அவர் நம்மை அறிவார்
என்னுடைய கிராமத்தை அடைய நான் இரவில் 100 மைல்கள் காரை ஓட்டி, பிரயாணம் செய்வதை தேவன் அறிவாரா? நான் இருந்த நிலையை நான் சொல்கின்றேன், என்னுடைய உடல் வெப்பநிலை ஏறிக்கொண்டிருக்கிறது. என் தலைவலிக்கின்றது. நான், “தேவனே நீர் என்னோடிருக்கிறீர் என்பதை நானறிவேன். ஆனால், நான் வேதனையிலிருக்கிறேன்” என ஜெபித்தேன்.
ஒரு சிறிய கிராமத்தினருகிலுள்ள சாலையோரம் என் காரை நிறுத்தினேன். மிகவும் சோர்ந்து பெலமிழந்து காணப்பட்டேன். பத்து நிமிடங்கள் கழித்து, ஒரு குரல் கேட்டது. “உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?” தன்னுடைய தோழர்களோடு, அந்த இடத்திலுள்ள ஒரு மனிதன் வந்திருந்தான். அவர்கள் வந்தது எனக்கு நன்மையாயிருந்தது. அவர்கள் தங்களுடைய கிராமத்தின் பெயரை
“நா மின் யாலா” எனக் கூறினர். “ராஜா என்னைப் பற்றி அறிவார்” என்பதே அதன் பொருள். நான் வியந்தேன். நான் அநேக முறை இந்த சமுதாயத்தினரைக் கடந்து சென்றிருக்கின்றேன். ஒரு முறையும் நின்றதில்லை. ஆனால், இந்த முறை தேவன் அந்தப் பெயரை பயன்படுத்தி, நான் தனிமையில், வேதனையோடு சாலையோரத்தில் நின்றபோது, அந்த ராஜா என்னோடிருந்தார். அந்த மனிதர் என்னை ஊக்கப்படுத்தி, கட்டாயப்படுத்தி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நாம் எங்கு சென்றாலும், அனுதின வேலையிலிருந்தாலும், நாம் செல்லும் வெவ்வேறு இடங்களையும், சூழ்நிலைகளையும், நாம் எப்படியிருந்தாலும் அதை தேவன் அறிவார் (வச். 139:1-4; 7-12). தேவன் நம்மைக் கைவிடுவதுமில்லை, மறப்பதுமில்லை அல்லது தேவன் அவசரவேலையின் காரணமாக நம்மை நிராகரிப்பதுமில்லை. நாம் துன்பத்திலிருக்கும் போதும் கடினமான சூழலில் அகப்படும் போதும், அது இருளானாலும், இரவானாலும் (வச. 11-12) நாம் அவருடைய பிரசன்னத்தை விட்டு மறைக்கப்படுவதில்லை. இந்த உண்மை நமக்கு நம்பிக்கையையும் உறுதியையும் தருகிறது. நம்மை பிரமிக்கத்தக்க அதிசயமாக உருவாக்கின தேவன், நம் வாழ்நாள் முழுவதும் வழிநடத்துவார் (வச. 14).
நாம் பயப்படும் பொது ஒரு நங்கூரம்
நீங்கள் கவலைப்படுபவரா? நானும் அப்படித்தான். நான் அநேகமாக எல்லா நாட்களிலும் பதட்டத்தோடு போராடிக் கொண்டிருப்பவன். நான் பெரிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிறிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிலவேளைகளில் எல்லாவற்றைக் குறித்தும் கவலைப்படுவேன். என்னுடைய வாலிபப்பருவத்தில் ஒருமுறை என்னுடைய பெற்றோர் வர 4 மணி நேரம் தாமதமான போது, நான் காவல்துறையை அழைத்துவிட்டேன்.
வேதாகமம் நம்மை பயப்பட வேண்டாமென அடிக்கடி சொல்லுகிறது. தேவனுடைய நன்மையும், வல்லமையும் நமக்கிருப்பதால், அவர் இயேசுவை நமக்காக பலியாக அனுப்பியதால் பரிசுத்த ஆவியானவரை நமக்கு வழிகாட்டும்படி தந்துள்ளதால், நம்முடைய வாழ்வை பயம் மேற்கொள்ளத் தேவையில்லை. நாம் கடினமான சூழல்களையும் எளிதாக சந்திக்கலாம். தேவன் நம்முடைய சூழ்நிலைகளில் நம்மோடுவருவதாக வாக்களித்துள்ளார்.
