ஒரு கணம் தரித்திரு
‘த லார்ட் ஆஃப் த ரிங்ஸ் என்ற திரைப்படத்தின் மூன்று பகுதிகளையும் குறித்த ஒரு விவாதத்தின் போது ஒரு இளைஞன், தான் இந்த கதைகளை திரையில் பார்ப்பதைவிட புத்தகத்தில் வாசிப்பதையே விரும்புவதாகக் கூறினான். ஏனென்று கேட்டபோது, “ஒரு புத்தகத்தோடு நான் எவ்வளவு நேரமானாலும் தரித்திருக்க முடியும்” என்றான். ஒரு புத்தகத்தோடு விசேஷமாக வேதபுத்தகத்தோடு அதிக நேரம் செலவிடுவதில் வல்லமை இருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ள கதைகளோடு நாம் ஒன்றுவது போன்ற உணரச் செய்யும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு.
வேதாகமத்தில் ‘விசுவாச அதிகாரம்’ என்றழைக்கப்படும் எபிரெயர் 11ம் அதிகாரத்தில் 19 மக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஓவ்வொருவரும் கடினப்பாதை வழியே பயணித்தாலும், சந்தேகங்களிருந்தாலும் அவர்கள் கர்த்தருக்குக் கீழ்படிதலை தேர்ந்துகொண்டனர். “இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக் கொண்டு பூமியின் மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடே மரித்தார்கள் (வச. 13).
வேதத்திலுள்ள மக்கள், நிகழ்வுகளோடு ஒன்றித்து யோசிக்காமல், அதன் பக்கங்களை வேகமாக வாசித்துச் செல்வது எளிது. நம்மேல் நாம் சுமத்திக் கொள்ளும் நேரத் திட்டங்கள் தேவனுடைய உண்மையையும், அவர் நம் வாழ்விற்கு வைத்திருக்கும் திட்டங்களையும் ஆழ்ந்து அறிய முடியாதபடி தடை செய்கின்றன. ஆயினும் தேவ வார்த்தைகளோடு தரித்திருக்கும் போது, நம்மைப் போன்ற சாதாரண வாழ்வில் இருந்த மக்கள் எப்படித் தங்கள் வாழ்வை தேவனின் உண்மையின் மீது பதித்தனர் என்பதைக் கண்டு கொள்ள முடியும்.
நாம் தேவ வார்த்தைகளைத் திறக்கும் போது எவ்வளவு நேரமானாலும் அதனோடு ஒன்றியிருக்கலாம் என்பதை நினைவில் கொள்வோம்.
முதல் அடியை எடுத்துவைத்தல்
தாம் டேஷீ தன் வாழ்வில் ஏதோ ஒரு குறையுள்ளதாக உணர்ந்தார். எனவே அவர் ஆலயத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். அதே ஆலயத்திற்குத்தான் அவருடைய மகளும் செல்வது வழக்கம். ஆனால், அவர்கள் இருவரும் இணைந்து சென்றதில்லை. முந்திய நாட்களில் அவர் தன் மகளைக் காயப்படுத்தியிருந்தார். அது அவர்களிடையே ஒரு பிளவை ஏற்படுத்திவிட்டது. எனவே அவர் ஆலயத்தில் பாடல் வேளை ஆரம்பித்தப்பின் தான் உள்ளே வருவார்.
ஆலய அங்கத்தினர்கள் சுவிசேஷத்தை அவரிடம் பகிர்ந்தனர். தன் நம்பிக்கையை இயேசுவின் மீது வைக்க வேண்டும் என்ற அவர்களின் அழைப்பினை பணிவோடு நிராகரித்து விடுவார். ஆனால், அவர் தொடர்ந்து ஆலயத்திற்கு வந்து கொண்டேயிருந்தார்.
ஒரு நாள் அவர் மிக மோசமாக சுகவீனமடைந்தார். அவருடைய மகள் தன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவருக்கு ஒரு கடிதம் எழுதினாள். கிறிஸ்து தன் வாழ்வை மாற்றியதைக் குறித்து பகிர்ந்து கொண்டதோடு தன் தந்தையோடு ஒப்புரவாகுதலையும் கேட்டார். அன்று இரவு அவர் தன் நம்பிக்கையை இயேசுவின் மீது வைத்தார். அந்த குடும்பங்கள் ஒப்புரவாகின. சில நாட்களுக்குப் பின்னர் அவர் மரித்தார். இயேசுவின் சமாதானத்தோடும், தனக்கு அன்பானவர்களிடம் சமாதானத்தோடும் இயேசுவின் பிரசன்னத்திற்குள் சென்றார்.
