சில வேளைகளில் நம் வாழ்வு அநேக வேலைகளால் நெருக்கப்பட்டு விடுகிறது. கடினமான வகுப்புகள், சோர்வடையச் செய்யும் வேலை, குளியல் அறை கழுவப்பட வேண்டும், அந்த நாளில் ஒருவரோடு காப்பி அருந்த அழைக்கப்பட்டுள்ளோம். இங்கேதான் நான் ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது வேதத்தை வாசிக்க என்னைக் கட்டாயப்படுத்திக்கொண்டு, அடுத்த வாரம் நான் அதிக நேரம் என் தேவனோடு செலவழிப்பேன் என எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன். எந்த உதவியையும் கேட்க மறந்துவிட்டேன் என்று எண்ணி அவருக்கு நேராகத் திருப்பப்பட்டேன்.

பேதுரு இயேசுவை நோக்கி, தண்ணீர் மேல் நடந்தபோது, காற்றும் அலைகளும் அவனைத் திசை திருப்பிவிட்டன. என்னைப் போன்று அவன் மூழ்க ஆரம்பித்தான் (மத். 14:29-30). ஆனால், அவன் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டபோது, “உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்துக் கொண்டார்” (வச. 30-31).

நான் என்னுடைய வேலைகளில் மிகவும் மூழ்கி விட்டபின்புதான், திருப்பப்பட்டு இவற்றையெல்லாம் தேவனிடம் கொடுத்திருக்கலாமே என பின்னர் நினைத்ததுண்டு. ஆனால், தேவன் அப்படி வேலை செய்பவரல்ல. நாம் எப்பொழுது அவரிடம் உதவிக்காகத் திரும்புகிறோமோ அப்பொழுது தேவன் எந்த தயக்கமுமின்றி தம் கையை நீட்டுகின்றார்.

நம் வாழ்வின் குழப்பங்களோடு நாம் போராடிக் கொண்டிருக்கும் போது, அந்தப் புயலின் மத்தியில் தேவன் நம்மோடிருக்கிறார் என்பதைக் காண மறந்து விடுகிறோம். இயேசு பேதுருவிடம், “அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார் (வச. 31). நாம் எந்தப் பிரச்சனை வழியே சென்று கொண்டிருந்தாலும் சரி, தேவன் அங்கிருக்கின்றார், தேவன் இங்கிருக்கின்றார், நம் அருகிலிருக்கின்றார். இப்பொழுதும் தம் கைகளை நீட்டி நம்மைக் காப்பாற்ற ஆயத்தமாயிருக்கிறார்.