நான் மிகவும் பயப்பட்ட நேரங்களில் எனக்கு மிகவும் உதவிய பகுதி ஏசாயா 51:12-16. இப்பகுதியில், மிக அதிகமாக வேதனைகளை அனுபவித்த அவருடைய ஜனங்களிடம் தேவன் இன்னும் அவர்களோடு இருப்பதாக நினைப்பூட்டுகின்றார். நாம் எத்தகைய கடினமான வேளைகளை சந்தித்தாலும் அவருடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் நம்மோடிருப்பது உண்மை. “நான் நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” என ஏசாயா தீர்க்கன் மூலமாக உரைக்கின்றார்.
நான் இந்த வாக்குத்தத்தத்தை நேசிக்கின்றேன், இந்த வார்த்தைகள் என் ஆன்மாவையும், உணர்வுகளையும் வலுப்படுத்துகின்ற நங்கூரம், என்னுடைய பயம் என் மேல் விழுந்து என்னை அமுக்குகையில், என் வாழ்வின் துயரங்கள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும் போது, நான் இந்த வாக்கைப் பற்றிக்கொள்வேன் (வச. 13). இந்தப் பகுதியின் மூலம் நாம் நம்பிக்கையோடு அவரைச் சார்ந்து “வானங்களை விரித்தவரை”, நம்மை ஆறுதல் செய்கிறவரை, நோக்கி நம் கண்களை உயர்த்திப் பார்க்கும்படி நம்மையழைக்கின்றார் (வச. 13).
அந்நியர் அந்நியரை வரவேற்றல்
நானும் என்னுடைய கணவனும் சியாட்டில் என்ற இடத்திற்கு, அவருடைய சகோதரியின் அருகிலே வாசம் பண்ணும்படி நகர்ந்த போது, எங்களுக்கு எங்கே தங்குவது, எங்கு வேலை செய்வதென்று தெரியவில்லை. அருகிலுள்ள ஒரு தேவாலயம் நாங்கள் தங்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவியது. அது ஒரு வாடகை வீடு, அநேக படுக்கையறைகளைக் கொண்டது. நாங்கள் ஓர் அறையில் தங்கிக் கொண்டு மற்றவற்றை வெளிநாட்டு மாணவர்கள் தங்குவதற்கு வாடகைக்குக் கொடுக்கலாம். எனவே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாங்கள் அந்நியரை வரவேற்கும் அந்நியராக இருந்தோம். எங்களுடைய வீட்டையும் ஆகாரத்தையும் உலகெங்கிலிருந்தும் வந்த மக்களோடு பகிர்ந்து கொண்டோம். நாங்களும் எங்கள் வீட்டில் தங்கியிருப்போரும் டஜன் கணக்கான வெளிநாட்டு மாணவர்களை ஒவ்வொரு வெள்ளி இரவும் வேதாகமத்தைக் கற்றுக்கொள்ள அழைத்தோம்.
நம் வீட்டைவிட்டு வெகுதொலைவில் இருப்பது என்ன என்பது தேவனுடைய ஜனங்களுக்குத் தெரியும். அநேக நூற்றாண்டுகள் இஸ்ரவேலர் அந்நியராகவும், அடிமைகளாகவும் எகிப்து தேசத்தில் இருந்தனர். லேவியராகமம் 19ல் அவனவன் தன் தன் “தாயையும், தகப்பனையும் கனம் பண்ணு” “களவு செய்யாதே” (வச. 3,11) என்ற நன்கறிந்த கட்டளைகளோடு உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற அந்நியனை சுதேசி போல எண்ணி கவனி, ஏனெனில் நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயும் பயந்துமிருந்தீர்கள் (வச. 33-34) எனக் கூறுகின்றார்.
