தேசிய பொக்கிஷம்
ஒரு விளம்பரதாரர், மைக்கேல் ஆஞ்சலோவின் மிகச் சிறந்த படைப்பாகிய, வேதத்திலுள்ள தாவீதின் பளிங்கு சிற்பத்தின் படத்தை மாற்றியமைத்தார். இதனை இத்தாலிய அரசும் அருங்காட்சியகத்தின் அலுவலர்களும் எதிர்த்தனர். தாவீதின் படத்தை ஒரு இராணுவத் துப்பாக்கியை தன் தோளில் தொங்க விட்டிருப்பது போல (ஒரு கவணுக்குப் பதிலாக) சித்தரித்திருப்பது சட்ட விரோதமானது, ”அது அந்தச் சிற்பத்தை சுத்தியலால் உடைப்பதற்குச் சமம் அல்லது அதைவிட மோசம்” என ஒரு கலைத்துறை அலுவலர் சொன்னார்.
முதலாம் நூற்றாண்டில் எருசலேமில் தாவீது ஒரு மேய்ப்பனாகவும், சங்கீதம் எழுதுபவனாகவும், வீரனாகவும், ராஜாவாகவும், இஸ்ரவேலினால் மிகவும் விரும்பப்பட்டவனாகவும், மிகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் நினைவுகூறப்பட்டான். தாவீதின் வம்சாவளியினர் இஸ்ரவேலரின் எதிரிகளைத் தோற்கடிப்பர் என தீர்க்கதரிசிகள் முன் உரைத்திருந்தனர். எனவே பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இயேசு கிறிஸ்துவை தாவீதின் குமாரன் என மக்கள் கூட்டம் வரவேற்றபோது, (மத். 21:6-9) அவர்கள் இயேசு, ஒரு புரட்சி வழி நடத்தி ரோம ஆட்சியைத் தூக்கி எறிவார் என எதிர்பார்த்தனர். ஆனால் இயேசுவோ, தேவாலயத்தில் காசுக்காரரின் பலகைகளை தூக்கி எறிந்து, எல்லா ஜனத்துக்கும் ஜெப வீடு என்றழைக்கப்படும் என் தந்தையின் வீடு என்று அதனை மீட்டார். எனவே இஸ்ரவேல் தலைவர்கள் கொதித்தெழுந்தனர். இத்தகைய ஒரு மேசியாவை, தாவீதின் குமாரனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதையறியாமல், மரண தண்டனையை நிறைவேற்றும்படி ரோமர்களிடம், உண்மையான இஸ்ரவேலரின் மகிமையை, ஒப்புக்கொடுத்துக் கைகளிலும், கால்களிலும் ஆணியடிக்கச் செய்தனர்.
அப்படிச் செய்ததைத் தடுப்பதற்குப் பதிலாக, இயேசுவும் தன்னை அவமானச் சின்னமான சிலுவையில் தூக்கப்படவும், உருக்குலையவும், அவமரியாதைக்கும் ஒப்புக்கொடுத்தார். இயேசு உயிர்த்தெழுந்ததன் மூலம் அவரே மெய்யான தாவீதின் குமாரன், தன் எதிரிகளை அன்பினால் தோற்கடித்து, அனைத்துலகிலும் உள்ள அவருடைய பிள்ளைகள் அவருடைய வார்த்தைகளை பரப்பும்படியும் செய்தார்.
உறைந்த பனியைப்போல வெண்மை
கடந்த டிசம்பர் மாதத்தில் நான் என் குடும்பத்தோடு மலைப் பகுதிக்குச் சென்றோம். நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுதும் வெப்பமண்டலப் பகுதியிலேயே வாழ்ந்ததால் முதல் முறையாக நாங்கள் உறைந்த பனியையும் அதன் அற்புத அழகையும் காண முடிந்தது. வெள்ளை போர்வை போர்த்தியதைப் போல காட்சியளித்த வயல் வெளிகளைக் கண்ட எனது கணவர், “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல வெண்மையாகும்” (ஏசா. 1:18) என்ற வசனத்தைக் குறிப்பிட்டார்.
