விழித்தெழுவதற்கான அழைப்பு
நான் அடிக்கடி வெவ்வேறு நகரங்களுக்கு பயணம் செய்த வருடங்களில், ஒவ்வொரு நாளும் ஹோட்டலில் தங்குவதற்கு செல்லும் பொழுது, அங்குள்ள பணியாளர்களிடம் காலை விழித்து எழும்புவதற்காக தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுக்கொள்ளுவேன். என்னுடைய கடிகாரத்தில் அலாரம் வைத்திருந்தாலும் சத்தமாக ஒலிக்கும் டெலிபோன் மணி அடித்தால்தான் நான் என் படுக்கையிலிருந்து விழித்தெழும்பி என்காலை வேலைகளை கவனிக்க இயலும்.
வெளிப்படுத்தல் புத்தகத்தில் அப்போஸ்தலனாகிய யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு எழுதின பொழுது, ஆவிக்கேற்ற எழுப்புதற்கான அழைப்பைப் பற்றி எழுதியுள்ளார். சர்தை சபைக்கு இயேசுவினிடத்திலிருந்து வந்த செய்தியை எழுதின பொழுது “ உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாய் இருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு சாகிறதிற்கேதுவாக இருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை” (வெளி 3:1-2) என்று எழுதினார். ஆவியிலே சோர்வடையும் பொழுது நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள உறவில் ஒரு மந்த நிலை மெதுவாக ஏற்படுவதை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம். ஆனால், கர்த்தர் “நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவு கூர்ந்து அதைக் கைக் கொண்டு மனந்திரும்பு (வச. 3) என்று நினைவு கூறச் செய்கிறார்.
ஒவ்வொரு நாள் காலையும் வேதம் வாசித்து ஜெபிக்க சிறிது நேரத்தை ஒழுங்காக ஒதுக்கி வருவது ஆவிக்கேற்ற வாழ்க்கையில் நாம் விழிப்புடன் இருக்க உதவுகிறது. இயேசுவோடு நேரம் செலவழிப்பது ஒரு வேலையல்ல. ஆனால், அந்த நாளில் நமக்கு முன்னாலுள்ள காரியங்களுக்கு நம்மை தேவன் தாமே ஆயத்தப்படுத்துவதற்கான மகிழ்ச்சியான நேரம் அது.
புழுக்கள் முதல் யுத்தம் வரை
பத்து வயதாக இருந்த கிளியோவிற்கு மீன் பிடித்தலில் அன்று முதல் அனுபவமாக இருந்தது. ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த புழு இரையை அவன் பார்த்தபொழுது, மீன் பிடித்தலை ஆரம்பிக்க அவன் தயங்கினான். இறுதியில் அவன் எனது கணவனிடம் “எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினான். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தத்தை எனது கணவன் அவனிடம் கேட்ட பொழுது “புழுக்களைக் கண்டால் எனக்கு பயமாக உள்ளது.” அவனது பயம் அவனை செயல்பட விடாமல் தடுத்துவிட்டது.
வயது முதிர்ந்தவர்களையும் பயம் செயல்பட இயலாமல் தடுத்துவிடும். கிதியோன் அவனது எதிராளிகளாகிய மீதியானியருக்குப் பயந்து ஆலைக்கு சமீபமாக கோதுமையை போரடித்துக் கொண்டிருந்த பொழுது, கர்த்தருடைய தூதனானவர் அவனுக்கு தரிசனமான பொழுது அவனும் பயந்திருப்பான் (நியா. 6:11). அவனது ஜனங்களை யுத்தத்தில் தலைமை தாங்கி நடத்த அவனை தேவன் தெரிந்தெடுத்துள்ளார் என்று கர்த்தருடைய தூதன் அவனிடம் கூறினான் (வச. 12-14).
அதற்கு கிதியோனின் மறுமொழி என்ன? “ஆ என் ஆண்டவரே நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன். இதோ மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன்” (வச. 15) என்று கூறினான். கர்த்தர் அவனோடு இருப்பதாக வாக்குத்தத்தம் பண்ணின பின்பும் கிதியோன் பயந்து இஸ்ரவேல் மக்களை மீட்க தேவன் அவனை பயன்படுத்துவதாக இருந்தால் ஓர் அடையாளத்தை அவனுக்கு காண்பிக்க வேண்டுமென்று கேட்டான் (வச. 36-40). தேவன் அவனது விண்ணப்பத்திற்கு செவிகொடுத்தார். இஸ்ரவேல் மக்கள் யுத்தத்தில் வெற்றி அடைந்தார்கள். நாற்பது ஆண்டுகள் கிதியோன் சமாதானமாக ஆட்சிசெய்தான்.
