நம் தேர்ந்தெடுப்புகள் முக்கியம்
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு நீச்சல் பயிற்றுவிப்பாளர், நெவார்க் விரிகுடாவில் கார் ஒன்று மூழ்குவதைக் கண்டார். அந்த கார் தண்ணீரில் மூழ்கும்போது அதின் ஓட்டுநர் “எனக்கு நீச்சல் தெரியாது” என்று அலறும் சத்தத்தைக் கேட்டார். கரையிலிருந்து ஒரு கூட்டம் பார்த்தபோது, அந்தோனி விளிம்பில் இருந்த பாறைகளுக்கு ஓடி, தனது செயற்கை காலை அகற்றி, அறுபத்தெட்டு வயது முதியவரைக் காப்பாற்றி, அவரைக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அந்தோனியின் துரிதமான முயற்சிக்கு நன்றி. அதின் மூலம் மற்றொரு நபர் காப்பாற்றப்பட்டார்.
நம்முடைய தேர்ந்தெடுப்புகள் முக்கியமானவைகள். யாக்கோபைப் பாருங்கள். அநேகருக்கு தகப்பனான யாக்கோபு தன்னுடைய பதினெழு வயது நிரம்பிய யோசேப்பை அதிகமாய் நேசித்தான் (ஆதியாகமம் 37:3). அதின் விளைவு? யோசேப்பின் சகோதரர்கள் அவனை நேசித்தனர் (வச. 4). அவர்களுக்கு சமயம் கிட்டியபோது அவனை அடிமைத்தனத்தில் விற்றுப்போட்டனர் (வச. 28). யோசேப்பின் சகோதரர்கள் அவனை வெறுத்து ஒதுக்கினாலும், தேவன் யோசேப்பை எகிப்துக்கு கொண்டுபோய், அங்கே அவனுடைய ஸ்தானத்தை உயர்த்தி, ஏழு ஆண்டுகள் பஞ்சத்தின்போது தன்னுடைய குடும்பத்தை பராமரிக்கும்படி செய்தார் (50:20). யோசேப்பு அந்த மேன்மையை அடைவதற்கு போத்திபாரின் மனைவியிடத்திலிருந்து ஓடுவதை தெரிந்துகொண்டான் (39:1-12). அதின் விளைவு சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டான் (39:20), ஆனால் பார்வோனை சந்திக்கிறான் (41அதி.).
அந்தோனி மிகவும் நேர்த்தியாய் பயிற்சிபெற்ற ஒரு நபராய் இருந்திருக்கலாம், ஆனால் அவன் துரிதமாய் தீர்மானம் எடுக்கவேண்டியது அவசியமாயிருந்தது. நாமும் தேவனை நேசித்து அவருக்கு ஊழியம் செய்வோமாகில், அவர் வாழ்க்கையை ஸ்திரப்படுத்துகிற மற்றும் தேவனை மகிமைப்படுத்துகிற தீர்மானங்களை எடுக்க நமக்கு உதவிசெய்வார். இதுவரை அதை நாம் செய்யாமல் இருந்திருப்போமாகில், இயேசுவை நம்புவதின் மூலம் இனி அதை நாம் துவக்கலாம்.
சத்தமாய் சிரித்தல்
அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார்.
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே!
தேவன் கேட்கிறார்
நடிகரும், தற்காப்புக் கலைஞருமான சக், தனது தாயாரின் நூறாவது பிறந்தநாளில், தனது மனமாற்றத்திற்கு அவர் எவ்வளவு உதவியாக இருந்தார் என்பதைப் பகிர்ந்துகொண்டு அவரது தாயைக் கௌரவித்தார். "அம்மா விடாமுயற்சி மற்றும் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று அவர் எழுதினார். மகா பஞ்சகாலத்தில், தன் மூன்று ஆண் குழந்தைகளைத் தானே பராமரித்தாள்; இரண்டு வாழ்க்கைத் துணைவர்கள், ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன் மற்றும் பேரக்குழந்தைகளின் மரணங்களைச் சகித்தாள்; மற்றும் பல அறுவை சிகிச்சைகளை தாங்கினாள். "சிறிதோ, பெரிதோ [அவள்] என் வாழ்நாள் முழுவதும் எனக்காக ஜெபித்தாள்." என்றவர் மேலும், "திரைத்துறையில் என்னை அர்ப்பணிக்கையிலும், அவள் என் வெற்றி மற்றும் இரட்சிப்புக்காக வீட்டில் ஜெபித்தாள்." என்றும், " நான் எவ்வாறு இருக்கவேண்டுமோ, இருக்க கூடுமோ அவ்வாறே என்னைத் தேவன் மாற்றியதற்காக என் அம்மாவுக்கு நன்றி." என்று முடித்தார்.
