அன்பிற்கான தூதுவர்
ஒரு போதகராக நான் பணியாற்றி வந்தபொழுது, சில மக்கள், அவர்களுக்குச் சற்றுக் கூடுதலாக ஆன்மீக உதவி செய்ய இயலுமா என்று என்னிடம் கேட்பார்கள். அவர்களோடு என் நேரத்தை செலவிடுவது எனக்கு சந்தோஷமாக இருக்கும். அவ்வாறு செய்யும்பொழுது, அவர்களுக்கு நான் கற்றுத்தருவதை விட நான் அதிகமாக அந்த நேரத்தில் கற்றுக்கொள்வேன். ஒரு நாள் உண்மையான ஒரு புதிய கிறிஸ்தவர் அவரது கஷ்டங்களை சகித்தவராக “வேதத்தை வாசிப்பது எனக்கு சிறந்த காரியமல்லவென்று எண்ணுகிறேன். தேவன் என்னிடம் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றி அதிகமாக வாசிக்கும்பொழுது, வேதவசனத்தை வாசித்தும்…
புதிதாக ஆரம்பியுங்கள்
எனது இளம் பிராயத்தில் லூசி மாட்மாண்ட் கோமரி எழுதின “கிரீன் கேபிளுடைய ஆனி” என்ற புத்தகம், எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இருந்தது. அப்புத்தகத்தில் வேடிக்கையான ஒரு பகுதியில், ஆனி, அவள் செய்து கொண்டிருந்த கேக்கில் வனிலா எசன்ஸ் சேர்ப்பதற்குப் பதிலாக தோலில் போடும் மருந்தை போட்டு விட்டாள். பின்பு கோபத்துடன் இருந்த அவளது காப்பாளரிடம் “இன்னமும் எந்த தவறுதல்களும் நடந்திராத நாளையதினத்தை எண்ணிப்பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறதல்லவா?” என்று நம்பிக்கையுடன் அறிவித்தாள்.
நானும் கூட அவ்வாறுதான் எண்ணினேன். நாளையதினம் ஒரு புதிய…
நமது தெய்வீகப் பாதுகாப்பு
நெகேமியாவின் மேற்பார்வையில், இஸ்ரவேல் மக்கள் எருசலேமின் இடிந்துபோன மதிலை மறுபடியும் புதுப்பித்துக் கட்டினார்கள். ஏறக்குறைய பாதி வேலைகள் முடிக்கப்பட்ட தருணத்தில் அவர்களுடைய எதிரிகள் எருசலேமைத் தாக்க வருகிறார்கள் என்ற செய்தியை அறிந்தார்கள். சரீரத்தில் ஏற்கனவே களைப்படைந்த பணியாட்களை இந்தச் செய்தி அவர்களது மனதை இளக்கரித்துப்போகச் செய்தது.
நெகேமியா இதற்காக உடனே ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் இருந்தான். அவன் முதலாவது ஜெபம் பண்ணினான். பின்பு, மிக முக்கியமான இடங்களில் அநேக காவல்காரர்களை வைத்தான். வேலை செய்பவர்கள் அனைவரும் ஆயுதங்களை ஒரு கரத்தில் பிடித்துக் கொண்டிருக்கும்படி…
தொடர்ந்து முன்னேறு
ரிச்சர்டு, கெவின் என்ற சிநேகிதனோடு சேர்ந்து மலை ஏறிக்கொண்டிருந்த பொழுது, அவனுக்கு ஒரு உந்துதல் தேவைப்பட்டது. மலை ஏறுபவர்கள் பத்திரமாக ஏறுவதற்கு கயிற்றைப் பிடித்திருக்கும் பணியை செய்பவனாக கெவின் இருந்தான். மிகவும் களைப்படைந்த நிலையில் மலை ஏறுவதை கைவிடக்கூடிய நிலைக்கு ரிச்சர்ட் தள்ளப்பட்டான். ஆகவே கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்த கெவினிடம், தன்னை கீழே இறக்கி விடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். மலை ஏற்றத்தை நிறுத்தி விடக்கூடாத உயரத்திற்கு ரிச்சர்டு ஏறிவிட்டான். ஆகவே, கீழே இறங்குவதை விட்டு விட்டு மேலே ஏறவேண்டும் என்று கெவின் ரிச்சர்டை…
மறக்கப்படவில்லை
குக்குவாவின் தாயாருடைய 50வது பிறந்த நாளின் கொண்டாட்டத்திற்கு நூற்றுக்கணக்கானவர்கள் வந்திருந்த பொழுது, அவளது தாயாருக்கு தலை மகளான குக்குவா அவளுக்கு அவள் தாயார் செய்த பல தியாகங்களை நினைவுபடுத்திக் கூறினாள். பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. தகப்பன் இல்லாமல் தனியாக இருந்து பிள்ளைகளை வளர்த்த அவளது தாயார், அவளது விலை மதிப்புள்ள நகைகளையும், பொருட்களையும் விற்று குக்குவாவை உயர்நிலைக் கல்வி பயில வைத்தாள். வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்தபொழுதும், அவளது தாயார் அவளையும், அவளது உடன் பிறந்தவர்களையும் ஒருபொழுதும் கைவிட்டுவிடவே இல்லை.…
