கல்லுகளுடன் ஒரு சந்திப்பு
பல நூற்றாண்டுகளாக யுத்தத்தையும் அழிவையும் சந்தித்த பழைய எருசலேம் நகரம், இன்று அதன் இடிபாடுகளுக்கு மேலாகவே தற்கால எருசலேம் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் ஒருமுறை எருசலேமிற்கு சென்றிருந்த பொழுது Via Dolora sa என்ற சிலுவைப் பாதையில் நடந்து சொன்றோம். அது இயேசு அவரது சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரிக்குத் சென்ற பாதையாகும். அன்று வெப்பம் மிக அதிகமாக இருந்தால், சற்று ஒய்வெடுக்க சீயோன் சகோதரிகளால் நடத்தப்பட்ட கத்தோலிக்க பெண் துறவிகல் மடத்தின் குளிர்ச்சியான அடித்தளத்திற்கு சென்றோம். அங்கு சமீப காலத்தில் கட்டடம் கட்ட தோண்டின பொழுது கிடைத்த நடை பாதைக் கற்களைப் பார்த்து வியப்பில் ஆழந்தேன். அந்தக் கற்களில் ரோமச் போர்ச்சேவகர்கள் ஓய்வாக இருந்த பொழுது விளையாடின விளையாட்டுக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
அந்தக் குறிப்பிட்ட கற்கள் இயேசுவின் காலத்திற்கு பிந்தின காலத்தைச் சேர்ந்தவைகளாக இருந்த பொழுதும், அவை அக்காலத்தில் இருந்த ஆவிக்கேற்ற வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது. வேலையில் களைப்படைந்த பொழுது, அவர்கள் நேரத்தை சோம்பலாகக் கழித்தது போல, தேவனைக் குறித்துப் பிறரைக் குறித்தும் கவலைப்படாமல் இருக்கின்றேனோ என்று எனது ஆவிக்கேற்ற வாழ்க்கையைக் குறித்து ஆழமாக சிந்திக்கத் தூண்டியது. நான் நின்று கொண்டிருந்த இடத்தில், கர்த்தராகிய இயேசு எனது பாவங்கள் மீறுதல்கள் அனைத்தையும் அவர்மேல் போட்டு எனக்காக வாரினால் அடிக்கப்பட்டார், ….., எச்சில் துப்பப்பட்டார் என்பதை அறிந்து என் மனம் ஆழமாகத் தொடப்பட்டது.
“நம்முடைய மீறுதலிகளினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” ஏசா. 53:5.
அந்த நடைபாதை கற்களோடு எனக்கு ஏற்பட்ட சந்திப்பு எனது பாவங்களைவிட மேலாக இயேசுவின் அன்பைப்பற்றி இன்னமும் என்னுடன் பேசுகின்றன.
கண்களுக்கு புலப்படாத தாக்கம்
வாஷிங்டன் DCயில் உள்ள தேசீய கலைப் பொருட்களின் காட்சிக் கூடத்திற்கு நான் சென்றிருந்த பொழுது, “காற்று” என்ற தலைப்பின் கீழ் இருந்த உன்னதமான படைப்பு ஒன்றைப் பார்த்தேன். ஒரு காட்டுப் பகுதிக்குள் வீசும் புயலை அந்த ஒவியம் சித்தரித்தது. மெலிந்து வளர்ந்திருந்த மரங்கள் இடது பக்கமாக சாய்ந்திருந்தன. புதர்களும் அதே திசையில் மிக வேகமாக அசைந்திருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தன.
அந்தப் புயலைவிட மிக வல்லமையுடன் பரிசுத்த ஆவியானவர், விசுவாசிகளை தேவனுடைய சத்தியத்திற்கும், அவருடைய உண்மைத் தன்மைக்கும் நேராக அசையச் செய்கிறார். ஆவியானவர் நடத்தும் வழியிலே நாம் சென்றால், நாம் தைரியமுள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும் மாறுவோம் என்று எதிர்பார்க்கலாம். நம்முடைய ஆசைகளைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிந்த புத்தியை நாம் பெற்றுக் கொள்ளுவோம் (2 தீமோ. 1:7).