சிவேரென்பதின் அர்த்தம் என்ன என்பதை எங்களுடைய மூன்று வயது மகள் கேட்டதோடு, “சிவப்பு நிறம் கெட்டதா? எனவும் கேட்டாள். பாவம் என்பது தேவன் வெறுக்கும் காரியம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இந்த வசனம் வெறும் நிறத்தை மட்டும் குறிப்பிடவில்லை, இங்கு தீர்க்கதரிசி விளக்குவது என்னவெனின், ஆழ்ந்த சிவப்பு நிறச்சாயம் ஒரு சிறிய பூச்சியின் முட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆடைகள் இந்த ஆழ்ந்த சிவப்பு சாயத்தில் இருமுறை சாயமேற்றப்படுகின்றன. எனவே இந்த நிறம் நிரந்தரமாக ஒட்டிவிடுகிறது. மழையோ, அல்லது எப்படித் துவைப்பதாலேயும் அந்த நிறத்தை எடுக்க முடியாது. பாவமும் அப்படியே தான். மனித முயற்சியால் நம் பாவத்தை நீக்க முடியாது. அது இருதயத்தில் பதிந்து விடும்.
தேவனால் மட்டுமே இருதயத்தை பாவத்திலிருந்து சுத்திகரிக்க முடியும். இந்த மலையைப் பார்க்கும் போது, ஒரு வியத்தகு தூய வெண்மையைக் காண்கிறோம். ஆழ்ந்த சிவப்பில் சாயமிடப்பட்ட ஒரு துணியைத் தேய்ப்பதாலோ அல்லது எந்த நிற நீக்கியினாலோ இந்த தூய வெண்மையைக் கொண்டு வரவேமுடியாது. பேதுருவின் போதகத்தை நாம் பின்பற்றும் போது, ‘உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்” (அப். 3:20) தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு ஒரு புது வாழ்வைத் தருகிறார். இயேசு கிறிஸ்துவின் தியாகம் மட்டுமே நமக்கு ஒரு தூய உள்ளத்தைத் தர முடியும். இது எத்தனை பெரிய ஈவு.
வல்லவரும், அணுகக்கூடியவரும்
என்னுடைய தாயாருக்கு புற்றுநோய் என்ற அறிக்கை வந்த போது, என் கணவர் வேலைக்குச் சென்று விட்டிருந்தார். நான் அவருக்கும், சில நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இச்செய்தியைத் தெரியப்படுத்தினேன். என் முகத்தை நடுங்கும் கரங்களால் மூடிக்கொண்டு “எனக்கு உதவும் கர்த்தாவே” என்று விம்மி அழ ஆரம்பித்தேன். நான் முற்றிலும் தனிமையை உணர்ந்த அந்த நேரத்திலேயே தேவன் என்னோடிருந்து என்னைத் தேற்றி, என்னருகில் இருக்கிறார் என்ற உத்திரவாதத்தை எனக்குத் தந்தார்.
என் கணவர் உடனே வீட்டிற்கு வந்தார். என்னுடைய நண்பர்கள் உறவினரின் ஆதரவும் எனக்குக் கிடைத்தது. நான் தேவனுக்கு நன்றி கூறினேன். எங்கெங்கிருந்தும், எவ்வெப்பொழுதும் நாம் அவருடைய உதவியைக் கேட்கும் போது, தயாராகவும் உண்மையுள்ளவராகவும் வந்து நம்மை அமைதிப்படுத்தும் அவருடைய பிரசன்னத்தை, நான் அந்த முதல் சில மணித்துளிகள் தனிமையாக துயருற்றபோது உண்ர்ந்தேன்.
சங்கீதம் 46ல், சங்கீதக்காரன் தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், அனுகூலமான துணையுமானவர் எனத் தெரிவிக்கின்றார். நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் குழப்பமாக இருப்பதை நாம் உணரும் போதும் நாம் நம்பியிருந்த உறுதி யாவும் நொறுக்கப்பட்ட போதும், நாம் பயப்படத் தேவையில்லை (வச. 2-3) தேவன் தள்ளாடுவதில்லை (வச. 4-7). அவருடைய வல்லமை உண்மையும் செயல் திறனுமுள்ளது. (வச. 8-9) அவர் நம்மை முடிவில்லாமல் காப்பவர். அவருடைய மாறாத தன்மையின் மீது நமக்கு நம்பிக்கையைத் தருகிறார் (வச. 10). நமக்கு உறுதியான பாதுகாப்பாக அவர் எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் (வச. 11).
