ற தடைகள் மேற்கொள்ள முடியாதவைகளாகத் தோன்றலாம். அவை நம்முடைய பார்வை கோணத்தை முற்றிலும் மறைத்து விடாதபடி, நம்முடைய பிரச்சனைகளுக்கப்பால் தேவனை நோக்கிப் பார்க்கும்படி தேவன் நம்மையழைக்கின்றார்.
அன்பின் அழகு
“ஐராபே டப்பாஷியோ" என்பது மெக்ஸிகோவின் தொப்பி நடனம், அது காதலைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. இந்த நடனத்தின் உச்சக்கட்டத்தில் அந்த மனிதன் தன்னுடைய அகன்ற தொப்பியை தரையில் வைப்பான். நடன முடிவில் அந்தப் பெண் அத்தொப்பியை எடுக்க, இருவரும் அத்தொப்பியின் பின்னால் மறைந்து தங்களுடைய காதல் முத்தத்தோடு நடனத்தை முடிப்பர்.
திருமணத்தில் உண்மையாயிருப்பதின் முக்கியத்துவத்தை இந்த நடனம் எனக்கு நினைவுபடுத்தியது. நீதிமொழிகள் 5ல், கெட்ட நடத்தையின் விளைவுகளைப் பற்றி கூறியபின், திருமணம் இருவருக்கிடையேயுள்ள உறவு என்பதை உறுதிப்படுத்துவதை வாசிக்கின்றோம். “உன் கிணற்றிலுள்ள தண்ண்ரையும் உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு (வச. 15). பத்து ஜோடிகளுக்கு மேலாக ஜராபே நடனமாடினாலும் ஒவ்வொருவரும் தன்னுடைய துணையின் மீதே கவனம் செலுத்துவர். நாமும் ஆழமான பிரிக்கமுடியாத அர்ப்பணத்தை நம்முடைய துணையிடம் கண்டு மகிழ்வோம் (வச. 18).
நம்முடைய காதலும் கவனிக்கப்படுகிறது. அந்த நடனக் கலைஞர்கள் தங்களுடைய துணையோடேயே மகிழ்கின்றனர். தங்களை ஒருவர் கவனிக்கின்றார் என்ற உணர்வுடனேயே நடனமாடுவார். இதேப் போன்று இந்த அதிகாரத்திலும், “மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்" (வச. 21). தேவன் நம்முடைய திருமணத்தை பாதுகாக்க விரும்புகிறார். எனவே அவர் தொடர்ந்து கவனித்தக் கொண்டேயிருக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்பதன் மூலம் அவரை பிரியப்படுத்துவோம்.
ஐராபேயிலுள்ள தாளத்தைப் போன்றே நம் வாழ்விலும் நாம் தாளத்தைப் பின் தொடரவேண்டியுள்ளது. நம்முடைய திருமண வாழ்வு அல்லது தனிவாழ்வு தாளத்தோடு இசைந்திருந்தால், அதாவது நாம் நம்முடைய படைப்பாளிக்கு உண்மையுள்ளவர்களாயிருந்தால், அவருடைய ஆசீர்வாதங்களையும், சந்தோஷங்களையும் பெற்றுக்கொள்வோம்.
கேள்விகளோடு ஆராதித்தல்
ஒரு நீண்ட அல்லது குறுகிய பயணம் எதுவாக இருந்தாலும், அந்தக் குழுவில் பயணம் செய்யும் யாரேனும் “இன்னும் அந்த இடம் வரவில்லையா? “அல்லது" இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்?" போன்ற கேள்விகளைக் கேட்பது வழக்கம் தான். இத்தகைய கேள்விகள் குழந்தைகளின் உதட்டிலிருந்து வருவதை எல்லாருமே கேட்டிருப்போம். பெரியவர்களும் நம்முடைய இலக்கினை சீக்கிரம் அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் கேள்விகளைக் கேட்கின்றனர். எல்லா வயதினரும், தாங்கள் சோர்வடையும் போது இத்தகைய கேள்விகளைக் கேட்க தூண்டப்படுவர், ஏனெனில், வாழ்க்கையில் சவால்கள் ஒருபோதும் ஓய்ந்து போவதில்லை.