சில சூழ்நிலைகளில் நமது ஆவிக்கேற்ற வளர்ச்சியடையவும் மாற்றமடையவும் ஆவியானவர் நம்மை நெருக்கி ஏவும் பொழுது, நாம் செயல்பட மறுத்து விடுகிறோம். தொடர்ந்து நமது மனதில் ஏற்படும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காததை வேதாகமம் ஆவியை அவித்துப் போடல் (1தெச. 5:19) என்று கூறுகிறது. காலப்போக்கில் நாம், தவறு என்று எண்ணிய காரியங்கள், அவ்வளவு தவறாகத் தோண்றாது.
தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு துண்டிக்கப்பட்டு, தூரமாகச் சென்று விடுவோம். ஆவியானவர் தொடர்ந்து, நம்மை நெருக்கி ஏவுகையில் அவருடைய செயலிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாம் இருக்கும் பொழுது இந்த நிலை ஏற்படுகிறது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், பிரச்சனைக்கான அடிப்படைக் காரணத்தை நம்மால் கண்டுகொள்ள இயலாது. நமது பாவத்தை நமக்குக் காண்பிக்கும்படி தேவனிடம் மன்றாடி ஜெபிக்கலாம். தேவன் நம்மை மன்னித்து, அவரது ஆவியின் வல்லமையையும், அவரது ஆவியினால் ஏற்படும் தாக்கத்தையும் நமக்குள்ளாக புதிப்பிப்பார்.
5020வது எண்ணுடைய அறை
ஜே பப்டன் மருத்துவமனையிலிருந்த அவனது அறையை ஒரு கலங்கரை விளக்காக மாற்றிவிட்டான்.
கணவனாக, தகப்பனாக, உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக, விளையாட்டு பயிற்சியாளராக இருந்த 52 வயதுடைய ஜே பப்டன் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தான். ஆனால், 5020 என்ற எண்ணுடைய அவனது அறை, அவனது சினேகிதர்களுக்கு, குடும்ப அங்கத்தினர்களுக்கு, மருத்துவமனையில் பணி செய்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு ஒளிவிளக்காக இருந்தது. ஜேவினுடைய ஆழமான விசுவாசம் அனைவரோடும் சந்தோஷமாக பழகும் தன்மை இவற்றினால் அவனது அறையில் பணிபுரிவதற்கு தாதிமார்கள் அதிகம் விரும்பினார்கள். சில தாதிமார் பணியிலில்லாத ஓய்வு நேரத்தில் கூட அவனைப் பார்க்க வந்தார்கள்.
ஒரு காலத்தில் விளையாட்டு வீரருக்கான அவனது திடகாத்திரமான உடல் வியாதியினால் மெலிந்து கொண்டிருந்த பொழுதும் அவனை பார்க்க வருபவர்கள் யாராக இருந்தாலும் ஊக்கத்தோடு கூடிய புன் சிரிப்போடு அவர்களை வாழ்த்துவான். “ஒவ்வொரு முறையும் நான் ஜேயை பார்க்கச் சென்ற பொழுது, அவன் மகிழ்ச்சியுடனும், நேர்மறை எண்ணங்களுடனும், நம்பிக்கையுடனும் இருந்தான். புற்று நோயால் ஏற்படுகிற மரணத்தை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் விசுவாசத்துடன் வாழ்ந்து வந்தான்” என்று அவனுடைய சினேகிதர்களில் ஒருவன் கூறினான்.