நம் அனைவருக்கும் பல்வேறு வகையான பயங்கள் உண்டு. புழு முதல் யுத்தம் வரைக்கும் பயம் உண்டு. எதாவது ஒரு காரியத்தை செயல்பட வேண்டுமென்று தேவன் நம்மிடத்தில் கேட்டால், நிச்சயமாக அக்காரியத்தை செய்வதற்கான பெலத்தையும் வல்லமையும் கொடுப்பாரென்று கிதியோனின் சரித்திரம் நமக்கு ஒரு நிச்சயத்தை கொடுக்கிறது.
போதுமானது
ஒரு சிறு குழுவை எங்களது வீட்டில் வைத்து உபசரிக்க வேண்டுமென்று என் கணவரிடமும் என்னிடமும் கேட்ட பொழுது உடனே அதை மறுத்துவிட நினைத்தேன். அவர்களை உபசரிக்கும் அளவிற்கு எனக்கு வசதிகள் இல்லை. எங்களது வீடு மிகச் சிறியது. அதிக ஆட்கள் அதில் தங்க இயலாது. அனைவருக்கும் போதுமான இருக்கைகள் கூட இல்லை. அவர்களோடு உரையாடலில் ஈடுபடுமளவிற்கு எங்களிடம் திறமைகளும் இல்லை. அச்சிறிய குழுவிற்கு தேவையான உணவை தயாரித்து தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டால், அதற்காக செயல்படும் திறமையோ பணவசதியோ என்னிடம் இல்லை. அவர்களை பராமரிக்க என்னிடம் போதுமான வசதிகள் இல்லை. ஆனால், தேவனுக்கும் இந்த சமுதாயத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆவல் உண்டு. ஆகவே எங்களது பயங்களை புறம்பே தள்ளிவிட்டு அச்சிறு குழுவை பராமரிக்க ஒத்துக் கொண்டோம். அச்சிறு குழுவை எங்களது வரவேற்பரையில் ஏற்றுக் கொண்டது, கடந்த ஐந்து அண்டுகளாக, மகிழ்ச்சியைத் தந்தது..
தேவனுடைய மனுஷனான எலிசாவிற்கு, அப்பங்களை கொண்டுவந்த மனிதனுக்கும் இதைப் போலவே தயக்கமும் சந்தேகமும் இருந்தது. அந்த மனிதன் கொண்டு வந்த அப்பத்தை மனிதர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்படி எலிசா கூறினான். அவனது பணிவிடைக்காரனோ அந்த இருபது அப்பங்களை எப்படி நூறு பேருக்கு கொடுக்க முடியும் என்று கேட்டான். மனிதர்கள் எண்ணத்தின்படி அந்த இருபது அப்பங்கள் நூறு பேரை போஷிக்க போதுமானதாக இருக்காது என்று எண்ணி அவற்றை மனிதர்கள் முன்பு வைக்க வேண்டாமென்று எண்ணினான். ஆனால், அந்த அப்பங்கள் அவர்களது தேவைக்கு அதிகமாக இருந்தது (2 இரா. 4:44). ஏனென்றால் அந்த மனிதன் கீழ்ப்படிந்து கொடுத்ததினால் தேவன் அவற்றை அளவிற்கு அதிகமாக ஆசீர்வதித்து தேவைகளை சந்தித்தார்.
நாம் தகுதியற்றவர்களன்றோ கொடுப்பதற்கு நம்மிடம் போதுமானது இல்லை என்று எண்ணும்பொழுதோ, நம்மிடம் உள்ளது எதுவோ அதை விசுவாசத்துடன் கூடிய கீழ்ப்படிதலோடு தேவனிடம் கொடுக்க வேண்டுமென்று அவர் நம்மிடம் கேட்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவனே அனைத்தையும் போதுமானதாக மாற்றுகிறவர்.
எது வரைக்கும்?
