ஒரு காரியம் எனக்குச் சாதகமாக போகாத போது நான் காயப்படுத்தும் வார்த்தைகளால் என் கணவனைத் தாக்கினேன். வேத வார்த்தைகள் மூலம் என் பாவமான அணுகுமுறையை என் கணவன் சுட்டிக் காட்டிய போது, பரிசுத்த ஆவியானவரின் அதிகாரத்தை நிராகரித்தேன். என்னை ஒட்டிக்கொண்ட இந்த பெருமையை நான் விடமுடியாமல் வைத்திருப்பது, தேவனுக்கு கீழ்படியாமல் இருப்பதற்கும், அல்லது என் திருமணத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதற்கும் உகந்ததா? இல்லவே இல்லை. அனால், நான் தேவனிடமும் என் கணவனிடமும் மன்னிப்பு கேட்பதற்கு முன்பாக நிறைய காயங்களை ஏற்படுத்தி விட்டேன். புத்தியுள்ள அலோசனைகளைத் தள்ளி, என்வாழ்வில், என்னைத் தவிர நான் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என வாழ்ந்ததின் விளைவு இது.

ஒரு காலத்தில் இஸ்ரவேலர் எதையும் எதிர்க்கின்ற அணுகுமுறையை கையாண்டனர். மோசே மரித்தபின் யோசுவா இஸ்ரவேலரை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வழி நடத்தினான். அவனுடைய தலைமைத்துவத்தில் இஸ்ரவேலர் தேவனைச் சேவித்தார்கள் (நியா. 2:7). ஆனால், யோசுவாவும் அவன் சந்ததியாரும் மரித்தபின், இஸ்ரவேலர் தேவனையும் அவர் அவர்களுக்குச் செய்த யாவற்றையும் மறந்தனர் (வச. 10). அவர்கள் தேவனைச் சார்ந்து நின்ற தலைவர்களைத் தள்ளி, பாவத்தை தழுவிக் கொண்டனர் (வச. 11-15).

பின்னர் தேவன் ராஜாக்களைப் போல செயல்படும் நியாயாதிபதிகளை எழுப்பினார் (வச. 16-18). அப்பொழுது நிலைமை சற்று முன்னேறியது. ஆனால், ஒவ்வொரு நியாயாதிபதியும் மரித்தபோது, இஸ்ரவேலர் அந்நிய தேவர்களைப் பின்பற்றினார்கள். தாங்கள் யாருக்கும் பதில் சொல்ல அவசியமில்hதவர்கள் என வாழ்ந்தபோது அழிவைத் தேடிக் கொண்டார்கள் (வச. 19-22). இப்படிப்பட்ட நிலைமைக்குள் நாம் வரலாகாது, நாம் நம்மை தேவனுடைய ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும் நித்திய அரசாட்சிக்கும் ஒப்புக் கொடுத்து இயேசுவைப் பின்பற்றி வாழுவோம். ஏனெனில், அவரே எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிற நியாயதிபதி ராஜாதி ராஜா