ஜேயின் அடக்க ஆராதனையில் பேசிய ஒருவர், ஜே இருந்த அறை எண் 5020ற்கு ஒரு சிறப்பான அர்த்தம் உண்டு என்று குறிப்பிட்டார். அவர் பேசின பொழுது ஆதியாகமம் 50:20ல் யோசேப்பை அவனது சகோதரர்கள் அடிமையாக விற்ற பொழுது, தேவன் அதை மாற்றி அமைத்து “வெகு ஜனங்களை உயிரோடு காக்கும்படி” தீமையை நன்மையாக மாற்றிவிட்டார். ஜேவின் வாழ்க்கையில் புற்றுநோய் பாதித்தது ஆனால், தேவனுடைய கரம் அவனது வாழ்க்கையில் செயல்படுவதை உணர்ந்த ஜே தேவன் எல்லாவற்றையும் நன்மையாகவே நடத்துவார் என்று கூறுமளவிற்கு விசுவாச வாழ்க்கையை நடத்தினான். ஆதனால்தான் புற்று நோயினால் ஏற்பட்ட வியாதியின் கோரத்தை இயேசுவைப்பற்றி பிறருக்கு அறிவிக்கும் திறந்த வாசலாகமாற்றினான்.
மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த பொழுதும் கூட நமது இரட்சகர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவராக இருந்தான். நமது நம்பிக்கைக்கு பாத்திரமான தேவன் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை, அவன் விட்டுச் சென்ற நம்பிக்கைக்கு தலை சிறந்த உதாரணமாகும்.
சிருஷ்டிப்பில் கவனம்
ஓவிகி ஆற்றில் பெரிய பழுப்புநிற பெரிய ட்ரவுட் மீன்கள் முட்டைகளிடும் வழக்கத்தை செய்து கொண்டிருந்தன. வேறு சில ட்ரவுட் மீன்கள் கூடு கட்டும் செயலை செய்து கொண்டிருந்தன. அவைகள் கூழாங்கற்கள் நிறைந்த ஆழமற்ற பகுதிகளில் தோண்டி கூடுகளை அமைத்துக் கொண்டிந்தன.
மீன்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த மீனவர்கள், மீன்கள் முட்டை இட்டு குஞ்சி பொரிக்கும் சமயம் எது என்பதை நன்கு அறிந்திருந்ததினால், மீன்களை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவார்கள். முட்டைகளை நசுக்கிவிடாமல் இருப்பதற்காக கற்களாலான திட்டுக்களில் நடப்பதையும், மீன்களின் கூடுகளை குப்பை கூளங்கள் மூடி விடாமல் இருப்பதற்காக கடல் நீரில் நடப்பதையும் தவிர்த்து விடுவார்கள். ட்ரவுட் மீன்கள் அவைகளின் கூடுகளின் அருகில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவைகளைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் அவற்றைப் பிடிக்க மாட்டார்கள்.
இந்த முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் மீன் பிடித்தலுக்கான ஒழுக்க நெறிகளை கட்டுப்படுத்துகின்றன. ஆனால், இதைவிட ஆழமான மிகவும் அர்த்தமுள்ள ஒரு காரணம் உண்டு.
இந்த பூமியை ஆண்டுகொள்ளுமாறு மனிதனுக்கு தேவன் அதை அளித்துள்ளார் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது (ஆதி. 1:28-30). இந்தப் பூமியை பயன்படுத்த தேவன் இதை நமக்கு சொந்தமாக கொடுத்துள்ளார். ஆனால், நாம் அதை அதிகமாக நேசிப்பவர்களாக அதை பயன்படுத்த வேண்டும்.
தேவனுடைய கரத்தின் கிரியைகளைப் பற்றி என் மனதில் ஆழ்ந்து சிந்திக்கிறேன். பள்ளத்தாக்கின் மறுபக்கத்திலிருந்து ஒரு கவுதாரி கூப்பிடுகிறது. ஒரு ஆண் கலை மான் சண்டைக்கு ஆயத்தமாகி சத்தமிடுகிறது. தூரத்தில் ஒரு கூட்ட நிண்ட கால்களையுடைய மான்கள் காணப்படுகின்றன. நீரோடையில் பல நிற வண்ணப் புள்ளிகளுடைய ட்ரவுட் மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஒரு நீர் நாய் அதன் குட்டிகளோடு நிரோடையில் விளையாடிக் கொண்டிருக்கிறது இவை பரலோகப்பிதா தம்முடைய அளவற்ற அன்பினால் எனக்கு அளிக்கும் கொடைகளாகும். ஆகவே அவற்றை எல்லாம் நான் நேசிக்கிறேன்.