தேவனைப் பின்பற்றுகிறவர்களாகிய நம்மில் அநேகருக்கு அகதிகளாக வாழ்ந்த அனுபவம் இல்லை. ஆனால், அந்த உலகில் அந்நியரைப் போல வாழ்தல் எவ்வாறிருக்கும் (1 பேத. 2:11) எனத் தெரியும், ஏனெனில் நாம் இப்பூமிக் குரியவர்களல்ல, நம்முடைய விசுவாசப் பயணம் பரலோக ராஜ்ஜியத்தை நோக்கியேயிருக்கிறது. நாம் உபசரிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும்படி அழைக்கப்பட்டிருக்கின்றோம். அந்நியரை கிறிஸ்துவின் குடும்பத்திற்குள் வரவேற்கும் அந்நியராயிருக்கிறோம். சியாட்டிலில் நானும் என் கணவரும் அனுபவித்த உபசரனை, நாங்களும் மற்றவர்களை வரவேற்கக் கற்றுத் தந்தது. இதுவே இருதயத்தில் கிறிஸ்துவின் குடும்பமாயிருத்தல் (ரோம. 12:13).
ஆழங்களின் தேவன்
“நீ ஆழ்கடலுக்குள் செல்லும் போது, ஒவ்வொருமுறையும் ஒரு மாதிரியை எடுத்துவா. ஒவ்வொருமுறையும் ஒரு புதிய படைப்பைக் காண்பாய்” என்று கடல் உயிரின உயிரியலாளர் வார்ட் ஆப்பிள்டன்ஸ் கூறுகின்றார். சமீப காலத்தில் அறிவியலார் 1,451 புதிய வகை கடலடி உயிரினங்களைக் கண்டுபிடித்துள்ளனர். நாம் இதுவரை அங்குள்ளவற்றில் பாதியையாகிலும் தெரிந்துகொள்ளவில்லை.
யோபு 38-40ல் தேவன் தன் படைப்புகளை யோபுவிற்கு நினைப்பூட்டுகின்றார். இந்த மூன்று அதிகாரங்களிலும் தேவன் காலநிலைகளின் அதிசயங்களையும், பரந்து விரிந்த அண்டத்தையும், அதில் வாழும் வகை வகையான உயிரினங்களையும் விவரிக்கின்றார். இந்தக் காரியங்களை நாம் காண முடியும். பின்னர் தேவன் ஓர் அதிகாரம் முழுவதும் வினோதமான லிவியாதானைப் பற்றி விளக்குகின்றார். லிவியாதான் ஒரு வினோத உயிரினம், அது எரியப்படும் அம்புகளையும் தடுக்க வல்லன, (யோபு 41:7,13), அதின் உடல் அசைவு நேர்த்தியாயும் (வச. 12) அதின் பற்கள் பயங்கரமானதாயும் (வச.14) உள்ளன. “அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்படும்… அதின் நாசியிலிருந்து புகை புறப்படும்” (வச. 19-20) “பூமியின் மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை” (வச. 33).
எனவே தேவன் நாம் இதுவரைக் கண்டிராத ஒரு உயிரினத்தைப்பற்றி பேசுகின்றார். ஆனால், இதுதான் யோபு 41ஆம் அதிகாரத்தின் நோக்கமா? இல்லை. யோபு 41 தேவனின் ஆச்சரியமான குணாதிசயங்களைப் பற்றிய நம் புரிந்துகொள்ளலை விரிவாக்குகின்றது. சங்கீதக்காரன் இதையே விரிவாக, “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும்… அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கலங்களும் உண்டு (சங். 104:25-26) என விளக்குகின்றார். யோபுவில் கொடுக்கப்பட்டுள்ள பயங்கரமான விளக்கத்திலிருந்து எல்லா உயிரினங்களையும் விட மிக பயங்கரமான இந்த படைப்பு விளையாடும் இடத்தையும் கொடுத்துள்ளார் என தெரிந்துகொள்கிறோம். அதுதான் லிவியாதானின் விளையாட்டு.
நம்முடைய வாழ்நாளில் நாம் இந்த சமுத்திரத்தை ஆராய்கின்றோம். நமக்கு ஒரு நித்திய ஸ்தலமுள்ளது. அங்கு நாம் நம்முடைய, பிரமிக்கத்தக்க, விநோதமான தேவனின் விளையாட்டுகளை ஆராய்வோம்.
என் ஆத்துமாவே, அமர்ந்திரு!
