வல்லமைக்குள் அடிவைத்தல்
“நாம் ஏதாகிலும் பாம்புகளைப் பார்க்க முடியுமா?” நாங்கள் எங்கள் வீட்டின் அருகிலுள்ள ஆற்றின் ஓரமாக நீண்ட நடை பயணத்தை ஆரம்பிக்கும் போது எங்கள் அருகில் வசிக்கும் ஆலன் என்ற சிறுவன் இந்தக் கேள்வியைக் கேட்டான். “இதற்கு முன்னால் பார்த்ததில்லை ஆனால், ஒருவேலை நாம் பார்க்கலாம் என பதிலளித்தேன். எனவே, தேவன் நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அவரிடம் ஜெபிப்போம்” என சொல்லி, நாங்கள் நின்று அனைவரும் இணைந்து ஜெபித்துவிட்டு நடக்கலானோம்.
பல நிமிடங்களுக்குப் பின்னர் என் மனைவி கேரி வேகமாகப் பின்னோக்கி நகர்ந்தாள்;. “காப்பர்ஹெட்” என்று ஒரு விஷபாம்பு அவளது காலுக்கு முன் சுருண்டு படுத்திருந்தது. கேரி தன்னைப் பாதுகாத்துக்கொண்டதைக் கண்டேன். அது லேசாக நகர்ந்து அதன் பாதையில் சென்று மறையும் வரை காத்திருந்தோம். பின்பு நாங்கள் நின்று எங்களுக்கு பாதிப்பு ஏதும் நேராது காத்த தேவனுக்கு நன்றி செலுத்தினோம். நாங்கள் எதிர் நோக்கியிருந்த ஆபத்திற்கு எங்களைத் தாயாராக்கவும் எங்கள் ஜெபத்தின் மூலம் அவருடைய உன்னத பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவும் ஆலனின் கேள்வி உதவியது என நம்புகிறேன்.
நாங்கள் ஆபத்தை நெருங்கிய அந்த மாலை நிகழ்வு தாவீதின் வார்த்தைகளை என் மனதிற்குள் கொண்டு வருகிறது. “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள். அவர் சமூகத்தை நித்;தமுமு; தேடுங்கள்” (1 நாளா. 16:11). இந்த ஆலோசனை இஸ்ரவேலர் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு திரும்ப எடுத்துச் செல்லும் போது பாடிய ஆர்ப்பரிப்பின் சங்கீதத்தின் ஒரு பகுதி. தேவன் தம் பிள்ளைகளின் துன்பங்களின் மத்தியில் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதை சரித்திரம் கூறுகிறது. இதனை நினைவில் கொண்டு நாம் எப்பொழதும் அவரைப் போற்றவும் அவருக்கு முன்பாகச் சத்தத்தை உயர்த்தி கூப்பிடவும் கடவோம் (வச. 35).
தேவனுடைய முகத்தை தேடுங்கள் என்பதன் பொருள் என்ன? அதாவது உலகக்காரியங்களிலும் நமது இருதயத்தை அவருக்கு நேராகத் திருப்ப வேண்டும் என்பதே. சில வேளைகளில் நம் ஜெபங்களுக்கான பதில் நாம் கேட்பதற்கு சற்று மாறுபட்டிருக்கலாம். எதுவந்தாலும் தேவன் உண்மையுள்ளவர் நம் நல்ல மேய்ப்பன், நம் பாதையை நமக்குக் காட்டி நம்மை அவருடைய கிருபை, வல்லமை, அன்பிற்குள் வைத்துக் கொள்ளுவார். நாம் அவரையே சார்ந்திருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவோம்.
விலையேறப் பெற்ற ஆராதனை
எனது உடல் நலக் குறைவினால் நான் நடக்க முடியாமல் தடைபட்டபோது, நான் எனது எழுத்தின் மூலம் தேவனை ஆராதிக்கவும், அவருக்குப் பணிசெய்யவும் முற்பட்டேன். ஆனால், எனக்கு அறிமுகமான ஒருவர் எனது எழுத்துக்களில் ஒரு பலனையும் தான் காணவில்லை என்று கூறியபோது நான் மிகவும் மனச் சோர்வுற்றேன். நான் தேவனுக்குக் கொடுக்கும் ஒரு சிறிய காணிக்கையின் முக்கியத்துவத்தை நான் உணராதிருந்தேன்.