நான் எவற்றை நேசிக்கின்றேனோ அவற்றை பாதுகாக்கின்றேன்.
தேவனால் அரவணைக்கப்படல்
ஒரு நாள் மதியம் நான் என் சகோதரிவுடனும், அவளது குழந்தைகளுடனும் எனது மதிய உணவை உட்கொண்டு முடிக்கும் தருவாயில் என் சகோதரி அவளது மூன்று வயது மகள் அனிக்காவிடம், அவள் உறங்கி ஓய்வு எடுக்க நேரம் வந்துவிட்டது என்று கூறினாள். அனிக்காவின் முகம் பயத்தினால் நிறைந்தது. “மோனிகா அத்தை இன்னமும்; என்னை அணைக்கவில்லையே!” என்று கண்ணீர் மல்க கூறினாள், என்று சகோதரி சிரித்துக் கொண்டே “சரி, மோனிகா அத்தை உன்னை அரவணைப்பார்கள். எவ்வளவு நேரம் அரவனைக்க வேண்டும்?” என்று கேட்டாள். “ஐந்து நிமிடங்கள்” என்று அவள் பதிலளித்தாள்.
எனது சகோதரியின் மகளை நான் அணைத்துக் கொண்டிருந்த பொழுது, நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் எவ்வளவு சிறந்தது என்பதை அந்த குழந்தையின் செயல் எனக்கு தொடர்ந்து நினைவூட்டியது. நமது விசுவாசப் பயணத்தில் நாம் தேவனுடைய அன்பை நினைப்பதைவிட அதிகமாக உணர்ந்து கொள்ளுகிறோம் என்பதை நாம் நினைவு கூற மறந்துவிடுகிறோம் என்று எண்ணுகிறேன் (எபே. 3:18) நாம் அந்த நோக்கத்தை தவற விட்டுவிட்டால் இயேசு கூறிய கெட்டகுமாரன் உவமையில் வரும் மூத்த சகோதரனைப் போல தேவனால் நாம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக நாம் நமது சொந்த முயற்சிகளை எடுத்து தேவன் நமக்கு ஏற்கனவே அருளிய அனைத்து ஆசீர்வாதங்களையும் காணத் தவறிவிடுகிறோம் (லூக். 15:25-32).
வேதாகமத்தில் சங்கீதம் 131 “நம்மை சிறு பிள்ளைகளைப் போல மாற” (மாற். 18:3) உதவி செய்யும் ஒரு ஜெபமாக உள்ளது. அது நம்மால் புரிந்துகொள்ள இயலாத காரியங்களை புரிந்து கொள்ளும் மன போராட்டங்களிலிருந்து விடுபட உதவுகிறது. ஆதற்குப் பதிலாக தேவனோடு கூட சிறிது நேரம் செலவழிப்பதின் மூலம் அவருடைய அன்பில் நம்பிக்கையையும் சமாதானத்தையும் பெறலாம் (வச. 3). தனது தாயின் கைகளின் அரவணைப்பிலிருக்கும் குழந்தைகளைப் போல நாம் அமைதியுடன் அமர்ந்து காணப்படுவோம் (வச. 2)
ஒரு புதிய பெயர்
மாற்கு லேபர்டன் எழுதியுள்ள “பெயர் குறிப்பிடுவதின் மூலம் நடத்துதல்” என்ற இதழில் ஒரு பெயரின் சக்தியைப் பற்றி எழுதியுள்ளார். “இசைத்திறமை வாய்ந்த அவரது நண்பர் ஒருவர், ஒருநாள் என்னை ‘இசைத்திறமை’ என்று என்னை பெயரிட்டு அழைத்தபொழுது, அது என்னில் ஏற்படுத்தியதாக்கத்தை இன்னும் உணருகிறேன். இசைத்திறமை என்று ஒருவர் கூட என்னை அழைத்தது கிடையாது. நான் எந்த ஒரு இசைக்கருவியையும் இசைத்தது கிடையாது. நான் ஒரு தனிப்பாடகரும் அல்ல ஆயினும் நான் அறியப்பட்டவனாகவும், நேசிக்கப்பட்டவனாகவும் உணர்ந்தேன். அந்த நண்பர் என்னை உற்று கவனித்து, என்னிடத்திலுள்ள இசைத் தன்மையை உறுதிப்படுத்தி, எனக்குள் ஆழமாக இருந்த உண்மையை அறிந்து பாராட்டினார்” என்று கூறினார்.
