இயேசு கையை நீட்டி
சில வேளைகளில் நம் வாழ்வு அநேக வேலைகளால் நெருக்கப்பட்டு விடுகிறது. கடினமான வகுப்புகள், சோர்வடையச் செய்யும் வேலை, குளியல் அறை கழுவப்பட வேண்டும், அந்த நாளில் ஒருவரோடு காப்பி அருந்த அழைக்கப்பட்டுள்ளோம். இங்கேதான் நான் ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது வேதத்தை வாசிக்க என்னைக் கட்டாயப்படுத்திக்கொண்டு, அடுத்த வாரம் நான் அதிக நேரம் என் தேவனோடு செலவழிப்பேன் என எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன். எந்த உதவியையும் கேட்க மறந்துவிட்டேன் என்று எண்ணி அவருக்கு நேராகத் திருப்பப்பட்டேன்.
பேதுரு இயேசுவை நோக்கி, தண்ணீர் மேல் நடந்தபோது, காற்றும் அலைகளும் அவனைத் திசை திருப்பிவிட்டன. என்னைப் போன்று அவன் மூழ்க ஆரம்பித்தான் (மத். 14:29-30). ஆனால், அவன் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டபோது, “உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்துக் கொண்டார்” (வச. 30-31).
நான் என்னுடைய வேலைகளில் மிகவும் மூழ்கி விட்டபின்புதான், திருப்பப்பட்டு இவற்றையெல்லாம் தேவனிடம் கொடுத்திருக்கலாமே என பின்னர் நினைத்ததுண்டு. ஆனால், தேவன் அப்படி வேலை செய்பவரல்ல. நாம் எப்பொழுது அவரிடம் உதவிக்காகத் திரும்புகிறோமோ அப்பொழுது தேவன் எந்த தயக்கமுமின்றி தம் கையை நீட்டுகின்றார்.
நம் வாழ்வின் குழப்பங்களோடு நாம் போராடிக் கொண்டிருக்கும் போது, அந்தப் புயலின் மத்தியில் தேவன் நம்மோடிருக்கிறார் என்பதைக் காண மறந்து விடுகிறோம். இயேசு பேதுருவிடம், “அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார் (வச. 31). நாம் எந்தப் பிரச்சனை வழியே சென்று கொண்டிருந்தாலும் சரி, தேவன் அங்கிருக்கின்றார், தேவன் இங்கிருக்கின்றார், நம் அருகிலிருக்கின்றார். இப்பொழுதும் தம் கைகளை நீட்டி நம்மைக் காப்பாற்ற ஆயத்தமாயிருக்கிறார்.
இருதயத்தின் பசி
சிறு சிறு வேலைகளுக்காக, நான் என் கணவனோடு காரில் சென்றுகொண்டிருந்த போது, இமெயில்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அத்தெருவில், எங்களின் வலப்பக்கம், நாங்கள் சற்றே கடந்த ஒரு டோனட் கடையின் விளம்பரம் என் போனில் வந்தது. உடனே என் வயிறு பசியினால் கூப்பிட ஆரம்பித்தது. வியாபாரிகள் தங்கள் பொருட்களை மக்கள் வாங்கும் படி அவர்களை வசப்படுத்த தொழில்துறை எவ்வளவு உதவுகிறது என நான் வியந்தேன்.
நான் இமெயில் பார்ப்பதை நிறுத்திவிட்டு, தேவன் என்னை அவரருகில் இழுத்துக் கொள்ள எவ்வளவு ஆவலாயிருக்கிறார் என்பதைத் குறித்து ஆழ்ந்து சிந்திக்கலானேன். நான் எங்கிருக்கிறேன், என்னுடைய திட்டங்களை நிறைவேற்ற எப்படி ஆர்வமுள்ளவனாயிருக்கிறேன் என்பதை தேவன் அறிவார். என்னுடைய வயிறு அந்த டோனட்டை அடையவேண்டுமென கூப்பிட்டது போல, என்னுடைய இருதயம் தேவன் மீதுள்ள தாகத்தால் கூப்பிடுகிறதா?
