வகை  |  odb

பாட்டியம்மாவின் சமையல் குறிப்பு

அநேக குடும்பங்கள் அவர்களுக்கே உரிய இரகசியமான சமையல் குறிப்புகளை வைத்திருப்பார்கள். அக்குறிப்புகளை பயன்படுத்தி சிறப்பான முறையில் உணவை மிகவும் ருசியாக சமைப்பார்கள். சீனாவில் ஹக்காஸ் என்ற குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த எங்களுக்கு பாரம்பரியமான உணவாக அபாக்கஸ் மணிகள் என்ற ஓர் உணவு உண்டு அவை உருண்டையான குமிழ் மணிகளைப் போல இருப்பதால் அப்பெயர் பெற்றது. உண்மையில் நீங்கள் அதை ருசிபார்க்க முயற்சி எடுங்கள்.

ஆமாம், எங்களது பாட்டி மிகச்சிறந்த சமையல் குறிப்பு வைத்திருந்தார்கள். ஒவ்வொரு சீன புத்தாண்டின் பொழுதும் குடும்பக்கூடுகை நடக்கும். அப்பொழுது “இதை…

சோர்ந்து போகிறவனுக்கு பெலன்

சூரிய ஓளி பிரகாசித்துக் கொண்டிருந்த அழகான ஓர் நாளில் ஆவியில் மிகவும் சோர்வுற்றவனாய் ஓர் பூங்காவில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு காரியம் மாத்திரமல்ல - எல்லாக் காரியங்களும் சேர்ந்து மனபாரத்தினால் என்னைக் கீழே ஆழ்த்தின. ஓர் பெஞ்சில் நான் அமர்ந்தபொழுது, ஓர் சிறு பலகையைப் பார்த்தேன். அது அன்பு கணவன், தந்தை, சகோதரன், நண்பனாக இருந்தவரின் அன்பின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தப்பலகையில் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்” என்ற…

பதுங்கி இருக்கும் சிங்கங்கள்

நான் சிறுவனாக இருந்தபொழுது, எனது தகப்பனார் புதர்களுக்குள்ளாக ஒளிந்து கொண்டு சிங்கத்தைப் போல் உறுமி எங்களைப் பயமுறுத்துவார். 1960களில் நாங்கள் கானாவின் கிராமப்புறங்களில் வசித்து வந்தோம். அப்பகுதியில் ஒரு சிங்கம் அருகில் பதுங்கி இருப்பது என்பது நடக்க முடியாத காரியமாகும். நானும், என் சகோதரனும் சிரித்துக் கொண்டு அந்த உறுமல் சத்தம் வரும் இடத்தை நோக்கிப் சென்று, ஒளிந்திருக்கும் எனது தகப்பனாரைக் கண்டு மகிழ்ச்சியடைவோம்.

ஒரு நாள் ஒரு இளம் வயதுடைய சிநேகிதி எங்களைப் பார்க்க வந்தாள். நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, வழக்கமான…

வெளிச்சத்தை நோக்கி சாய்தல்

ஒரு நாள் ரோஜா நிற டுலிப் மலர்க் கொத்து ஒன்றைப் பெற்றேன். எங்களது சமையலறையிலுள்ள மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பூச்சாடியில் அந்தப் பூக்கொத்தை வைத்தேன். அந்தப் பூக்கள் அவற்றின் தடித்த தண்டின் மேல் அழகாக நேராக நின்றன. அடுத்த நாள் அந்தப் பூக்கள் வேறு திசையில் திரும்பி இருந்தன, மலர்கள் இப்பொழுது அருகிலிருந்த ஜன்னலின் வழியாக வந்த சூரிய ஒளியை நோக்கிப் பக்கவாட்டில் சாய்ந்திருந்தன.

ஒரு வகையில் நாம் அனைவரும் அந்த மலர்களைப் போலவே இருக்க உருவாக்கப்பட்டுள்ளோம். தேவன் அவரது அன்பை நோக்கி நாம்…

ஜீவ இரத்தம்

மேரி ஏன் தேவனையும் அவர் குமாரனாகிய இயேசுவையும் விசுவாசித்தாள். ஆனால், இரட்சிப்பைக் கொடுக்க ஏன் இயேசு தம் இரத்தத்தைச் சிந்தினார் என்பதை ஏற்றுக் கொள்ள அவளுக்குத் தயக்கம் ஏற்பட்டது. ஏதேனும் ஒன்றை இரத்தத்தின் மூலம் கழுவி சுத்திகரிக்க வேண்டும் என்பதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? நியாயப் பிரமாணத்தின்படி, கொஞ்சம் குறைய எல்லாம் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படும். என்று வேதம் கூறுகிறது (எபிரேயர் 9:22). மேரி ஆனின் கருத்துப்படி அது அவளை வெறுப்புக்குள்ளாக்குகிறது.