இயேசு சிமியோனின் பெயரை மாற்றி புதுப்பெயரை இட்டபொழுது, அவனும் இப்படித்தான் ஒருவேளை உணர்ந்திருப்பான். இயேசுதான் மேசியா என்று அந்திரேயா உறுதியாக அறிந்து கொண்டவுடனேயே, அவன் அவனது சகோதரன் சிமியோனைக் கண்டு அவனை இயேசுவிடம் அழைத்து வந்தான் (யோவா. 1:41-42). இயேசு அவனது ஆத்துமாவிற்குள் உற்று நோக்கி சிமியோனின் உள்ளத்தில் ஆழமான சத்தியம் புதைந்து கிடப்பதை உறுதிப்படுத்தி பாராட்டினார். ஆம், இயேசு சிமியோனில் காணப்பட்ட தோல்விகளையும், திடீரென உணர்ச்சிவசப்படும் தன்மையையும் அறிந்திருந்தார். அதற்கு மேலாக சபைக்குத் தலைவனாகக் கூடிய உள்ளான ஆற்றல் அவனுக்குள் இருப்பதை இயேசு கண்டார். உடனே அராமிக் மொழியில் பேதுரு அதாவது கல் என்று அர்த்தமுடைய கேபா என்று அவனுக்குப் பெயரிட்டார் (யோவா. 1:42; மத். 16:18).
அது போலத்தான் நமக்கும், தேவன் நமது பெருமை, கோபம், பிறர் மீது உண்மையான அன்பற்ற தன்மை இவைகளைப் பார்க்கிறார். அதோடுகூட கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்பதையும் அறிந்திருக்கிறார். அவர் நம்மை நீதிமான்களாக்கப்பட்டவர்களென்று, ஒப்புரவாக்கப்பட்டவர்களென்றும் (ரோம. 5:9-10) மன்னிக்கப்பட்டவர்களென்றும், பரிசுத்தரென்றும், பிரியர்களென்றும் (கொலோ. 2:13; 3:12) அழைக்கப்பட்டவர்களென்றும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்றும் உண்மையுள்ளவர்களென்றும் (வெளி. 17:14) அழைக்கிறார். தேவன் உங்களை பார்க்கும் முறையை நினைவு கூர்ந்து, அக்குண லட்சணங்களே நீங்கள் யார் என்பதை விளக்கட்டும்.
நல்ல மேய்ப்பர்
நானும் என் கணவரும் மருத்துவமனையில் மிகுந்த மனக் கவலையுடன் அமர்ந்திருந்தோம். எனது சிறிய மகனின் கண்களில் ஏற்பட்ட குறையை சரிசெய்யும் அறுவை சிகிச்சை நடை பெற்றுக்கொண்டிருந்தது எனது மனக்கவலையினாலும், வருத்தத்தினாலும் என்வயிறு குழம்பினது. தேவன், அவரது சமாதானத்தை எனக்கு தரும்படி ஜெபிக்க முயன்றேன். எனது வேதாகமத்தை புரட்டினபொழுது ஏசாயா 40ம் அதிகாரத்தைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன். நான் நன்றாக அறிந்திருந்த அந்த பகுதியில் புதிய சத்தியங்கள் எனக்கு கிடைக்குமாவென்று எண்ணி அப்பகுதிக்கு வேதாகமத்தை திருப்பினேன்.