ஜெபத்தில் ஒருவரையொருவர் தாங்கவும், ஊக்குவிக்கவுமே, தேவனைப் பின்பற்றுகிறவர்களை அவர் உருவாக்கினார். அவர் வல்லவரும், எப்பொழுதும் நமக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறார் என்ற உறுதியை நமக்களிக்கின்றார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நமக்கு உதவி செய்ய, அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என நாம் அவரை நம்பலாம். அவருடைய பிள்ளைகள் மூலமாயும், அவருடைய பிரசன்னத்தாலும் அவர் நம்மைத் தேற்ற வல்லவராயிருக்கிறார்.
ஒரு சிறு குழந்தையைப் போல
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மாலையில் என்னுடைய இரண்டு வயது மகளுடன் இரவு ஜெபத்தை முடிக்கும் போது, என் மகள் என் மனைவியிடம் ஒரு வியக்கத்தக்க கேள்வியைக் கேட்டாள். “அம்மா, இயேசு எங்கேயிருக்கிறார்? அதற்கு என் மனைவி லுஆன், “இயேசு கிறிஸ்து மோட்சத்திலிருக்கிறார், மேலும் அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். இப்பொழுது நம்மோடும் இருக்கிறார். நீ அவரை என் இருதயத்தில் வாரும் என்று அழைத்தால் அவர் உன் இருதயத்திலும் இருக்க முடியும்” என்று கூறினாள்.
“நான் இயேசு என் இருதயத்தில் இருக்க விரும்புகிறேன்.”
“ஒரு நாள் நீ அவரை வரும்படி கேள்.”
“நான் இப்பொழுதே அவர் என் இருதயத்தில் வரும்படி கேட்பேன்.”
எனவே என்னுடைய சிறிய மகள் சொன்னாள், “இயேசுவே, தயவு கூர்ந்து என் இருதயத்தினுள் வாரும். வந்து என்னோடிரும்” அன்று முதல் இயேசுவோடு அவளுடைய விசுவாச பயணம் துவங்கியது.
இயேசுவின் சீடர் பரலோகராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாய் இருப்பான் என்று கேட்டபோது, அவர் ஒரு சிறு பிள்ளையை தம்மிடத்தில் அழைத்து அவர்கள் நடுவே நிறுத்தி (மத். 18:1-2) “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போலாகாவிட்டால் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்… இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். (வச. 3-5) என்றார்.
இயேசுவின் கண்கள் பார்க்கின்ற படியே நாமும் ஒரு நம்பிக்கையுள்ள குழந்தையை நம் விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அவருக்கு தன்னுடைய இருதயத்தைத் திறக்கிற அனைவரையும் வரவேற்க கற்பிக்கப்பட்டுள்ளோம். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். பரலோகராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது” என்று இயேசு சொன்னார் (19:14)
மகிழ்ச்சி
நான் ஒரு புதிய காலநிலையை அடைகிறேன். முதிர்வயதின் குளிர்காலம் இன்னும் அதற்குள் வரவில்லை. ஆனால், நான் இன்னமும் அதை அடையவில்லை. வருடங்கள் வேகமாக குதித்து ஓடிக்கொண்டிருந்தாலும், நான் அவற்றின் வேகத்தைச் சற்று குறைக்க விரும்பினேன். எனக்குள் என்னைத் தாங்குகின்ற மகிழ்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தேவன் எனக்குத் தருகின்ற ஒரு புதியநாள். நானும் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “கர்த்தரைத் துதிப்பதும்… காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்” (சங். 92:1,3) என்று சொல்லுகிறேன்.