சக்கின் தாயின் பிரார்த்தனைகள் அவருக்கு இரட்சிப்பையும், தேவனுக்குப் பயந்த மனைவியையும் கண்டறிய உதவியது. அவள் தன் மகனுக்காக ஊக்கமாக ஜெபித்தாள், தேவன் அவளுடைய ஜெபங்களைக் கேட்டார். எப்பொழுதும் நமது ஜெபங்களுக்கு நாம் விரும்பும் விதத்தில் பதில் கிடைப்பதில்லை, எனவே ஜெபத்தை மந்திரக்கோலாகப் பயன்படுத்த முடியாது. இருப்பினும் யாக்கோபு, "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” (5:16) என்று நமக்கு உறுதியளிக்கிறார். இந்த அம்மாவை போலவே, நோயுற்றவர்களுக்காகவும், பிரச்சனையில் இருப்பவர்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் (வவ. 13-15). அவளைப் போலவே, நாம் ஜெபத்தின் மூலம் தேவனுடன் தொடர்பு கொள்ளும்போது, உற்சாகத்தையும் அமைதியையும், ஆவியானவர் செயல்படுகிறார் என்ற உறுதியையும் கண்டுகொள்கிறோம்.
உங்கள் வாழ்க்கையிலுள்ள யாருக்காவது ஒருவருக்கு இரட்சிப்பு அல்லது குணமடைதல் அல்லது உதவி தேவையா? விசுவாசத்துடன் உங்கள் ஜெபங்களைத் தேவனிடம் கொண்டுசெல்லுங்கள். அவர் கேட்கிறார்.
நம் தகப்பனின் அன்பு
சினேகா ஜன்னல் அருகே அமர்ந்து, பையை வைத்துக்கொண்டு, தன் அப்பா வருவதற்காக ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் பிரகாசமான பகல் இருண்டு பின்னர் இரவாக மாறியது, அவளுடைய உற்சாகம் மங்கியது. அப்பா மீண்டும் வரவில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.
சினேகாவின் பெற்றோர் விவாகரத்தானவர்கள், மேலும் அவள் தனது அபபவுடன் நேரத்தைச் செலவிட விரும்பினாள். அவள் நினைத்தது முதல் முறை அல்ல, "நான் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர் என்னை நேசிக்கவில்லை" என்று அவள் எண்ணுவது இது முதல்முறையல்ல.
சினேகா பின்னர் கற்றுக்கொண்டது போல்; இயேசுவை நம் இரட்சகராகப் பெறும் நாம் அனைவரும் அறிந்து கொள்வது போல் - நமது பூமிக்குரிய பெற்றோரும் மற்றவர்களும் நம்மை ஏமாற்றினாலும், நம்மை நேசிக்கும் ஒரு பரலோக தகப்பன் இருக்கிறார், நம்மை ஏமாற்றவே மாட்டார்.
மூன்று வேதாகம நிருபங்கள், தன்னுடைய பெயரைக் கொண்ட ஒரு சுவிசேஷம் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் ஆசிரியர் யோவான், தேவனுடைய அன்பின் ஆழத்தைப் புரிந்துகொண்டவர். உண்மையில், அவர் தன்னைதான் " இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும்" (யோவான் 21:20) என்று குறிப்பிட்டார். கிறிஸ்துவின் அன்பினால் வாழ்க்கை மாற்றப்பட்ட ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்தினார். "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1) என்று அவர் எழுதினார்.
தேவன் நம்மை மிகவும் நேசிக்கிறார், அவர் நமக்காகத் தமது ஜீவனையே கொடுத்த தம்முடைய குமாரனாகிய இயேசுவை தந்தருளினார் (வ.16; யோவான் 3:16). அவரை எப்பொழுதும் ஜெபத்தில் நாம் அணுகலாம், மேலும் அவர், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று வாக்குரைக்கிறார். அவருடைய அன்பில் நாம் பாதுகாப்பாக இளைப்பாற முடியும்.