நான் அப்பகுதியை வாசித்தபொழுது பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அப்பகுதி, தேவன், “மேய்ப்பனைப் போல தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக் குட்டிகளை தமது புயத்தினால் சேர்த்து, தமதுமடியிலே சுமந்து கரவலாடுகளை மெதுவாய் நடத்துவார்” (வச. 40:11) என்று எனக்கு ஞாபகம் மூட்டியது. அந்த நிமிடத்தில் தானே என் கவலை என்னை விட்டு நீங்கியது. ஏனெனில் தேவன் நம்மை அரவணைத்துள்ளார், வழி நடத்துகிறார். நம்மைக் குறித்து கரிசனை கொள்ளுகிறார் என்று உணர்ந்தேன். தேவன் அமைதியாக என்னில் செயல்பட்டார். அந்த நேரத்தில் அதுதான் எனக்கு மிகவும் தேவையாக இருந்தது. எனது மகனின் அறுவை சிகிச்சையின்பொழுதும், அறுவை சிகிச்சை முடிந்த பின்பும் தேவ சமாதானத்தால் நிரப்பப்பட்டேன். (தேவனுடைய கிருபையால் எனது மகனின் அறுவை சிகிச்சை நல்லமுறையில் நடந்தது.
தேவன் அவரது தீர்க்கத் தரிசியாகிய ஏசாயாவின் மூலம் தானே, அவர்களது மேய்பனாக இருந்து அவர்களது அன்றாட வாழ்க்கையில் அவர்களை செம்மையாக நடத்தி, அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவராக இருக்கிறாரென்று அவர்களது ஜனங்களுக்கு வாக்குப் பண்ணியுள்ளார். நாமும் கூட நம்மைப் பாரப்படுத்தும், கவலை தரும் எண்ணங்களை அவரிடம் கூறி அவருடைய அன்பையும், சமாதானத்தையும் தேடும் பொழுது, அவர் நம்மை அன்புடன் மெதுவாக அரவணைத்து நடத்துவதை அறிந்துக்கொள்வோம். அவரே நமது நல்ல மேய்ப்பராக இருந்து நம்மை அவரது மார் போடு அணைத்து, அவரது நித்திய கரங்களில் நம்மை தாங்கி வருகிறார் என்பதை அறிந்திருக்கிறோம்.
இரட்டைச் சிறகுகளையுடைய சூரியன்
பழங்காலத்தைச் சேர்ந்த மண்ணினாலான ஒரு முத்திரை எருசலேமிலுள்ள ஓர் அகழ்வாராய்ச்சி நிலையத்திலிருந்த ஓர் அலமாரிக்குள் ஐந்து ஆண்டுகளாக இருந்தது. பழைய எருசலேமின் தென்பக்கச் சுவரின் அடிப்பகுதியில் தோண்டப்பட்ட பொழுது அந்த முத்திரை கிடைத்தது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான அந்த முத்திரையின் முக்கியத்துவத்தை ஆரம்பகால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. அந்த முத்திரையில் இருந்த எழுத்துக்களை இக்கால ஆராய்ச்சியாளர்கள் மிகவும் கவனத்துடன் ஆராய்ந்தபொழுது அது மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தது. அதில் “யூதா தேசத்து ராஜாவாகிய ஆகாசின் மகனாகிய எசேக்கியாவிற்கு சொந்தமானது” என்று ஆதிகாலத்து எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்தது.
அந்த முத்திரையின் மையத்தில் இரட்டைச் சிறகுகளையுடைய சூரியன் காணப்பட்டது. அதைச் சுற்றிலும் உயிர்துடிப்பை காண்பிக்கும் இரு உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த முத்திரையை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் எசேக்கியா உயிருக்கு ஆபத்தான வியாதிப்பட்டு இருந்தபொழுது, தேவன் அவனை காப்பாற்றினதை குறிப்பதற்காக (ஏசா. 38:1-8). அந்த முத்திரையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் என்று நம்புகிறார்கள். எசேக்கியா அவனை குணமாக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சினான். தேவன் அவனது விண்ணப்பத்தை கேட்டார். அவர் வாக்குப் பண்ணினதை நிறைவேற்றப் போவதற்கான ஓர் அடையாளத்தையும் காண்பிப்பதாகக் கூறினார். “சூரிய கடியாரத்தில் பத்துப்பாகை பின்னிட்டு திருப்புவேன்” என்றார் (ஏசா. 38:8).