யோவான் 6ல், இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த அற்புதத்தைக் கண்ட சீஷர்கள், இயேசுவிடம் மிக ஆவலாக, “ஆண்டவரே, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தர வேண்டும்” (வச. 33-34) என்கின்றனர். வசனம் 35ல் இயேசு அவர்களை நோக்கி, ‘ ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” என்றார். இயேசுவோடு நாம் எப்பொழுதும் தொடர்பில் இருந்தால் அது நம் அனுதின வாழ்விற்கும் தொடர்ந்து ஊட்டத்தைக் கொடுக்கிறது என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறதல்லவா!
என் உடலின் தேவையை அந்த டோனட் கடையின் விளம்பரம் குறிவைத்தது போல, என்னுடைய இருதயத்தின் நிலையை எப்பொழுதும் அறிந்திருக்கின்ற தேவன், என்னுடைய எல்லாகாரியங்களிலும் அவர் எனக்குத் தேவை என்பதையுணர்ந்து, அவராலே மட்டும் தரக் கூடியவற்றை நான் பெற்றுக் கொள்ளும்படி என்னை அழைக்கின்றார்.
கர்த்தர் பேசுகின்றார்
யோபு புத்தகத்தில் வருகின்ற ஒவ்வொரு உரையாடலும், இவ்வுலகில் ஏன் வேதனைகள் வருகின்றன என்பதைக் குறித்தேயிருப்பதைக் காணலாம். ஆனால், இந்த உரையாடல்கள் எவ்விதத்திலும் யோபுவிற்கு உதவவில்லை. யோபு இருந்தது சந்தேக நெருக்கடியிலல்ல, அது உறவின் நெருக்கடி. அவனால், தேவன் மீது நம்பிக்கையாயிருக்க முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக யோபுவின் தேவை ஒன்றே, தேவன் அவனுக்கு தரிசனமாகி, அவனுடைய இந்த பரிதாப நிலைக்கு காரணமென்ன என்பதை விளக்குமாறு கேட்கின்றான். தேவனை முகமுகமாய் சந்திக்க விரும்பினான்.
இறுதியாக யோபுவின் வேண்டுதல் கேட்கப்பட்டது. யோபுவின் நண்பன் எலிகூ, தேவன் யோபுவைச் சந்திக்க அவனுக்கு எந்தத் தகுதியுமில்லை என விளக்கமளித்த போது, அதற்கு மாறாக தேவன் யோபுவிற்கு தரிசனமாகிறார் (யோ. 38:1).
தேவன் கேட்பவற்றிற்குப் பதிலளிக்க யோபுவோ, அவனுடைய நண்பர்களோ, வேறு எவருமே தயாராக இல்லை. யோபு தேவனிடம் கேட்கும்படி ஒரு பெரிய பட்டியல் நிறைய கேள்விகளை வைத்திருந்தான். ஆனால் யோபு அல்ல தேவனே கேள்விகளைக் கேட்கின்றார். “இப்போதும் புருஷனைப் போல், இடைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன், நீ எனக்கு உத்தரவு சொல்லு” (வச. 3) என ஆரம்பிக்கின்றார். யோபுவின் வேதனைகளையும், பிரச்சனைகளையும் குறித்த உரையாடலைக் கொண்டிருந்த முப்பத்தைந்து அதிகாரங்களையும் தள்ளிவிட்ட, கர்த்தர் அற்புதமான இவ்வுலகைக் குறித்த ஒரு கெம்பீரமான கவிதைக்குள் வழிநடத்துகின்றார்.