இதேப்போன்ற நிலையில்தான் தாவீதும் இருந்தார் என்பதை சங்கீதம் 13ல் காண்கின்றோம். இதிலுள்ள இரு வசனங்களில் நான்கு முறை (வச. 1-2) தாவீது தான் மறக்கப்பட்டவனாகவும், கைவிடப்பட்டவனாகவும், தோற்;கப்பட்டவனாகவும், இவையெல்லாம் எவ்வளவு காலத்திற்கு? எனப் புலம்புகிறான். இரண்டாவது வசனத்தில் அவன் எதுவரைக்கும் என் எண்ணங்களோடு போராடிக் கொண்டிருப்பேன்? எனக் கேட்கின்றான். இவ்வாறு புலம்பலை கொண்ட சங்கீதங்கள் மறைமுகமாக, நம்முடைய கேள்விகளோடு தேவனை ஆராதிக்க வருமாறு அனுமதிக்கின்றன. இத்தகைய கவலையும், வேதனையும் நிறைந்த நீண்ட காலங்களில் நாம் பேசுவதற்கு தேவனைத் தவிர வேறு சிறந்த நபர் யார் இருக்க முடியும்? நம்முடைய வியாதியின் போராட்டங்களையும், துயரங்களையும், நாம் விரும்பும் மனிதர்களின் தன்னிஷ்டப் போக்கினையும், உறவினரிடையேயுள்ள கஷ்டங்களையும் நாம் தேவனிடம் கொண்டு வரலாம்.
நமக்குக் கேள்விகளிருந்தாலும் நாம் தேவனை ஆராதிப்பதை விட்டுவிடத் தேவையில்லை. சர்வவல்ல, பரலோக தேவன் நம்முடைய கவலை நிரம்பிய கேள்விகளை அவரிடம் கொண்டு வரும்படி அழைக்கின்றார். ஒருவேளை தாவீதைப் போன்று, சரியான வேளையில் நம்முடைய கேள்விகள் வேண்டுதல்களாகவும், நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், தேவனைப் போற்றும் துதிகளாகவும் மாறிவிடும் (வச. 3).
உன்னால் எதை விட முடியவில்லை?
“உன்னால் விட முடியாத ஒன்று எது?" என வானொலி தொகுப்பாளர் கேட்டார். கேட்போர் சிலர் ஆர்வத்தோடு பதிலளித்தனர். சிலர் தங்கள் குடும்பங்களைக் குறிப்பிட்டனர். ஒரு கணவன், மரித்துப்போன தன் மனைவியின் நினைவுகளைக் குறிப்பிட்டார், வேறுசிலர் இசையின் மூலம் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் கனவையும், ஒரு தாயாகும் கனவையும் பகிர்ந்தனர். ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைப் பொக்கிஷமாக வைத்துள்ளோம். ஒரு நபர், ஒன்றை நிறைவேற்றல், ஒன்றை அடைதல் என நாம் ஏதோ ஒன்றை விட முடியாமல் வைத்திருக்கின்றோம்.
ஓசியா புத்தகத்தில். தேவன் தான் தெரிந்துகொண்ட ஜனங்களை கைவிடுவதில்லையெனவும், அவர்களைத் தனது விலையேறப்பெற்ற பொக்கிஷமாக வைத்திருப்பதாகவும் கூறுகின்றார். இஸ்ரவேலின், நேச மணவாளனான தேவன் அவளுக்குத் தேவையான யாவற்றையும், நிலம், ஆகாரம், தண்ணீர், உடை மற்றும் பாதுகாப்பையும் கொடுத்தார். ஆனால், இஸ்ரவேலோ வேசித்தனம் பண்ணி தேவனைப் புறக்கணித்து தங்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும் வேறு இடத்தில் தேடினர். தேவன் அவளை எவ்வளவுக்கு அதிகமாய் தேடினாரோ அவ்வளவு தூரமாய் அவள் சோரம் போனாள் (ஓசியா 11:2) எப்படியிருந்தாலும், அவள் தேவனை மிகவும் வேதனைப்படுத்தினாலும் தேவன் அவர்களைக் கைவிடுவதில்லை (வச. 8). அவர் இஸ்ரவேலை சீர்ப்படுத்தி, விடுவிப்பார். அவருடைய விருப்பமெல்லாம் அவளோடு தன்னுடைய உறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதே (வச. 11).