நாம் தேவனை ஆராதிப்பதின் நோக்கத்தையும் நாம் அவருக்குக் கொடுக்கும் நம் ஊழியத்தின் மதிப்பையும் அவரே நீர்ணயிக்க முடியும் என்பதனை, ஜெபத்தின் மூலமாயும், வேத வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதன் மூலமாயும் என் கணவன், உறவினர்கள், நண்பர்களின் ஊக்கத்தாலும், உறுதியாகத் தெரிந்து கொண்டேன். மற்ற மக்களின் கருத்துகள் இதனைத் தீர்மானிக்க முடியாது. எனக்குத் திறமைகளைத் தந்த என் தேவனிடம் தொடர்ந்து என் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுமாறும், அவர் தருகின்ற வரங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நல்ல வாய்ப்புகளையும் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.
இயேசுவுக்குக் கொடுப்பதில் நாம் வைத்துள்ள தரத்திற்கு அவர் முற்றிலும் மாறுபட்டவர் (மாற். 14:41-44). ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியினுள் ஐசுரியவான்கள் அதிகமாகப் போட்டார்கள். ஒரு ஏழை விதவை சில காசுகளைப் போட்டாள். “அதன் மதிப்;பு மிகக்குறைவு” (வச. 42). அவளுடைய பங்களிப்பு சுற்றியிருந்தவர்களுக்கு முக்கியமற்றதாக இருந்த போதும் (வச. 44), காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரையும் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய் போட்டாள் என தேவன் வெளிப்படுத்துகின்றார் (வச. 43).
ஒருவேளை இந்த விதவையின் கதையில் பொருளாதார கொடையைக் குறித்துக் சொல்லியிருந்தாலும் நாம் அவருக்குக் கொடுக்கும் ஒவ்வொரு செயலும் அவரை ஆராதிக்கும் ஒரு வெளிப்பாட்டையும், அன்பின் கீழ்படிதலையும் குறிக்கும். அவர் நமக்கு ஏற்கனவே தந்து விட்டிருக்கிற தாலந்துகளை மனப்பூர்வமாக, தாராளமனதுடன், தியாகத்தோடு அவருக்குக் கொடுப்பதே அந்த விதவையைப் போன்று நாமும் தேவனை கனப்படுத்துவதாகும். நமது சிறந்த நேரத்தை, தாலந்துகளை அல்லது காணிக்கையை இருதயத்தின் அன்பினால் தேவனுக்குக் கொடுக்கும் போது விலையேறப் பெற்ற காணிக்கைகளால் நாம் அவரைப் போற்றுகின்றோம்.
தனிதனியாக ஓடாதே
என்னுடைய கணவன் ஜாக் 26 மைல்கள் தொடர் ஓட்டத்தின் 25வது மைலில் தன்னுடைய ஆற்றல் முழுவதையும் இழந்து விட்டார். இதுதான் அவருடைய முதல் மாரத்தான். இவர் தனியாக ஒடுகின்றார். உதவும் நிலையத்தில் தண்ணீர் குடிப்பதற்காக நின்றபின், முற்றிலும் வலுவிழந்தவராக உணர்ந்து அருகிலுள்ள புல் தரையில் உட்கார்ந்து விட்டார். நிமிடங்கள் கடந்தன. அவரால் எழும்ப முடியவில்லை. அவர் இந்த ஓட்டத்திலிருந்து விலக்கிவிட எண்ணிய போது, கென்ட்டக்கியைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய இரு பள்ளி ஆசிரியைகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் அறிமுகமில்லாதவர்களாயிருந்த போதிலும் ஜாக்கை கவனித்து, தங்களோடு ஓட விரும்புகிறீர்களா? எனக்கேட்டார்கள். உடனடியாக அவருடைய பெலன் புதுப்பிக்கப்பட்டது. ஜாக் எழுந்த அந்த இரு பெண்களின் துணையோடு தன் ஓட்டத்தை முடித்தார்.