நம் தகப்பனின் அன்பு
சினேகா ஜன்னல் அருகே அமர்ந்து, பையை வைத்துக்கொண்டு, தன் அப்பா வருவதற்காக ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் பிரகாசமான பகல் இருண்டு பின்னர் இரவாக மாறியது, அவளுடைய உற்சாகம் மங்கியது. அப்பா மீண்டும் வரவில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.
சினேகாவின் பெற்றோர் விவாகரத்தானவர்கள், மேலும் அவள் தனது அபபவுடன் நேரத்தைச் செலவிட விரும்பினாள். அவள் நினைத்தது முதல் முறை அல்ல, "நான் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர் என்னை நேசிக்கவில்லை" என்று அவள் எண்ணுவது இது முதல்முறையல்ல.
சினேகா பின்னர் கற்றுக்கொண்டது போல்; இயேசுவை நம் இரட்சகராகப் பெறும் நாம் அனைவரும் அறிந்து கொள்வது போல் - நமது பூமிக்குரிய பெற்றோரும் மற்றவர்களும் நம்மை ஏமாற்றினாலும், நம்மை நேசிக்கும் ஒரு பரலோக தகப்பன் இருக்கிறார், நம்மை ஏமாற்றவே மாட்டார்.
மூன்று வேதாகம நிருபங்கள், தன்னுடைய பெயரைக் கொண்ட ஒரு சுவிசேஷம் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் ஆசிரியர் யோவான், தேவனுடைய அன்பின் ஆழத்தைப் புரிந்துகொண்டவர். உண்மையில், அவர் தன்னைதான் " இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும்" (யோவான் 21:20) என்று குறிப்பிட்டார். கிறிஸ்துவின் அன்பினால் வாழ்க்கை மாற்றப்பட்ட ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்தினார். "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1) என்று அவர் எழுதினார்.
தேவன் நம்மை மிகவும் நேசிக்கிறார், அவர் நமக்காகத் தமது ஜீவனையே கொடுத்த தம்முடைய குமாரனாகிய இயேசுவை தந்தருளினார் (வ.16; யோவான் 3:16). அவரை எப்பொழுதும் ஜெபத்தில் நாம் அணுகலாம், மேலும் அவர், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று வாக்குரைக்கிறார். அவருடைய அன்பில் நாம் பாதுகாப்பாக இளைப்பாற முடியும்.
பெத்லகேமென்னும் சிற்றூர்
பிலிப்ஸ் ப்ரூக்ஸ், பெத்லகேமுக்குச் சென்ற பிறகு, பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலான, "ஓ லிட்டில் டவுன் ஆஃப் பெத்லஹேம்" என்பதின் வரிகளை எழுதினார். அமெரிக்காவில் உள்ள ஒரு சபையின் போதகரான ப்ரூக்ஸ், அவருடைய அனுபவத்தால் மிகவும் நெகிழ்ந்து, தனது ஞாயிறு பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “எனக்கு நினைவிருக்கிறது.. கிறிஸ்துமஸுக்கு முந்தின இரவு, பெத்லகேமின் பழைய தேவாலயத்தில், இயேசு பிறந்த இடத்திற்கு அருகில் நான் நின்று கொண்டிருந்தபோது, மணிக்குமணி சபை முழுவதும் தேவனைத் துதிக்கும் அற்புதமான பாடல்களால் ஒலித்துக்கொண்டிருந்தபோது, மீண்டும் மீண்டுமாக இரட்சகர் பிறப்பின் 'அற்புதமான இரவை' பற்றி ஒருவருக்கொருவர் சொன்னதை, எனக்கு நன்கு தெரிந்த குரல்களைப் போல என்னால் கேட்க முடிந்தது"
1868 ஆம் ஆண்டில், ப்ரூக்ஸ் தனது சிந்தனைகளை ஒரு கவிதையாக வடித்தார், அவருடைய சபையின் இசைக்குழு அமைப்பாளர் அதற்கு இசை அமைத்தார். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகும் தணியாத தாக்கத்தினூடே அமைதியையும் சமாதானத்தையும் இந்தப் பாடல் அறிவித்தது: “பெத்லகேமென்னும் சிறிய நகரமே, நீ அமைதலாய் உறங்குவதை நாங்கள் காண்கிறோம் . . இத்தனை காலத்தின் நம்பிக்கையும், அச்சங்களும் இன்றிரவு உன்னில் சந்திக்கிறது"
மத்தேயு 2 இல், நமது இரட்சகர் பெத்லகேமில் பிறந்ததைப் பற்றி மத்தேயு எழுதினார். " கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்" (வ. 1) பெத்லகேமுக்கு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து வந்தபோது (மீகா 5:2 ஐப் பார்க்கவும்), இயேசுவைக் கண்டு, "மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்" (மத்தேயு 2: 10)
இன்று, நாம் இயேசுநாதரின் திருவருள் தோற்றத்தைக் கொண்டாடுகையில், நம் இரட்சகரின் பிறப்பு பற்றிய மகிமையான செய்தி நமக்கும் தேவை. பாடல் நமக்கு நினைவூட்டுவது போல, அவர் "நம்முடைய பாவங்களைத் துரத்திவிட்டு உள்ளே பிரவேசிக்கவும்" மற்றும் "நம்மில் பிறக்கவும்" வந்தார். அவரில் நாம் சமாதானம் காண்கிறோம்.
