குளிர்காலப் பனி
குளிர்காலத்தில் நான் அடிக்கடி காலையில் விழித்து இந்த பூமி அதிகாலைப் பனியினால் (ளுழெற) மூடப்பட்டு அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கின்றதைக் கண்டு வியப்பதுண்டு. வசந்தகால இடியோடு கூடிய புயலின் ஓசை இரவிலும் அதன் செயலைத் தெரிவிப்பது போலில்லாமல், பனி அமைதியாக இறங்குகின்றது.
ஆட்ரே ஆசாத் எழுதியுள்ள “குளிர்கால பனி” என்ற பாடலில், இயேசு இப்புவிக்கு சுழல்காற்றின் வல்லமையோடு வந்திருக்கலாம். ஆனால், அவர், என் ஜன்னலுக்கு வெளியே இரவில் மென்மையாக இறங்கியிருக்கும் பனியைப்போல அமைதியாக வந்தார் எனப் பாடியுள்ளார்.
இயேசுவின் வருகை அநேக அமைதியான ஆச்சரியங்களைக் கொண்டுவந்தது. அவர் ஓர் அரண்மனையில் பிறப்பதற்குப் பதிலாக எதிர்பாராத ஓரிடத்தில், பெத்லகேமின் புறப்பகுதியில் தாழ்மையாக வந்துதித்தார். அவர் அங்கிருந்த ஒரே படுக்கையான தீவனத் தொட்டியில் உறங்கினார் (லூக். 2:7). ராஜமரியாதையோடும், அரசு மரியாதையோடும் கவனிக்கப்பட வேண்டியவர் தாழ்மையான மேய்ப்பர்களால் வரவேற்கப்பட்டார் (வச. 15-16). செல்வந்தராய் இருக்க வேண்டியவர், ஆனால், இயேசுவின் பெற்றோர் அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க தேவாலயத்திற்கு எடுத்து வந்த போது, எளிய இரண்டு பறவைகளையே பலியாக அவர்களால் கொடுக்க முடிந்தது (வச. 24).
நாம் நினைக்க முடியாத வகையில் இயேசு இவ்வுலகினுள் வந்தார் என்பது ஏசாயா தீர்க்கதரிசியினால் முன்பே உரைக்கப்பட்டது. இரட்சகராகிய அவர் வரும்போது, “ அவர் கூக்குரலிடவுமாட்டார்; தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்” (ஏசா. 42:2). அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும் இருக்கிற தேவன் (வச. 3). அவர் மென்மையாக வந்து நம்மை அவர்பக்கம் இழுக்கும்படியாகவும், தேவன் தரும் சமாதானத்தை நமக்குத் தரும்படியாகவும் வந்தார். நாம் எதிர்பார்த்திராத வகையில் புல்லணையில் வந்துதித்த நமது இரட்சகரை நம்புகிற யாவருக்கும் அவர் தரும் சமாதானம் காத்திருக்கின்றது.
சிந்தனை செய்
லண்டனிலுள்ள ஒரு வேதாகமம் பயிற்சி கல்லூரியில் ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் இருந்த நாட்களில் (1911-15) தன்னுடைய விரிவுரைகளின் போது அவர் விளக்குகின்ற பொருட்களைக் காண்பித்து மாணவர்களை வியப்பில் ஆழ்த்துவார். மதிய உணவு நேரத்திற்குப் பின்னரே விவாதத்திற்குரிய நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால், அந்நேரத்தில் சேம்பர்ஸ் மாணவர்களின் கேள்விகளாலும், எதிர்ப்புகளாலும் அடிக்கடி துளைத்தெடுக்கப்படுவார் என ஒரு பெண்மணி விளக்கினார். மேலும் அவள், ஆஸ்வால்ட் எப்பொழுதும் புன்முறுவலோடு “இதனை இப்பொழுது விட்டு விடு. அது உனக்குப் பின்னர் தெரியவரும்” எனச் செல்வார் அவர் மாணவர்களை அதனைக் குறித்து மீண்டும் சிந்தனை செய்ய ஊக்குவிப்பார். ஏனெனில் தேவனே தன்னுடைய உண்மையை அவர்களுக்கு விளங்கச் செய்வார்.