இன்று தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் இந்த உறுதியைத் தருகின்றார். அவர் நம்மீது வைத்துள்ள அன்பு நம்மை ஒருபோதும் கைவிடும் அன்பல்ல (ரோம. 8:37-39). நாம் அவரை விட்டு அலைந்து திரிந்தோமேயானால், அவர் நாம் மீண்டும் அவரிடம் வரும்படி ஏங்குகின்றார். அவர் நம்மை சீர்ப்படுத்தும் போது, நாம் தேற்றப்படுவோம், அதுவே அவர் நம்மை சேர்த்துக் கொள்வதின் அடையாளம், அவர் நம்மைத் தள்ளிவிடுபவரல்ல. நாம் அவருடைய பொக்கிஷம், அவர் நம்மைக் கைவிடுவதில்லை.
பொருளைவிட பகிர்தல் மேலானது
“ஆனால், நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை" எனக் கதறினான் என்னுடைய இளைய மகன். அவன் தன்னுடைய வீகோ துண்டுகளில் ஒன்றையாகிலும் கொடுக்கனேரிடும் என எண்ணி, உள்ளம் உடைந்தான். நான் அவனுடைய முதிர்ச்சியின்மையை வியந்து பார்த்தேன். ஆனால், உண்மையில் இந்த குணம் குழந்தைகளிடம் மட்டும் தானுள்ளதா? எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கொடுப்பதற்கு விடாப்பிடியான மறுப்பைத் தெரிவிக்கும் குணம் மனிதருக்கு உள்ளது என்பதை என்னுடைய வாழ்வின் அனுபவத்தில் கண்டுள்ளேன்.
இயேசுவின் விசுவாசிகளான நாம் நம்முடைய வாழ்வை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். இதனையே ரூத் தன்னுடைய மாமியோடு செய்தாள். கைவிடப்பட்ட விதவையான நகோமியிடம் ரூத்துக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. இருந்தாலும் ரூத் தன் வாழ்வை தன் மாமியாரோடு இணைத்துக் கொண்டாள். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிப்போம், மரணம் வரை சேர்ந்தே வாழ்வோம் என்கின்றாள். அவள் நகோமியிடம், “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" (ருத். 1:16) என்கின்றாள். அவள் தனக்குள்ளதையெல்லாம் தாராளமாக அந்த முதிய பெண்மணிக்குக் கொடுத்தாள், தன்னுடைய அன்பையும், கரிசனையையும் காட்டினாள்.
நம்முடைய வாழ்வை இத்தகைய முறையில் பகிர்ந்துகொள்வதென்பது சற்று கடினமானதுதான். ஆனால், அந்த தாராள குணத்தின் விளைவு என்ன என்பதை நாம் நினைவு கூரவேண்டும். ரூத் தன் வாழ்வை நகோமியோடு பகிர்ந்து கொண்டாள். பின்னர், அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவன்தான் தாவீது அரசனின் தாத்தா. இயேசு தம்முடைய சொந்த வாழ்வை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் நிராகரிக்கப்பட்ட போதும் பிதாவினால் அவர் மகிமைப்படுத்தப்பட்டார். இப்பொழுது அவர் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து அரசாட்சி செய்கின்றார். நாமும் நம் வாழ்வை பிறரோடு தாராளமாகப் பகிர்ந்து கொள்ளும்போது நிச்சயமாக ஓர் நாள் ஒரு பெரிய வாழ்வை அனுபவிப்போம் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இரவில் கேட்ட பாடல்
என்னுடைய தந்தையின் வாழ்வு ஏக்கம் நிறைந்ததாகவேயிருந்தது. அவர் பார்க்கின்சன்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மனதிலும், உடலிலும் குறுகிக் கொண்டேயிருந்த போதிலும், அவர் ஒரு முழுமையைப் பெற ஏங்கினார், அவர் அமைதியைப் பெற விரும்பினார், ஆனால், மன அழுத்தத்தின் வேதனையால் அவதியுற்றார். அவர் அன்பைப் பெறவும், அனுபவிக்கவும் ஏங்கினார். ஆனால், எப்பொழுதும் தனிமையையேயுணர்ந்தார்.