ஒரு பாட்டியின் விசுவாசம்
நாங்கள் இரவு உணவு அருந்துகையில், என் ஒன்பது வயது பேரன் புன்னகையுடன், "நான் பாட்டியைப் போலவே இருக்கிறேன். நான் படிக்க விரும்புகிறேன்!” என்றான். அவன் வார்த்தைகள் என் மனதை மகிழ்வித்தது. அவன் உடல்நலம் குன்றி, பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்த முந்தைய வருடத்தை நான் மீண்டும் நினைத்தேன். அவன் நன்றாகத் தூங்கிய பிறகு, நாங்கள் அருகருகே அமர்ந்து ஒன்றாகப் படித்தோம். புத்தகங்களை நேசிக்கும்படி என் அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மரபை நான் அவனுக்குக் கடத்துவதில் மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால் என் பேரக்குழந்தைகளுக்கு நான் கடத்த விரும்பும் மிக முக்கியமான மரபு அதுவல்ல. என் பெற்றோரிடமிருந்து நான் பெற்ற விசுவாசத்தின் மரபையே மற்றும் என் பிள்ளைகளுக்குக் கடத்த முயல்கிறேன், அது என் பேரக்குழந்தைகளுக்கும் அவர்களின் விசுவாசத்தை நோக்கிய பயணத்தில் உதவும் என்று நான் ஜெபிக்கிறேன்.
தீமோத்தேயு ஒரு ஆவிக்குரிய தாய் மற்றும் பாட்டியின் மரபைக் கொண்டிருந்தார். மேலும் ஒரு ஆவிக்குரிய வழிகாட்டியான அப்போஸ்தலன் பவுலும் இருந்தார். அப்போஸ்தலன், "அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்" (2 தீமோத்தேயு 1:5) என்றெழுதினார்.
நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க போதுமானதாக இல்லை என்று நாம் நினைக்கலாம். ஒருவேளை நமக்குக் கடத்தப்பட்ட மரபு தீமையானதாக இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகள், பேரக்குழந்தைகள் அல்லது எந்தவொரு குழந்தையின் வாழ்க்கையிலும் விசுவாசத்தின் மரபை உருவாக்கக் காலம் கடந்து போகவில்லை. தேவனின் உதவியால், நாம் விசுவாச விதைகளை விதைக்கிறோம். விசுவாசத்தை வளரச் செய்பவர் அவரே (1 கொரிந்தியர் 3:6-9).
மற்றவர்களின் பணியில்
எங்கள் பேரக்குழந்தைகள் நான்கு பெரும் ஒரு ரயில் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர், இளைய இருவருக்கும் அதின் உந்து பொறியைக் குறித்து வாக்குவாதம் உண்டானது. எங்கள் எட்டு வயது பேரன் தலையிடுகையில், அவனுடைய ஆறு வயது சகோதரி, “அவர்களுடைய காரியத்தில் தலையிடாதே” என்றாள். இது பொதுவாகவே நம் அனைவருக்குமான ஞானமான வார்த்தைகள். ஆனால் வாக்குவாதம் அழுகையாக மாறியபோது, பாட்டி தலையிட்டு, பிரித்து, சண்டையிடும் குழந்தைகளை ஆறுதல்படுத்தினார்.