எனக்கு திருமணம் ஆனவுடனேயே எனக்கு குழந்தைகள் பிறந்துவிடும் என்று எண்ணினேன். உடனே குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தை பெறுவதற்கு இயலாத என்னுடைய நிலைமையினால் ஏற்பட்ட மனவேதனை குழந்தை பேற்றுக்காக தேவனிடம் மன்றாட எனக்கு வழிவகுத்தது. நான் அடிக்கடி தேவனிடம் “எவ்வளவு காலம்?” என்று முறையிடுவேன். எனது சூழ்நிலைகளை தேவனால் மாற்றி அமைக்க இயலும். என்று அறிவேன். ஆனால், அவர் ஏன் மாற்றவில்லை?
நீங்கள் தேவனுக்கு காத்திருக்கிறீர்களா? நாம் வாழும் இப்பூமியிலே நியாயம் நிலை நிறுத்தப்பட எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா? கேன்சர் நோய் சுகமாகக் கூடிய காலம் எப்பொழுது வரும் என்று கேட்கிறீர்களா? நான் கடனில் விழுந்து விடாமல் இருக்க எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா?
ஆபகூக் என்ற தீர்க்கன் அதுபற்றி தெளிவான எண்ணம் கொண்டிருந்தான். “கர்த்தாவே நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் கேளாமல் இருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் என்னை இரட்சியாமல் இருக்கிறீரே. நீர் எனக்கு அக்கிரமத்தை காண்பித்து என்னை தீவினையை பார்க்கப் பண்ணுகிறது என்ன?” (ஆப. 1:2-3) என்று அவன் தேவனை நோக்கிக் கதறினான். நீதியும் வல்லமையுமுள்ள தேவன், பொல்லாப்பு அநீதி, சீர்கேடு ஆகியவற்றை எவ்வளவு காலம் தொடர தேவன் அனுமதிப்பார் என்று அவன் அங்கலாய்த்தான். ஏன் தேவன் இடைப்படவில்லை. ஏதும் செயல்படவில்லை என்ற கேள்விகளைக் குறித்து ஆபகூக் அதிகமாக சிந்தித்தான்.
நாமும் இவ்விதமாக தேவன் ஏன் செயல்படாமலிருக்கிறாரென்று எண்ணுகிற நாட்கள் உண்டு. ஆபகூக்கைப் போல “எது வரை?” என்று தேவனிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆயினும் நான் தனிமையாக இல்லை. ஆபகூக்கின் குரலைக் கேட்டவர் நம்முடைய பாரங்களைப் பற்றியும் விசாரிக்கிறவராயிருக்கிறார். அவர் நம்மை விசாரிக்கிறவரானபடியினால் நமது பாரங்களை அவர்மேல் வைத்துவிட வேண்டும். தேவன் நமது விண்ணப்பங்களை கேட்கிறார். அவரது நேரத்தில் அவர் அவைகளுக்குப் பதிலளிப்பார்.
நான் அப்பொழுதே அறிந்திருந்தால்
நான் என் பணிக்கு செல்லும் வழியில் “அன்பான இளம் வயதிளான நான்” என்ற பாடலைக் கேட்டேன். நீ கடந்த காலத்திற்கு செல்ல முடிந்தால் இப்பொழுது நீ அறிந்திருக்கும் காரியங்களைக் குறித்து அப்பொழுது இளமையாக இருந்த உன்னிடம் நீ என்ன சொல்லுவாய்? நான் அந்த பாடலை கவனித்து கேட்ட பொழுது, ஞானத்தைப் பற்றியும், எச்சரிக்கைப் பற்றியும் சில கருத்துகளைக் கூறியிருக்கலாம் என்று எனக்குள் எண்ணினேன். நமது வாழ்க்கையின் எதாவது சில சமயங்களில், கடந்த காலத்தில் நாம் செய்த காரியங்களை இப்பொழுது செய்ய நேரிட்டால் வேறுவிதத்தில் சிறப்பாக செயல்பட்டிருப்போமே என்று எண்ணியிருப்போம்.
ஆனால், நான் கேட்ட அந்தப் பாடல் நமது கடந்தகால வாழ்க்கை, நம்மை மனவருத்தத்தால் நிரப்பியிருந்தாலும், நாம் அவற்றின் மூலம் பெற்ற அனுபங்கள் நம்மை இன்றுவரை உருவாக்கியுள்ளன என்று விளக்குகிறது. நமது பாவம் அல்லது நமது தேர்ந்தெடுப்புகளால் ஏற்பட்ட விளைவுகளை நம்மால் மாற்றியமைக்க முடியாது. கர்த்தருக்கு தோத்திரம்.
