ஒரு வாலிபனாக அநேக சவால்களைச் சந்திக்கும் போதும், விளைவு அல்லது உயர் விளைவு தீர்மானங்களை எடுக்கும் போதும், என் தாயார் எனக்குக் கற்றுக் கொடுத்த ஒரு நண்மையான காரியம் என்னவெனில், எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதினால் சரியான கோணத்தில்  பிரச்சனையை பார்க்க முடியும் என்பதே. சரியான பாடங்களை தேர்ந்தெடுத்தலின் தெளிவற்ற நிலையோ அல்லது எந்த வேலையை தேர்ந்தெடுப்பதென்பதோ, வயது வந்தோரினை பயமுறுத்தும் சூழல்களை எவ்வாறு சமாளிப்பது போன்ற தெளிவற்ற நிலையின் போது, நான் என் தாயாரின் எழுதும் வழக்கத்தின்படி செய்வேன். அடிப்படை உண்மைகள், அதன் தீர்வுக்கான வழிமுறைகள் அதன் பின் விளைவுகள் என எழுத ஆரம்பித்தேன். என் இருதயத்தை அந்த பக்கங்களில் கொட்டியபின் பிரச்சனையிலிருந்து எளிதாக வெளிவரமுடிந்தது. என் உணர்வு சார்ந்த நோக்கங்களை விட அப்பிரச்சனைகளின்  நிலையைத் தெளிவாகக் காண முடிந்தது.

என் எண்ணங்களை ஒரு தாளிள் பதித்ததின் மூலம் புதிய கோணத்தில் அணுக முடிந்தது போல என் இருதயத்தை தேவனிடம் ஜெபத்தின் மூலம் ஊற்றும் போது அவருடைய கண்ணோட்டம், அவருடைய வல்லமையை நான் புரிந்து கொள்ள முடிந்தது. எசேக்கியா ராஜா தன்னை அச்சுறுத்தும் சத்துருவிடமிருந்து ஒரு வருத்தமான கடிதத்தைப் பெற்ற போது இதனையே செய்கிறான். ஆசீரியர் பல தேசங்களை அழித்தது போல எருசலேமையும் அழித்து விடுவோம் என பயமுறுத்தியபோது எசேக்கிய அக்கடிதத்தை தேவனுக்கு முன்பாக விரித்தான். விண்ணப்பத்தோடு அவரை நோக்கிக் கூப்பிட்டான். இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜயங்கள் எல்லாம் அறியும்படிக்கு எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான் (2 இரா. 19:19).

நாம் நம்மை பதட்டத்துக்குள்ளாக்கும் பயத்தைக் கொண்டுவரும். அதனால் நம்மீடத்திலுள்ளது போதாது என்ற விழிப்புணர்வு ஏற்படும்பொழுது, எசேக்கியாவின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி கர்த்தரை நோக்கி ஓடுவோம். நம் பிரச்சனைகளை அவருக்கு முன்பாக சமர்ப்பிப்போம். அவர் நம் நடைகளை நல் வழிப்படுத்துவார். அமைதியற்ற இருதயத்தை அமைதிப்படுத்துவார் என அவர் மீது நம்பிக்கை வைப்போம்.