பிறர் காரியங்களில் தலையிடுவது விஷயங்களை மோசமாக்கும் என்றால், விலகி இருப்பதே நல்லது. ஆனால் சில நேரங்களில் நாம் ஜெபத்தோடு தலையிட வேண்டும். பிலிப்பியருக்குக்கான நிருபத்தில் அப்போஸ்தலன் பவுல், அதை எப்போது செய்ய வேண்டும் என்பதற்கான உதாரணத்தை அளிக்கிறார். இங்கே அவர் இரண்டு பெண்களான எயோதியா மற்றும் சிந்திகேயாவை, "கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க" (4:2) வலியுறுத்துகிறார். வெளிப்படையாக, அவர்களின் கருத்து வேறுபாடு மிகவும் தீவிரமடைந்தது, அப்போஸ்தலன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் (1:7) தலையிட நிர்ப்பந்திக்கப்பட்டார் (வ.3).
பெண்களின் வாதம் பிரிவினை உண்டாக்குவதையும், சுவிசேஷத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதையும் பவுல் அறிந்திருந்தார். எனவே, அவர்களின் பெயர்கள் "ஜீவபுஸ்தகத்தில்" (4:3) எழுதப்பட்டிருப்பதை அவர்களுக்கு நினைவூட்டுகையில் அவர் கண்ணியமாக இந்த சத்தியத்தை உரைத்தார். இந்தப் பெண்களும், சபையில் உள்ள அனைவரும் சிந்தையிலும், செயல்களிலும் தேவனின் ஜனங்களாக வாழ வேண்டும் என்று பவுல் விரும்பினார் (வ.4-9).
நீங்கள் தலையிட வேண்டுமா என்று உங்களுக்கு நிச்சயமில்லாவிடில், "சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்" (வ. 9; பார்க்க வ. 7) என்பதை நம்பி ஜெபியுங்கள்.
கருணையின் எளிய செயல்கள்
என் அம்மா சிகிச்சையிலிருந்தபோது, பூமியில் அவளுடைய கடைசி நாட்களை நெருங்கியபோது, ஒரு முதியோர் இல்ல பராமரிப்பாளரின் உண்மையான கருணை என்னை அசைத்தது. நலிவடைந்த என் அம்மாவை அவளது நாற்காலியிலிருந்து மெதுவாகத் தூக்கி கட்டிலில் அமர்த்திய பிறகு, செவிலிய உதவியாளர் அம்மாவின் தலையைக் கோதி மெதுவாக அவள்மேல் சாய்ந்து கொண்டு, "நீங்கள் மிகவும் இனிமையானவர்" என்று கூறினார். பிறகு நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டாள். அவளுடைய கருணை என்னை அன்றும் இன்றும் கண்ணீரை வரவழைத்தது.
அவளது ஒரு எளிய கருணை செயல், ஆனால் அந்த நேரத்தில் எனக்கு அது தேவைப்பட்டது. இந்த பெண்ணின் பார்வையில் என் அம்மா ஒரு நோயாளி மட்டும் அல்ல என்பதை அறிந்து அவளோடு ஒத்துழைக்க எனக்கு உதவியது. அவள் அவளை மிகவும் மதிப்புமிக்க நபராகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
நகோமியும் ரூத்தும் தங்கள் கணவர்களை இழந்த பிறகு, போவாஸ் ரூத்துக்கு இரக்கம் காட்டினார், அறுவடை செய்பவர்களுக்குப் பின்னால் எஞ்சிய தானியங்களைச் சேகரிக்க அனுமதித்தார். அறுவடை செய்யும் ஆண்களுக்கு அவளைத் தனியாக விட்டுவிடுமாறு கட்டளையிட்டார் (ரூத் 2:8-9). நகோமியின் மீதான ரூத்தின் அக்கறையினால் அவனது கருணை உந்தப்பட்டது: "உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும்.. எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது." (வ. 11). அவர் அவளை ஒரு அந்நியராகவோ அல்லது விதவையாகவோ பார்க்கவில்லை, ஆனால் ஒரு தேவையிலுள்ள பெண்ணாகவே பார்த்தார்.
நாம், "உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு" (கொலோசெயர் 3:12) வாழத் தேவன் விரும்புகிறார் . தேவன் நமக்கு உதவுவதால், நம்முடைய எளிய தயவான செயல்களால் உள்ளங்களை உற்சாகப்படுத்தவும், நம்பிக்கையூட்டவும், பிறரிடம் கருணையைப் பிறப்பிக்கவும் முடியும்.