அவர் தனக்கு விருப்பமான சங்கீதம் 42ன் வார்த்தைகளை வாசித்தபோது தன்னுடைய தனிமையுணர்விலிருந்து சற்றே விடுவிக்கப்பட்டார். அவரைப்போன்று சங்கீதக்காரனும் ஆற்றொணா ஏக்கத்தையும், சுகம் பெற வேண்டுமென்ற தீராத தாகத்தையும் அறிவார் (வச. 1-2). அவரைப் போன்று. சங்கீதக்காரனும் ஒருபோதும் தீராத துயரம் எப்படியிருக்கும் என்பதையறிவான் (வச. 3). உண்மையான மகிழ்ச்சியின் நாட்கள் என்பது என்றோ நடந்த ஒரு காரியம் என நினைக்கும்படி அவருடைய துயரம் இருந்தது (வச. 6). என் தந்தையைப் போன்று குழப்பத்தின் அலைகளும், வலியும் வேதனையும் அவரை மேற்கொண்டன (வச. 7). சங்கீதக்காரன் தான் தேவனால் கைவிடப்பட்டவனாக உணர்ந்து “ஏன்" எனக் கேட்கின்றான் (வச. 9).
இந்த சங்கீதத்தின் வார்த்தைகள் அவரின் துயரைத் துடைத்து, அவருக்குத் தான் தனிமைமையிலில்லை என்ற உறுதியைத் தந்தது. வேதனையின் மத்தியில் என்னுடைய தந்தைக்கு ஒரு சமாதானம் கிடைத்தது. ஓர் அன்பின் குரல் அவரைச் சூழ்ந்து கொண்டது. அக்குரல் அவருக்கு ஓர் உறுதியைக் கொடுத்தது, அவருக்குப் பதில் கிடைக்கவில்லையெனினும் அலைகள் அவர்மேல் புரண்டுவந்தாலும், அவர் இன்னமும் தேவனால் நேசிக்கப்படுகின்றார் (வச. 8).
எப்படியோ, இரவில் கேட்ட அந்த அன்பின்பாடல் அவருக்குப் போதுமானதாக இருந்தது, பற்றிக்கொள்ளும்படியான ஒரு சிறிய நம்பிக்கையை, அன்பை, மகிழ்ச்சியை என் தந்தைக்குக் கொடுக்கும்படி போதுமானதாக இருந்தது. அவருடைய எல்லா ஏக்கங்களும் நிறைவேறி திருப்தியைத்தரும் நாளுக்காக காத்திருக்கும்படி அவருக்குப் போதுமானதாக இருந்தது (வச. 5,11).
நம்பிக்கையே உறுதியான அஸ்திபாரம்
விசுவாசத்தைக் குறித்துப் பாடங்களை நாம் எதிர்பாராத இடங்களிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம். சமீபத்தில் நான் எனது 110 பவுண்டு எடையுள்ள, கருப்பு நிற, “கரடி” (டீநயச) என்று நான் பெயரிட்டுள்ள, லேப்ரடார் வகை நாயிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். தண்ணீர் குடிக்கும் பெரிய, உலோகப் பாத்திரம் சமையலறையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும். எப்பொழுதெல்லாம் அது காலியாகின்றதோ அப்பொழுதெல்லாம் அது குரைப்பதோ, தன் பாதங்களால் அதைச் சுரண்டுவதோ கிடையாது. ஆனால், அதனருகில் அமைதியாகப் படுத்து, காத்திருக்கும். சில நேரங்களில் நீண்ட நேரம் வரைக் கூட காத்திருக்க நேரிடும். ஆனால், கரடி நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொண்டது. நான் எப்படியும் அந்த அறைக்குள் வருவேன், அதனை அங்கு பார்த்து, அதற்குத் தேவையானவற்றைத் தருவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும். அது என் மீது வைத்துள்ள அந்த விசுவாசம், என்னையும் என்னுடைய தேவைகளுக்காக தேவன் மீது நம்பிக்கையோடு காத்திருக்கக் கற்றுக் கொடுத்தது.
“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது" (எபி. 11:1) என வேதாகமம் நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த நம்பிக்கை மற்றும் உறுதியான அஸ்திபாரம் தேவனே. அவர் “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும்" காண்கின்றோம். இயேசுவின் மூலம் தம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களுக்கு, தேவன் தாம் வாக்களித்துள்ளவற்றை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார்.