ஓன்றினைக் குறித்து மீண்டும் சிந்திப்பது என்பது, அக்காரியத்தின் மீது கவனம் செலுத்தி, அதனைக் குறித்து ஆழ்ந்து யோசிப்பதாகும். இயேசு பெத்லகேமில் பிறப்பதற்கு முன் நடந்த நிகழ்வுகளையும், தேவதூதனின் காட்சியையும், மேசியாவைக் காண மேய்ப்பர்கள் வந்ததையும், “ மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து சிந்தனை பண்ணினாள்” (லூக். 2:19). புதிய ஏற்பாட்டினைக் கற்றுத் தேர்ந்த று.நு. வைன் என்பவர் “சிந்தனை செய்தல்” என்பது “எல்லாவற்ளையும் ஒன்றிணைத்து, சூழ்நிலைகளோடு ஒவ்வொன்றையும் சேர்த்து ஆராய்வதேயாம்” எனக் கூறுகின்றார்.
நம் வாழ்வில் நடைபெறும் காரியங்களைக் குறித்துக் புரிந்துகொள்ள போராடும் போது தேவனையும், அவருடைய ஞானத்தையும் தேடுவதற்கு மரியாள் ஒரு நல்ல முன்மாதிரியாகவுள்ளார்.
மரியாளைப் போன்று நாமும் நம்முடைய வாழ்வில் தேவனுடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, அவருடைய அன்பின் வழிகாட்டலின் மூலம் நாம் பெற்றுக் கொண்ட அநேகப் புதிய காரியங்களை நம் இருதயத்தில் பொக்கிஷமாகச் சேர்த்துவைத்து அதனைக் குறித்து சிந்தனை செய்வோம்.
செழிப்பிலும் உபத்திரவங்களிலும்
ஆன் வோஸ்கேம்ப் எழுதிய “ஓராயிரம் கொடைகள்” என்ற புத்தகத்தில் வாசகர்களை தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் தேவன் அவர்களுக்குத் தந்துள்ள நன்மைகளை எண்ணிப் பார்க்குமாறு ஊக்கப்படுத்துவார். அதில் அவள் அநுதினமும் தேவன் அவளுக்குத் தாராளமாகத் தருகின்ற சிறியதும், பெரியதும் - பாத்திரம் கழுவும் தொட்டியில் தோன்றும் வண்ணமிகு நீர்க்குமிழிமுதல் தன்னைப் போன்ற பாவிகளுக்குத் (நமக்கும்!) தரப்பட்ட ஒப்பிடமுடியாத இரட்சிப்புவரையுள்ள வௌ;வேறு கொடைகளைக் குறிப்பிடுகின்றாள். நம் வாழ்வில் மிகவும் கஷ்டம் நிறைந்த நேரத்தில் தேவனைக் காண்பதற்குத் தேவையான திறவுகோல் நன்றியோடுள்ள உள்ளமேயென அவள் குறிப்பிடுகின்றாள்.
நாம் நன்கறிந்த யோபுவின் வாழ்வில் துன்பங்கள் நிறைந்த நேரம் அது. அவனுடைய இழப்புகள் துயரமிகுந்ததாகவும் ஏராளமாகவும் இருந்தன. தனக்கிருந்த எல்லா கால்நடைகளையும், வேலைக்காரரையும் இழந்து நிற்கும் போது, ஒரே நேரத்தில் அவனுடைய பத்து பிள்ளைகளும் மரித்துப்போனார்களென அறிகிறான். யோபுவினுடைய ஆழ்ந்த துயரம் அவனுடைய செயலில் தெரிகிறது. அவன் தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்துக் கொண்டான் (1:20) அந்த வேதனை நேரத்திலும் அவன் கூறிய வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது. அவன் நன்றியுணர்வை வெளிப்படுத்தினான். அவன் இழந்த யாவற்றையும் தேவன் தனக்குத் தந்தார் என தெரிவிக்கின்றான் (வச. 21) ஒன்றும் செய்ய இயலாத அத்தகைய துயரத்தின் மத்தியில் இவ்வாறன்றி, அவன் வேறே எப்படி தேவனை ஆராதிக்க முடியும்?
இழப்பின் காலத்தில் ஏற்படும் வேதனையின் அளவு, நம்முடைய அனுதின நன்றியறிதலால் ஒருபோதும் குறைக்கப்படுவதில்லை. யோபு புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, யோபு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே துயரத்தினூடே கடந்து சென்றான். நம் வாழ்வின் இருண்ட நேரங்களில் சர்வ வல்ல தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு, ஒவ்வொரு சிறிய காரியங்களிலும் தேவன் நமக்குச் செய்த நன்மைகளையெண்ணி, அவரை துதித்துப் போற்ற நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோம்.
