“நாம் ஏதாகிலும் பாம்புகளைப் பார்க்க முடியுமா?” நாங்கள் எங்கள் வீட்டின் அருகிலுள்ள ஆற்றின் ஓரமாக நீண்ட நடை பயணத்தை ஆரம்பிக்கும் போது எங்கள் அருகில் வசிக்கும் ஆலன் என்ற சிறுவன் இந்தக் கேள்வியைக் கேட்டான். “இதற்கு முன்னால் பார்த்ததில்லை ஆனால், ஒருவேலை நாம் பார்க்கலாம் என பதிலளித்தேன். எனவே, தேவன் நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அவரிடம் ஜெபிப்போம்” என சொல்லி, நாங்கள் நின்று அனைவரும் இணைந்து ஜெபித்துவிட்டு நடக்கலானோம்.

பல நிமிடங்களுக்குப் பின்னர் என் மனைவி கேரி வேகமாகப் பின்னோக்கி நகர்ந்தாள்;. “காப்பர்ஹெட்” என்று ஒரு விஷபாம்பு அவளது காலுக்கு முன் சுருண்டு படுத்திருந்தது. கேரி தன்னைப் பாதுகாத்துக்கொண்டதைக் கண்டேன். அது லேசாக நகர்ந்து அதன் பாதையில் சென்று மறையும் வரை காத்திருந்தோம். பின்பு நாங்கள் நின்று எங்களுக்கு பாதிப்பு ஏதும் நேராது காத்த தேவனுக்கு நன்றி செலுத்தினோம். நாங்கள் எதிர் நோக்கியிருந்த ஆபத்திற்கு எங்களைத் தாயாராக்கவும் எங்கள் ஜெபத்தின் மூலம் அவருடைய உன்னத பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவும் ஆலனின் கேள்வி உதவியது என நம்புகிறேன்.

நாங்கள் ஆபத்தை நெருங்கிய அந்த மாலை நிகழ்வு தாவீதின் வார்த்தைகளை என் மனதிற்குள் கொண்டு வருகிறது. “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள். அவர் சமூகத்தை நித்;தமுமு; தேடுங்கள்” (1 நாளா. 16:11). இந்த ஆலோசனை இஸ்ரவேலர் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு திரும்ப எடுத்துச் செல்லும் போது பாடிய ஆர்ப்பரிப்பின் சங்கீதத்தின் ஒரு பகுதி. தேவன் தம் பிள்ளைகளின் துன்பங்களின் மத்தியில் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதை சரித்திரம் கூறுகிறது. இதனை நினைவில் கொண்டு நாம் எப்பொழதும் அவரைப் போற்றவும் அவருக்கு முன்பாகச் சத்தத்தை உயர்த்தி கூப்பிடவும் கடவோம் (வச. 35).

தேவனுடைய முகத்தை தேடுங்கள் என்பதன் பொருள் என்ன? அதாவது உலகக்காரியங்களிலும் நமது இருதயத்தை அவருக்கு நேராகத் திருப்ப வேண்டும் என்பதே. சில வேளைகளில் நம் ஜெபங்களுக்கான பதில் நாம் கேட்பதற்கு சற்று மாறுபட்டிருக்கலாம். எதுவந்தாலும் தேவன் உண்மையுள்ளவர் நம் நல்ல மேய்ப்பன், நம் பாதையை நமக்குக் காட்டி நம்மை அவருடைய கிருபை, வல்லமை, அன்பிற்குள் வைத்துக் கொள்ளுவார். நாம் அவரையே சார்ந்திருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவோம்.