நாம் நமது பயங்கரமான மன பாரங்களையும், கடந்த கால தவறுகளையும் சுமந்துதிரிய வேண்டாம். ஏனென்றால் “ஜீவனுள்ள நம்பிக்கை உன்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” 1 பேது. 1:4ல் கூறப்பட்டபடி இயேசு நமக்கு செய்துள்ளார்.
நாம் நமது பாவத்தைக் குறித்த மன வருத்தத்தோடும், விசுவாசத்தோடும் அவரிடம் திரும்பினால் அவர் நம்மை மன்னிப்பார். அந்த நாளிலே நாம் புத்தம் புதிய வாழ்க்கையைப் பெற்று ஆவிக்கேற்றபடி மன மாற்றம் அடைவோம் (2 கொரி. 5:19). நாம் செய்த காரியங்களாலோ அல்லது செய்யாத செயல்களினால் அல்லாமல் கர்த்தராகிய இயேசு நமக்காக செய்து முடித்த காரியத்தினாலேயே நமது பாவங்கள் நமக்கு மன்னிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாளை நாம் பயனுள்ள முறையில் பயன்படுத்தி அவரோடு கூட இணைந்து எதிர்காலத்தை சந்திப்போம். கிறிஸ்துவுக்குள் நாம் விடுதலை பெற்றவர்களாக இருக்கிறோம்.
நம்மீது அசைவாடுதல்
பெட்டியின் மகள் அவளது கடற்;பயணத்தை முடித்துவிட்டு உடல் நலமில்லாமல் வீடு திரும்பினாள். தூங்க முடியாத அளவிற்கு அவளது வலி அதிகரித்தபொழது பெட்டியும் அவளது கணவரும் அவளை அவசர மருத்துவ அறைக்கு கூட்டிச்சென்றார்கள். மருத்துவர்களும், செவிலியர்களும் உடனே அவளுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். சில மணிநேரம் கழித்து ஒரு தாதி பெட்டியிடம் வந்து “உங்கள் மகள் சுகமடையப் போகிறாள். அவள் சுகமாவதற்காக நாங்கள் அதிக கவனம் செலுத்தப் போகிறோம்” என்றாள். அந்த நிமிடத்தில் பெட்டியின் உள்ளம் சமாதானம் அடைந்து அன்பினால் நிரப்பப்பட்டாள். அவள் அவளது மகளைக் குறித்து கரிசனையோடு கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது, தேவன்தாமே அவரது பிள்ளைகளை பேணிப்பாதுகாக்கும் தலை சிறந்த பெற்றோராக இருந்து, துக்கமான நேரங்களில் நமக்கு ஆறுதல் தருகிறார்.
உபாகமம் புத்தகத்தில் தேவன் அவருடைய ஜனங்கள் வனாந்திரத்தில் சுற்றி அலைந்த பொழுது, தன் குஞ்சுகள் மேல் அசைவாடி காக்கும் கழுகைப்போல அவர் காத்து வந்ததை அவருடைய மக்களுக்கு நினைப்பூட்டினார். அவர் அவர்களை விட்டு ஒருக்காலும் விலகவே இல்லை. “கழுகு தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு போகும் கழுகைப் போல” உபாகமம் 32:11 தேவன் அவர்களை விட்டு ஒருக்காலும் விலகவே இல்லை. வனாந்தரத்தில் அவர்கள் கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வந்தாலும், தேவன் அவர்களை கைவிடவில்லை என்பதை அவர்கள் நினைவு கூரும்படி தேவன் விரும்பினார்.
நாமும் நமது வாழ்க்கையில் பலவிதமான சவால்களை சந்திக்கலாம். ஆனால், தேவன் நம்மை விட்டு ஒருக்காலும் விலகவில்லை என்பதை நினைவு கூர்ந்து தைரியமும், ஆறுதலும் அடையலாம். நாம் கீழேவிழுவதாக நினைக்கும்பொழுது தேவன்> ஒரு கழுகு அதன் செட்டைகளை விரித்து அதன் குஞ்சுகளைக் காப்பாற்றுவது போல, (வச. 11) நம்மைக் காப்பாற்றி சமாதானம் தருகிறார்.