நம்பிக்கையே வெற்றியின் இரகசியம்
நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும்போது என்னுடைய விருப்பமான கால்பந்த குழு எட்டு முறை தொடர்ந்து தோல்வியைத் தழுவியது. ஓவ்வொரு முறை தோற்கும் போதும், இவர்கள் மீண்டும் இதே காலத்தில் வெற்றியைப் பெற மடியும் என நம்புவதற்கு கடினமாயிருந்தது. ஒவ்வொரு வாரமும் பயிற்சியாளர் சில மாற்றங்களைக் கொடுத்தார். ஆனால், அவையொன்றும் வெற்றியைத் தரவில்லை. என்னுடன் பணிபுரிபவர்களோடு நான் உரையாடிக் கொண்டிருந்தபோது வேடிக்கையாக, “வெறும் நம்பிக்கை மட்டும் வெற்றியைக் கொண்டு வந்து விடாது, நம்பிக்கை ஒரு போர்கலையல்ல” என நகைச்சுவையாகக் கூறினேன்.
ஒருவேளை இது கால்பந்து விளையாட்டிற்கு உண்மையாயிருக்கலாம். ஆனால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் இது நேர்மாறானது. தேவன் மீது நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதோடு மட்டுமல்ல, அவரைப் பற்றிக் கொள்வதும், விசுவாசமாயிருப்பதுமே வெற்றியின் இரகசியம். இந்த உலகம் நம்மை ஏமாற்றமடையச் செய்கின்றது. ஆனால், நம்பிக்கை நம்மை தேவனுடைய உண்மையின் மீது உறுதியாயிருக்கச் செய்து, கொந்தளிக்கும் நேரங்களில் நம்மை இயங்கச் செய்கின்றது.
மீகா இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டார். இஸ்ரவேலர் தேவனைவிட்டு அந்நிய தெய்வங்களிடம் திரும்பிய போது, அவர் மனமுடைந்து போனார். “ஐயோ… தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப் போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை” (7:1-2) எனப் புலம்புகின்றார். பின்னர் அவர் தன் உண்மையான நம்பிக்கையின் மீது கவனத்தைக் கொண்டு வந்து, “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” (வச. 7) என்கின்றார்.
கடினமான வேளைகளில் நம்பிக்கையை விடாதிருக்க என்ன செய்யலாம்? மீகா நமக்கு வழிகாட்டுகின்றார் கவனி, காத்திரு, ஜெபி, தேவன் செய்த நன்மைகளை நினைவுகூர். நம்முடைய சூழ்நிலைகள் நம்மை மேற்கொண்டாலும் தேவன் நம் கதறலைக் கேட்கின்றார். இத்தகைய நேரங்களில் தேவனைப் பற்றிக் கொண்டு, நாம் தேவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையோடு செயல்படுவதே நமது வெற்றி. நம் வாழ்கையில் புயலை மேற்கொள்ள இந்த ஒரே போர்க் கலைதான் நமக்கு உதவமுடியும்.
பயப்படாதிருங்கள்
எப்பொழுது ஒரு தேவதூதன் தோன்றினாலும் அவன் கூறும் முதல் வார்த்தை, “பயப்படாதிருங்கள்” என்பதாக வேதாகமத்தில் காண்கின்றோம். இது நமக்கு ஆச்சரியத்தைக் தருகிறது. இயற்கைக்கு அப்பாற்பட்டது புவியைத் தொடும் போது, அதைத் காணும் மாந்தர் பயத்தால் முகங்குப்புற விழுகின்றனர். ஆனால், தேவன் தன்னைக் காண்பிக்கும் போது பயப்படத்தக்க ரூபத்தில் இருப்பதில்லையென லூக்கா கூறுகின்றார். இயேசு கிறிஸ்து பிறந்த போது, விலங்குகளின் மத்தியிலிருந்தார், தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார். நாம் பயப்படாமலிருக்கும்படி தேவன் இத்தகைய அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தார். ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையைவிட பயப்படாமலிருக்கத்தக்கது எது?
புவியிலிருக்கும் போது இயேசு தேவனாகவும், மனிதனாகவும் வாழ்ந்தார். அவர் அற்புதங்களைச் செய்தார். பாவங்களை மன்னித்தார். ஆனால், தேவன் பிரகாசமான மேகஸ்தம்பம் அல்லது அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் வெளிப்படுவதற்கு, யூதர்கள் பழக்கப்பட்டிருந்ததால் அவர்களால் மனிதனான இயேசுவின் மூலம் தேவனைப் பார்க்க முடியவில்லை, குழப்பமடைந்தனர். பெத்லகேமில் பிறந்த ஒரு குழந்தை, ஒரு தச்சனின் மகன், நாசரேத்தூரிலுள்ள ஒரு மனிதன் எப்படி தேவனிடமிருந்து வந்த மேசியாவாக இருக்க முடியும் எனக் கேட்டனர்.