பவுல் அப்போஸ்தலன், தேவனுடைய அன்பு, மன்னித்தலின் உண்மையைக் குறித்து மற்றவர்களைச் சம்மதிக்கச் செய்யவேண்டுமென எழுதுகிறார் (2 கொரி. 5:11).
தேவனுடைய ஒப்புரவாகுதலின் செயலை மேற்கொள்ள “கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது” (வச. 14) என்று அவர் சொல்லுகிறார்.
நாம் மற்றவர்களை மன்னிக்க முன்வரும்போது தேவன் அவர்களொடு ஒப்புரவாகுவதற்கு விரும்புகின்றார் என்பதை அவர்கள் உணரச் செய்கிறோம் (வச. 19). இன்று தேவனுடைய வல்லமையின் மீது சார்ந்து அவருடைய அன்பினைக் காட்ட விரும்புகிறாயா?
புரிந்துகொள்ளும் ஒருவர்
டெக்ஸாஸிலுள்ள காவல்துறை மற்றும் தீயனைப்புத் துறையின் மதப் போதகர் ஜாண் ஃபப்ளர். சட்டம் ஒழுங்கை அமல்படுத்தும் அலுவலர்கள் எதிர் நோக்குகின்ற சுழல்களை நன்கு புரிந்து கொள்வதற்காக ப்பளர் தன் பணியின் போது 22 வார ஓய்வு விடுப்பில் காவல் துறையினரின் பயிற்சியில் கலந்து கொண்டார். பிற பயிற்யாளர்களோடும் தன் நேரத்தை செலவிட்டதன் மூலம் அத்துறையின் புதிய சவால்களைத் தெரிந்து கொண்டார். அவர் ஒரு புதிய பணிவையும் கரிசனையும் பெற்றுக் கொண்டார். எதிர்காலத்தில், உணர்வு சார்ந்த மன அழுத்தம், வெறுப்பு, இழப்பு ஆகியவற்றோடு போராடுகின்ற காவல் துறை அதிகாரிகளுக்கு இன்னும் பயனுள்ள ஆலோசனைகளைத் தரமுடிந்தது.
தேவன் நாம் எதிர்நோக்குகின்ற சுழல்களை நன்கு புரிந்து கொள்கிறார். ஏனெனில் அவர் நம்மை உருவாக்கியவர். நமக்கு ஏற்படுகின்ற யாவையும் அவர் நன்கு அறிவார். அவர் நம்மை நன்கு புரிந்து கொள்கிறார். ஏனெனில் அவர் தாமே பூமிக்கு வந்து மனித வாழ்வையும் அனுபவித்தவர். “அவர் மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்” (யோவா. 1:14). இயேசுகிறிஸ்து என்ற மனிதனாக வாசம் பண்ணினார்.
இயேசு கிறிஸ்துவின் புவிவாழ்வு அதிக துன்பம் நிறைந்ததாக இருந்தது. அவர் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தையும், வெறும் வயிற்றின் வேதனையையும், வீடற்றோரின் நிலையையும் அனுபவித்தார். உணர்வு சார்ந்து பார்க்கும் போது, தன்னை ஏற்றுக் கொள்ளாமை, காட்டிக் கொடுக்கப்படுதலின் வேதனை, மேலும் கலவரங்கள் ஆகியவற்றையும் சகித்தார்.
இயேசு நண்பர்களின் மகிழ்ச்சியிலும் குடும்ப உறவிலும் பங்கு கொண்டார். இப்புவியில் நாம் எதிர் நோக்குகின்ற மிக மோசமான பிரச்சனைகளையும் சந்தித்தார். அவர் நம்பிக்கையைத் தருபவர். அவர் ஆலோசனைக் கர்த்தா (ஏசா. 9:6). நம் பிரச்சனைகளை பொறுமையோடும், கரிசனையோடும் கேட்டு ஆழ்ந்த கருத்தோடும் கவலையோடும் ஆலோசனைத் தருபவர் அவர் ஒருவரே. “நான் அதன் வழியே வந்திருக்கிறேன் நான் உன்னை புரிந்து கொள்கிறேன்” என்று சொல்ல முடியும்.