அனைத்தையும் படைத்த தேவனுக்கும் குறுகிப்போன யோபுவைப் போன்ற மனிதனுக்குமுள்ள மிகப்பெரிய வேறுபாட்டை, தேவனுடைய வார்த்தைகள் வரையறுக்கின்றன. என்னுடைய கேள்விகளுக்கு விடையளிக்க யாரேனும் உளரோ? என்ற யோபுவின் மிகப் பெரிய கேள்விக்கு தெள்ளத் தெளிவான பதிலை தேவனுடைய பிரசன்னம் தருகிறது. யோபுவே பதிலளிக்கின்றான், “நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்” என்கின்றான் (42:3)
நீர்ச்சுழிகளில் படகுசவாரி
படகு சவாரி வழிகாட்டி எங்கள் குழுவினரோடு வந்து, நதியின் அக்கரை வரை பாதுகாப்பாய் வழிநடத்தினார். நாங்களனைவரும் உயிர்காப்பு உடைகளைப் போட்டுக் கொள்ளவும் துடுப்புகளை இறுகப் பற்றிக் கொள்ளுமாறும் கூறினார். நாங்கள் படகில் ஏறியதும் படகு சமநிலையில் இருக்கும்படி நாங்கள் ஒவ்வொருவரும் அமர வேண்டிய இடத்தையும் காட்டினார். அது நாங்கள் சுழல்களின் வழியே செல்லும் போது படகிற்கு நிலைப்புத் தன்மையைத் தருமெனக் கூறினார். இந்த நீர் வழிப் பயணத்தில் ஏற்படும் பரபரப்பான சூழல்களை எடுத்துக் கூறி, விரிவான வழிமுறைகளை நாங்கள் கவனமாகக் கேட்கும்படி கூறினார். நாங்கள் அவற்றைச் சரியாகக் கடைபிடித்தால், எங்கள் படகை வெற்றியாக அந்தக் கொந்தளிக்கும் வெண் நீரின் வழியே ஓட்டிச் செல்ல முடியும் என தெரிவித்தார். அத்தோடு நாங்கள் செல்லும் வழியில் பயங்கர வேளைகளையும் சந்திக்க நேரும், ஆனாலும் எங்கள் பயணம் பரவசமூட்டுவதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என உறுதியாகக் கூறினார்.
நம்முடைய வாழ்க்கையும் சில வேளைகளில், கொந்தளிக்கும் வெண் நீர் படகு பயணம் போலவே அமைகிறது. அதுவும் நாம் எதிர்பார்ப்பதையும் விட அதிகமான சுழல் நீரோட்டங்களைக் கொண்டதாக அமைகிறது. நாம் மோசமான விளைவுகளைக் கண்டு பயப்படும் போது, ஏசாயா தீர்க்கன் மூலம் தேவன், இஸ்ரவேலருக்குக் கொடுத்த வாக்குத்தத்தம், நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நம்மை வழிநடத்த உதவுகிறது. “நீ ஆறுகளைக் கடக்கும்போது. அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (ஏசா. 43:2) என்பது தேவனுடைய வாக்குத்தத்தம். இஸ்ரவேலர் தங்கள் பாவத்தின் விளைவாக, பிறநாட்டினரால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டபோது தேவன் அவர்களைத் தள்ளினார் என்ற பயம் அவர்களை மேற் கொண்டது. ஆனால், தேவன் அவர்களோடு இருப்பதாக வாக்கையும், உறுதியையும் கொடுக்கின்றார். ஏனெனில், தேவன் அவர்களை நேசிக்கின்றார் (வச. 2,4).
கடினமான தண்ணீரைக் கடக்கும்போது தேவன் நம்மைக் கைவிடுவதில்லை. சுழல்களையும், ஆழ்ந்த பயத்தையும், வேதனைதரும் சோதனைகளையும் நாம் கடக்கும் போது, தேவன் நம் வழிகாட்டியாக நம்மோடு வருகிறார் என நம்புவோம், ஏனெனில், அவர் நம்மை நேசிக்கின்றார். நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார்.
