சில வருஷங்களுக்கு முன் என் சிநேகிதியின் சின்ன மகன் (சிக்காகோவிலுள்ள யூனியன் ஸ்டேஷன்) ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டத்தில் தொலைந்துபோனான். அது ஒரு பயங்கரமான அனுபவம் என்று சொல்லத் தேவையில்லை. செய்வதறியாமல் தன் மகனின் பெயரை உரத்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே தானியங்கி படிக்கட்டில் ஏறி அங்கும் இங்கும் ஒடினாள். வினாடிகள் யுகம்போல் தோன்றியது. கடைசியில் அவள் மகன் கூட்டத்திலிருந்து வெளியே வந்து தாயின் கைகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்தான்.

தன் பிள்ளையைக் கண்டுபிடிப்பதற்காக என் சிநேகிதி என்ன வேண்டுமானாலும் செய்திருப்பாள் என்பதை நினைக்கும்பொழுது, தேவன் நம்மை இரட்சிக்க செய்த ஆச்சரியமான காரியங்களை நினைத்து, புத்துணர்வுடன் நன்றியுணர்வால் நிரம்புகிறோம். முதலாவது தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட ஆதாமும், ஏவாளும் பாவம் செய்து தேவனைவிட்டு விலகிப்போனது முதல், தேவன் தம்முடைய பிள்ளைகளோடிருந்த உறவை இழந்துபோனதற்காய் புலம்பினார். அந்த உறவை மறுபடியும் மீட்டெடுக்க ஒரு தீவிர முயற்சியாகத் தம்முடைய ஒரேபேறான ஏகசுதனை, “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும்” (லூக். 19:10). அனுப்பினார். இயேசு பிறக்காமலும், நம்முடைய பாவத்தின் கிரயமாக தம்மை பலியாக ஒப்புக்கொடாமலும் இருந்திருந்தால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே இருந்திருக்காது.

தேவன் தீவிர நடவடிக்கை எடுத்துத் தம் குமாரனை அனுப்பி நம்மை அவரோடு ஒப்புரவாக்கினதை இந்தக் கிறிஸ்துமஸ் காலங்களில் நினைத்து நன்றி சொல்லக் கடவோம். ஓர் காலத்தில் நாம் காணாமற்போயிருந்தாலும் இயேசுவால் கண்டுபிடிக்கப்பட்டோம்!