தெய்வீகக் குறுக்கீடுகள்
ஓவ்வொரு நாளும் நம்முடைய நேரம் நம்மால் நம்ப இயலாத அளவிற்கு, பல்வேறு குறுக்கீடுகளால் பெருமளவு பாதிக்கப்படுகிறதென்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நமது வீட்டிலோ அல்லது பணி செய்யும் இடத்திலோ, ஒரு தொலைபேசி அழைப்பு, அல்லது எதிர்பாராத ஒருவரின் வருகை நமது முக்கியமான நோக்கத்தினின்று நமது கவனத்தை மாற்றிவிடுகிறது.
அன்றாட வாழ்வில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய முறையில் குறுக்கீடுகள் ஏற்படுவது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இயேசு குறுக்கிடுகளாகத் தோன்றிய அநேக காரியங்களை வேறுபட்ட முறைகளில் கையாண்டார். சுவிசேஷங்களில்
அநேகந்தடவை தேவையிலுள்ள ஒருவருக்கு உதவி செய்ய, அவர்செய்து கொண்டிருந்த செயலை நிறுத்திவிட்டு அவர்களுக்கு உதவி செய்துள்ளார் என்பதைப் பார்க்கிறோம்.
இயேசு சிலுவையில் அறையப்பட எருசலேமிற்கு செல்லும் வழியில், சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் “இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்!” (லூக். 18:35-38) என்று சத்தமிட்டு கூப்பிட்டான். கூட்டத்திலிருந்த சிலர் அவனை அமைதியாக இருக்கும்படி அதட்டினார்கள். அவனோ தொடர்ந்து இயேசுவை கூப்பிட்டுக் கொண்டிருந்தான். இயேசு நின்று, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். “ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும்.” என்றான். “இயேசு அவனை நோக்கி நீ பார்வையடைவாயாக. உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார்; (வச. 41-42).
உண்மையாகவே நமது உதவி தேவைப்படும் மக்களால், நமது செயல் திட்டங்கள் பாதிக்கப்படும் பொழுது நாம் கரிசனையுடன் எப்படி செயல்பட வேண்டுமென்று தேவனிடம் ஆலோசனை கேட்கலாம். நாம் இடையூறுகள் என்று நினைக்கும் காரியங்கள் ஒருவேளை அன்றய நாளுக்குரிய தேவனுடைய திட்டமாக இருக்கலாம்.
கிறிஸ்துவுக்குள் உருவாக்கப்படல்
மாற்கின் தகப்பனார் அவரது குடும்பத்தை> குடும்ப கூடுகைக்கு அழைத்திருந்த பொழுது, மாற்கு அவனது குழந்தை பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தான். அவனது குடும்பத்தின் கார் பழுதடைந்துவிட்டது. மாத இறுதியானவுடன் அவனது குடும்பத்தின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகிவிடும். மாற்கின் தந்தை மனம் பதறாமல் ஜெபம் பண்ணினார். பின்பு அவரது குடும்ப அங்கத்தினரிடம் தேனிடமிருந்து பதிலை எதிர்பார்க்கும்படி கூறினார். தேவனுடைய உதவி ஆச்சரியப்படத்தக்க பல்வேறு வழிகளில் வந்ததை மாற்கு இன்று நினைவு கூறுகிறான். அவர்களது நண்பர் ஒருவர் அவர்களது காரை பழுதுபார்த்து கொடுத்தார். எதிர்பாராத நபரிடமிருந்து காசோலைகள் வந்தன. அநேகர் அவர்களுக்கு தேவையான உணவை வீட்டிலே வந்து கொடுத்தார்கள். நன்றியுள்ள இருதயங்களோடு குடும்பத்தினர் தேவனை துதிப்பது இலகுவாக இருந்தது. ஆனால், அவர்களது குடும்பத்தின் நன்றியுணர்வு ஒரு நெருக்கமான சுழ்நிலையினால் உண்டானது.
சங்கீதம் 57 ஆராதனைப் பாடல்களுக்கான உணர்ச்சி பூர்வமான தூண்டுதலை உண்டாக்குகிறது. “தேவனே வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்” (வச. 11) என்று தாவீது அறிவித்த பொழுது மத்திய கிழக்கு நாட்டில் மகிமை பொருந்திய இரவு நேர ஆகாயத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்திருப்பான். அல்லது ஒருவேளை ஒரு கூடாரத்தில் நடந்த ஒரு ஆராதனையில் அவன் பாடிக்கொண்டிருப்பான் என்று நாம் கற்பனை பண்ணலாம். ஆனால், உண்மையில் தாவீது அவனது உயிருக்குப் பயந்து ஒரு குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது அந்தபாடலைப் பாடியுள்ளான்.
