வகை  |  odb

உங்களது பிதா அறிவார்

கோடை காலத்தில் ஒரு நாள் இரவு, என் தகப்பனாருடன் கூட, தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் படுத்திருந்தேன். அப்பொழுது எனக்கு நான்கு வயது. எனது தாயார் குழந்தையோடு ஒரு தனி அறையில் இருந்தார்கள். எப்பொழுதும் வெப்பமாக இருக்கும் வட கானாவில் இது நடந்தது. என் உடல் முழுவதும் வியர்த்து, என் தொண்டை தாகத்தால் மிகவும் வறண்டது. அதனால் என் தகப்பனாரை எழுப்பினேன். எனது தாகத்தைத் தீர்க்க என் தகப்பனார் அந்த நடு இரவில் எழுந்து ஒரு குவளையிலிருந்த தண்ணீரை எனக்கு ஊற்றிக் கொடுத்தார். அன்றிரவு செய்ததுபோல…

நம்மால் புரிந்து கொள்ள இயலாதபொழுது

அனுதினமும் எனது வேலையைச் செய்ய தொழில் நுட்பக்கருவிகளையே சார்ந்திருந்தாலும், அவைகள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கணினியை இயக்கி வார்த்தைகளின் அட்டவணையைப் (Word Document) பெற்று எழுதும் வேலையை நான் ஆரம்பிக்கிறேன். ஆனால் கணினியிலுள்ள சிலிகான் சில்லுகள் மைக்ரோசில்லுகள் (Micro Chips), கணினியில் பயன்படுத்தும் தரவுகளை நிலையாகத் தேக்கி வைக்கும் வன்தட்டுகள் (Hard disk), வை- ஃபை இணைப்புகள் அல்லது கணினியில் தோன்றும் பலவண்ணக் காட்சிகள் காட்டும் திரை (full color display) இவைகளெல்லாம் எப்படி வேலை செய்கின்றனவென்று…

உங்களது எண்ணங்களை உருவாக்குதல்

1964ல் மார்ஷல் மக்லூஹன் “ஊடகங்களே செய்தி”, என்ற வாக்கியத்தை உருவாக்கின காலத்தில், கணினி கிடையாது, கைபேசிகள் அறிவியல் கற்பனைகளாக இருந்தன, வலைத்தளம் இல்லவே இல்லை. இக்காலத்தில் நமது சிந்திக்கும் திறனாற்றல் எண்கள் மூலம் சேகரிக்கப்படும் முறையினால் (Digital) தாக்கம் அடைந்துள்ளதை மார்ஷல் முன்னமே அறிவித்து விட்டார். நிக்கலோஸ் கார் எழுதின த ஷேலோஸ் (The Shallows) என்ற புத்தகத்தில் இணையதளம் நமது மூளைக்கு என்ன செய்கிறது என்பது பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். “தகவல் தொடர்பு சாதனங்கள், நம்முடைய சிந்தனைக்கு வேண்டிய கருத்துக்களைத் தருகின்றன. ஆனால்…

பயமில்லை

வேதாகமத்தில்,தேவதூதன் தோன்றும் ஒவ்வொரு சமயத்திலும் அவன் பயன்படுத்தும் முதல் வார்த்தைகள் “பயப்படாதிருங்கள்” (தானியேல் 10:12–19; மத்தேயு 28:5; வெளிப்படுத்தல் 1:17). இது ஆச்சரியமாக உள்ளது. இந்த தேவதூதர்கள் பூமியிலுள்ள மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது, தூதர்கள் கூறுவதைக் கேட்கும் மனிதர்கள் பொதுவாக பயத்தினால் உணர்வற்றவர்களாய் முகங்குப்புற விழுகிறார்கள். ஆனால் தேவன் மனிதர்களை பயப்படுத்தாத முறையில் பூமிக்கு வந்ததை லூக்கா கூறுகிறார். மனிதர்களாகிய நாம் பயப்படாமல் இருக்கத்தக்கதாக, தேவாதி தேவன் இயேசு பாலகனாக சத்திரத்தின் முன்னணையில் பிறந்தார். புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தை பய உணர்வை உண்டாக்குமா?…

சுட்டெரிக்கும் சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காக்கப்படல்

நான் பிரிட்டனில் வாழ்ந்து வருவதால் வெயிலின் சூட்டினால் ஏற்படும் தோல் வியாதியைப்பற்றி பொதுவாக நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், இங்கு சூரியன் மிக கடுமையான மேகத்தால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். சமீபகாலத்தில் நான் ஸ்பெயின் நாட்டில் சில நாட்கள் கழிக்க வேண்டியதிருந்தது. எனது தோல் வெளிறிய நிறத்தில் இருந்ததால், குடையின் நிழலுக்குள் ஓடி ஒளியாமல் பத்து நிமிடங்களுக்கு மட்டும்தான் என்னால் சூரிய ஒளியில் இருக்க முடிந்ததை விரைவில் உணர்ந்தேன்.

