ஒரு நாள் பல்கலைகழகத்தில் தத்துவ வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, அந்த பேராசிரியரின் கருத்துக்கு மாறாக, ஒரு மாணவன் கோபமூட்டக் கூடிய ஒரு கருத்தினை தெரிவித்தான். மற்ற மாணவர்கள் ஆச்சரியப்படும்படியாக அந்த ஆசிரியர் அம்மாணவனுக்கு நன்றி கூறியதோடு, மற்றொரு கருத்தினை விளக்க முற்பட்டார். பின்னர் அவரிடம் அம்மாணவனின் கருத்துக்கு ஏன் பதிலளிக்கவில்லை எனக் கேட்டபோது, “நான் கடைசி வார்த்தையைக் சொல்பவனாக இருக்கக் கூடாது என்கிற கொள்கையைக் செயல்படுத்தி வருகிறேன் என்றார்.

இந்த ஆசிரியர் தேவனை நேசிப்பவராகவும், கனம் பண்ணுபவராகவும் இருப்பதோடு, தாழ்மையின் ஆவியை அணிந்து கொண்டவராய் தேவ அன்பை வெளிப்படுத்தினார். இவருடைய வார்த்தைகள் எனக்கு வேறொரு ஆசிரியரை நினைவுபடுத்துகிறது. இந்த ஆசிரியர் வெகு காலங்களுக்கு முன்பு பிரசங்கி புத்தகத்தை எழுதினார். ஒரு கோபமுள்ள மனிதனை எவ்வாறு கையாள வேண்டுமென்று சொல்லாவிட்டாலும், அவர் கூறியது நாம் தேவனண்டை செல்லும் போது நம்முடைய நடையைக் காத்துக்கொள்ள வேண்டும், துணிகரமாய் வாயினால் பேசாமலும், மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமலும் “செவி கொடுக்கச் சேர்” என்கிறார். இவ்வாறு செய்யும் போது, நாம் அவர் தேவாதி தேவன் எனவும், நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம் (பிர. 5:1-2).

நீ தேவனண்டை எவ்வாறு செல்கிறாய்? உன் உணர்வுகள், உன் அணுகுமுறையை சற்று சரிசெய்துகொள் என்று உணர்த்தும் போது, மேன்மை பொருந்திய மகா தேவனைக் கனப்படுத்த, ஏன் அதற்கு சில மணித்துளிகள் செலவிடக் கூடாது? அவருடைய எல்லையில்லா ஞானத்தையும் வல்லமையையும், பிரசன்னத்தையும் நினைக்கும் போது, நாம் அவருடைய நிரம்பி வழியும் அன்பை நினைத்து வியந்து நிற்போம். இந்த தாழ்மையின் கோலத்தோடு இருக்கும் போது, நாமும் கடைசி வார்த்தையை சொல்பவர்களாக இருக்க மாட்டோம்.