சில வேளைகளில் நாம் காணாதவைகளின் மீது விசுவாசமாயிருப்பது எளிதாகத் தோன்றாது. ஆனால். நாம் தேவனுடைய நன்மையின் மீதும் அன்பின் மீதும் அமர்ந்திருந்து, அவருடைய ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாய் விளங்கும் என்பதை நம்பி காத்திருக்க வேண்டும். அவர் சொன்னதை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்முடைய அழிவில்லாத ஆன்மாவைக் காப்பாற்றவும், நம்முடைய அனைத்து தேவைகளையும் இப்பவும், எப்பவும் சந்திக்கவும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.
கிராடட் என்ற மீனினத்தின் அவலநிலை
என்னுடைய உறவினன் என்னை கிராடட் என்றழைக்கப்படும் கிரே மீன்களைப் ஒருவகை தண்ணீர் லாப்ஸ்டர்) பிடிக்க வரும்படி என்னை அழைத்தான். நான் மிகவும் ஆர்வத்தோடு சென்றேன். அவன் என்னிடம் ஒரு பிளாஸ்டிக் வாளியைக் கொடுத்தான். “மூடியில்லையா?" எனக் கேட்டேன்.
“அதற்குத் தேவையில்லை" என்றான். மீன் தூண்டில்களையும், ஒரு சிறிய பையில் தூண்டில் கொக்கியில் வைக்கத் தேவையான கோழி இறைச்சித்துண்டுகளையும் எடுத்துக் கொண்டோம்.
பின்னர், நான் அந்த சிறிய மீனினங்களைக் கவனித்த போது, அவை ஒன்றன் மீது ஒன்று மோதி ஏறி தப்பிக்க நிறைவேறாத முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த வாளியில் நிரம்ப இருந்தும் அவைகளால் வெளியேற முடியவில்லை. அப்பொழுதுதான் ஏன் அதற்கு மூடி தேவையில்லையென்பதைப் புரிந்து கொண்டேன். எப்பொழுது ஒரு கிராடட் விளிம்பை எட்டுகிறதோ, உடனே மற்றவை அதனைக் கீழே இழுத்துவிடுகின்றன.
இந்த கிராடட்டின் அவலநிலை, என்னை சிந்திக்க வைத்தது. நம்முடைய சொந்த லாபத்தை மட்டும் நோக்கிக் கொண்டு, நம்முடைய சமுதாயத்தின் நலனை கருதவில்லையெனின் அது எத்தனை அழிவுக்குள்ளானது என யோசித்தேன். தெசலோனிக்கேயர் சபை விசுவாசிகளுக்குப் பவுல் எழுதும் போது, ஒருவரையொருவர் தூக்கிவிடுவதன் தேவையையும், ஒருவரையொருவர் சார்ந்து வாழுவதின் அவசியத்தையும் புரிந்து கொள்ளும்படிச் செய்கின்றார். “ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்" எனப் போதிக்கிறார் (1 தெச. 5:14).
ஒருவர் மீது மற்றவர் அக்கறையோடிருக்கும், அவர்களுடைய நற்குணத்தைப் பாராட்டி (வச. 11), அவர்கள் இன்னும் அதிக அன்புடனும், சமாதான உறவிலும் வாழும்படி ஊக்குவிக்கின்றார் (வச. 13-15). அவர்களுக்குள் மன்னிப்பு, நீடிய சாந்தம், இரக்கம் போன்ற பண்புகளை உருவாக்கும்படியும், தேவனுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவிலும் பலப்படும்படியும் முயற்சிக்கின்றார் (வச. 18,23).
இத்தகைய அன்பின் ஒருமைப்பாடு இருக்கும்போது தான், சபை வளர்ச்சியடையும், கிறிஸ்துவுக்கு சாட்சிகளாயிருக்கவும் முடியும். விசுவாசிகள் தேவனை கனப்படுத்தி, பிறரைத் தூக்கிவிடும்படி தம்மை அர்ப்பணித்து, அவர்களைச் சோர்வடையச் செய்யும் வார்த்தைகளையும், செயலையும் தவிர்த்தோமாயின் நாமும் நம்முடைய சமுதாயமும் வளர்ச்சியடைய முடியும்.