ஒரு குழந்தையை அன்போடு அனைத்துக்கொண்டு, தாய் தன் விரலை அக்குழந்தையின் உதடுகளின் முன் வைத்து - ஷ்ஷ்… என்ற வார்த்தையைச் சொல்வது போன்று கற்பனை செய்துபார். இந்த செயலில், எளிய வார்த்தையின் அர்த்தம் என்னவெனில், ஏமாற்றங்களின் மத்தியில் எதிர்பார்ப்போடுள்ள குழந்தையின் வலி அல்லது அசௌகரியத்தை அமைதிப்படுத்துவதாகும். இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாவிடத்திற்கும், எக்காலத்திற்கும் உரியவை. நாம் அனைவருமே இத்தகைய அன்பின் வெளிப்பாடுகளைப் பெற்றிருக்கவும் முடியும், கொடுத்திருக்கவும் முடியும். நான் சங்கீதம் 131:2 ஐ தியானித்த போது இந்த காட்சிதான் என் கண் முன்னே வந்தது.
இந்த சங்கீதத்தின் வார்த்தைகளும் போக்கும் சங்கீதக்காரன் தாவீதின் தீவிரமான அநுபவத்திலிருந்து வெளிவந்த வார்த்தைகள் எனத் தெரிகின்றது. நீ ஏமாற்றத்தையோ, தோல்வியையோ சந்திக்கும் போது, அது உன்னை ஜெபத்திற்கு நேராக வழிநடத்தினதுண்டா? உன்னுடைய வாழ்வின் சூழ்நிலைகளால் நீ தாழ்த்தப்படும்போது நீ என்ன செய்வாய்? ஒரு தேர்வில் தோற்கும் போது, ஒரு வேலையை இழந்த போது அல்லது ஓர் உறவின் முடிவைச் சந்தித்தபோது என்ன செய்வாய்? தாவீது தன்னுடைய இருதயத்தை கர்த்தரிடத்தில் ஊற்றி, அத்தோடு தன் ஆன்மாவை உண்மையாய் ஆராய்ந்து அறிந்து ஒரு பட்டியலை தயாரித்தான் (சங். 131:1) அவனுடைய சுற்றுச் சுழலோடு சமாதானம் செய்து கொண்டபின், ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பிலிருக்கும் போது அமைதியாயிருப்பது போல, தாவீதும் மன நிறைவைப் பெற்றுக்கொண்டான் (வச. 2).
வாழ்க்கையின் சூழல் மாறலாம். சிலவேளைகளில் நாம் தாழ்த்தப்படலாம். ஆனாலும் நாம் நம்பிக்கையோடும் மன நிறைவோடும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வாக்களித்துள்ள தேவன் நம்மோடிருக்கிறார் என அவரை முற்றிலுமாக நம்புவோமாக.
வரங்கள் அநேகம் நோக்கம் ஒன்றே
மெக்ஸிகோவிலுள்ள எனது சொந்த ஊரில் சோளம் என்ற மக்காச் சோளம்தான் பிரதானமான உணவு. சோளத்தில் அநேக வகைகள் உண்டு. மஞ்சள், பழுப்பு, சிவப்பு, கருப்பு மற்றும் புள்ளியிட்டவை என பல வகைகளைக் காணலாம். ஆனால், பட்டணங்களில் வசிப்பவர்கள் புள்ளியிட்ட சோளத்தை உண்பதில்லை. உணவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியாளர் ஆமடோரமிரஸ் என்பவர் ஒரே நிறமுடைய தானியம் தான் தரமானது என நம்பப்படுகிறது எனத் தெரிவித்தார். ஆனாலும், புள்ளியிட்ட தானியம் சுவைமிக்கதாகவும், நல்ல ரொட்டி தயாரிக்க உகந்ததாகவும் உள்ளது.
கிறிஸ்துவின் சபையும் ஒரே நிறத்தையுடைய சோளத்தைப் போலல்லாமல், புள்ளிகளுள்ள சோளத்தைப் போன்றேயுள்ளது. பவுல் அப்போஸ்தலன் ஒரு சரீரத்தை கிறிஸ்துவின் சபையோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். எவ்வாறெனின், நாமனைவரும் ஒரே சபையும் ஒரே தேவனும் கொண்டவர்களாயிருந்தும், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பவுல் சொல்வது போல, “ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. (1கொரி. 12:5-6). நாம் ஒருவருக்கொருவர் உதவுவதில் இருக்கின்ற வேறுபாடுகள், தேவனுடைய தயாளத்தையும், படைப்பின் ஆற்றலையும் காட்டுகின்றது.
