எண்ணுவதற்கு கற்றுக்கொள்ளுதல்
எனது மகன், 1 முதல் 10 வரை எண்ணுவதற்கு கற்றுக்கொண்டிருக்கிறான். அவனது பொம்மைகள், அவன் பார்க்கும் மரங்கள் அனைத்தையும் எண்ணுவான். அவனது பள்ளிக்குச் செல்லும் வழியில் எனது கவனத்திற்கு உட்படாத காட்டுப்பூக்கள் அல்லது எனது பாதத்திலுள்ள விரல்கள் ஆகியவற்றைக் கூட அவன் எண்ணுவான்.
இப்படியாக என் மகன் எண்ணுவதின் மூலம், நான் மறுபடியும் எண்ணுவதற்கு எனக்குப் போதிக்கிறான். நான் செய்து முடிக்காத காரியங்கள் அல்லது என்னிடம் இல்லாத பொருட்களைப் பற்றிய காரியங்களில் என் முழு கவனத்தையும் செலுத்துவதால், என்னைச் சுற்றியுள்ள அனைத்து நன்மையான காரியங்களையும் கவனிக்கத் தவறிவிடுகிறேன். இந்த ஆண்டில் எனக்குக் கிடைத்த புதிய சிநேகிதர்கள், பதில் கிடைத்த ஜெபங்கள், எனது நல்ல சிநேகிதருடன் நான் சிரித்து மகிழ்ந்த நேரங்கள் அனைத்தையும் மறந்து விட்டேன்.
ஒவ்வொரு நாளும் தேவன் அருளும் ஆசீர்வாதங்களை எண்ணுவதற்கு எனது பத்து விரல்கள் போதாது. “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது. நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்” (சங். 40:5). இரட்சிப்பு, ஒப்புரவாதல், நித்திய ஜீவன் போன்ற ஆசீர்வாதங்களை நம்மால் எப்படி எண்ணுவதற்கு இயலும்?
நம்மீது தேவன் கொண்டுள்ள விலைமதிப்பற்ற எண்ணங்கள், அவர் நமக்குச் செய்த ஆசீர்வாதமான காரியங்கள் ஒவ்வொன்றாக எண்ணி நாமும் தாவீதோடு சேர்ந்து, “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்” (சங். 139:17–18) என்று தேவனை போற்றித் துதிப்போம்.
எண்ணுவதற்கு மறுபடியும் கற்றுக்கொள்வோம்.
மெய்யான ஐஸ்வர்யம்
என்னுடைய தோழியின் தகப்பனாருடைய நினைவுநாள் ஜெபக்கூட்டத்தில், “உன் தந்தையை சந்திக்கும் வரையில் மற்றவர்களுக்கு உதவும் பொழுதுகூட ஒருவரால் உற்சாகமாயும், சந்தோஷமாயும் இருக்க முடியும் என்பதை அறியாதிருந்தேன்”, என்று ஒருவர் அவளிடம் கூறினார். மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலமும், அன்பையும், களிப்பையும் பகிர்ந்தும், முன்பின் அறியாதவர்களை சந்தித்து நட்பு பாராட்டுவதின் மூலமும், அவளுடைய தந்தை தேவனுடைய ராஜ்ஜியத்தைக் கட்ட அவரது பங்களித்தார். அவர் மரித்த பொழுது அன்பை பரம்பரை சொத்தாக விட்டுச்சென்றார். அதற்கு எதிர்மறையாக என் தோழியின் அத்தையோ, அதாவது அவள் தந்தையின் சகோதரி, அவருடைய…
உன் ஆத்துமாவை அமரப்ண்ணுதல்
ஒரு கச்சேரியை கேட்டுக் கொண்டிருந்த பொழுது, என்னுடைய கவனம் திசைமாறி தேவைப்பட்ட ஒரு பிரச்சனைக்குரிய காரியத்திற்கு நேராய் கச்சேரியிலிருந்து வழிமாறி என் மனம் சென்றது. நல்ல வேளையாக, சிறிது நேரத்திலேயே என் உள்ளத்தின் ஆழத்திற்குள் ஒரு அழகான பாடல் கடந்து வந்த பொழுது அக்கவனச்சிதைவு விலகியது. ஒரு ஆண்கள் அகப்பெல்லா குழுவினர் (வாத்தியங்கள் இல்லாமல் பாடுபவர்கள்) “என் ஆத்துமாவே, நீ அமர்ந்திரு”, (Be Still My Soul) என்னும் பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அந்த வார்த்தைகளை கேட்டவாறு, தேவனாலே மாத்திரம் கொடுக்கக்கூடிய சமாதானத்தைக்…
முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகள்
நமது அனுதின மன்னாவின் ஆசிரியராக வேலைபார்த்த ஆரம்ப நாட்களில், ஒவ்வொரு முறையும் மாதாந்திர தியான நூலின் அட்டையில் போடப்படும் வசனத்தை நானே தேர்வு செய்தேன். ஆனால் பின்பு, “இதினால் ஏதாவது பயன் உண்டோ?” என சிந்திக்க ஆரம்பித்தேன்.