ஜாக்கை ஊக்குவித்த அவ்விரு பெண்களும் மோசேயின் இரு நண்பர்களான ஆரோன், ஊர் என்பவர்களை எனக்கு நினைப்பூட்டுகிறது. இவ்விருவரும் இஸ்ரவேலரின் தலைவன் மோசேக்கு ஒரு முக்கிய கட்டத்தில் உதவினர் (யாத். 17:8-13). இஸ்ரவேலர் எதிரிகளால் தாக்கப்படுகின்றனர். அந்த போர்க்களத்தில் மோசே தன் கோலை உயர்த்தி பிடித்த போது (வச. 11) இஸ்ரவேலர் மேற்கொண்டனர். மோசேயின் கைகள் தளர்ந்து போகையில், ஆரோனும், ஊரும் மோசேயின் இருபுறமும் நின்று அவனுடைய புயங்களை சூரியன் மறையும் வரை தாங்கிப் பிடித்தனர் (வச. 12).
தேவனைப் பின்பற்றுவது என்பது ஒரு தனி முயற்சியல்ல. நம் வாழ்க்கை ஓட்டத்தை தனியாக ஓட அவர் நம்மை உருவாக்கவில்லை. தேவன் நம்மை அழைத்த காரியங்களைக் செய்ய முற்படும் போது நண்பர்கள் நமது கஷ்டங்களில் நமக்கு உதவியாக வந்து கஷ்டங்களைக் கடந்து செல்ல உதவுகின்றனர்.
கர்த்தாவே, நான் உம்மை தொடர்ந்து பின்பற்ற என்னை ஊக்குவிக்கின்ற உறவுகளுக்காக உமக்கு நன்றி சொல்லுகின்றேன். நானும் பிறரை பெலப்படுத்துகின்ற ஒருவனாக விளங்க எனக்கு உதவியருளும்.
தேவன் புதுமையானதொன்றை செய்து கொண்டிருக்கிறார்
“தேவன் உங்கள் வாழ்வில் ஏதேனும் புதியதை செய்துகொண்டிருக்கிறாரா?” என்ற கேள்வியை நான் சமீபத்தில் பங்கேற்ற ஒரு குழுவின் தலைவர் கேட்டார். கடினமான நிலைமைகளைக் கையாண்டு கொண்டிருக்கிற என் சிநேகிதி மின்டி இதற்குப் பதிலளித்தாள். வயதான பெற்றோர்களை கவனிப்பதில் பொறுமைமையும், கணவனின் உடல் நலக்குறைவில் சகிப்புத்தன்மையையும், இன்னமும் இயேசுவை பின்பற்ற தேர்ந்துகொள்ளாத பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் புரிந்துகொள்ளவும் பொறுமை தேவையாயிருக்கிறது. மேலும் அவள் நாம் சாதாரணமாக நினைப்பதற்கு சற்று மாறாக உள்ளான ஒரு கருத்தினையும் கூறினாள். “நான் அன்புகூரும்படியாக என்னுடைய திறமையையும் சந்தர்ப்பங்களையும் தேவன் விரிவாக்கித் தருவதன் மூலம் புதிய காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார் என நான் நம்புகிறேன்” என்றாள்.
அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிகேயர் சபையின் புதிய விசுவாசிகளுக்காக செய்யும் ஜெபமும் இதனோடு நன்கு ஒத்திருக்கிறது. “நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்வாராக” (1 தெச. 3:12). பவுல் அவர்களுக்கு இயேசுவைக் குறித்துக் கற்றுக் கொடுத்தார். ஆனால், அங்கு கலவரம் ஏற்பட்டபடியால் திடிரென அவர்களை விட்டுப் பிரிய நேர்ந்தது (அப். 17:1-9). பவுல் கடிதத்தின் மூலம் அவர்கள் தொடர்ந்து தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்துகின்றார் (1 தெச. 3:7-8). மேலும் அவர்கள் மற்றெல்லா மனுஷரிடத்திலும் வைத்திருக்கிற அன்பில் தேவன் அவர்களைப் பெருகப் பண்ணவேண்டுமென ஜெபிக்கிறார்.
