ஒரு நாள் மதியம் நான் என் சகோதரிவுடனும், அவளது குழந்தைகளுடனும் எனது மதிய உணவை உட்கொண்டு முடிக்கும் தருவாயில் என் சகோதரி அவளது மூன்று வயது மகள் அனிக்காவிடம், அவள் உறங்கி ஓய்வு எடுக்க நேரம் வந்துவிட்டது என்று கூறினாள். அனிக்காவின் முகம் பயத்தினால் நிறைந்தது. “மோனிகா அத்தை இன்னமும்; என்னை அணைக்கவில்லையே!” என்று கண்ணீர் மல்க கூறினாள், என்று சகோதரி சிரித்துக் கொண்டே “சரி, மோனிகா அத்தை உன்னை அரவணைப்பார்கள். எவ்வளவு நேரம் அரவனைக்க வேண்டும்?” என்று கேட்டாள். “ஐந்து நிமிடங்கள்” என்று அவள் பதிலளித்தாள்.

எனது சகோதரியின் மகளை நான் அணைத்துக் கொண்டிருந்த பொழுது, நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் எவ்வளவு சிறந்தது என்பதை அந்த குழந்தையின் செயல் எனக்கு தொடர்ந்து நினைவூட்டியது. நமது விசுவாசப் பயணத்தில் நாம் தேவனுடைய அன்பை நினைப்பதைவிட அதிகமாக உணர்ந்து கொள்ளுகிறோம் என்பதை நாம் நினைவு கூற மறந்துவிடுகிறோம் என்று எண்ணுகிறேன் (எபே. 3:18) நாம் அந்த நோக்கத்தை தவற விட்டுவிட்டால் இயேசு கூறிய கெட்டகுமாரன் உவமையில் வரும் மூத்த சகோதரனைப் போல தேவனால் நாம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக நாம் நமது சொந்த முயற்சிகளை எடுத்து தேவன் நமக்கு ஏற்கனவே அருளிய அனைத்து ஆசீர்வாதங்களையும் காணத் தவறிவிடுகிறோம் (லூக். 15:25-32).

வேதாகமத்தில் சங்கீதம் 131 “நம்மை சிறு பிள்ளைகளைப் போல மாற” (மாற். 18:3) உதவி செய்யும் ஒரு ஜெபமாக உள்ளது. அது நம்மால் புரிந்துகொள்ள இயலாத காரியங்களை புரிந்து கொள்ளும் மன போராட்டங்களிலிருந்து விடுபட உதவுகிறது. ஆதற்குப் பதிலாக தேவனோடு கூட சிறிது நேரம் செலவழிப்பதின் மூலம் அவருடைய அன்பில் நம்பிக்கையையும் சமாதானத்தையும் பெறலாம் (வச. 3). தனது தாயின் கைகளின் அரவணைப்பிலிருக்கும் குழந்தைகளைப் போல நாம் அமைதியுடன் அமர்ந்து காணப்படுவோம் (வச. 2)