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆவியானவர்
எலிசா தீர்க்கத்தரிசி மன உறுதியும், முரட்டுத் துணிச்சலும் இணைந்த தன்மையை உடையவர். எலியா தீர்க்கத்தரிசியுடன் அவர் சிலகாலம் சேர்ந்து பணிபுரிந்து வந்தபொழுது, எலியாவின் மூலமாக கர்த்தர் அநேக அற்புதங்களைச் செய்ததையும், பொய் பேசுதலே மேலோங்கி இருந்த அந்தக் காலத்தில், அவர் தைரியமாக உண்மை பேசுவதையும் எலிசா கண்ணாரக் கண்டார். 2 இராஜாக்கள் 2:1ல் எலியா “பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்” நேரம் வந்தது. ஆனால் எலியா அவனைவிட்டு எடுக்கப்பட்டுப் போவதை எலிசா விரும்பவில்லை.
எலிசா பயந்தபடி, எலியா அவனை விட்டுப் பிரியும் நேரம் வந்தது. எலியா…
இதற்கு மேலான சந்தோஷம் இல்லை
பாபும், இவான் பாட்டரும் மகிழ்ச்சியை விரும்பும் தம்பதிகள். அவர்களுக்கு மூன்று மகன்கள் உண்டு. திடீரென அவர்களது வாழ்க்கையில் ஆச்சரியமான ஒரு திருப்பம் ஏற்பட்டது. 1956ம் ஆண்டு ஓக்லஹோமா நகரத்தில் நடந்த பில்லி கிரஹாமின் சுவிசேஷ கூட்டத்திற்குச் சென்றார்கள். அந்தக் கூட்டத்தில் இருவரும் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். வெகுவிரைவில், அவர்கள் அறிந்துகொண்ட சத்தியத்தையும், அவர்களது விசுவாசத்தையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள். ஆகவே ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் வேதாகமத்தை கற்றுக்கொள்ள விரும்பும் உயர்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்கள் வீட்டைத் திறந்து கொடுத்தார்கள். என்னுடைய…
நீண்டதூர ஜெப மராத்தான்
எந்தவித தடையுமின்றி உங்கள் ஜெபவாழ்க்கையில் தரித்திருக்க நீங்கள் போராடுகிறீர்களா? நம்மில் அநேகருக்கு அப்படிப்பட்ட அனுபவம் உண்டு. ஜெபம் மிகவும் முக்கியமானது என்று நாம் அறிவோம். ஆனால், அதை செயல்படுத்துவது மிகவும் கடினமான காரியம் என்பதையும் நாம் அறிவோம். நமது ஜெபங்களில், சில நேரங்களில் தேவனோடு மிக ஆழமான தொடர்பு உடையவர்களாக இருப்போம்; சில சமயங்களில் நமது ஜெபம் ஏதோ மேலெழுந்த வாரியாக உள்ளது என்பதை உணர்வோம். நமது ஜெபங்களில் நாம் ஏன் இவ்விதமாக போராடவேண்டும்?
விசுவாச வாழ்க்கை என்பது ஒரு தொலைதூர ஓட்டப்பந்தயம். நம்முடைய…
இடிபாடுகளிலிருந்து புதுப்பிக்கப்படல்
எருசலேமிலுள்ள யூத குடியிருப்பில் “டிப்பரெட் இஸ்ரயேல்” என்ற ஜெப ஆலயத்தை நீங்கள் காணலாம். 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த ஜெப ஆலயம், 1948ம் ஆண்டு நடந்த அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின்போது படை வீரர்களால் டைனமைட் வெடிவைத்து சிதைக்கப்பட்டது.
அநேக ஆண்டுகளாக அந்த இடம் பாழடைந்த நிலையில் கிடந்தது. பின்னர் 2014ம் ஆண்டு அதை மறுபடியும் புதுப்பிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. நகரத்தின் அதிகாரிகள் இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கல்லை, புதிய கட்டிடத்திற்கு மூலைக்கல்லாக வைத்தார்கள். அதில் ஒருவர் “கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்;…