எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜோ ஸ்டோவெல்கட்டுரைகள்

இயேசுவோடு ஐக்கியம்

நான் ஒரு முறை இரவு உணவின் போது பில்லி கிரஹாமின் பக்கத்தில் உட்காரும் வாய்ப்பைப் பெற்றேன். அது மறக்கமுடியாத ஓர் அனுபவமாயிருந்தது. நானும் கனப்படுத்தப்பட்டேன். ஆனால், அவரோடு என்ன பேசுவது பொருத்தமாயிருக்கும் என சிந்தித்துச், சற்று பதட்டமாக உணர்ந்தேன். பல ஆண்டுகளான அவருடைய ஊழியப்பாதையில் எது மிகவும் விரும்பக்கூடியதாக இருந்தது என்ற ஒரு கேள்வியோடு என்னுடைய உரையாடலை ஆரம்பித்தால் சரியாக இருக்குமென எண்ணினேன். ஆனால், நான் அநாகரீகமாக அதற்குத் தகுந்த விடைகளையும் எடுத்துரைக்கலானேன். அது ஜனாதிபதியைச் சந்தித்ததா? அல்லது இராஜாக்களையும், ராணிகளையும் சந்தித்தக் கணங்களா? அல்லது உலகெங்கும் பல லட்சம் மக்களுக்குச் சுவிசேஷம் அறிவித்த நேரங்களா?

நான் என்னுடைய கருத்துக்களைக் கூறி முடிப்பதற்குள் மதிப்பிற்குரிய கிரஹாம் அவர்கள் என்னை நிறுத்திவிட்டார். ஒரு தயக்கமுமின்றி அவர், “அது நான் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம்தான். அவருடைய பிரசன்னத்தை உணர்வதும், அவருடைய ஞானத்தைப் பெற்றுக் கொள்வதும் அவருடைய வழிகாட்டலைக் கண்டு கொண்டு அதன்படி நடந்துகொள்வதுமே என்னுடைய மிகப் பெரிய மகிழ்ச்சி” என்றார். இந்த பதில் என்னை ஒரு குற்றவாளியைப் போன்று எண்ணச் செய்தது, ஒரு சவாலைச் சந்திக்கவும் என்னைத் தூண்டியது. இவருடைய பதிலைப் போன்று என்னுடைய பதிலும் இருக்குமா என நான் குத்தப்பட்டேன். நானும் அவரைப் போன்று தேவனைச் சார்ந்து வாழ்வதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டேன்.

இதனை மனதில் கொண்டுதான் பவுலும் “ கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைகாக” தன்னுடைய மிகப்பெரிய சாதனைகளையெல்லாம் குப்பையென்று சொல்லுகின்றார் (பிலி. 3:8). நம் வாழ்விலும் இயேசுவும், இயேசுவோடுள்ள ஐக்கியமுமே பிரதானமானதாக இருப்பின் நம் வாழ்வும் எத்தனை விலையேறப் பெற்றதாக இருக்குமென நினைத்துப்பார்.

நன்றியுள்ள இருதயத்தை உருவாக்கல்

எங்களது திருமண நாளன்று நானும் மார்டியும் மகிழ்ச்சியோடு வாழ்விலும், தாழ்விலும், சுகவீனத்திலும், சுகத்திலும், செல்வத்திலும், வறுமையிலும் உண்மையாயிருப்போம்” என வாக்குக் கொடுத்தோம். ஒரு மகிழ்ச்சியான திருமண நாளில் இருண்ட கெட்ட நேரத்தையும், சுகவீனத்தையும், வறுமையையும் வாக்குறுதியில் சேர்த்திருப்பது சற்று விகர்ப்பமாகத் தோன்றலாம். ஆனால் அது, வாழ்க்கையென்பது கெட்ட நேரங்களையும் அடிக்கடி கொண்டு வரும் என்பதை முக்கியப்படுத்திக் காட்டுகின்றது.