கடினமான சூழல்கள், நாம் அது ஏன்? அல்லது இது ஏன் எனக்கு ஏற்பட வேண்டும்? என முறையிடுபவர்களாக இருக்கின்றோம். அத்தகைய கடின சூழல்களைக் கையாள மற்றொரு வழி என்னவென்றால், அந்த சந்தர்பங்களில் நாம் பிறர் மீது அன்பு செலுத்த உதவும்படி தேவன் நம் உள்ளங்களில் அவருடைய அன்பினை இன்னும் பெருக்கும்படி கேட்பதுவே!
தேவனது பிரகாசிக்கும் அழகு!
ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பாலுள்ள லார்ட் ஹோவே தீவு வெண்மை நிறமணலும் தெளிந்த தண்ணீரும் உள்ள ஒரு சிறிய அழகிய இடம். அத்தீவின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது. இத்தீவில் மிகவும் சாதாரணமாக நீங்கள் கடல் ஆமைகளோடும் மீன்களோடும் பயமின்றி நீந்தலாம். உங்களருகே பெரிய எலும்பையுடைய மூன் இராஸே மீன்கள் தங்களது ஒளிரும் வண்ணங்களை வெளிப்படுத்தி விளம்பரப் பலகைகளை போலத் தோற்றமளிக்கும். அந்தக் கடலில் காயல் பகுதிகளில் பவளப்பாறைகளை நான் கண்டுபிடித்தேன். அங்கே சிவப்பு நிற க்ளவுன் மீன்களையும் மஞ்சள் கட்டங்கள் நிறைந்த வண்ணத்துப்பூச்சி மீன்களையும் என் கைகளால் தொட்டுப் பார்த்தேன். அவ்வாறான இயற்கை மேன்மையினால் உள்ளம் கிளர்ந்தெழுந்து தேவனை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை.
எனது இவ்வித உணர்ச்சியின் எழுச்சிக்கு அப்போஸ்தலனாகிய பவுல் காரணம் கூறுகிறார். மிகவும் உன்னதமான படைப்புகள் தேவனுடைய சுபாவத்தை சற்று நமக்கு வெளிப்படுத்துகின்றன (ரோம. 1:20) லார்ட் ஹோவே தீவின் அற்புதங்கள் தேவனுடைய வல்லமையையும் அழகையும் வெளிப்படுத்தின.
தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் தேவனை தரிசித்தபோது, நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தில் மகிமையான வண்ணங்களால் சூழப்பட்ட ஒருவர் அவருக்குக் காணப்பட்டார் (எசே. 1:25-28). அப்போஸ்தலனாகிய யோவான் இது போன்ற ஒரு காட்சியைக் கண்டார். மரகதம் போன்ற வானவில்லால் சூழப்பட்ட விலையேறப் பெற்ற கற்களைப் போல ஜொலிக்கும் தேவனை அவர் கண்டார் (வெளி. 4:2-3). தேவன் தம்மை வெளிப்படுத்தும்போது அவர் நல்லவராகவும் வல்லமை மிக்கவராகவும் மட்டுமல்ல, அழகானவராகவும் வெளிப்படுகிறார். ஒரு சிற்பமானது அதை செய்தவரை பிரதிபலிப்பதைப்போல, சிருஷ்டியானது தேவனின் இந்த அழகை எடுத்துரைக்கிறது.