ஒரு சமயம் அவள் மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. அவள் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை…

மேலும் வளருதல்

என் பேரனும் அவனது நண்பர்களும் டி-பந்து விளையாடுவதைப் பார்ப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியையளிக்கும். இந்த பேஸ்பால் போன்ற விளையாட்டில் அதிகம் பயிற்சி பெறாத இளம் விளையாட்டு வீரர்கள், தவறான பகுதிக்கு ஒடுவார்கள் அல்லது பந்தைப் பிடிக்க நேர்ந்தால் என்ன செய்வதென்று அறியாது திணறுவார்கள். பேஸ்பால் விளையாட்டையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள் விளையாடும் பொழுது இப்படிப்பட்ட தவறுகள் வினோதமாகக் காணப்படாது.

இவற்றில் தேர்ச்சி பெற்று முதிர்ச்சியடைவதே காரியம்.

என்ன செய்வதென்று அறியாமல் அல்லது எல்லாவற்றையும் மிகச் சிறந்த முறையில் செய்யத் தெரியாத நிலையில் - இவ்வாறு…

உற்று கவனித்தல்

நான் என் வீட்டின் ஓர் நிகழ்ச்சிக்காக, என் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது, வரும் விருந்தினர் நான் சுத்தம் செய்தவற்றை பார்க்காமல், நான் சுத்தம் செய்யாதவற்றை மாத்திரம் பார்ப்பார்கள் என்று எண்ணி மனம் தளர்ந்து போனேன். இந்த எண்ணம் வேதாந்தரீதியாகவும், ஆத்தும ரீதியாகவும் ஓர் கேள்வியை எழுப்பியது. ஏன் மக்கள் சரியானதைப் பார்க்காதவாறு, சீக்கிரம் தவறான காரியங்களையே பார்க்கிறார்கள் என்பதே. நாம் அநேகமாக அன்பான காரியங்களை ஞாபகத்தில் வைக்காமல் கொடூரமான காரியங்களையே ஞாபகத்தில் வைக்கிறோம். குற்றங்களே நம் மனதை ஈர்க்கிறதேயன்றி தயாளமான செயல்களை…

எவ்வாறு முதுமை அடைய வேண்டும்?

இன்று எப்படி இருக்கிறீர்கள் அம்மா? என்று நான் சாதாரணமாக 84 வயதுள்ள என் சிநேகிதியை விசாரித்த பொழுது, மூட்டுக்களில் உள்ள வேதனைகளையும், வலிகளையும் காண்பித்து, “முதுமை என்பது கடினம்! ஆனால் தேவன் எனக்கு நல்லவராகவே இருக்கிறார்” என்று மெல்லிய குரலில் பதிலளித்தார்கள்.

“என் வாழ்க்கையில் முதுமை அடைவது என்பது எனக்கு மாபெரும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று “வீட்டை நெருங்கி” என்ற நூலில் பில்லி கிரகாம் கூறுகிறார். “நான் இப்பொழுது ஓர் வயது முதிர்ந்தவன். இது ஓர் இலகுவான காரியம் அல்ல என்று என்னை நம்புங்கள்.”…

முதன்மையானதை அலட்சியப்படுத்துதல்

பாதகமான காலநிலையால் ஐந்து முறை காலதாமதமான விண்கலம் “சாலஞ்சர்”. இடிமுழக்கம் போன்ற பேரிரைச்சலையும், தீப்பிளம்புகளையும் கக்கிக் கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது. அடுத்த 73 வினாடிகளில் ஏதோ குறைபாட்டினால் விண்கலம் வெடித்துக் சிதறி அதில் பயணித்த ஏழு விண்வெளி வீரர்களும் மாண்டு போயினர்.

இந்தப் பேராபத்து ‘0-ரிங்’ என்ற மிக மென்மையான பாகத்தை இறுக்க தாழிட்டு அடைக்கப்படாததால் ஏற்பட்டது என்று உள்ளிருந்தவர்கள் கூறினார்கள். பேராபத்தை உண்டாக்கிய நாச வேலையான அந்த தவறை “க்கோ ஃபீவர்” - அதாவது மாபெரும் சாதனையை படைக்க வேண்டும் என்ற உத்வேகத்தில்…