இந்த சங்கீதத்தில் தாவீது “சிங்கங்களின் நடுவாக இருக்கிறேன்” என்று கூறுகிறான். “தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும் அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.” சங்கீதம் 57:4 என்றும் தாவீது கூறியுள்ளார். தாவீதின் நெருக்கங்களில் இந்த துதி சங்கீதம் உருவானது. அவனை கொல்லுவதற்கு அவனைத் தொடர்ந்த அவனது எதிராளிகள் நெருக்கினாலும் கவலைப்படாமல் “என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது. தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்” (வச. 7) என்ற இந்த ஆச்சரியமான வார்த்தைகளை தாவீதினால் எழுத முடிந்தது.
இன்று நாம் எப்படிப்பட்ட நெருக்கங்களை சந்தித்தாலும், நமக்கு உதவி செய்ய ஆயத்தமாகவுள்ள தேவனண்டைஓடிவிடலாம். அப்பொழுது அவரது மாறாத நித்திய கரிசனை நம்மேல் உள்ளது என்ற நம்பிக்யோடு தேவனை துதித்து போற்றலாம்.
மிகச் சிறந்த ஜெபப் பங்காளர்
உங்களை நேசிக்கும் ஒருவர், உங்களுக்காக ஜெபிக்கும் ஜெபத்தை நீங்கள் கேட்கும்பொழுது எவ்வளவு அழகாக உள்ளது. அதுபோல வேறு சில சத்தங்களும் அழகாக இருக்கலாம். மன உருக்கத்தோடும், தேவ ஞானத்தோடும் உங்களுக்காக உங்கள் சினேகிதர் ஜெபம் பண்ணுவதை நீங்கள் கேட்கும் பொழுது, பூலோகத்தை பரலோகம் தொடுவது போல இருக்கிறது.
தேவன் நம்மீது வைத்த அன்பினால் நமது ஜெபங்கள் கூட பரலோகத்தை தொட முடியும் என்பதை நாம் அறிந்து கொள்வது எவ்வளவு சிறப்பான காரியமாக உள்ளது. சில நேரங்களில் நாம் ஜெபிக்கும் பொழுது, சரியான வார்த்தைகள் வராமலும் உணர்வுகளை சரியாக வெளிக்காண்பிக்க இயலாமலும் போராடுவோம். ஆனால், இயேசு அவரைப் பின்பற்றினவர்களுக்கு “சோர்ந்து போகாமல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” (லூக். 18:1) என்று கற்றுக் கொடுத்தார். நாம் இப்படி செய்ய முடியுமென்பதற்கான காரணங்களில் ஒன்று “இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் இருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே’’ (ரோம. 8:34) என்று தேவனுடைய வார்த்தை விளக்குகிறது.
நாம் ஒருபோதும் தனியாக ஜெபிப்பது கிடையாது. ஏனென்றால், இயேசு நமக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். நாம் ஜெபிக்கும்பொழுது அவர் செவிசாய்த்து நமது சார்பாக பிதாவிடம் மன்றாடுகிறார். நாம் ஒரு சிறந்த பேச்சாளரைப் போல பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனெனில் இயேசுவைப்போல நம்மை புரிந்து கொள்பவர்கள் வேறுயாரும் இல்லை. நாம் எதிர்பார்க்கும் பதில்கள் எப்பொழுதும் நன்மையாக அமையாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். நமது ஒவ்வொரு வேண்டுதலையும், நமது தேவைகளையும் பரிபூரண ஞானத்தோடும், அன்போடும் அவர் சந்திக்கிறார்.
இயேசு நமது சிறந்த ஜெபப் பங்காளராக இருக்கிறார். அளவு கடந்த அன்போடு கூட தேவனிடம் நமக்காகச் செய்யும் வேண்டுதல்கள், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு சிறந்ததாக இருப்பதோடு அவரது ஜெபங்கள் நம்மை நன்றியுடன் எப்பொழுதும் ஜெபிக்க உற்சாகப் படுத்துவதாகவும் உள்ளன.