மத்திய தரைக்கடலின் சுட்டெரிக்கும் சூரிய கதிரின் தாக்கத்தை நான் எண்ணினபொழுது தேவன் அவரது மக்களின் வலது பக்கத்தில்…

யார் அவர்களுக்கு கூறுவார்கள்?

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. சமாதானம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிலிப்பைன்ஸில் ஒரு தீவிலிருந்த கிரு ஒனோடா என்ற ஜப்பானிய லெப்டினன்ட் யுத்தம் நின்றதை அறியவில்லை. அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. யுத்தம் நின்றுவிட்டது என்று அச்சடிக்கப்பட்ட கைப்பிரதிகள் அவன் இருக்கும் பகுதியில் போடப்பட்டன. அவன் இருக்குமிடத்திலிருந்து எதிரிகளைத் தாக்க வேண்டும் என்ற கட்டளையை அவன் 1945ல் பெற்றான். ஆகவே ஒனோடோ, போடப்பட்ட கைப்பிரதிகள் எதிராளியின் தந்திரமான பொய்ப்பிரச்சாரம் என்று அந்தக் கைப்பிரதி கூறின செய்தியை நிராகரித்து விட்டான். யுத்தம் முடிந்து ஏறக்குறைய…

நான் அவரை நேசிப்பதால்

என் கணவர் அலுவல் நிமித்தமாக வெளியூருக்குச் சென்று திரும்புவதற்கு முந்தின நாள் என் மகன், “அம்மா, அப்பா வீட்டிற்கு வரவேண்டுமென்று ஆவலாக இருக்கிறேன்” என்று கூறினான். ஏன் என்று கேட்டேன். பொதுவாக அவனது தகப்பனார் வெளியூருக்குச் சென்று திரும்பும் பொழுது அவனுக்கு வாங்கி வரும் பரிசுப்பொருட்களை விரும்பியோ அல்லது அவனது தகப்பனார் வீட்டிலிருக்கும் பொழுது அவரோடு பந்து விளையாட இயலவில்லையே என்ற காரணங்களால் அவன் அப்படி கூறினான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவன் மிகவும் கருத்தோடே கூட “நான் எனது அப்பாவை மிகவும் நேசிப்பதினால்…

யாரைத் தற்காக்கிறீர்கள்?

இலக்கண ஆசிரியர் இலக்கண வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வகுப்பிற்கு முன் வந்து நின்று, ஒரு வாக்கியத்தை இலக்கண ரீதியில் விளக்கும்படி கேத்தலீனிடம் கூறினார். அவள் மிகவும் பயந்து விட்டாள். அவள் சமீப காலத்தில் தான் அந்தப் பள்ளியில் வந்து சேர்ந்திருந்தாள். ஆகவே மேற்கூறப்பட்ட இலக்கணத்தை கற்றது கிடையாது. அந்த வகுப்பிலிருந்த மற்ற மாணவர்கள் அவளைப் பார்த்து நகைத்தார்கள்.

உடனே, அவளைத் தற்காக்க ஆசிரியர் முன் வந்தார். “விரைவில் எதிர்காலத்தில் அவள் உங்கள் எல்லாரையும்விட மிகவும் தலைசிறந்தவளாகி விடுவாள்” என்று விளக்கினார். அநேக ஆண்டுகளுக்குப்…

இடர்பாடுகள் மத்தியில் மகிழ்ச்சியாயிருங்கள்

எமில் ஒரு வீடற்ற மனிதன். அவன் ஒவ்வொரு நாளும் சாலையிலுள்ள நடைபாதையை குனிந்து பார்த்துக்கொண்டே நடந்து ஆண்டு முழுவதையும் கழித்தவன். யாராவது அவனை அடையாளம் கண்டு கொண்டால் அவர்களை நேருக்கு நேராக சந்திக்க வெட்கப்பட்டான். ஏனெனில் அவனது வாழ்க்கை எப்பொழுதும் இதுபோல நடைபாதையில் கழிக்கப்படவில்லை. அவன் சாலையில், கீழே விழுந்து கிடக்கும் காசு அல்லது பாதி புகைத்து வீசப்பட்ட சிகரெட் துண்டு கிடைக்குமாவென்று அவ்வாறு குனிந்தே நடந்தான். அவ்வாறு அவன் தொடர்ந்து குனிந்தே நடப்பது அவனுக்கு வழக்கமாகி விட்டதால், அவனுடைய முதுகெலும்புத் தண்டும் நிலையாக…