அகழ்வாராட்ச்சியில் கிடைத்த இந்த கலைப் பொருளின் மூலம், நமது துன்பத்தில் நாம் தேவனை நோக்கி கதறும்பொழுது, அவர் நமது விண்ணப்பத்தைக் கேட்டு நமக்கு உதவி செய்கிறார் என்பதற்கு வேதாகமத்தில் காணப்படும் அநேக நபர்கள் நமக்கு உதாரணமாக இருந்து நம்மை ஊக்கப்படுத்துகிறார்கள். அவரது பதில் நாம் எதிர்பார்த்த பதிலாக இல்லாவிட்டாலும், அவர் இரக்கமுள்ளவரென்றும், வல்லமையுள்ளவரென்றும் நாம் நிச்சயமாக நம்பலாம். சூரியனின் அசைவை கட்டுப்படுத்தும் தேவன் நிச்சயமாக நமது இருதயங்களில் செயல்படுவார்.
இரட்டைச் சிறகுகளையுடைய சூரியன்
பழங்காலத்தைச் சேர்ந்த மண்ணினாலான ஒரு முத்திரை எருசலேமிலுள்ள ஓர் அகழ்வாராய்ச்சி நிலையத்திலிருந்த ஓர் அலமாரிக்குள் ஐந்து ஆண்டுகளாக இருந்தது. பழைய எருசலேமின் தென்பக்கச் சுவரின் அடிப்பகுதியில் தோண்டப்பட்ட பொழுது அந்த முத்திரை கிடைத்தது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான அந்த முத்திரையின் முக்கியத்துவத்தை ஆரம்பகால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. அந்த முத்திரையில் இருந்த எழுத்துக்களை இக்கால ஆராய்ச்சியாளர்கள் மிகவும் கவனத்துடன் ஆராய்ந்தபொழுது அது மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தது. அதில் “யூதா தேசத்து ராஜாவாகிய ஆகாசின் மகனாகிய எசேக்கியாவிற்கு சொந்தமானது” என்று ஆதிகாலத்து எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்தது.
அந்த முத்திரையின் மையத்தில் இரட்டைச் சிறகுகளையுடைய சூரியன் காணப்பட்டது. அதைச் சுற்றிலும் உயிர்துடிப்பை காண்பிக்கும் இரு உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த முத்திரையை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் எசேக்கியா உயிருக்கு ஆபத்தான வியாதிப்பட்டு இருந்தபொழுது, தேவன் அவனை காப்பாற்றினதை குறிப்பதற்காக (ஏசா. 38:1-8). அந்த முத்திரையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் என்று நம்புகிறார்கள். எசேக்கியா அவனை குணமாக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சினான். தேவன் அவனது விண்ணப்பத்தை கேட்டார். அவர் வாக்குப் பண்ணினதை நிறைவேற்றப் போவதற்கான ஓர் அடையாளத்தையும் காண்பிப்பதாகக் கூறினார். “சூரிய கடியாரத்தில் பத்துப்பாகை பின்னிட்டு திருப்புவேன்” என்றார் (ஏசா. 38:8).
அகழ்வாராட்ச்சியில் கிடைத்த இந்த கலைப் பொருளின் மூலம், நமது துன்பத்தில் நாம் தேவனை நோக்கி கதறும்பொழுது, அவர் நமது விண்ணப்பத்தைக் கேட்டு நமக்கு உதவி செய்கிறார் என்பதற்கு வேதாகமத்தில் காணப்படும் அநேக நபர்கள் நமக்கு உதாரணமாக இருந்து நம்மை ஊக்கப்படுத்துகிறார்கள். அவரது பதில் நாம் எதிர்பார்த்த பதிலாக இல்லாவிட்டாலும், அவர் இரக்கமுள்ளவரென்றும், வல்லமையுள்ளவரென்றும் நாம் நிச்சயமாக நம்பலாம். சூரியனின் அசைவை கட்டுப்படுத்தும் தேவன் நிச்சயமாக நமது இருதயங்களில் செயல்படுவார்.