சிறு சிறு வேலைகளுக்காக, நான் என் கணவனோடு காரில் சென்றுகொண்டிருந்த போது, இமெயில்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அத்தெருவில், எங்களின் வலப்பக்கம், நாங்கள் சற்றே கடந்த ஒரு டோனட் கடையின் விளம்பரம் என் போனில் வந்தது. உடனே என் வயிறு பசியினால் கூப்பிட ஆரம்பித்தது. வியாபாரிகள் தங்கள் பொருட்களை மக்கள் வாங்கும் படி அவர்களை வசப்படுத்த தொழில்துறை எவ்வளவு உதவுகிறது என நான் வியந்தேன்.

நான் இமெயில் பார்ப்பதை நிறுத்திவிட்டு, தேவன் என்னை அவரருகில் இழுத்துக் கொள்ள எவ்வளவு ஆவலாயிருக்கிறார் என்பதைத் குறித்து ஆழ்ந்து சிந்திக்கலானேன். நான் எங்கிருக்கிறேன், என்னுடைய திட்டங்களை நிறைவேற்ற எப்படி ஆர்வமுள்ளவனாயிருக்கிறேன் என்பதை தேவன் அறிவார். என்னுடைய வயிறு அந்த டோனட்டை அடையவேண்டுமென கூப்பிட்டது போல, என்னுடைய இருதயம் தேவன் மீதுள்ள தாகத்தால் கூப்பிடுகிறதா?

யோவான் 6ல், இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த அற்புதத்தைக் கண்ட சீஷர்கள், இயேசுவிடம் மிக ஆவலாக, “ஆண்டவரே, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தர வேண்டும்” (வச. 33-34) என்கின்றனர். வசனம் 35ல் இயேசு அவர்களை நோக்கி, ‘ ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” என்றார். இயேசுவோடு நாம் எப்பொழுதும் தொடர்பில் இருந்தால் அது நம் அனுதின வாழ்விற்கும் தொடர்ந்து ஊட்டத்தைக் கொடுக்கிறது என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறதல்லவா!

என் உடலின் தேவையை அந்த டோனட் கடையின் விளம்பரம் குறிவைத்தது போல, என்னுடைய இருதயத்தின் நிலையை எப்பொழுதும் அறிந்திருக்கின்ற தேவன், என்னுடைய எல்லாகாரியங்களிலும் அவர் எனக்குத் தேவை என்பதையுணர்ந்து, அவராலே மட்டும் தரக் கூடியவற்றை நான் பெற்றுக் கொள்ளும்படி என்னை அழைக்கின்றார்.