நேரமாகிய ஈவு
நான் தபால் அலுவலகத்தினுள் மிக அவசரமாக நுழைந்தேன். நான் அன்று செய்து முடிக்க வேண்டிய அநேகக் காரியங்களைக் கொண்ட பட்டியலை வைத்திருந்தேன். ஆனால், நான் அங்கு நுழைந்த போது வாசல் வரையும் நீண்டிருந்த வரிசையைக் கண்டு விரக்த்தியடைந்தேன். “வேகமாகக் காத்திரு” என நான் முணு முணுத்துக் கொண்டே, என் கடிகாரத்தைப் பார்த்தேன்.
என்னுடைய கரங்கள் இன்னமும் வாயில் கதவைத் தொட்டுக் கொண்டிருக்க, ஒரு முதியவர் என்னிடம் வந்து “இந்த நகலிடும் கருவி வேலை செய்யவில்லை” என்று கூறி எனது பின் பக்கத்திலிருந்த அந்த இயந்திரத்தைக் காட்டினார். “அது என்னுடைய பணத்தை எடுத்துக் கொண்டது. இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை” என்றார். உடனே நான் தேவன் எதைச் செய்ய விரும்புகிறார் என்று தெரிந்து கொண்டேன். நான் என் வரிசையைவிட்டு வெளியே வந்து, பத்து நிமிடங்களுக்குள் அந்தப் பிரச்சனையை சரி செய்ய முடிந்தது.
அந்த மனிதன் எனக்கு நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டார். நான் எனது வரிசையில் போய் நிற்க திரும்பியபோது, அது அத்தனையும் போய்விட்டிருந்தது. நான் நேரடியாக சேவை கவுன்டருக்கு சென்றுவிட்டேன்.
அன்றைய அநுபவம், இயேசுவின் வார்த்தைகளை என் நினைவுக்குக் கொண்டு வந்தது. “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும், அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக். 6:38).
என்னுடைய காத்திருத்தல் மிகவும் சிறியதாகத் தோன்றியது. ஏனெனில் என்னுடைய அவசரத்தில் தேவன் குறிக்கிட்டார். என்னுடைய கண்களை பிறருடைய தேவையின் மீது திருப்பி, அவர்களுக்கு என்னுடைய நேரத்தைக் கொடுத்த போது, அவர் எனக்கொரு பரிசு வழங்கினார். அது ஒரு பாடம். நான் என் கடிகாரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அதனை நினைத்துக் கொள்வேன் என நம்புகிறேன்.
பரலோகத்திலிருந்து உதவி
ககடற்பயணிகள், தங்களுடைய சோகமான நிலைமையைத் தெரிவிக்க தேவையான SOS என்ற மோர்ஸ் குறியீட்டு அடையாளம், 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டு ‘ஸ்டீம் ஷிப் கென்டக்கி’ என்ற கப்பல் மூழ்கிய போது, அக்கப்பலிலிருந்த நாற்பத்தாறு பயணிகளையும் காப்பாற்ற இந்த குறியீட்டு அடையாளம் பயன்பட்டதிலிருந்து, அது பிரபல்யமடைந்தது.
SOS என்பது ஒரு சமீபகால கண்டுபிடிப்பு. ஆனால், அவசரகால உதவிக்காகக் கூப்பிடல் என்பது மனித குலம் உருவானது முதல் இருந்து வருகிறது. இத்தகைய கூப்பிடுதலை நாம் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் சரித்திரத்தில் அநேக இடங்களில் பார்க்கின்றோம். யோசுவா தன்னுடைய சொந்த இஸ்ரவேல் ஜனங்களின் எதிர்ப்பைச் சந்தித்தபோதும் (யோசு. 9:18) சவாலான வனாந்தர பிரயாணத்திலும் (3:15-17) . இஸ்ரவேலர் பதினான்கு வருடங்களுக்கும் மேலாக, தேவன் அவர்களுக்கு வாக்களித்த தேசத்தை கொஞ்சங், கொஞ்சமாகக் கைப்பற்றி சுதந்தரித்துக் கொண்ட போதும் காண்கின்றோம். இத்ததைய போராட்டங்களின் போது “கர்த்தர் யோசுவாவோடே கூட இருந்தார்” (6:27).