ஏன் தேவன் மனித வடிவில் வந்தார்? பன்னிரண்டு வயது நிரம்பிய இயேசு தேவாலயத்தில் போதகர்களுடன் விவாதித்தக் காட்சி ஒரு சாட்சியாகவுள்ளது. “அவர் பேசக் கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும், அவர் சொன்ன மாறுத்தரங்களையும் குறித்துப் பிரமித்தார்கள்” என லூக்கா குறிப்பிடுகின்றார் (2:47) முதல் முறையாக சாதாரண ஜனங்கள் தேவனோடு உரையாடுவதைக் காண்கின்றார்கள்.
இயேசு அவருடைய பெற்றோர், போதகர், ஏழை விதவை என்று யாவரோடும் பேசுகின்றார். அவர் முதலில் “பயப்படாதிருங்கள்” என்று சொல்லிக் கொள்ளவில்லை. இயேசுவின் மூலம் தேவன் நம்மருகில் வந்துள்ளார்.
தலைவனைப் பின்பற்றல்
எங்கள் வீட்டிற்கு மேலுள்ள ஆகாயத்தில் மூன்று போர் ஜெட் விமானங்கள் அலறிக்கொண்டு வானத்தில் ஒழுங்காக, மிகக் குறுகிய இடைவெளியில் பறந்தன. அவை பார்ப்பதற்கு ஒன்று போல தெரிந்தது. “வாவ்” என நான் என் கணவன் டானிடம் கூறினேன். “கண்ணைக் கவர்வதாகவுள்ளது” என அவர் ஆமோதித்தார். நாங்கள் ஒரு விமானப்படை தளத்தினருகில் வசிப்பதால் இதுபோன்ற காட்சிகளைக் காண்பது எங்களுக்குப் புதிதல்ல.
ஒவ்வொரு முறையும் இந்த ஜெட் விமானங்கள் எங்களுக்கு மேல் பறக்கும் போது நான் அதே கேள்வியையே கேட்கின்றேன். எப்படி அவைகளால், தங்கள் கட்டுப்பாட்டை இழக்காமல் இத்தனை நெருக்கமாகப் பறக்க முடிகிறது? ஒரு வெளிப்படையான காரணமென்னவெனில் தாழ்மை என தெரிந்து கொண்டேன். வழிநடத்தும் முதல் விமானி தகுந்த, சரியான வேகத்தில், சரியான பாதையில் செல்கின்றார் என்ற நம்பிக்கையோடு, மற்ற இரு விமானிகளும் தாங்கள் செல்லும் திசையைக் குறித்து எந்த தனிப்பட்ட விருப்பத்தையும் மேற்கொள்ளாமலும், தலைவன் செல்லும் பாதையைக் குறித்து எந்தக் கேள்வியையும் கேட்காமலும் பின்பற்றுகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் அனிவகுப்பில் நிலைத்திருந்து நெருக்கமாகத் தொடர்கின்றனர். அதன் விளைவு, நான் ஒரு வலிமையான குழு.
இயேசுவைப் பின்பற்றுபவர்களும் இவர்களைப் போன்றெ தான். “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக். 9:23) என இயேசு சொல்கின்றார்.
தன்னை வெறுத்தலும், பாடுகளும் நிறைந்தது அவருடைய பாதை. அது பின்பற்றக் கடினமானது. ஆனால், அவருடைய உண்மையான சீடனாக இருக்க, நாமும் நம்முடைய தனிப்பட்ட ஆசைகளை தள்ளிவிட்டு, நம்மையே கவனித்துக்கொண்டிருப்பதை விட்டு விட்டு, ஆவியின் பாரத்தைச் சுமந்து கொண்டு அநுதினமும் பிறருக்கு ஊழியம் செய்ய அழைக்கப்படுகின்றோம். அப்படியே நாம் அவரை மிக நெருக்கமாகத் தொடர வேண்டும்.