கடிதங்கள் எழுதல்
என்னுடைய தாயாரும் அவருடைய சகோதரிகளும், இப்பொழுது அதிகமாக அழிந்து போன கலையாகிய கடிதம் எழுதுவதில் முனைந்திருந்தனர். இவர்களுடைய கடிதங்களைக் கொண்டு வரும் தபால்காரர் கொடுப்பதற்கு கடிதமில்லையெனில் வருத்தப்படக் கூடிய அளவிற்கு, ஒவ்வொரு வாரமும் தங்கள் சொந்த காரியங்களை எழுத்தின் மூலம் தெரிவிப்பதை தவறாமல் செய்து வந்தனர். இவர்களுடைய கடிதங்களில் வாழ்க்கையின் காரியங்கள், மகிழ்ச்சி, இருதய வேதனைகள், நண்பர்கள், உறவினரின் அன்றாட நிகழ்வுகளால் நிரம்பி வழியும்.
எங்கள் குடும்பத்திலுள்ள இந்தப் பெண்களின் வாரா, வார பயிற்சியினைக் குறித்து தியானிக்க விரும்புகிறேன். இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் “கிறிஸ்துவின் நிருபமாய் இருக்கிறீர்கள்” அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலே எழுதப்பட்டிருக்கிறது” (2 கொரி. 3:3) என்று பவுல் எழுதியுள்ளான். தவறான போதனைகளால் பவுலை இழிவுபடுத்த நினைப்பவர்களுக்கும் (2 கொரி. 11) கொரிந்து சபையினரை ஊக்குவிப்பதற்கும் நான் உங்களுக்கு முன்பு கற்றுக் கொடுத்தது போல, உண்மையும், உயிரோடு இருக்கிறவருமான இயேசு கிறிஸ்துவை பின் தொடருங்கள் என எழுதுகிறார். அப்படிக் செய்யும் போது அங்குள்ள விசுவாசிகளை அவர்களுடைய மாற்றப்பட்ட வாழ்வோடும் ஆவியானவருக்கு மிக வல்லமையான சாட்சிகளாகவும் பவுலின் ஊழியத்தினால் உண்டான கிறிஸ்துவின் நிரூபமுமாயிருக்கிறீர்கள் என்று பவுல் உற்சாகப்படுத்தினான்.
நமக்குள்ளேயிருக்கும் ஆவியானவர் அவருடைய கிருபை, மீட்பு பற்றிய ஒரு கதையை எழுதுகிறார். இது எத்தனை ஆச்சரியம். எழுதப்பட்ட வார்த்தைகள் எத்தனை அர்த்தமுள்ளவையோ அதைப் போன்று நம் வாழ்வும் சுவிசேஷத்தின் உண்மைக்கு ஒரு முக்கிய சாட்சியாகும். நம் இரக்கம், மனதுருக்கம் சேவை, நன்றியுணர்வு மகிழ்ச்சியின் மூலம் அவை பேசுகின்றன. நம்முடைய வார்த்தை, செயலினால் தேவன் அவருடைய வாழ்வையே தந்த அன்பினை பறைசாற்றுகின்றார். இன்று நீ என்ன செய்தியை அனுப்ப போகின்றாய்?
தேவனைக் காண்பது
எழுத்தரும் போதகருமான எர்வின் வற்சர் ஒரு டெவிஷன் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். ஆர்ட் லிங்ஸ் லெட்டர் மற்றும் கடவுளின் படத்தை வரைய முன்வந்த ஒரு சிறுவனின் கதையை நினைவுபடுத்துகின்றார். வியப்புற்றவராய் லிங்ஸ்லெட்டர், “நீ இதனைச் செய்ய முடியாது ஏனெனில் தேவன் எவ்வாறிருப்பார் என்பதை ஒருவரும் அறியார்” எனக் கூறினார்.
“நான் இதனை முடிக்கும் போது அவர்கள் தெரிந்து கொள்வார்கள்” என அச்சிறுவன் பதிலளித்தான்.
நாமும் அதிசயிக்கலாம் தேவன் எவ்வாறிருப்பார்? அவர் நல்லவரா? அவர் இரக்கமுள்ளவரா? அவர் தம்மீது அக்கறையுள்ளவரா? இத்தனை கேள்விகளுக்கும்முள்ள ஒரே எளிய பதிலை இயேசு தருகிறார். பிலிப்பு இயேசுவிடம், “ஆண்டவரே பிதாவை எங்களுக்குக் காட்டும்” என்று கேட்டபோது, “என்னைத் தெரியாதா பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவா. 14:8-9) என்றார்.