தேவனுக்குப் பதிலாக இயற்கையை பல இடங்களில் மனிதர் தொழுதுகொள்ளுகிறார்கள் (ரோம. 1:25). இது மிகவும் துக்ககரமானது! பூமியின் தெளிவான தண்ணீர்களும் மினுமினுக்கும் உயிரினங்களும் அவற்றுக்குப் பின்னாலுள்ள கடவுளை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும்விட அதிக வல்லமையுள்ளவர், அதிக அழகுள்ளவர் அவர் மட்டுமே!
சுத்தமாக்கப்பட்டோம்!
பாத்திரம் கழுவும் மெஷினை நான் திறந்தபோது என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பளபளக்கும் பாத்திரங்களைக் காண்பதற்குப் பதிலாக, சாக்பீஸ் பொடி போன்ற ஒன்றால் மூடப்பட்ட பாத்திரங்களையும் கோப்பைகளையும் நான் அங்கிருந்து அகற்றினேன். எங்கள் பகுதியிலுள்ள கடின நீர் இப்படி கேடு விளைவித்தோ அல்லது அந்த இயந்திரம் பழுதாகி விட்டதா என திகைத்தேன்.
அந்தக் கெட்டுப்போன பாத்திரம் கழுவும் இயந்திரத்தைப் போலல்லாது, தேவன் நமது அனைத்து அசுத்தங்களையும் சுத்திகரிக்கிறார். எசேக்கியேல் தேவனுடைய அன்பு மற்றும் மன்னிக்கும் செய்தியைப் பகிர்ந்து கொண்டபோது, தேவன் தமது மக்களைத் திரும்பவும் தம்மிடம் வரவழைப்பதை எசேக்கியேலின் புத்தகத்தில் காண்கிறோம். தங்களது ஐக்கியத்தை மற்ற தேவர்களோடும் பிற நாடுகளோடும் பிரகடனப்படுத்திய இஸ்ரவேலர் இப்படி தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர். என்றபோதிலும், அவர்களைத் தம்மிடம் வரவழைப்பதில் தேவன் கிருபையாய் இருந்தார். அவர், “உங்களுடைய எல்லா அசுத்தங்களையும்… எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி, உங்களைச் சுத்தமாக்குவேன்” (36:25) என வாக்குத்தத்தம் செய்தார். அவர்கள் உள்ளத்திலே அவர் தமது ஆவியானவரை வைத்தார் (வச. 27). அவர்களைப் பஞ்ச நாட்டிற்கல்ல, செழிப்பான தேசத்துக்கு அவர் கொண்டுவருவார் (வச. 30).
எசேக்கியேலின் காலத்தைப் போலவே, நாம் வழி தப்பிப் போயிருப்போமானால் நம்மைத் திரும்பவும் தம்மண்டைக்கு அவர் வரவேற்கிறார். அவரது வழிகளுக்கும் அவரது சித்தத்திற்கும் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, நமது பாவங்களிலிருந்து நம்மை அவர் கழுவி நம்மை மறுரூபப்படுத்துகிறார். நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் மூலம், ஒவ்வொரு நாளும் அவரைப் பின்பற்ற அவர் நமக்கு உதவி செய்கிறார்.
நிரம்பி வழியும் கனி!
இளவேனிற்காலம் மற்றும் கோடையில் எங்களது அண்டைவீட்டுக்காரரின் பின்புறத் தோட்டத்தில் பழங்கள் வளர்வதை நான் ஆர்வத்தோடு பாப்பதுண்டு. அங்கு பயிரிடப்பட்ட திராட்சையின் கொடிகள் எங்களிருவரது வீடுகளுக்கிடையிலான பொது வேலியில் படர்ந்து, திராட்சக்குலைகள் அதில் தொங்கும். நாங்கள் பறிக்கின்ற உயரத்தில், பெரிய செழுமையான பிளம் பழங்களும், ஆரஞ்சுகளும் கிளைகளில் கொத்தாக தொங்கும்.
நாங்கள் நிலத்தைக் கொத்தி, விதைத்து, களை எடுத்து தண்ணீர் பாய்ச்சாவிட்டாலும் எங்களது அண்டை வீட்டுக்காரர் விளைச்சலில் ஒரு பங்கை எங்கலோடு பகிர்ந்து கொள்ளுகின்றார். பயிரை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொண்டு அறுவடையில் ஒரு பாகத்தில் நாங்கள் களிக்க எங்களை அனுமதிக்கின்றனர்.