யோசுவா 10ல் காண்கிறபடி, இஸ்ரவேல் ஜனங்களோடு சமாதானமாயிருந்த கிபியோனியருக்குத் துணையாக இஸ்ரவேலர், அவர்களை எதிர்த்த ஐந்து ராஜாக்களுக்கும் எதிராக யுத்தம் பண்ணப் புறப்பட்டனர். யோசுவா, தங்களை எதிர்த்து வருகின்ற பெலசாலிகளான ஐந்து ராஜாக்களையும் மேற்கொள்ள தேவனுடைய உதவியைக் கேட்கின்றான் (வச. 12). கர்த்தர் வானத்திலிருந்து கல்மழையைத் கட்டளையிட்டார். இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களை முற்றிலும் அழிக்குமட்டும் கர்த்தர் சூரியனை நடுவானில் ஒரு பகல் முழுவதும் தரித்து நிற்கச் செய்தார் (யோசு. 10:14). இப்படி, “மெய்யாகவே கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார்”.
ஒரு வேளை நீயும் இத்தகைய சவால்கள் நிறைந்த சூழலிலிருக்கலாம். நீ கர்த்தருக்கு ஒரு SOS (எஸ்.ஓ.எஸ்) அனுப்பு. யோசுவா பெற்றுக் கொண்ட உதவியை விட வேறுவிதமாக உனக்கு உதவி வரும். அது ஒருவேளை நீ எதிர்பாராத ஒரு வேலையின் வழியாகயிருக்கலாம், அல்லது உன் தேவையைப்புரிந்து கொண்ட ஒரு மருத்துவராக இருக்கலாம், அல்லது கவலையின் மத்தியில் ஏற்பட்ட சமாதானமாயிருக்கலாம். இத்தகைய வழிகளில் அவர் நீ உதவிக்காகக் கூப்பிட்டதைக் கேட்டு பதிலளித்து உனக்காக யுத்தம் செய்கிறார். எனவே ஊக்கத்தோடிரு.
அந்தப் புன்னகை மனிதன்
மளிகைக் கடைக்குச் செல்வது என்பது நான் மிகவும் விரும்பும் ஒரு காரியமல்ல. ஆனால், அது இவ்வுலக வாழ்வோடு இணைந்த ஒன்று, கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஒன்று.
ஆனால், இந்த வேலையில் ஓர் அங்கத்தை எதிர்பார்த்துச் செல்ல நான் தூண்டப்பட்டேன். அது ப்ரெட் நிற்கும் பகுதியில் அமைந்த வெளியே போகும் வரிசை. ப்ரெட் அந்த வெளியே செல்லும் வரிசைக்கு அதை ஒரு காட்சி நேரமாக மாற்றிவிட்டார். அவர் வியத்தகுவகையில் வேகமாகச் செயல்படுவதோடு, முகத்தில் பெரிய சிரிப்பும், சில வேளைகளில் நடனமும், அதனோடு சிலவேளைகளில் பாடலையும் கொண்டிருப்பார். அத்தோடு கரணமிட்டுத் திரும்பி நினைக்க முடியாத வேகத்தில் நாம் வாங்கிய பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொடுப்பார் யாவரும் கடினமானதாகப் பார்க்கும் ஒரு வேலையை ப்ரெட் மிகவும் ஆர்வத்தோடு செய்வதைக் காணலாம். ஒரு நொடிப் பொழுதில் அவருடைய உற்சாகமான ஆவி அந்த வரிசையிலுள்ள அனைவரின் வாழ்வையும் பிரகாசிக்கச் செய்யும்.