நாம் நம்முடைய வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளும்போது, நாம் நம்முடைய நம்பிக்கையிலும் நோக்கத்திலும் ஒற்றுமையை காத்துக்கொள்ள முயற்சிக்கின்றோம். நமக்குள்ளே வேறுபட்ட திறமைகளும் வேறுபட்ட சூழலும் உண்டு. நாம் வேறுவேறு மொழிகளைப் பேசுகின்றோம். வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்களாகவும் இருக்கின்றோம். ஆனால், நம் அனைவருக்கும் ஒரே அற்புதமான தேவன் உண்டு. அவரே படைப்பின் கர்த்தர், வெவ்வேறு வகைகளைப் படைத்து மகிழ்பவர்.
சார்ந்திருத்தலை வெளிப்படுத்துதல்
லாராவின் தாயார் கேன்சர் வியாதியோடு போராடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் காலை லாரா தன் சிநேகிதியோடு சேர்ந்து தன் தாயாருக்காக ஜெபித்தாள். அவளுடைய சிநேகிதி மூளை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஊனமுற்ற நிலையில் இருக்கின்றாள். அவள், “தேவனே, நீர் எனக்காக எல்லாவற்றையும் செய்துவருகின்றீர். தயவு கூர்ந்து லாராவின் தாயாருக்கும் எல்லாவற்றையும் செய்தருளும்” என ஜெபித்தாள்.
லாராவின் சிநேகிதி தான் முற்றிலும் “சார்ந்திருக்கும் நிலையை வெளிப்படுத்தியது”, லாராவின் உள்ளத்தை அசைத்தது. சிறிது நேர சிந்தனைக்குப் பின் லாரா 'என் எல்லாவற்றிற்கும் தேவன் எவ்வளவு அவசியம் என்பதை எத்தனை முறை அறிக்கை செய்கிறேன்?' என்று சொன்னாள். இது “எல்லா நாட்களிலும் நான் செய்ய வேண்டிய ஒன்று” என்றாள்.
இயேசுவும் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் பரலோகத் தந்தையைச் சார்ந்தே வாழ்ந்ததைச் செயல்படுத்திக் காட்டினார். இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த தேவனாயிருப்பதால் அவருக்குத் தேவையென்பதேயில்லை, எல்லாம் பரிபூரணமாயிருந்திருக்கும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இயேசு ஓய்வு நாளில் ஒரு மனிதனை சுகமாக்கிய போது, ஆன்மீகத் தலைவர்கள் அவரிடம் ஓய்வு நாளில் செய்யத் தகாததை செய்ததேன் எனக் கேட்டபோது, இயேசு அவர்களை நோக்கி, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார், அவர் எவைகளைச் செய்கிறாரே அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (5:16) என்றார். இயேசுவும் பிதாவைச் சார்ந்திருத்தலை வெளிப்படுத்துகின்றார்.
இயேசுவும் பிதாவைச் சார்ந்திருந்தே வாழ்ந்தார் என்பது நமக்கும், தேவனோடு நாம் எப்படி உறவு கொள்ளவேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகின்றது. நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய ஈவு, தேவன் நம் வாழ்வு முழுமையும் அவருடைய பெலத்தால் நிறைந்திருக்க வேண்டுமென விரும்புகின்றார். நாம் அவரை நேசித்து, நம்முடைய ஜெபத்தின் மூலம் ஒவ்வொரு மணித்துளியிலும் அவருடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டு அவருக்குச் சேவை செய்யும் போது நம் வாழ்வு அவரையே சார்ந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
மறைந்திருக்கும் அழகு
டொபாகோ தீவின் கடற்கரையிலிருந்து சற்று உள்ளே, கரிபியன் கடலுக்குள் சென்று ஆழ்கடலை பார்வையிட செல்லும்போது சுவாசிப்பதற்கு தேவையான உடையை அணிந்துகொள்வது அவசியம் என்று கூறி, என்னுடைய குழந்தைகளை சம்மதிக்கச் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் உள்ளே சென்று திரும்பிய போது மிகவும் மகிழ்ச்சியோடு, “அங்கே ஆயிரக்கணக்கான வகைகளில் மீன்கள் இருக்கின்றன. அது மிகவும் அழகாயிருக்கின்றது. இத்தனை வண்ணமயமான மீன்களை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை” என்றனர்.
அந்தக் கடலின் மேற்பரப்பைப் பார்க்கும் போது, அது எங்கள் வீட்டினருகிலுள்ள நல்ல நீர் ஏரிபோலவேயிருந்ததால், அதன் அடியில் மறைந்திருக்கும் அந்த அழகை எங்கள் குழந்தைகள் எதிர்பார்க்கவில்லை.