எங்களது வேலிக்கு அந்தப் புறத்திலுள்ள மரங்கள் மற்றும் செடிகளின் விளைச்சலானது, தேவன் என் வாழ்க்கையில் வைக்கும் இன்னொரு அறுவடையை நினைவுபடுத்துகிறது. அது எனக்கும் என் வாழ்க்கையில் தேவன் கொண்டுவரும் மக்களுக்கும் பயனளிக்கிறது. அது ஆவியின் கனி மற்றும் அறுவடை!
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் வாழ்கின்ற வாழ்வில் பயன்களை சுதந்தரிக்கும்படி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். நமது இதயங்களில் தேவனுடைய உண்மையின் விதைகள் செழிப்பாக வளருகையில், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் இச்சையடக்கம் போன்றவற்றை வெளிப்படுவதில் நமது திராணியைப் பெருக்கும் ஆற்றலை ஆவியானவர் உருவாக்குகிறார் (கலா. 5:22-23).
நமது வாழ்வை இயேசுவானவருக்கு அர்ப்பணிக்கும்போது, இனி ஒருபோதும் நமது சுயம் சார்ந்த மாம்ச இச்சைகளால் நாம் கட்டுப்படுத்தப்படுவதில்லை (வச. 24). காலப்போக்கில் பரிசுத்த ஆவியானவர் நமது சிந்தனையையும், நமது நடவடிக்கைகளையும் நமது செயல்களையும் மாற்றுவார். கிறிஸ்துவில் நாம் வளர்ந்து முதிர்ச்சியடையும்போது, அவரது தாராளமான விளைச்சலின் பலனை நமது அண்டை அயலகத்தாரோடு பகிர்ந்துகொள்ளும் சந்தோஷத்தை நாம் பெற்றுக்கொள்ளுவோம்.
கவனத்தில் கொள்தல்!
ஜான் நியூட்டன் இவ்வாறு எழுதினார், “நான் வீட்டிற்கு போகும் வழியில் 50 காசை தொலைத்துவிட்ட ஒரு பிள்ளையை சந்திக்கிறேன். இன்னொரு 50 காசு நாணயத்தை அப்பிள்ளையிடம் கொடுப்பதன் மூலம் அதன் கண்ணீரை நான் துடைக்கக் கூடுமானால் நான் ஒரு நன்மை செய்துவிட்டதாக உணருகிறேன். பெரிய காரியங்களைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் இது போன்ற சிறிய காரியங்களை நான் அசட்டை செய்யக்கூடாது!”
இன்றைய உலகில் ஆறுதலைத் தேடி அலைவோர் எங்கும் உள்ளனர்: ஒரு பலசரக்குக் கடையின் காசாளர் தனது குடும்பப் பொருளாதார நெருக்கடியினிமித்தம் இரண்டாம் வேலையைச் செய்ய வேண்டியுள்ளது; சொந்த வீட்டிற்குத் திரும்ப வாஞ்சிக்கும் ஒரு அகதி; வாழ்வில் நம்பிக்கையை முற்றிலும் இழந்து கவலைப்படும் ஒரு கணவனற்ற தாய்; தான் பயனற்றவனாய் வாழ்கிறேனா என அஞ்சிடும் ஒரு தனிமையான முதியவர்.