கொஞ்சக்காலத்திற்கு பிறகு, இயேசுவை அறவே ஒதுக்கித்தள்ளிய தன் மகனுக்காக எப்படியெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஜெபித்து வந்தார் என்பதை ஒரு வாசகர் தன் கடிதத்திலே விவரித்திருந்தார். பின்பு அவரை சந்திக்க வந்த அவருடைய மகன், அவர்கள் மேஜையின் மேலிருந்த தியான நூலின் அட்டையிலே இருந்த வசனத்தை…
தொடரச் செய்
தொடர் ஒட்டங்களை காண எனக்குப் பிடிக்கும். அந்த விளையாட்டு ஓட்ட வீரர்களுக்கு தேவையான உடல் வலிமை, வேகம், திறன், சகிப்புத்தன்மை இவற்றை எண்ணும்பொழுது வியப்பாயிருக்கிறது. ஆனால், அவ்வோட்டத்தின் ஒரு மிக முக்கியமான தருணம் என்னுடைய விசேஷித்த கவனத்தை மட்டுமல்லாமல் கவலையையும் சேர்த்து ஆவல் கொள்ளச் செய்யும். அது, அக்கோல் அடுத்த வீரரிடம் கைமாறும் தருணமே. ஒரு நொடி தாமதமானாலோ, அல்லது கை நழுவி விழுந்தாலோ அந்த ஒட்டத்தில் தோற்றுப் போகலாம்.
ஒரு வகையில் பார்த்தால், கிறிஸ்தவர்களும், விசுவாசம் மற்றும் தேவனையும், அவருடைய வார்த்தையையும் அறிகிற…
சோர்வுற்றவர்களுக்கு தேவையான வார்த்தைகள்
முப்பது வயது நிரம்பிய சி.எஸ். லூயிஸ் (C.S. Lewis), தன் தகப்பனார் இறந்த சில நாட்களுக்குப் பின், 20 வருடங்களுக்கு முன் வியாதிப் படுக்கையில் இருந்து மரித்த தன் தாயாரை அப்பொழுது கவனித்துக் கொண்ட பெண்ணிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றார். அப்பெண் தன் தகப்பனாரின் மறைவுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, அவரைப்பற்றி ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்டிருந்தார். “என் அன்பிற்குரிய தாதிமார் டேவிசன் (Nurse Davison), உங்களை குறித்த ஞாபகமா? கண்டிப்பாக ஞாபகமிருக்கிறது,” என பதிலனுப்பபினார்.
ஒரு இக்கட்டான காலக்கட்டத்தில், தன் வீட்டில் அப்பெண்ணின்…
துதியின் வாசல்கள்
உலகத்தின் தலைசிறந்த சில பட்டணங்களில் நுழையும்பொழுது, பெர்லின், பிராண்டென்பெர்க் நுழைவாயில், (Brandenburg Gate, Berlin) யோப்பா நுழைவாயில், எருசலேம் (Jaffa Gate, Jerusalem) மற்றும் லண்டன், டவுனிங் தெருவிலுள்ள வாயில்களை (Downing St., London) போன்ற நுழைவாயில்களை காணலாம். அந்த நுழைவாயில்கள் பாதுகாப்பிற்காகவோ, கொண்டாட்டங்களுக்காகவோ கட்டப்பட்டது. எதுவாயினும், அவைகளுக்குள்ள வேறுபாடு அவைகள் பட்டணத்திற்கு வெளியேவோ உள்ளேயோ இருப்பதிலிருக்கிது. சில நுழைவாயில்கள் திறந்தே இருக்கும். வேறு சில, ஒரு சிலருக்கு தவிர பொதுவாகப் பூட்டியே இருக்கும்.
தேவ சமூகத்தின் வாசல்கள் எப்பொழுதும் நமக்கு திறந்தே இருக்கிறது.…
பட்சிக்கும் சோதனைகள்
மரங்களுக்கு நெருப்பு மிக மோசமான ஒரு எதிரி. ஆனால், அதுவே உபயோகமானதாகவும் திகழலாம். காட்டின் நிலப்பகுதியில் அடிக்கடி குறைந்த வீரியத்தில் பற்றியெரியும் நெருப்பு அங்கு கிடக்கும் காய்ந்த இலைகளையும், கிளைகளையும் சுட்டெரித்துவிடுகிறது. ஆனால், மரங்களுக்கோ ஒரு சேதமும் ஏற்படுவதில்லை. இதை வல்லுநர்கள் “குளிர்ந்த” நெருப்பு என கூறுகிறார்கள். இதன் விளைவாக ஏற்படும் சாம்பல், அங்கு விதைகள் வளர்வதற்கு ஏற்றதாயிருக்கிறது. ஆச்சரியம் என்னவெனில் மரங்கள் நன்கு வளர குறைந்த வீரியம் கொண்ட நெருப்பு அவசியமாயிருக்கிறது.
அதைப்போலவே, வேதத்தில் அக்கினியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சோதனைகள், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின்…
புள்ளிகளை இனைத்தல்
1880களில் பிரஞ்ச் ஒவியர், ஜார்ஜஸ் சவுரட் (Georges Seurat) புள்ளி ஓவியம் (Pointillism) என்ற புதிய ஓவிய முறையை அறிமுகப்படுத்தினார். பெயருக்கேற்றவாறு, சவுரட், தூரிகையை பயன்படுத்தி வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, வண்ணமயமான புள்ளிகளைக் கொண்டு கலைநயமிக்க உருவத்தை உண்டாக்கினார். அருகில் சென்று பார்த்தால், தனித்த புள்ளிகளின் கூட்டுத் தொகுப்பு போல காட்சியளிக்கும். ஆனால், அதையே சற்றுப் பின் தள்ளி நின்று பார்த்தால், நம் மனித கண்கள் அப்புள்ளிகளை ஒன்றோடு ஒன்று கலந்து பிரகாசமான வண்ணமயமிக்க உருவப்படத்தையோ அல்லது இயற்கை காட்சியையோ காணச்செய்யும்.
வேதாகமத்தின் உருவப்படமும்…