எனவே, வாழ்வில் தவிர்க்க முடியாத கஷ்ட நேரங்களை நாம் சந்திக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்ப்பதை பவுல், ‘‘எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்” (1 தெச. 5:18) என வலியுறுத்துகின்றார். அதிகமான கஷ்டங்களை நாம் சந்திக்கின்ற போது, நன்றியுள்ள ஓர் ஆவியைக் கொண்டிருக்குமாறு தேவன் நம்மை ஊக்கப்படுத்துகின்றார். நன்றியுணர்வு என்பது நம் தேவன் நல்லவர் என்பதில் பிறக்கிறது. அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங். 118:1) தேவன் நம்மோடிருந்து நம் துன்பங்களின் மத்தியில் நம்மை பெலப்படுத்துகின்றார் (எபி. 13:5-6). மேலும் அவர் நம்முடைய குணத்தை மாற்றி அவரைப் போலாக்க, நம்முடைய பெலவீனங்களை, அன்போடு பயன்படுத்துகின்றார் (ரோம. 5:3-4).

நம்முடைய வாழ்வு கடினமான வேளைகளைச் சந்திக்கும்போது நாம் நன்றியோடிருக்கத் தேர்ந்து கொண்டு, தேவன் நல்லவர், அவர் நம்முடைய போராட்டங்களைக் கடந்து செல்ல பெலனளிக்கிறார் என்று நம்பி நம் கவனத்தை அவர் மீது வைப்போம். சங்கீதக்காரனோடு சேர்ந்து நாமும் பாடுவோம், ‘‘கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபையென்றுமுள்ளது” (சங். 118:29).

தீவிர நடவடிக்கை

சில வருஷங்களுக்கு முன் என் சிநேகிதியின் சின்ன மகன் (சிக்காகோவிலுள்ள யூனியன் ஸ்டேஷன்) ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டத்தில் தொலைந்துபோனான். அது ஒரு பயங்கரமான அனுபவம் என்று சொல்லத் தேவையில்லை. செய்வதறியாமல் தன் மகனின் பெயரை உரத்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே தானியங்கி படிக்கட்டில் ஏறி அங்கும் இங்கும் ஒடினாள். வினாடிகள் யுகம்போல் தோன்றியது. கடைசியில் அவள் மகன் கூட்டத்திலிருந்து வெளியே வந்து தாயின் கைகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்தான்.

தன் பிள்ளையைக் கண்டுபிடிப்பதற்காக என் சிநேகிதி என்ன வேண்டுமானாலும் செய்திருப்பாள் என்பதை நினைக்கும்பொழுது, தேவன் நம்மை இரட்சிக்க செய்த ஆச்சரியமான காரியங்களை நினைத்து, புத்துணர்வுடன் நன்றியுணர்வால் நிரம்புகிறோம். முதலாவது தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட ஆதாமும், ஏவாளும் பாவம் செய்து தேவனைவிட்டு விலகிப்போனது முதல், தேவன் தம்முடைய பிள்ளைகளோடிருந்த உறவை இழந்துபோனதற்காய் புலம்பினார். அந்த உறவை மறுபடியும் மீட்டெடுக்க ஒரு தீவிர முயற்சியாகத் தம்முடைய ஒரேபேறான ஏகசுதனை, “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும்” (லூக். 19:10). அனுப்பினார். இயேசு பிறக்காமலும், நம்முடைய பாவத்தின் கிரயமாக தம்மை பலியாக ஒப்புக்கொடாமலும் இருந்திருந்தால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே இருந்திருக்காது.

தேவன் தீவிர நடவடிக்கை எடுத்துத் தம் குமாரனை அனுப்பி நம்மை அவரோடு ஒப்புரவாக்கினதை இந்தக் கிறிஸ்துமஸ் காலங்களில் நினைத்து நன்றி சொல்லக் கடவோம். ஓர் காலத்தில் நாம் காணாமற்போயிருந்தாலும் இயேசுவால் கண்டுபிடிக்கப்பட்டோம்!