என் வாழ்வில் போராட்டங்களும் வேதனைகளும் இருந்த போதிலும், மற்றவர்களின் கஷ்டங்கள் சில வேளைகளில் என்னை மேற்கொள்கின்றன. தேவன் என்னையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து பாட பெலப்படுத்துகிறார்” உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன் (பாடுவேன்) (வச. 4). தேவன் தந்த ஆசிர்வாதங்களுக்காக, நமது குடும்பம், நண்பர்கள், மேலும் திருப்தியளிக்கக்கூடிய வேலை ஆகியவற்றினை அவருடைய எழுச்சியூட்டும் வார்த்தைகளுக்காகவும் மகிழ்ச்சியடைவோம். தேவன் நம்மை அதிகமாக நேசித்ததினால், நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார். நமக்கு மகிழ்ச்சியைத் தந்தார். மெய்யான மகிழ்ச்சியின் மூலக்காரணராகிய பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தார் (ரோம. 15:13). தேவனாகிய கர்த்தராலே “நீதிமான் பனையைப் போல் செழித்திருப்பான்… அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங். 92:12-15).
இந்த கனி என்பதென்ன? நம்முடைய வாழ்க்கைச் சூழல் அல்லது காலம் எப்படியிருந்தாலும், நம்முடைய வாழ்வினாலும் நாம் பேசும் வார்த்தையினாலும் அவருடைய அன்பிற்கு எடுத்துக்காட்டாயிருப்போம். நம் தேவனைத் தெரிந்துகொள்வதும், அவருக்காக வாழ்வதும் அவரைப் பற்றி பிறருக்குச் சொல்வதுமே உண்மையான மகிழ்ச்சி.
கடைசி வார்த்தை
ஒரு நாள் பல்கலைகழகத்தில் தத்துவ வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, அந்த பேராசிரியரின் கருத்துக்கு மாறாக, ஒரு மாணவன் கோபமூட்டக் கூடிய ஒரு கருத்தினை தெரிவித்தான். மற்ற மாணவர்கள் ஆச்சரியப்படும்படியாக அந்த ஆசிரியர் அம்மாணவனுக்கு நன்றி கூறியதோடு, மற்றொரு கருத்தினை விளக்க முற்பட்டார். பின்னர் அவரிடம் அம்மாணவனின் கருத்துக்கு ஏன் பதிலளிக்கவில்லை எனக் கேட்டபோது, “நான் கடைசி வார்த்தையைக் சொல்பவனாக இருக்கக் கூடாது என்கிற கொள்கையைக் செயல்படுத்தி வருகிறேன் என்றார்.
இந்த ஆசிரியர் தேவனை நேசிப்பவராகவும், கனம் பண்ணுபவராகவும் இருப்பதோடு, தாழ்மையின் ஆவியை அணிந்து கொண்டவராய் தேவ அன்பை வெளிப்படுத்தினார். இவருடைய வார்த்தைகள் எனக்கு வேறொரு ஆசிரியரை நினைவுபடுத்துகிறது. இந்த ஆசிரியர் வெகு காலங்களுக்கு முன்பு பிரசங்கி புத்தகத்தை எழுதினார். ஒரு கோபமுள்ள மனிதனை எவ்வாறு கையாள வேண்டுமென்று சொல்லாவிட்டாலும், அவர் கூறியது நாம் தேவனண்டை செல்லும் போது நம்முடைய நடையைக் காத்துக்கொள்ள வேண்டும், துணிகரமாய் வாயினால் பேசாமலும், மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமலும் “செவி கொடுக்கச் சேர்” என்கிறார். இவ்வாறு செய்யும் போது, நாம் அவர் தேவாதி தேவன் எனவும், நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம் (பிர. 5:1-2).
நீ தேவனண்டை எவ்வாறு செல்கிறாய்? உன் உணர்வுகள், உன் அணுகுமுறையை சற்று சரிசெய்துகொள் என்று உணர்த்தும் போது, மேன்மை பொருந்திய மகா தேவனைக் கனப்படுத்த, ஏன் அதற்கு சில மணித்துளிகள் செலவிடக் கூடாது? அவருடைய எல்லையில்லா ஞானத்தையும் வல்லமையையும், பிரசன்னத்தையும் நினைக்கும் போது, நாம் அவருடைய நிரம்பி வழியும் அன்பை நினைத்து வியந்து நிற்போம். இந்த தாழ்மையின் கோலத்தோடு இருக்கும் போது, நாமும் கடைசி வார்த்தையை சொல்பவர்களாக இருக்க மாட்டோம்.
பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்
“நீ கேளிக்கைகளில் இருக்கும் போது நேரம் பறக்கிறது” இந்த எண்ணத்திற்கு எந்த அடிப்படை ஆதாரமுமில்லையெனிலும், அனுபவம் இதனை உண்மையெனக்காட்டுகிறது.
வாழ்க்கை இன்பமாக இருக்கும் போது, நேரம் மிக வேகமாக கடந்துவிடுகிறது. நான் விரும்பத்தக்க ஒரு பணியை செய்தாலோ, அல்லது நான் விரும்பும் ஒரு நபரோடு நான் இருந்தாலோ அதற்கு நேரம் ஒரு பொருட்டல்ல.
இந்த உண்மையைக் குறித்த என்னுடைய அனுபவம், வெளிப்படுத்தல் 4ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ள காட்சிக்கு ஒரு புதிய புரிந்து கொள்ளலைத் தருகிறது. முன்பு நான் தேவனுடைய சிங்காசனத்தின் அருகில் அமர்ந்திருக்கும் நான்கு ஜீவன்களும் ஓயாமல் சில வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது எத்தனை சலிப்படையச் செய்யும் வாழ்வு என நான் நினைத்ததுண்டு.
ஆனால், இப்பொழுது அவ்வாறு சிந்திப்பதில்லை. அவற்றின் அநேகக கண்களால் (வச. 8) அவை பார்க்கின்ற காட்சிகளை நான் நினைத்துப் பார்க்கின்றேன். தேவனுடைய சிங்காசனத்தினருகில், அவற்றின் நிலையிலிருந்து, அவை பார்க்கின்றவற்றை நான் கருத்தில் கொள்கின்றேன் (வச. 6) நான் நினைக்கின்றேன், தேவன் புவியில் தான்தோன்றித்தனமாக வாழ்கின்றவர்களிடையே எத்தனை ஞானமும்; அன்பும் கொண்டு உறவாடுகிறார் என்பதைக் கண்டு அவைகள் வியந்திருக்கின்றன எனவே இதைவிட மேலான என்ன பதிலைக் காட்ட முடியம்? என நினைக்கிறேன். “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சொல்வதைவிட வேறென்ன சொல்வதற்கிருக்கிறது?
ஒரே வார்த்தையை மேலும் மேலும் கூற உனக்கு சலிப்பாயிருக்கிறதா? நீ நேசிக்கும் ஒருவரின் பிரசன்னத்தில் நீ இருக்கும் போது சலிப்பே ஏற்படாது. நீ எதற்காக உருவாக்கப்பட்டாயோ அதனை நிறைவேற்றும்போது நிச்சயமாக சலிப்பு இல்லை.
அந்த நான்கு ஜீவன்களைப் போன்று நாமும் தேவனை மகிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டோம். நாம் நம்முடைய கவனத்தை அவர் மீது வைத்து, அவரின் நோக்கத்தை நிறைவேற்றும் போது நம்முடைய வாழ்வு ஒருபோதும் சலிப்படையாது.
இந்தக் கட்டுரையை எழுதிய ஜூலி இப்பொழுது மோட்சத்தில் தேவனை ஆராதித்துக் கொண்டிருக்கின்றார்.
மெய்யான நம்பிக்கை
சில நாட்களுக்கு முன்பு நான் எனது நண்பனோடு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கு பார்வையிட வந்தோரின் வரிசை, குறைவாகவே காணப்பட்டது. ஆனால், அக்கட்டிடத்தின் உள்ளே சென்றபின் அந்த நுழைவு வராண்டா, படிக்கட்டு, அதன் வழியேயுள்ள மற்றொரு அறை அனைத்திலும் இருந்த நீண்ட வரிசை மக்களைக் கண்டோம். ஒவ்வொரு புதிய திருப்பமும் நாங்கள் இன்னமும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைத் தெரிவித்தது.
கவர்ச்சிகரமானவற்றிலும், கருத்து பூங்காக்களிலும் மக்கள் வரிசை சிறிதாக தோன்றும்படி கவனமாக வழியை அமைக்கின்றனர். எனினும் நாங்கள் “கட்டிடத்தின் திருப்பத்தை” அடைந்தபோது ஏமாற்றங்களையே சந்தித்தோம்.