நம்மையே தாழ்த்தி, அவரோடு நெருங்கி நடப்பது எத்தனை அருமையானக் காட்சி! அவர் நம்மை வழிநடத்த நாம் அவரோடு நெருங்கி, நாமும் அவரும் ஒன்றாயிருப்பது போல நடக்க வேண்டும். அப்படியானால், பிறர் நம்மை காண மாட்டார்கள் ஆனால், கிறிஸ்துவைக் காண்பார்கள். அப்படியிருக்கும் போது பிறர் நம்மைக்காண பார்த்து “வாவ்” என்பர்.
ஒரு கிறிஸ்மஸ் கடிதம்
ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் என்னுடைய நண்பனொருவன், அந்த ஆண்டில் நடந்த எல்லாக் காரியங்களைக் குறித்தும், எதிர்கால கனவுகளைப்பற்றியும் தன் மனைவிக்கு நீண்ட கடிதம் எழுதுவான். தான் அவளை மிகவும் நேசிப்பதாகவும் அதற்கான காரணம் என்னவென்றும் எழுதுவான். தன்னுடைய ஒவ்வொரு மகளுக்கும் இதேப்போன்று கடிதம் எழுதுவான். அவனுடைய அன்பின் வார்த்தைகள் மறக்கமுடியாத கிறிஸ்மல் பரிசாக அமையும்.
உண்மையான கிறிஸ்மஸ் அன்பின் கடிதம் எதுவெனில், ‘வார்த்தை மாம்சமானார்’ என்பதே. யோவான் இந்த உண்மையை சுவிசேஷத்தில் முக்கியப்படுத்திக் காட்டியுள்ளார். “ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவா. 1:1) பழங்கால கிரேக்கத் தத்துவங்கள் வார்த்தையை ஓர் உன்னத மனம் அல்லது உண்மையோடு இணைக்கப்படல் எனக் குறிப்பிடுகின்றன. ஆனால், யோவான் வார்த்தையை ஒரு மனிதனாக வெளிப்படுத்துகின்றார். தேவக் குமாரனாகிய இயேசு ஆதியில் தேவனோடு இருந்தார் (வச. 2). இந்த வார்த்தை பிதாவினுடைய “ஒரே பேரானக் குமாரன்” மாம்சமாகி, நம்மிடையே வாசம்பண்ணினார் (வச. 14) வார்த்தையாகிய இயேசுவின் மூலம் தேவன் தம்மை முழுமையாக வெளிப்படுத்தினார்.
வேத அறிஞர்கள் இந்த அழகிய மர்மத்தோடு பல நூற்றாண்டுகளாகப் போராடிக் கொண்டிருந்தனர். நாம் முழுமையாக புரிந்து கொள்ளாவிடினும் வார்த்தையாகிய இயேசு நம்முடைய உலகின் இருளை நீக்க வந்த மெய்யான ஒளி (வச. 9). நாம் அவரை நம்புவோமேயாகில் நாம் தேவனுடைய அன்புப் பிள்ளைகள் என்கின்ற பரிசைப் பெற்று அநுபவிக்கலாம்.
இயேசுவே நமக்குத் தரப்பட்ட அன்பின் கடிதம் அவர் வந்து நம்மிடையே வாசம் பண்ணுகின்றார். இது ஓர் ஆச்சரியமான கிறிஸ்மஸ் பரிசு.
பெரிய விழித்தெழல்
என்னுடைய மகன்கள் சிறியவர்களாக இருந்தபோது, எங்கள் குடும்ப நண்பர்களோடு நாங்கள் களித்த நாட்களைப் பற்றிய நினைவுகளை ஒரு பொக்கிஷமாக என் நினைவில் வைத்துள்ளேன். பெரியவர்கள் இரவு வெகுநேரம் வரை பேசிக் கொண்டிருப்போம். எங்களுடைய குழந்தைகள் விளையாடி சோர்ந்து ஒரு சோபாவில் அல்லது ஒரு நாற்காலியில் படுத்து உறங்கிவிடுவர்.
நாங்கள் திரும்ப வேண்டிய நேரம் வரும்போது, நான் என்னுடைய மகன்களை என் கரத்தில் அணைத்து சுமந்து காருக்குக் கொண்டு சென்று பின் இருக்கையில் படுக்கச் செய்து, எங்கள் வீட்டிற்குத் திரும்புவோம். வீடு வந்ததும் அவர்களை அப்படியேத் தூக்கி அவர்களுடைய படுக்கையில் கிடத்தி, வாழ்த்தி முத்தமிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு வருவேன். மறுநாள் காலையில் அவர்கள் தங்கள் வீட்டில் எழுந்திருப்பார்கள்.