வேறுவகையான அன்பு

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பிக்கப்பட்ட ஒரு சபை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஏனெனில் அந்த சபை சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த கைதிகள், மீண்டும் சமுதாயத்தில் நன்முறையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு உதவிகள் செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த திருச்சபையில் அனைத்து பிரிவு மக்களும் பங்கெடுக்கின்றனர். அந்தத் திருச்சபை பரலோகத்திற்கு மாதிரியாக இருக்கிறது. ஏனென்றால் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட பாவிகளாக, இயேசு கிறிஸ்துவின் அன்பினால் இணைக்கப்பட்டவர்களாக, இருப்பதினால் தான் அச்சபையை அதிகமாக நேசிக்கிறேன்.

சில சமயங்களில் திருச்சபை என்பது மன்னிக்கப்பட்ட பாவிகள் கூடும் பாதுகாப்பான அடைக்கலம் போல இல்லாத பொழுதுபோக்குக் குழு கூடும் இடம் போல இருந்துவிடுமோ என்று எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத்தரம் உடைய மக்கள் ஒரே குழுவாகக் கூடுவது இயற்கையான காரியமாகும். எப்படிப்பட்ட மக்களோடு அவர்கள் இலகுவாக இணைந்து செயல்பட முடியுமோ, அப்படிப்பட்ட மக்கள் மட்டும் இணைந்து கொள்வது இயற்கையானது. இப்படிச் செய்வதால் விடப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக உணர்வார்கள். “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்” (யோவா. 15:12) என்று இயேசு கூறிய பொழுது, அப்படிப்பட்ட பிரிவினையை மனதில் எண்ணவில்லை. அவருடைய திருச்சபையில் உள்ள மக்கள் அனைவரும், தேவனுடைய அன்பை எல்லாரோடும் பகிர்ந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட மக்கள் மனம் பாதிப்படைந்தால், அன்பான அடைக்கலத்தையும், ஆறுதலையும், மன்னிப்பையும் இயேசுவில் பெற்றுக் கொள்ளலாம். இதைத்தான் அப்படிப்பட்ட மக்கள் திருச்சபையில் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே நாம் சந்திக்கும் அனைவரிடமும் இயேசுவின் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அதிலும் விசேஷமாக நம்முடைய தரத்திலே இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்களிடம் கிறிஸ்துவின் அன்பைக் காட்ட வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் மக்களை, நம்மூலமாக நேசிக்க இயேசு விரும்புகிறார். மக்கள் அனைவரையம் அன்பினால் இணைத்து ஆராதனை செய்வது எவ்வளவு மகிழ்ச்சியானது! அது பரலோகத்தின் ஒரு பகுதியை பூமியிலே மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது போன்றதாகும்.

கொந்தளிக்கும் தண்ணீர்களைக் கடந்து

முதல் முறையாக காற்றடைக்கப்பட்ட படகில் சவாரி செய்தபோது, கொந்தளிக்கும் நீரோட்டத்தின் கர்ஜனையை கேட்கும்வரை சந்தோஷமாக அத்தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். உரத்த அச்சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் என்ன நடக்குமோ என்ற ஐயமும், பயமும், பாதுகாப்பின்மையையும் ஒரே சமயத்தில் உணர்ந்தேன். கொந்தளிக்கும் தண்ணிரீல் கடந்து வந்தது, இரத்தத்தை உறைய வைக்கும் ஓர் அனுபவமாகும். ஒரு வழியாக திடீரென அக்கொந்தளிப்பு நின்றது. படகிலிருந்த எங்கள் வழிகாட்டி படகை செவ்வையாய் செலுத்தி எங்களை வழிநடத்தி வந்தார். ஆகவே அடுத்த கொந்தளிப்பு ஏற்படும் வரையேனும் நான் பத்திரமாக உணர்ந்தேன்.

