இந்த ஆண்டிலும் மீண்டும் அந்தக் காலம் வந்தது. குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பண்டிகையைக் கொண்டாடும் காலம் அது. திருமணமாகாதவர், குழந்தையில்லாதவர் என தங்களில் ஏதோவொரு குறையுள்ளது எனக் கருதும் சிலர், தங்களைக் கேள்விகேட்கும் ஆர்வமிக்க உறவினரைச் சந்திக்க பயப்படுகின்றனர்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லாதிருந்த எலிசபெத்தின் அவல நிலையை நினைத்துப் பாருங்கள். எலிசபெத், சகரியா தம்பதியினருக்கு தேவனுடைய கண்களில் தயவு கிடைக்கவில்லை

(1 சாமு. 1:5-6) எனக் கருதுவர், அத்தோடு அதனைக் கேவலமாகவும் கருதுவர். ஆனால், அவர்கள் நீதியுள்ளவர்களாய் வாழ்ந்த போதிலும் (லூக். 1:6) அவர்களுடைய அண்டை வீட்டாரும், உறவினரும் வேறுவிதமாகக் கருதியிருப்பர்.

எதுவாயிருப்பினும் எலிசபெத்தும் அவளுடைய கணவனும் தேவனுக்குப் பணி செய்வதில் உண்மையுள்ளவர்களாயிருந்தனர். இருவருக்குமே வயது சென்ற போது ஓர் அற்புதம் நடந்தது. தேவன் அவளுடைய ஜெபத்தைக் கேட்டார் (வச. 13). தேவன் தம்முடைய தயவைக் காட்ட விருப்பமுடையவர் (வச. 24). ஒருவேளை அவர் கொடுப்பதற்குத் தாமதித்தாலும் அவருடைய நேரம் சரியானதாகவும் அவருடைய ஞானம் நேர்த்தியானதாகவும் இருக்கும். எலிசபெத்திற்கும் அவளுடைய கணவனுக்கும் தேவன் ஒரு சிறந்த பரிசை வைத்திருந்தார், ஒரு குழந்தை, அது மேசியாவின் வருகைக்கு முன்னோடியாக வந்தது (ஏசா. 40:3-5).

உனக்கும் ஏதோவொரு குறைவு உள்ளதால் நீயும் நிறைவற்றவனாக உன்னை நினைக்கின்றாயா? அது ஒரு பல்கலைகழகத்தின் பட்டமாகவோ, வீடாகவோ இருக்கலாம். எலிசபெத்தைப் போன்று தேவனுடைய திட்டம் உன்னில் நிறைவேறும்படி பொறுமையோடு காத்திரு. அவருக்கு உண்மையாய் வாழ்ந்திரு உன்னுடைய சூழ்நிலை எவ்வாறிருந்தாலும் தேவன் உன்மூலம் கிரியை செய்து கொண்டிருக்கிறார். அவர் உன் உள்ளத்தையறிவார். உன்வேண்டுதலைக் கேட்கின்றார்.