ப்ரெட் தன்னுடைய வேலையைச் செய்யும் முறை என்னுடைய மரியாதையையும், பாராட்டையும் பெற்றது. அவருடைய மகிழ்ச்சியான நடத்தையும், சேவை செய்யும் ஆவலும், அங்கு வரிசையிலிருப்போரின் அத்தனை தேவைகளையும் நன்கு கவனித்துச் செய்வதும், அப்போஸ்தலனாகிய பவுல், நாம் எப்படி வேலை செய்ய வேண்டுமென கொலோசெயர் 3:22ல் குறிப்பிட்டிருக்கின்றாரோ அதே போலிருந்தது. “நீங்கள் மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல் தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ் செய்யுங்கள்”
நாம் இயேசுவோடு ஐக்கியமாக இருக்கும் போது, எந்த வேலையை நாம் செய்ய நேர்ந்தாலும் அது தேவனுடைய பிரசன்னத்தை நம் வாழ்வில் காட்டும் சந்தர்ப்பமாகக் கொள்ள வேண்டும். எந்த வேலையும் பெரிதென்றும், சிறிதென்றுமில்லை. அது எவ்வாறிருந்தாலும், எந்த வேலையாயினும் நம்முடைய பொறுப்புக்களை மகிழ்ச்சியோடும், புதிய வகையிலும் மிகச் சிறப்பாகவும் கையாள்வது நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களாகும்.
நம்பிக்கையோடு கூடிய புலம்பல்
பகாமாஸ் பட்டணத்தில் நாசா என்ற இடத்திலுள்ள கிளிஃப்டன் ஹெரிடேஜ் நேஷனல் பார்க்-ஐ பார்த்தோமாயின் சரித்திரத்திலுள்ள ஒரு கொடூரக்காலத்தை மீண்டும் பார்த்தது போலிருக்கும். அந்த தீவின் நிலப்பகுதியும், நீர்ப்பரப்பும் சந்திக்கும் இடத்தில், கற்களாலான ஒரு படிக்கட்டு ஒரு பாறையின் உச்சிக்கு அழைத்துச் செல்லும். 18ஆம் நாற்றாண்டில் இந்த பகாமாஸ்சுக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட அடிமைகள் தங்கள் குடும்பத்தை விட்டு, இந்தப் படி வழியே ஏறி ஒரு மனிதாபிமானமற்ற நடத்தைக்குள்ளாக்கப்படும் வாழ்வுக்குத் தள்ளப்படுவர். அந்த மலை உச்சியில் அந்த அடிமைகளுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. கேதுரு மரத்தால் வடிவமைக்கப்பட்ட பெண்களின் சிற்பங்கள் கடலை நோக்கிய வண்ணம், தங்களுடைய தாய்நாட்டை நோக்கிய வண்ணம், தாங்கள் விட்டு வந்த தங்கள் குடும்ப நபர்களை எதிர்பார்ப்பது போல அமைந்திருக்கும். ஒவ்வொரு சிற்பத்திலும் அந்த அடிமையின் தலைவனுடைய சாட்டையின் தழும்புகள் இருக்கும்.
இப்பெண் சிற்பங்கள் தாங்கள் இழந்து போனதை நினைத்துப் புலம்புவது போன்ற காட்சி, நாம் இவ்வுலகில் நடக்கின்ற அநீதியையும், உடைந்துபோன நிலைமையையும் நினைத்துப் பார்த்து புலம்ப வேண்டியதின் அவசியத்தை எனக்கு நினைவுபடுத்தியது. புலம்பல் என்பது நம்பிக்கையை இழந்து விட்ட நிலையை மட்டும் குறிப்பதல்ல, அது தேவனோடு நாம் உண்மையாய் இருத்தலையும் குறிக்கும். இது கிறிஸ்தவர்களுக்கு நன்கு பழகிவிட்ட ஒரு நிலை. சங்கீதங்களில் சுமார் நாற்பது சகவீதம், புலம்பலின் சங்கீதங்களாகும். புலம்பல் புத்தகத்தில் தங்களுடைய பட்டணம் பிற படையெடுப்பாளர்களால் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டதை நினைத்து புலம்புவதாகும் (3:55).