நீயும் பிதாவைக் காணவேண்டும் என்ற ஆவலில் இருந்தால் இயேசுவை நோக்கிப் பார். “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமாய் இருக்கிறார்” என பவுல் (கொலோ. 1:15) கூறுகின்றார். பதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியவற்றை வாசித்துப்பார். இயேசு என்னென்ன செய்தார், சொன்னார் என்பதை ஆழ்ந்து யோசித்துப் பார், வாசிக்கும் போது உன் மனதில் தோன்றிய பிதாவின் கற்பனை படத்தை வரை. உனக்கு அவர் எவ்வாறிருப்பார் என்பதனை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவாய்.
என்னால் நம்ப முடிந்த ஒரே தெய்வத்தை நான் இயேசுவில் கண்டேன் என என் நண்பன் ஒருமுறை கூறினான். இதனை சற்று உற்று நோக்கும் போது இதனை நீயும் ஒத்துக் கொள்வாய். அவரைக் குறித்து வாசிக்கும் போதும உன் வாழ்நாளெல்லாம் நீ தேடிக் கொண்டிருந்திருக்கிறாய்.
பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டோம்
எங்கள் கல்லூரி பத்திரிக்கைகள் சில தற்செயலாய் எனக்கு கிடைத்தது. அவற்றை மீண்டும் வாசிக்கும்படி உந்தப்பட்டேன், முழுவதையும் வாசித்து முடித்தபோது, நான், என்னைக் குறித்து அன்று நினைத்திருந்ததுப் போல நான் இன்று இல்லை என உணர்ந்தேன். என் தனிமையைக் குறித்த போராட்டங்கள், எனது நம்பிக்கையின்மை, யாவும் அப்பொழுது என்னை மேற்கொண்டிருந்தன. ஆனால், இன்று தேவன் என்னை ஒரு மேலான இடத்தில் நலமாகக் கொண்டு சேர்த்திருப்பதை உணர்ந்தேன். தேவன் என்னை சுகமாய் கொண்டு சேர்த்ததை நினைக்கும் போது, இன்றைய கஷ்டத்தின் பாதைகள், ஒரு நாள் அவருடைய சுகம் தரும் அன்பின் கதையின் ஒரு பகுதியாகும் என்பதை உணர்ந்தேன்.
சங்கீதம் 30, ஒரு ஆர்ப்பரிப்பின் சங்கீதம். நோயிலிருந்து சுகத்திற்கும், சாவின் எல்லையிலிருந்து ஜீவனுக்குள்ளும், அவருடைய நியாயத்தீர்ப்பிலிருந்து அவருடைய இரக்கத்திற்குள்ளும், கவலையிலிருந்து மகிழ்ச்சிக்குள்ளும் கொண்டு வந்ததையும், தேவனுடைய ஆச்சரியமான மீட்பினை நன்றியோடு நினைத்துப் பார்த்து பாடிய சங்கீதம் (வச. 3,11).
வேதத்திலுள்ள மிக துக்கம் நிறைந்த புலம்பல் தாவீதின் சங்கீதம். ஆனால், தாவீது நம்ப முடியாத மீட்பினை அனுபவித்தார். எனவே அவர் “சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் (வச. 5) என வெளிப்படுத்துகிறார். தாவீது, தான் கடந்து வந்த வேதனைகளின் மத்தியில் அதனைவிட பெரிய தேவனுடைய வல்லமையான சுகம் தரும் கரத்தை கண்டு கொண்டார்
ஒருவேளை காயத்தோடு இருக்கிற உங்களுக்கு ஊக்கம் தேவையோ? உங்கள் கடந்த நாட்களில் தேவன் உங்களை நலமாய் சேர்த்த இடங்களை நினைத்துப் பாருங்கள். அவர் மீது நம்பிக்கையோடு ஜெபித்தால் அவர் மீண்டும் செயல்பட வல்லவராயிருக்கிறார்.