இப்படகு சவாரி போல நம்முடைய வாழ்வில் ஏற்படும் நிலைமாறுதல்களும் கொந்தளிப்பாக காணப்படலாம். கல்லூரியிலிருந்து வேலைக்கு, ஒரு வேலையிலிருந்து வேறொரு வேலை, பெற்றோரோடு வாழ்ந்த காலம் முடிந்து தனியாகவோ அல்லது நம்முடைய துணையோடு வாழ்தல், பணியிலிருந்து ஓய்வு, இளமை காலத்திலிருந்து வயது முதிர்ந்து போனது ஒரு காலக்கட்டத்திலிருந்து இன்னொரு காலக்கட்டத்திற்கு நாம் பாய்ந்து செல்வது தவிர்க்க முடியாத ஒன்று. இந்நிலை மாறுதல்கள் அனைத்திலும் நிச்சயமின்மையும் பாதுகாப்பின்மையும் காணப்படுகின்றன. 

பழைய ஏற்பாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிலைமாற்றம், சாலொமோன் தாவீதின் ராஜ்ஜிய பாரத்தை ஏற்றுக்கொண்டதாகும். நிச்சயமாக சாலொமோன் தன் எதிர்காலத்தைக் குறித்து கலங்கியிருக்கக் கூடும் என்றே நான் நினைக்கிறேன். அப்போது தன் தந்தையிடமிருந்து அவன் பெற்ற ஆலோசனை என்ன? “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி... தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்”, என்று தாவீது கூறினான் (1 நாளா. 28:20). 

நம்முடைய வாழ்விலும் அநேக கடினமான நிலைமாற்றங்கள் ஏற்படும். ஆனால் நம்முடைய படகில் தேவன் இருப்பதால் நாம் ஒருபோதும் தனிமையாக இல்லை. ஆகவே கொந்தளிக்கும் தண்ணீர்கள் ஊடாய் நம்மை நடத்திச்செல்லும் தேவன் மீது நமது கண்களை பதிய வைக்கும்பொழுது, நமக்கு பாதுகாப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஏனெனில் நமக்கு முன்பே அவர் அநேகரைப் பத்திரமாக வழிநடத்திச் சென்றுள்ளார்.

நீண்ட நிழல்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் மனைவியும் இங்கிலாந்து தேசத்திலுள்ள யார்க்ஷைர் டேல்ஸ் (Yorkshine Dales) என்னும் மாகணத்தின் தொலைக்கோடியில் உள்ள ஒரு கிராமத்து விடுதியில் தங்கியிருந்தோம். அங்கு எங்களைத் தவிர இன்னும் நான்கு தம்பதியினர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்நாட்டை சேர்ந்த, ஆங்கிலேயர்கள். முன்பின் அறியாத அவர்களோடு இரவு உணவிற்கு பின் கொஞ்சம் காபி குடித்தவாறு விடுதியின் வரவேற்பறையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுடைய உரையாடல் ஒவ்வொருவருடைய தொழிலை குறித்து திசை மாறியபொழுது, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்ற கேள்வி எழும்பியது. அச்சமயத்தில் நான் சிக்காகோவில் (Chicago) உள்ள மூடி வேதாகம நிறுவனத்தின் (Moody Bible Institute) தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்நிறுவனத்தைப் பற்றியோ அதன் நிறுவனர் டிவைட். எல். மூடியைப் (Dwight. L. Moody) பற்றியோ அவர்கள் ஒருவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என எண்ணினேன். ஆனால் அக்கல்லூரியின் பெயரை சொன்ன மாத்திரத்தில் வந்த அவர்களுடைய பதில்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “மூடி மற்றும் சான்கி (Sankey) என்பவர்களா... அந்த மூடியா?” என்று ஒருவரும், “எங்களிடம் சான்கி தொகுத்த பாடல் புத்தகம் உள்ளது. அடிக்கடி நாங்கள் குடும்பமாக ஒன்று கூடி பியானோ (Piano) வாசிப்போடு அப்புத்தகத்தில் உள்ள பாடல்களை பாடுவோம்,” என்று மற்றொருவரும் கூறினார். அதைக்கேட்டு நான் மிகுந்த வியப்புற்றேன்! சுவிசேஷகரான டிவைட் மூடியும் இசைக் குழு நடத்துபவரான இரா சான்கியும் (Ira Sankey) 120 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தேசத்தில் சுவிசேஷ கூட்டங்களை நடத்தினார்கள். அவர்களுடைய தாக்கத்தை, ஊழியத்தின் பயனை இன்றும் உணர முடிந்தது.

