‘த லார்ட் ஆஃப் த ரிங்ஸ் என்ற திரைப்படத்தின் மூன்று பகுதிகளையும் குறித்த ஒரு விவாதத்தின் போது ஒரு இளைஞன், தான் இந்த கதைகளை திரையில் பார்ப்பதைவிட புத்தகத்தில் வாசிப்பதையே விரும்புவதாகக் கூறினான். ஏனென்று கேட்டபோது, “ஒரு புத்தகத்தோடு நான் எவ்வளவு நேரமானாலும் தரித்திருக்க முடியும்” என்றான். ஒரு புத்தகத்தோடு விசேஷமாக வேதபுத்தகத்தோடு அதிக நேரம் செலவிடுவதில் வல்லமை இருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ள கதைகளோடு நாம் ஒன்றுவது போன்ற உணரச் செய்யும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு.

வேதாகமத்தில் ‘விசுவாச அதிகாரம்’ என்றழைக்கப்படும் எபிரெயர் 11ம் அதிகாரத்தில் 19 மக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஓவ்வொருவரும் கடினப்பாதை வழியே பயணித்தாலும், சந்தேகங்களிருந்தாலும் அவர்கள் கர்த்தருக்குக் கீழ்படிதலை தேர்ந்துகொண்டனர். “இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக் கொண்டு பூமியின் மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடே மரித்தார்கள் (வச. 13).

வேதத்திலுள்ள மக்கள், நிகழ்வுகளோடு ஒன்றித்து யோசிக்காமல், அதன் பக்கங்களை வேகமாக வாசித்துச் செல்வது எளிது. நம்மேல் நாம் சுமத்திக் கொள்ளும் நேரத் திட்டங்கள் தேவனுடைய உண்மையையும், அவர் நம் வாழ்விற்கு வைத்திருக்கும் திட்டங்களையும் ஆழ்ந்து அறிய முடியாதபடி தடை செய்கின்றன. ஆயினும் தேவ வார்த்தைகளோடு தரித்திருக்கும் போது, நம்மைப் போன்ற சாதாரண வாழ்வில் இருந்த மக்கள் எப்படித் தங்கள் வாழ்வை தேவனின் உண்மையின் மீது பதித்தனர் என்பதைக் கண்டு கொள்ள முடியும்.

நாம் தேவ வார்த்தைகளைத் திறக்கும் போது எவ்வளவு நேரமானாலும் அதனோடு ஒன்றியிருக்கலாம் என்பதை நினைவில் கொள்வோம்.