துக்கம் கொண்டாடும் ஊழியம்
2002 ஆம் ஆண்டு, என்னுடைய சகோதரி மார்த்தாவும் அவளுடைய கணவன் ஜிம்மும் ஒரு விபத்தில் மரித்து சில மாதங்கள் கடந்தபோது, எங்கள் ஆலயத்தில் நடைபெறும் ‘துக்கத்தின் வழியே வளருதல்’ என்ற கருத்துப் பட்டறைக்கு வருமாறு என்னை என் நண்பன் அழைத்தான். நான் தயக்கத்தோடு, தொடர்ந்து பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணமற்றவனாய், ஒருமுறை மட்டும் கலந்து கொள்கிறேன் என்றேன். என்ன ஆச்சரியம் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பை சமாளிக்க முயலும், தேவனுடைய உதவியையும் பிறரின் உதவியையும் தேடுகின்ற ஒரு கரிசனையுள்ள ஒரு மக்கள் குழுவை நான் அங்கு கண்டேன். என் துக்கங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளல் மூலம் சமாதானத்தைப் பெற்றுக் கொண்டபோது, அது மீண்டும் வாரா வாரம் மனமுவந்து செல்ல என்னை இழுத்துக் கொண்டது.
நாம் மிகவும் நேசித்த நண்பரின் திடீர் இழப்பினைப் போல, இயேசுவுக்கு ஒரு தீவிரமான சாட்சியாகிய ஸ்தேவானுடைய மரணமும், ஒரு அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஆரம்ப சபையின் மக்களிடையே கொண்டு வந்தது (அப். 7:57-60). துன்புறுத்தலின் மத்தியிலும் “தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம் பண்ண அவனுக்காக மிகவும் துக்கங் கொண்டாடினார்கள்” (8:2). இந்த உண்மையுள்ள மனிதர் இரு காரியங்களை இணைந்து செய்தனர். அவர்கள் ஸ்தேவானை அடக்கம் பண்ணினார்கள். அதாவது ஒரு இழப்பின் முடிவு காரியங்களைச் செய்தார்கள். மேலும் அவர்கள் அவனுக்காக துக்கம் கொண்டாடினார்கள். இது தங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு செயல்.
இயேசுவைப் பின் பற்றுகின்றவர்களாகிய நாம் நம் இழப்புகளைக் குறித்து தனியே துக்கிக்கத் தேவையில்லை. நம்மைக் காயப்படுத்தியவர்களையும் உண்மையோடும் அன்போடும் அணுக வேண்டும். நம் மீதுள்ள கரிசனையோடு நம்மோடு நிற்பவர்களையும் அவர்களது ஆறுதலையும் மனத்தாழ்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் இணைந்து துக்கிக்கும் போது நம் உள்ளங்களின் ஆழத்திலுள்ள துயரங்களையும் தெரிந்து வைத்திருக்கிற இயேசு கிறிஸ்து தருகின்ற சமாதானத்தை நாம் பெற்றுக்கொள்வதோடு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதலிலும் வளருவோம்.
தேவனிடம் கொடுத்துவிடு
ஒரு வாலிபனாக அநேக சவால்களைச் சந்திக்கும் போதும், விளைவு அல்லது உயர் விளைவு தீர்மானங்களை எடுக்கும் போதும், என் தாயார் எனக்குக் கற்றுக் கொடுத்த ஒரு நண்மையான காரியம் என்னவெனில், எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதினால் சரியான கோணத்தில் பிரச்சனையை பார்க்க முடியும் என்பதே. சரியான பாடங்களை தேர்ந்தெடுத்தலின் தெளிவற்ற நிலையோ அல்லது எந்த வேலையை தேர்ந்தெடுப்பதென்பதோ, வயது வந்தோரினை பயமுறுத்தும் சூழல்களை எவ்வாறு சமாளிப்பது போன்ற தெளிவற்ற நிலையின் போது, நான் என் தாயாரின் எழுதும் வழக்கத்தின்படி செய்வேன். அடிப்படை உண்மைகள், அதன் தீர்வுக்கான வழிமுறைகள் அதன் பின் விளைவுகள் என எழுத ஆரம்பித்தேன். என் இருதயத்தை அந்த பக்கங்களில் கொட்டியபின் பிரச்சனையிலிருந்து எளிதாக வெளிவரமுடிந்தது. என் உணர்வு சார்ந்த நோக்கங்களை விட அப்பிரச்சனைகளின் நிலையைத் தெளிவாகக் காண முடிந்தது.