அன்று இரவு அவ்வறையை விட்டு கடந்து சென்ற பொழுது, தேவனுக்காக நம் வாழ்விலும் நீண்ட நிழல்களின் தாக்கத்தை எவ்வாறெல்லாம் வீசச் செய்ய முடியும் என எண்ணிக் கொண்டிருந்தேன். அது, ஒரு ஜெபிக்கும் தாய் தன் பிள்ளைகள் மீது ஏற்படுத்தும் தாக்கமாகவும் இருக்கலாம், ஒரு ஆசிரியர் அல்லது வழிகாட்டியினுடைய தைரியப்படுத்தும் வார்த்தைகளாகவும் இருக்கலாம், அல்லது ஒரு நண்பனின் அன்பு நிறைந்த சீர்ப்படுத்தும் வார்த்தைகளாகவும் இருக்கலாம்.

“அவருடைய கிருபை... தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது” (சங் 100:5) என்னும் அற்புதமான வாக்குத்தத்தத்தில் நாமும் பங்களிக்க முடியும் என்பது நமக்கு கிடைத்த மகிமையான சிலாக்கியம்.

நன்றி கூறும் விளையாட்டு

ஒவ்வொரு வருடமும், இலையுதிர் காலத்தில், எங்கள் கார்னர்ஸ்டோன் (Cornerstone) பல்கலைக்கழக வளாகத்திலே சுவைமிக்க நன்றிகூறுதல் விருந்து வைப்போம். எங்கள் மாணவர்களுக்கு அது மிகவும் பிடிக்கும். சென்ற வருடம் சில மாணவர்கள், தாங்கள் அமர்ந்து உணவருந்திய இடத்திலேயே ஒரு விளையாட்டை விளையாடினார்கள். அதாவது, அதிகப்படியாக மூன்று நொடிகளுக்குள், தாங்கள் நன்றி தெரிவிக்க விரும்பிய காரியத்தைப் பெயரிட வேண்டும். மேலும் மற்றொருவர் சொன்னதை திருப்பிச் சொல்லக் கூடாது. அதிக நேரம் எடுத்தால், விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

தேர்வுகள், காலக்கெடு, விதிமுறைகள் மற்றும் அநேக கல்லூரி சார்ந்த காரியங்களை மாணவர்கள் குறைகூற கூடும். ஆனால் அந்த மாணவர்கள் நன்றி கூறுவதை தெரிந்து கொண்டார்கள். என்னுடைய அனுமானம் என்னவென்றால், இந்த விளையாட்டின் முடிவிலே அந்த மாணவர்கள் மனநிறைவடைந்திருப்பார்கள். ஒருவேளை அவர்கள் குறைகூறுவதை தேர்வு செய்திருந்தால் அந்த மனநிறைவு அவர்களுக்கு கிடைக்காமல் போயிருக்கும்.

நாம் குறைகூறும்படியான காரியங்கள் எப்பொழுதும் இருந்தாலும், நாம் கவனமாய் பார்த்தால், நாம் நன்றி தெரிவிக்கும்படியான ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் உண்டு. கிறிஸ்துவுக்குள்ளான புது சிருஷ்டியைக் குறித்து பவுல் விவரிக்கும் பொழுது, “நன்றியறிதல்” என்கின்ற பண்பே ஒன்றிற்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளது. “நன்றியறிதல் உள்ளவர்களாயுமிருங்கள்” என்று கொலோசெயர் 3:15ல் கூறுகிறார். “இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி,” (வச. 16) என்று நன்றியுணர்வை பக்தி பாடலாய் வெளிப்படுத்துகிறார். மேலும், “நீங்கள் எதைச் செய்தாலும்… பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்,” (வச. 17) என்று கூறுகிறார். நன்றியுள்ள இருதயத்தோடு இருக்கும்படியான அறிவுரையை பவுல், சிறைச் சாலையிலிருந்து எழுதியுள்ளார் என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது.

இன்று நன்றியறிதலுள்ள மனப்பான்மையை நாம் தேர்வு செய்வோம்.