ஆனால், நாம் செய்ய வேண்டியது என்ன? சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்” என்று தாவீது எழுதினார் (சங். 41:1) நாம் வாழ்வில் சந்திக்கின்றவர்களின் வறுமையை ஒழிக்க நம்மால் கூடாததென்றாலும், நாம் அவர்களைக் குறித்து கரிசனை கொள்ளலாம். “கவனம் செலுத்துங்கல்” நாம் மனிதர் மேல் அக்கறை கொள்வதை அவர்கள் அறிந்திடச் செய்யலாம். தேவையிலிருப்போரை சமாளிப்பது கடினமென்றாலும் அவர்களைப் பட்சமாகவும் மரியாதையாகவும் நாம் நடத்தலாம். அவர்களது வாழ்வின் கதைகளை ஆர்வத்தோடு கேட்கலாம். அவர்களுக்காக, அவர்களோடு சேர்ந்து நாம் ஜெபிக்கலாம். அதுவே எல்லாவற்றைக் காட்டிலும் மேலான உதவியானது, குணமாக்க வல்லது.
இயேசுவானவரின் அந்தப் புராதனமான முரண்பாடாய்த் தோன்றும் வார்த்தைகளை நினைவு கூருங்கள்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (அப். 20:35) பிறரது தேவைகளைக் கவனத்தில் கொள்ளுவது பலனளிக்கவல்லது, ஏனென்றால் மற்றவர்களுக்காக நாம் செயல்படும்போது அது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. ஏழைகளின் மேல் சிந்தை கொள்ளுவோமாக!
மிகவும் கவனமாகத் தேடுதல்!
எங்களது மகள் உயர் நிலைப்பள்ளி குழு ஓட்டப்பந்தயக் குழுவில் ஓடும் போது, எங்களது குடும்பத்தினர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பந்தய மைதானத்தில் ஓரத்தில் வரிசையாக நின்று அவளை உற்சாகப்படுத்தி கோஷமிடுவோம். பந்தயத்தின் முடிவு கோட்டைத் தொட்டபின் விளையாட்டு வீரர்கள் கூட்டமாக வெளியே வந்து தங்களது சக வீரர்களையும் பயிற்சியாளர்களையும் பெற்றோரையும் சந்திப்பர். 300-க்கும் மேற்பட்ட கூட்டத்தினர் அவர்களை அப்படியே சூழ்ந்துகொள்வதால், அக் கூட்டத்தில் யாராவது ஒருவரை காண்பது மிகவும் சிரமமானது. நாங்கள் எங்களது மகளை தேடி கண்டுபிடித்து, நாங்கள் காணவிரும்பிய அந்த ஒரே ஒரு வீராங்கனையை உற்சாகமாய் கட்டித் தழுவுவோம். அவள் எங்களது அன்பான மகள்.
பாபிலோனில் 70 ஆண்டுகள் சிறைப்பிடிக்கப்பட்ட பின், தேவன் யூதர்களை எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பப் பண்ணினார். தேவன் அவர்கள் மீது கொண்டிருந்த மகிழ்ச்சியையும், அவர்கள் யாத்திரையாக சொந்த வீட்டிற்குத் திரும்புவதற்காக வழிகளை ஆயத்தம் பண்ணின அவரது கிரியைகளையும் அவர்களை வரவேற்க வாசல்களைத் தேவன் ஆயத்தமாக்கினதையும் ஏசாயா விரிவாக எடுத்துரைக்கிறார். அவர்கள் தமது பரிசுத்த ஜனமென்பதை உறுதிப்படுத்தும் கர்த்தர், அவர்களது பெருமையை புதிய நாமத்தின் மூலம் திரும்பக் கொண்டுவருகிறார். “தேடிக்கொள்ளப்பட்டதென்றும் புதிய நகரமென்றும் பெயர் பெறுவாய்” (62:12) பாபிலோனில் சிதறடிக்கப்பட்ட அவர்கள் அனைவரையும் தேடிச் சேர்த்து, தம்மிடம் திரும்பிய அவர்களை அழைத்துவந்தார்.
இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, தேவனால் கவனமாகத் தேடப்படும் தேவனுடைய அன்பான பிள்ளைகளாய் நாம் இயேசுவானவரின் தியாகபலி திரும்பவும் நம்மைத் தேவனிடம் கொண்டுசேர்க்கிறது. நம்மை மனதாரத் கட்டித் தழுவும்படி நம் ஒவ்வொருவரையும் கவனமாய்த் தேடும் அவர், அந்தத் தருணத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.