சாமுவேல் தீர்க்கதரிசி பெத்லகேமிற்கு ஈசாயின் குமாரரில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணச் சென்றார். மூத்த குமாரன் எலியாபை சாமுவேல் பார்த்த போது அவனுடைய தோற்றத்தை வைத்து, சரியான நபரைக் கண்டு கொண்டதாக எண்ணினான். ஆனால், தேவன் எலியாபைப் புறக்கணித்தார். கர்த்தர் சாமுவேலை நோக்கி, “நீ இவனுடைய முகத்தையும் சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம். …மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன், மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கின்றார்” (1 சாமு. 16:7) என்றார்.
எனவே சாமுவேல் இன்னமும் வேறே பிள்ளைகள் இருக்கின்றனரா? எனக் கேட்டார். ஈசாயின் இளைய மகன் அப்பொழுது அங்கேயில்லை. அவர்களுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். எனவே ஆட்களை அனுப்பி அந்த மகன் தாவீதை அழைப்பித்தான். தேவன் சாமுவேலிடம் அவனை அபிஷேகம்பண்ணும்படி சொன்னார்.
நாமும் அடிக்கடி மக்களை வெளித்தோற்றமாகவே பார்க்கின்றோம். அவர்களின் உள்ளத்தினுள், மறைந்துள்ள அழகைக்காண நேரம் எடுப்பதில்லை. தேவன் மதிப்பிடுவதைப் போன்று நாம் மதிப்பிடுவதில்லை. ஆனால், நாமும் புறத்தோற்றத்திற்குள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண நேரம் செலவிட்டால் மிகப்பெரிய பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
தேவனுடைய மிகப் பெரிய படைப்பு
சமீபத்தில் எங்களுடைய பேரக்குழந்தைகளோடு புளோரிடா சென்றிருந்த போது நாங்கள் வலைதள கேமரா மூலம் ஒரு கழுகின் குடும்பத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். நிலத்திலிருந்து மிக அதிகமான உயரத்திலுள்ள ஒரு கூட்டில் அந்தத் தாய், தந்தை, குஞ்சுப் பறவைகளின் செயலை ஒவ்வொரு நாளும் நாங்கள் கவனித்தோம். ஒவ்வொரு நாளும் அந்தப் பெற்றோர் பறவைகள் தங்கள் குஞ்சுகளை கவனமாக பாதுகாத்துக் கொண்டேயிருந்தன. அருகிலிருந்த நதியிலிருந்து மீன்களைக் கொண்டுவந்து குஞ்சுகளுக்குக் கொடுத்தன.
சங்கீதம் 104ல் சங்கீதக்காரன் தேவனுடைய படைப்பின் காட்சிகளையும், தேவனுடைய கரத்தின் கிரியைகளின் மகிமையையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த சிறிய கழுகின் குடும்பமும் தேவனுடைய வியத்தகு படைப்பின் ஒரு சிறிய பகுதியாகும்.
தேவனுடைய இராஜ கெம்பீரத்தை அவருடைய படைப்பாகிய இந்த அண்டத்தில் காண்கின்றோம் (வச. 2-4). அவருடைய படைப்பாகிய தண்ணீரையும், மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் இப்புவியில் நாம் அனுபவிக்கின்றோம் (வச. 5-9). அவருடைய படைப்பின் ஈவாகிய விலங்குகளையும், பறவைகளையும், செடிகளையும் நாம் கண்டு மகிழ்கின்றோம் (வச. 10-18). இந்த உலகில் அவர் படைத்த இரவும், பகலும், இருளும் வெளிச்சமும், வேலையும் ஓய்வும் மாறி மாறி வருவதைப் பார்த்து அதிசயிக்கின்றோம் (வச. 19-23).
எத்தனை மகிமையான உலகத்தை தேவன் தம் கரத்தினால், நம்முடைய மகிழ்ச்சிக்கென உருவாக்கித் தந்து அவர் மகிமைப்பட்டுள்ளார். “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி” (வச. 1) நாம் ஒவ்வொருவரும் பூரித்து மகிழும்படி தேவன் நமக்குத் தந்துள்ள அனைத்துக்காகவும் அவருக்கு நன்றி சொல்லுவோம்.