உன் ஆத்துமாவை அமரப்ண்ணுதல்

ஒரு கச்சேரியை கேட்டுக் கொண்டிருந்த பொழுது, என்னுடைய கவனம் திசைமாறி தேவைப்பட்ட ஒரு பிரச்சனைக்குரிய காரியத்திற்கு நேராய் கச்சேரியிலிருந்து வழிமாறி என் மனம் சென்றது. நல்ல வேளையாக, சிறிது நேரத்திலேயே என் உள்ளத்தின் ஆழத்திற்குள் ஒரு அழகான பாடல் கடந்து வந்த பொழுது அக்கவனச்சிதைவு விலகியது. ஒரு ஆண்கள் அகப்பெல்லா குழுவினர் (வாத்தியங்கள் இல்லாமல் பாடுபவர்கள்) “என் ஆத்துமாவே, நீ அமர்ந்திரு”, (Be Still My Soul) என்னும் பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அந்த வார்த்தைகளை கேட்டவாறு, தேவனாலே மாத்திரம் கொடுக்கக்கூடிய சமாதானத்தைக்…

நாம் விட்டுச்செல்லும் சொத்து

ஒரு சிறிய நகரத்தில் ஒரு உணவு விடுதியில் நான் தங்கி இருந்தபொழுது, சாலைக்கு மறுபக்கம் இருந்த ஓர் ஆலயத்தில் ஆராதனை நடந்ததைக் கவனித்தேன். சிறியோர், பெரியோர் என அதிக மக்கள் ஆலயத்தின் பக்கவாட்டிலுள்ள இடத்தில் நிற்கத்தக்கதாக ஆலயம் மக்களால் நிரம்பி வழிந்தது. வந்துகொண்டிருந்த ஒரு சவ வாகனத்தை நான் பார்த்தபொழுது, அது ஓர் அடக்க ஆராதனை என்பதை அறிந்தேன். ஆலயத்திலிருந்த கூட்ட நெரிசலை நான் பார்த்தபொழுது, அது அந்த ஊரிலிருந்த ஒரு முக்கியமான நபரின் அடக்க ஆராதனையாக இருக்கலாமென்று நினைத்தேன். ஒருவேளை அவர் ஒரு…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).

 

தேர்ந்தெடுப்பு அவசியம்

பாஸ்டர் டாமியனின் தினசரி அலுவல் அட்டவணையில், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளைத் தெரிந்தெடுத்து மரணத்தை நெருங்கும் இரண்டு நபர்களை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்த்து. ஓர் மருத்துவமனையில் தன் குடும்பத்தாரால் விரும்பப்படும் ஓர் பெண் இருந்தாள். அவளது தன்னலமற்ற பொதுச்சேவை பலரின் அபிமானத்தை பெற்றதால் மற்ற விசுவாசிகள் அவளது அறையை நிரப்பி, ஆராதனை, பாடல், ஜெபம் என்று செய்தனர். மற்றொரு மருத்துவமனையில், பாஸ்டர் டாமியனின் தேவாலயத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரின் உறவினரும் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரது கடினமான இதயம் கடினமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. மேலும் அவரது மோசமான முடிவுகள் மற்றும் தவறான செயல்களின் பின்னணியில் அவரது குடும்பம் வாழ்ந்துவந்தது. இந்த இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பிரதிபலித்தது. 

வாழ்க்கையில் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறியவர்கள் பெரும்பாலும் சங்கடமான, விரும்பத்தகாத, தனிமையான இடங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12, “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று கூறுகிறது. இளைஞர்கள் அல்லது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நலமுடையவர்கள், செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என யாராக இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கைப் பாதையை சரிசெய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அது தேவனை கனப்படுத்துமா? அது மற்றவர்களுக்கு உதவக்கூடியதா அல்லது பாதிக்கக்கூடியதா? இயேசுவை விசுவாசிப்பவருக்கு இது சிறந்த பாதையா?

தேர்ந்தெடுப்புகள் மிகவும் முக்கியம். பரலோகத்தின் தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று வாக்குப்பண்ணுகிறார்.