புலம்பல் என்பது வேதனையின் உண்மையான வெளிப்பாட்டை முறையாகத் தெரிவிப்பதாகும். அது தன் வேதனை, மற்றும் கஷ்டத்தின் மத்தியில் தேவனை இணைத்துக் கொள்ளும். மொத்தத்தில் புலம்பல் நம்பிக்கையைத் தரும். அநியாயத்திற்காக புலம்பும் போது, நாம் நம்மையும் பிறரையும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர செயல்படுமாறு அழைப்பதாகும்.
இதனாலேயே நாசாவிலுள்ள இந்த சிற்பத் தோட்டத்தை “ஆதியாகமம்” எனப் பெயரிட்டுள்ளனர். புலம்பலின் இடம் ஒரு புதிய துவக்கத்தின் இடமாக உணரப்படுகிறது.
ஒரு நல்ல தந்தை
என்னுடைய மகன் சேவியர் சிறுவனாக இருந்த போது, என்னுடைய கணவன் தன்னுடைய வேலையின் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. சேவியரின் தந்தை அவனிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்ட போதும், சில கடினமான இரவுகளில் அவனை ஆறுதல் செய்ய அந்த தொலைபேசி அழைப்பு மட்டும் போதுமானதாக இல்லை. அவன் தன்னுடைய தந்தையைத் தேடிய போதெல்லாம் அவனைச் சமாதனாப்படுத்த, அவன் தூங்கச் செல்லுமுன், எங்களுடைய புகைப்பட ஆல்பத்தை அவனிடம் கொடுப்பேன். நாங்கள் இணைந்து செலவிட்ட நேரங்களை அவனுக்கு நினைவுபடுத்தி, அவனிடம், “இது உனக்கு நினைவிருக்கிறதா? எனக் கேட்பேன்.
அந்த நினைவுகள் என்னுடைய மகனின் ஏக்கத்தை நீக்கி, “ எனக்கு ஒரு நல்ல தந்தையிருக்கிறார்” என அவனைச் சொல்லும்படி வைத்தது.
சேவியர் தன் தந்தையைப் பார்க்க முடியாத போதெல்லாம், அவருடைய அன்பை நினைவுகூர விரும்புகிறான் என நான் புரிந்து கொண்டேன். நான் கடினமான சூழல்களில் இருக்கும் போதும் தனிமையில் தவிக்கும் போதெல்லாம் நானும் என்னுடைய பரலோகத் தந்தை என்னை நேசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஏங்குகிறேன்.
தாவீது தன்னுடைய பகைவரிடமிருந்து மறைந்து வனாந்தரத்தில் ஒளிந்துக் கொண்டிருந்தபோது தேவனை நோக்கி தன்னுடைய ஆழ்ந்த ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார் (சங். 63:1) தேவனோடு தனக்குள்ள தனிப்பட்ட உறவினை எண்ணி, அவருடைய எல்லையில்லா வல்லமையையும், தன்னை திருப்திப்படுத்தும் அவருடைய அன்பையும் எண்ணி அவரைப் போற்றுகின்றார் (வச. 2-5). அவருடைய மிகவும் கஷ்டமான இரவுகளிலும் தேவனுடைய அன்பின் அரவணைப்பைச் சார்ந்து கொண்டு, அவரில் மகிழ்ச்சியாயிருந்தார் (வச. 6-8).
நம்முடைய இருண்ட நேரங்களில் தேவன் நமக்குத் துணையாயில்லையோ என ஏங்கும் வேளைகளிலும், நம்முடைய தேவன் எப்படிப்பட்டவர், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம், அவரோடுள்ள நம்முடைய தனிப்பட்ட அநுபவங்களின் மூலமாகவும், வேதத்தில் நாம் காணும் அவருடைய கிரியைகள் மூலமாகவும் நம்முடைய நல்ல தந்தை நம்மீது வெவ்வேறு வழிகளில் செலுத்துகின்ற அளவற்றை அன்பினை உறுதிப்படுத்திக்கொள்வோம்.