சில வேளைகளில் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் மிகவும் கடுமையாக இருக்கலாம். நாம் எதிர்பார்க்கும் வேலை கைக்கூடவில்லை, நாம் நம்பிய நண்பர்கள் ஏமாற்றிவிட்டனர், நாம் ஏங்கிய வாழ்க்கைத் துணை அமையவில்லை. இத்தனை இதய நொறுங்குதலிலும் தேவனுடைய வார்த்தைகள், அவர் மீதுள்ள நம்பிக்கையைப் பற்றி ஒரு புதிய உண்மையைப் பேசுகின்றது, அப்போஸ்தலனாகிய பவுல், “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகின்றோம், மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோம. 5:3-5) என எழுதுகிறோம்.
நாம் நமது நம்பிக்கையை தேவன் மீது வைக்கும் போது, எத்தனை தடைகளை நாம் சந்தித்தாலும் அவருடைய ஆவியானவர் மூலம், நாம் அவரால் நிபந்தனையற்று நேசிக்கப்படுகிறோம், ஒரு நாள் நாமும் அவரோடு கூட வாழ்வோம் என்ற உண்மையைப் பேசுகின்றார். நமக்கு அடிக்கடி ஏமாற்றத்தையே தருகின்ற இந்த உலகில் தேவன் நமக்கு உண்மையான நம்பிக்கையைத் தந்திருக்கிறார் என்பது எத்தனை நலமானது.
வாழ்வு தரும் தேவன்
சில குளிர்காலங்களுக்கு முன்பு, என்னுடைய சொந்த பட்டணம் அசாதாரணமான, எலும்பையும் துளைக்கக் கூடிய குளிர்ந்த காலநிலையை நீண்ட நாட்கள் அனுபவித்தது. ஆனால், இறுதியாக அது ஒரு வெப்பமான வசந்த காலத்திற்கு வழிவகுத்தது. இரு வாரங்கள் தொடர்ச்சியாக வெளிப்புற வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே தள்ளப்பட்டது (-20°c;-5°).
அப்படியொரு மிகக் குளிர்ந்த நாள் காலையில் கிரீச்சிடும் பறவைகளின் ஓசை, இரவின் அமைதியைக் கலைத்தது. நூற்றுக்கணக்கான பறவைகள் தங்கள் இருதயத்தின் எண்ணங்களைப் பாடின. அந்த சிறிய உயிரினங்கள் தங்களைப் படைத்தவரை நோக்கி, தயவாய் அனைத்தையும் வெப்பமாக்கித் தாரும் என்று கதறுவதாக நான் உறுதியாகக் கூறமுடியும்.
பறவை நிபுணர்கள், பிந்தின குளிர்காலங்களில் நாம் கேட்கும், பறவையின் பாடல்களையெல்லாம் பாடுவது, அநேகமாக ஆண் பறவைகளே. அவை தங்கள் துணைகளை ஈர்ப்பதற்கும், தங்கள் எல்லைகளை உறுதிப்படுத்தவும் பாடுகின்றன என்கின்றார். தங்கள் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளவும், வளப்படுத்திக் கொள்ளவும் தேவன் தன் சிருஷ்டிப்புகளை நமக்கு சீர்ப்படுத்தியுள்ளார் என்பதை அவற்றின் குரல்கள் நினைப்பூட்டுகின்றன. ஏனெனில் அவர்தான் வாழ்வு தரும் தேவன்.
தேவன் படைத்த, வளங்கள் நிறைந்த பூமியை வியந்து சங்கீதக்காரன் “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர், மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர்” எனப் பாடுகிறார். மேலும் “அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்” (சங். 104:12) என பாடுகிறார்.
பாடுகின்ற கூடுகட்டி வாழ்கின்ற பறவைகள் முதல் பெரிதும் விஸ்தாரமான சமுத்திரம் வரை “அதிலே சஞ்சரிக்கும் எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வச. 25). அத்தனையும் படைத்தவரும், அவைகள் அத்தனையும் வாழ்வதற்கு உறுதியளிக்கின்றவருமாகிய நம்முடைய சிருஷ்டிகரே போற்றத் தகுந்தவர்.