இந்த நிகழ்வு, நாம் இயேசுவுக்குள் நித்திரையடையும் (1 தெச. 4:14) இரவினைக் குறித்து என்னைச் சிந்திக்க வைத்தது. நாம் நித்திரையடைந்து… நம்முடைய நித்திய வீட்டில் விழிப்போம். நம்முடைய வாழ்நாட்களில் நாம் அநுபவித்த அத்தனை சோர்வையும் நித்திய வீடு மாற்றிவிடும்.
பழைய ஏற்பாட்டில் உபாகமத்தில் வரும் ஒரு பகுதி என்னை வியப்படையச் செய்தது. “அப்படியே… மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின் படியே மரித்தான்” (34:5). எபிரெய வழக்கப்படி “மோசே தேவனுடைய வாயைத் தொட்டபடியே மரித்தான்” என வரும் சொற்டொடரை பழங்கால போதகர்கள் “ தேவனுடைய முத்தத்தோடு” என மொழி பெயர்த்தனர்.
இப்புவியில் நம்முடைய கடைசி மூச்சின் போது தேவன் குனிந்து நம்மை முத்தமிட்டு வாழ்த்துவார் என்பதைக் கற்பனை செய்துபார்த்தால் அது சற்று மிகைப்பட்டதாகத் தோன்றுகின்றது. ஜான் டோன் இதனையே நமக்கு ஏற்றாற்போல் “ஒரு சிறிய தூக்கம் முடிந்து, நாம் நித்தியத்திற்குள் விழிப்போம்” எனக் கூறியுள்ளார்.
வெட்கத்திற்குப் பதிலாக மரியாதை
இந்த ஆண்டிலும் மீண்டும் அந்தக் காலம் வந்தது. குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பண்டிகையைக் கொண்டாடும் காலம் அது. திருமணமாகாதவர், குழந்தையில்லாதவர் என தங்களில் ஏதோவொரு குறையுள்ளது எனக் கருதும் சிலர், தங்களைக் கேள்விகேட்கும் ஆர்வமிக்க உறவினரைச் சந்திக்க பயப்படுகின்றனர்.
திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லாதிருந்த எலிசபெத்தின் அவல நிலையை நினைத்துப் பாருங்கள். எலிசபெத், சகரியா தம்பதியினருக்கு தேவனுடைய கண்களில் தயவு கிடைக்கவில்லை
(1 சாமு. 1:5-6) எனக் கருதுவர், அத்தோடு அதனைக் கேவலமாகவும் கருதுவர். ஆனால், அவர்கள் நீதியுள்ளவர்களாய் வாழ்ந்த போதிலும் (லூக். 1:6) அவர்களுடைய அண்டை வீட்டாரும், உறவினரும் வேறுவிதமாகக் கருதியிருப்பர்.
எதுவாயிருப்பினும் எலிசபெத்தும் அவளுடைய கணவனும் தேவனுக்குப் பணி செய்வதில் உண்மையுள்ளவர்களாயிருந்தனர். இருவருக்குமே வயது சென்ற போது ஓர் அற்புதம் நடந்தது. தேவன் அவளுடைய ஜெபத்தைக் கேட்டார் (வச. 13). தேவன் தம்முடைய தயவைக் காட்ட விருப்பமுடையவர் (வச. 24). ஒருவேளை அவர் கொடுப்பதற்குத் தாமதித்தாலும் அவருடைய நேரம் சரியானதாகவும் அவருடைய ஞானம் நேர்த்தியானதாகவும் இருக்கும். எலிசபெத்திற்கும் அவளுடைய கணவனுக்கும் தேவன் ஒரு சிறந்த பரிசை வைத்திருந்தார், ஒரு குழந்தை, அது மேசியாவின் வருகைக்கு முன்னோடியாக வந்தது (ஏசா. 40:3-5).
உனக்கும் ஏதோவொரு குறைவு உள்ளதால் நீயும் நிறைவற்றவனாக உன்னை நினைக்கின்றாயா? அது ஒரு பல்கலைகழகத்தின் பட்டமாகவோ, வீடாகவோ இருக்கலாம். எலிசபெத்தைப் போன்று தேவனுடைய திட்டம் உன்னில் நிறைவேறும்படி பொறுமையோடு காத்திரு. அவருக்கு உண்மையாய் வாழ்ந்திரு உன்னுடைய சூழ்நிலை எவ்வாறிருந்தாலும் தேவன் உன்மூலம் கிரியை செய்து கொண்டிருக்கிறார். அவர் உன் உள்ளத்தையறிவார். உன்வேண்டுதலைக் கேட்கின்றார்.