என் எண்ணங்களை ஒரு தாளிள் பதித்ததின் மூலம் புதிய கோணத்தில் அணுக முடிந்தது போல என் இருதயத்தை தேவனிடம் ஜெபத்தின் மூலம் ஊற்றும் போது அவருடைய கண்ணோட்டம், அவருடைய வல்லமையை நான் புரிந்து கொள்ள முடிந்தது. எசேக்கியா ராஜா தன்னை அச்சுறுத்தும் சத்துருவிடமிருந்து ஒரு வருத்தமான கடிதத்தைப் பெற்ற போது இதனையே செய்கிறான். ஆசீரியர் பல தேசங்களை அழித்தது போல எருசலேமையும் அழித்து விடுவோம் என பயமுறுத்தியபோது எசேக்கிய அக்கடிதத்தை தேவனுக்கு முன்பாக விரித்தான். விண்ணப்பத்தோடு அவரை நோக்கிக் கூப்பிட்டான். இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜயங்கள் எல்லாம் அறியும்படிக்கு எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான் (2 இரா. 19:19).
நாம் நம்மை பதட்டத்துக்குள்ளாக்கும் பயத்தைக் கொண்டுவரும். அதனால் நம்மீடத்திலுள்ளது போதாது என்ற விழிப்புணர்வு ஏற்படும்பொழுது, எசேக்கியாவின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி கர்த்தரை நோக்கி ஓடுவோம். நம் பிரச்சனைகளை அவருக்கு முன்பாக சமர்ப்பிப்போம். அவர் நம் நடைகளை நல் வழிப்படுத்துவார். அமைதியற்ற இருதயத்தை அமைதிப்படுத்துவார் என அவர் மீது நம்பிக்கை வைப்போம்.
பரலோகத்தின் ஒரு சிறிய அனுபவம்
நான் எனது அறையின் திறந்த ஜன்னல் வழியாகப் பார்த்த போது, பறவைகள் கீச்சிடுவதைக் கேட்கவும், மெல்லிய தென்றல் மரங்களின் மீது வீசுவதைக் கேட்கவும், காணவும் முடிந்தது. என் அருகில் வசிப்பவர் புதியதாக உழுதிருந்த வயல்வெளியில், வைக்கோல் கட்டுகள், புள்ளிகளாகக் காட்சியளித்தன. மின்னும் நீல வானத்தில் பெரிய வெண்ணிற மேகக்கூட்டம் தனித்து நின்றது.
எங்களுடைய நிலங்களை வேகமாகக் கடந்து செல்கின்ற வாகனங்களின் தொடர் ஓசையையும் எனது முதுகு பகுதியில் ஏற்பட்ட சிறிய வலியையும் தவிர நான் கொஞ்சம் பரலோகத்தை அனுபவித்தேன். நாம் வாழும் இப்பூமி முன்னொரு காலத்தில் முற்றிலும் நலமானதாக இருந்தது. ஆனால், இப்பொழுது இல்லை. எனவே நான் பரலோகம் என்ற வார்த்தையை சிறிதளவே பயன்படுத்த முடிகிறது. மனித குலம் பாவத்திற்குள்ளான போது ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. பூமி சாபத்திற்குள்ளானது (ஆதி. 3). அதிலிருந்து பூமியும் அதிலுள்ளவைகளும் அழிவுக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்டன. வேதனைகள், நோய்கள், இறப்புக்கள் யாவும் பாவத்தில் வீழ்ந்ததின் விளைவுகளே (ரோம. 8:18-23).
ஆனாலும், தேவன் சகலத்தையும் புதிதாக்குகின்றார். ஒருநாள் அவர் வாழுமிடம் அவருடைய பிள்ளைகளோடும், புதிதாக்கப்பட்ட, மீட்டெடுக்கப்பட்ட படைப்புகளோடும், புதிய வானத்திலும் புதிய பூமியிலுமிருக்கும். அங்கே மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, ஏனெனில் முந்தினவைகள் ஒழிந்து போயின (வெளி. 21:1-4). அந்த நாள் வரும் வரை, நாம் பிரகாசமான ஒளியையோ, சில வேளைகளில் விரிந்து நம்மைக் கவரும் அழகினையோ இவ்வுலகில் நாம் காணும் போது, நாம் அனுபவிக்கப்போகின்ற பரலோகத்தின் ஒரு சிறிய முன் அனுபவமாகக் அதைக் கருதுவோம்.